ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

து விகுதி பெற்ற பல சொற்கள்.

து விகுதி பெற்று அமைந்த சொற்களை இன்று பொதுவாக நோக்குவோம்.

து என்னும் விகுதி வினைச்சொல்லிலும் வரும்:

எடுத்துக்காட்டு:    ஓது.  மோது.      (முக><மோ)

இது பெயர்ச்சொல்லிலும் வரும்:  

எடுத்துக்காட்டு:   விழுது. பழுது  கைது (கையகப்படுதல்)

இதுவே வினை எச்சங்களிலும் வரும்.

எடுத்துக்காட்டு:

அழுது    (  அழுதுகொண்டே பாடினான்).

தொழுது   (   தொழுது உண்டு பின் செல்பவர் ).

பிசைந்து   (  பிசைந்து உருண்டையாகப் பிடி  ).

பெயரெச்சத்தில் து என்பது த என்று மாறிவிடும்:

அழுத   பையன்.

இதை அழு (   த =  த் + அ ) எனலாம்.
இதை  அழு ( த =  து + அ ) என்றும் சொல்லலாம்.  இவ்வாறு கூறின்  து என்பதில் உகரம் கெடுத்து அகரமேறியதாகக் கொள்ளவேண்டும்.  இந்த அகரம் அந்த என்ற சுட்டுப் பொருளோடு தொடர்புறும்.  த்  என்பது  இறந்தகால இடைநிலை என்று கொள்ளுதல் சிறந்த விளக்கம்.

து என்பது சுட்டுச்சொல்லுடன் வரும்:

அது
ஈது

து என்பது வினாவுடனும் வரும்.

எது
ஏது.

து என்பதில் ஆகாரம் இணைந்தும் வினாவாகும்:

அதுவா.  (அது+ ஆ).

இனி, விந்து என்ற சொல்லை ஆய்வு செய்வோம். இதை எம்மிடம் கேள்வியாகக் கேட்டுள்ளனர்.  இச்சொல்லில் இறுதியில் நிற்பது து என்னும் விகுதி.  இது இந்தோ ஐரோப்பியச் சொல் அன்று. இது இந்தோ ஐரோப்பிய மூலமொழிச் சொற்றொகுதியில் உள்ளதா என்று தேடிப்பாருங்கள்.  து விகுதி இந்தோ-ஐரோப்பியத்தில் இல்லை என்று பொதுவாகக் கருதினாலும், பார்ட் என்ற ஆங்கிலச் சொல்லும் "பாற்று" என்ற தமிழ்போலவே ஒலிப்பதைக் காணலாம்.  "உணரற் பாற்று"   "செய்தற் பாற்று" என்ற சொல்லாட்சிச் சொற்றொடர்களில் ஒலிப்பொருமையைக் காணலாம். ஆடி அல்டராம் பாற்றம் என்ற இலத்தீன் தொடரிலும் பாற்றம் பார்ட்டம் என்று வந்துள்ளது காண்க.   வீசும் காற்றைக் குறிக்கும் "விண்ட்" என்ற சொல் எடுத்தொலி பெற்று வேறுபோல் தோன்றினும் தமிழ் முறைப்படி உச்சரிப்பதானால் விந்து என்று உச்சரிக்கவே வேண்டும்.  ஆதலின் விண்ட் என்பது விந்து என்பதுபோல் ஒப்பொலிச் சொல் எனினும் வேறுபொருள் குறித்தமையின் வேறுசொல் என்றே கொள்ளவேண்டும். இப்பொருளில் விந்து என்பதுபோல் ஒலிக்கும் சொல் அங்கில்லை.

உலகில் 6912 மொழிகள் இருத்தல் சொல்லப்படுகிறது.நேரமெடுத்து இம்மொழிகளில் நீங்கள்   தேடிப்பார்கலாம்.

விந்து என்பதில் து விகுதி ஆனாலும் வின் என்பது பகுதி அன்று.  வெண் என்ற தமிழ்ச்சொல்லே இதன் பகுதியாகும்.  இது திரிசொல் ஆதலின், இது வெண்ணிறம் என்று பொருள்பட்டு, நிறத்தைக் குறிக்காமல்  அந்நிறத்தை உடைய பிற பொருளைக் குறித்தமையின்:

சொல்லும் திரிந்தது:   வெண் என்பது வின் என்று திரிந்தது;
பொருளும் திரிந்தது:   நிறம் குறிக்காமல் நிறத்தை உடைய உடற் சாற்றைக் குறித்தது.

ஆகவே தொல்காப்பியரின் கோட்பாட்டின்படி இருவகையாலும் திரிசொல் ஆகும். மூலம் தமிழாகிறது.

வெண்+து > வெண்து  > வின் து  > விந்து  ஆகும்.

பல்>பன்  ( லகர னகரத் திரிபு).  பன்+து > பந்து.  பழங்காலத்தில் பந்துகள் கயிற்றினால் கட்டப்பெற்றவை.  தேய்வை என்னும் ரப்பர் பந்துகள் இல்லை. கயிறுகள் ஒன்றை ஒன்று பற்றிக்கொண்டு உருண்டை வடிவு பெற்றுப் பந்தாயின.  பல்+து = பற்று > பற்றுதல்.  பல்+து > பன்+து > பன் து > பந்து ஆகும்.

வேறு  -னகர ஒற்று  ஈற்றுச் சொற்கள்:

பின் > பின் து > பிந்து > பிந்துதல்.
முன் > முன் து > முந்து > முந்துதல்.

வினையாக்கத்தில் புணர்ச்சித் திரிபுகள்.

ஆனால் சில விடத்தில்  0ன் து என்பது  0ன்று என்று மாறிவிடுதல் காணலாம்:

ஒன் + து =  ஒன்று.  இங்கு  ஒந்து என்று வரவில்லை.

பத்து என்ற சொல்லின் அடி பன் என்பதே. பல என்பது பொருள்.  பன் இரண்டு எனபது பந்திரண்டு என்றாகும்.

பன் > ப > ப து  > பத்து.
பன் > பன் து > பந்து.> பந்து இரண்டு > பந்திரண்டு.
பன் > பன் இரண்டு > பன்னிரண்டு.

முற்கால மனிதனுக்கு ஒன்பதுக்குப் பின் பலவாகிவிட்டபடியால் பத்து என்ற சொல்லைப் பன்மை என்பதிலிருந்தே அவன் உருவாக்கிக்கொண்டான்.

பது , பத்து, பன், பான் என்பவெல்லாம்  ஒருசொல்லே வெவ்வேறு வடிவங்கள்.

ஒன்பது > ஒன்பான்.

பத்துக்கு பது இடைக்குறை என்றாலும்  து என்பது விகுதிதான். ஒன்றில் சொல் வலித்தது :  ப து > பத்து;   இன்னொன்றில் ப து > பது.  வலிக்கவில்லை (  அதாவது வல்லெழுத்து மிகவில்லை).  ப> பல் > பன் > ப து > ப த் து என்பன அமைப்புகள். ஒன்பது குறிக்கும் பழந்தமிழ்ச் சொல் தொண்டு; இது தொள் து ஆகும்.  தொள் : தொள்ளாயிரம்;  தொள் > தொண் > தொண்ணூறு. அல்லது தொள்+  நூறு.

மீண்டும் தமிழ் காண்போம்.

சனி, 29 செப்டம்பர், 2018

அம்மா காக்கவேண்டும்.

ஆறவைத்த நீரே அருந்தியே தாகத்தை
மீற விடுத்திடா மேலாம் கவனத்தில்
இந்நாள் வரையிருந்தேம் நேற்றோ செல்லிடத்து
உண்ணாமை போற்றி ஒருபுட்டி உண்ணீரைக்
உண்டு விடாய்கழித்தேம் வந்த தொருநாளில்;
தும்மலும் நீர்க்கோவை தானும் துவள்தர
இம்மியும் இன்பிலா நாளாய் இதுவான
தம்மையே நீங்கள்  தரவேண்டும் தேகநலம்
உம்மைப் பணிந்தேமும் சேய்.

இது இன்னிசைப் பஃறொடை வெண்பா.

அரும்பொருள்:
உண்ணாமை = விரதம்.
புட்டி - பாட்டில் (ஆங்கிலம்)
உண்ணீர் - புட்டியில் கிடைக்கும் உண்ணும் நீர்.
விடாய் - தாகம்.
துவள்தர – உடல் தளர
இன்பிலா - துன்பமான.
அம்மையே - தேவியே.
தேகம் - உடல்.

தேய்ந்து அழிதலை உடையது உடல், அதனால்
அது தேய் > தேய்+கு+அம் = தேய்கம் என்று
அமைந்து பின் தேகம் ஆனது. யகர ஒற்று மறைந்தது.
நிலையாமை பற்றி ஏற்பட்ட சொல்.

எலும்பு நரம்பு தசை உறுப்புகள் என்பவால் கட்டப்பெற்றது
அல்லது யாக்கப்பட்டது யாக்கை. யாத்தல் : கட்டுதல்.

உள்ளுறுப்புகளைப் போர்த்தி உடுத்தி யிருப்பது உடல்; உடம்பு.
உடு என்பது அடிச்சொல்.

உறுப்புகள் பலவும் அடங்கி இருப்பது அங்கம்:  அடங்கம் என்பதன்
இடைக்குறை.  ட கெட்டது.

உடலில் நீர் பாதி;   நீரில்லாதது பாதி.  ஆகவே:  சரி+ஈரம் = சரீரம்1
ஆனது. 

மேனி -  உடலின் மேற்பகுதி.

===================
சரீரம் :

இதைச் சரிதல் + ஈர + அம் எனக்கொண்டு:

சரிவை அல்லது அழிதலை ஈர்த்துக்கொண்டு இலதாவது  என்ற பொருளிலும் கூறலாம். அவ்வாறாயின் தேகம் என்பதன் பொருட்கு ஒத்தது இதுவாகும்.








வியாழன், 27 செப்டம்பர், 2018

உற்பத்தியும் அதன் உறவுக்கருத்துகளும்.

இன்று உற்பத்தி என்ற சொல்லைக் காணச் செலவு மேற்கொள்வோம்.  

இன்று யாம் எழுதிய கவிதை ஒன்றினுக்கு உரை எழுதும்போது இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளோம்.

உறு என்பதும் உண்டாகுதல் என்ற பொருளைத் தெரிவிக்கும். உறுப்பத்தி எனினும் அதுவே.  எடுத்துக்காட்டு: தெளிவு உறுதல்:  தெளிவு உண்டாகுதல். உறுதல் என்பது ஓர் இணைப்பைக் குறித்தாலும் உண்டாகாத எதுவும் இணைப்புறுவதில்லை ஆதலால் உறுதல் உண்டாதலைத் தழுவியது ஆகும், உறுதல் ஆக்கத்தின் பின் நிலை; முன் நடைபெற்றதைக் கொணர்வது; ஆதலின் உண்டாக்கத்தை உணர்த்துவது ஆகும்.

உறுப்பத்தி -  பற்றி உறுதல். இது திரிந்து உற்பத்தி.  இனி உள் பத்தி எனினும் அது.  உள், உல், உறு என்பன தம்முள் உறவுடைய சொற்கள். ஒன்றின் பொருள் பிறவற்றில் தழுவி நிற்குமாறு பயன்படுத்தத் தக்கவை.

உரு என்பதும் தொடர்புடையதே.

காவல் உறவேண்டும் என்ற தொடரைச் சிந்தித்தால், காவல் உண்டாகவேண்டும் என்பது பொருளென்று அறியலாம்.  மிகுதல் பொருளும் உண்டாகி அதிகப்படுதல் என்பதே. அதாவது அளவில் அதிகமாய் உண்டாகுதல்.

கீழ்க்காணும் விளக்கம் அறிந்து மகிழ்க.

இது திரிசொல். (  இயற்சொல் அன்று ).

பல சொற்கள் தாம் அமைந்தபோதிருந்த பொருளில் வழங்குவதில்லை.  எடுத்துக்காட்டு: நாற்றம்.  ஆனால் அதன் அடி  நறு என்பது; அது நல் என்பதிற் பிறந்தது.  நல் என்பது நன்மை.  நறு மணம் என்பதும் இன்றும் நல்ல மணமே ஆம். அதன் விரிவாகிய நாற்றம் என்பதே இழிபொருள் குறித்தது.

நாற்றம்: திரிசொல்;  நறு : இயற்சொல். இரண்டும் உறவினவாம். பரமாத்துமா தெய்வமாகவும் அவர் மகன் அசுரனாகவும் ஆனதுபோல.

 

உற்பத்தி


உற்பத்தி என்பது மிக்க அழகாய் அமைந்த சொல்லாகும். கரு ,  கருப்பையை உள் பற்றிக்கொண்டுதான் வளர்ந்து பெரிதாகிறது.  

மரங்களின் விதைகளும் எங்காவது போய் விழுந்து மண்ணினுள்  பற்றிக்கொண்டுதாம்  வளர்ச்சி பெறுகின்றன . 


உள் பற்றுதல் என்ற கருத்திலிருந்து உண்டாகுதல் என்னும் கருத்து வளர்ச்சி பெற்றது. உண்டாகு என்பதிலும் உண்டு என்னும் சொல், உள்+து என்று அமைந்ததே. உள் என்பதே உற்பத்தி  என்பதிலும் பொதிந்துள்ளது உணரற் பாலது ஆகும்.


உற்பத்தி என்பதில் உள் > உல் என்று திரிந்துள்ளது. பற்றுதல் என்பது பற்றி >பத்தி என்று திரிந்துள்ளது. உள் என்பது பத்தி என்பதனோடு புணர,  உட்பத்தி என்று ஆனாலும், பின் உத் பத்தி எனறு திரிவது மற்றொரு வழியாகும்.


இது தமிழ் மூலச்சொற்களைக் கொண்டு அமைந்தது. இந்த விளக்கம் எல்லாம் கூறிக்கொண்டிராமல், இது தமிழன்று என்பது இன்னும் எளிதாக இருக்கும். 


உள்  என்ற  தமிழ்ச் சொல்  மலாய்  மொழியில்  உலு என்று திரிவது கவனிக்கத்தக்கது.

படிப்பறிவு இல்லாதவர்கள் "உலுப்பத்தி" என்பதும் கருதத்தக்கது.

நேரக் கழிவு.

ஆய்வொன்றும் இன்றில்லை ஆழ்ந்தசிந்  திப்பில்லை
ஓய்வின்றி  ஆனாலும் ஒன்றிரண்டு ----  போயநேரம்
என்றும் வருவதில்லை  இவ்வுலகில் நேரமொன்றே
உண்டாக்க ஒண்ணா தது.  

இதன் பொருள்:

ஆய்வொன்றும் இன்றில்லை -  இன்று யாம் எந்த ஆய்வினையும்
செய்து வெளியிடவில்லை;

ஆழ்ந்த சிந்திப்பில்லை -   உள் நுழைந்து காண்கின்ற சிந்தனை
களெதுவும் செய்யவுமில்லை;

ஓய்வின்றி-   இன்று முழுமையும் வேலைகள் பலவற்றால் ஓய்தல்
இல்லாதமல்;

ஆனாலும் -  நடைபெற்றாலும்;

ஒன்றிரண்டு -  வேலைகள் ஒன்றோ இரண்டோதாம் குறிப்பிடத்
தக்கவை; 

போய நேரம் -   இவற்றில் கழிந்த கால அளவு;

என்றும் வருவதில்லை -  திரும்பிக் கிட்டுவதோ இல்லை;

இவ்வுலகில் நேரமொன்றே -  இந்த உலகத்தில் நேரம் என்ற
ஒன்றுமட்டுமே;

உண்டாக்க ஒண்ணாதது - நம்மால் உற்பத்தி செய்ய
இயலாதது ஆகும். 

என்ற படி.

சதி என்னும் சொல்.

சொற்கள் எப்படி அமைந்தன என்று எழுத்தாளன் கவலைகொள்தல் ஆகாது. இதிற் கவனம் செலுத்தினால் அவனெழுதிக் கொண்டுள்ள கட்டுரையோ கதையோ குன்றிவிடும்.  ஆகவே சொல்லியலைத் தனிக்கலையாகப் போற்றவேண்டும்.  படைப்பாற்றலை வெளிக்கொணராத  எழுத்துவேலைகளில் ஈடுபாடு கொண்டுள்ள காலை சொல்லியலில் மூழ்கி முத்தெடுக்கலாம்.

சொற்களில் வினைகள் பெயராகுங்காலை சில முதனிலை திரிகின்றன. திரிபு வகைகளில் நீள்தல் குறுகுதல் என்பவை அடங்கும்.  இவை இடுகைகளில் சுட்டிக் காட்டப்பட்டிருப்பினும் இடுகைகள் பலவாதலின் இவற்றை ஒன்று சேர்த்து நோக்க, ஈண்டு மிக்க விரிவாகவே இத்தகு திரிபுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்பதை எளிதாக அறியலாம்.

துள் > துளை;   துள்> தொள் > தொடு;  தொடு> தோடு; தோடு > தோண்டு; தோண்டுதல். என்பவை காண்க.

தொண்டை என்பது ஒரு தோடு போன்றதே.  தோண்டியதும் போன்றதே.

தோண்டு> தொண்டை.

இங்கு முதலெழுத்துத் திரிந்தது. (குறிலானது).  ஐ விகுதி பெற்றுப் பெயரானது.

தோண்டு > தோண்டி.  இப்படி வரும். இங்கு முதலெழுத்து திரியவில்லை. இச்சொல் இ விகுதி பெற்றது,

நெடிலான சில முதலெழுத்துக்கள் சொல்லமைவில் குறுகும் என்பதை உணர்ந்தீர்கள்.

சதி என்பது ஒரு திட்டத்தையோ ஒரு மனிதனையோ சாய்ப்பதும் எழவிடாமல் செய்வதுமாகும்,

சாய் > சய்தி > சதி.

இது யகர ஒற்று இழந்து சாதி என்று வரின், குழப்பம் ஏற்படுமாதலின் மேலும் குறுக்கப்பெற்று சதியானது.

இது மிக்கத் திறமையுடனே அமைக்கப்பட்டுள்ளது.  முதலெழுத்து -  குறுகியதும் யகர ஒற்று வீழ்ந்ததும் காண்க.

பின் தேவையெனில் திருத்தம்பெறும்,


செவ்வாய், 25 செப்டம்பர், 2018

சித்திரம் என்பது சரியான சொல்லன்று

சித்திரம் என்ற சொல் அழகானது. இதைப் பயன்படுத்தி பாரதிதாசனின் கவிதை ஒன்று உலவுகிறது.

சித்திரச் சோலைகளே உமை நன் கு
திருத்த இப்  பாரினிலே --- முன்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே.

இந்தப் பாட்டில் சி என்ற எழுத்திற்கு தி என்பது மோனை.  யாம் புத்தகத்தைப் பார்த்து எழுதவில்லை யாகையால் இதில் மூலத்துடன் வேறுபாடுகள் இருந்தால் திருத்திப் படித்துக்கொள்ளுங்கள். யாம் குறிப்பிடுவது சித்திரம் என்ற சொல்லைத்தான்.

சித்திரம் ஓவியம் என்பனவெல்லாம் ஒப்புமைக் கருத்தில் தோன்றி அமைந்த சொற்கள்.

செத்தல் என்றால் ஒத்திருத்தல்.

செ என்பதே அடிச்சொல். திரம் என்பது விகுதி.  இந்தத்  திரம் விகுதி திறம் என்ற சொல்லினின்று அமைக்கப்பட்டது.  திறம் > திரம்.  சில விகுதிகட்குப் பொருளிருக்கலாம்.  பல விகுதிகள் தம் பொருளிழந்து வெறும் சொல்லிறுதிகளாகவே பயன்படுகின்றன.  சொல்லமைப்பில் அவற்றின் வேலை அடியை மிகுத்து இன்னொரு சொல்லுருவை உண்டாக்குவதுதான். அதனால்தான் அவை விகுதி எனப்பட்டன.  மிகுதி > விகுதி.  சொல்லை மிகுத்து உருவாக்குதல். மகர வருக்கச் சொற்கள் வகர வருக்கங்கள் ஆகும்.  வருக்கம் என்றால் வருதல் தன்மை அல்லது உருவம்.  வரு> வரு+கு+ அம்= வருக்கம்.  வருகின்ற கொடிவழி.

 மி>வி:  இப்படித் திரிந்த இன்னொரு கிளவி: மிஞ்சு > விஞ்சு.

செ + திரம் = செத்திரம்.  இதுபின் சித்திரம் என்று திரிந்தது.  அதன்பின் செத்திரம் என்ற  சொல் பேச்சு வழக்கிலிருந்தும் எழுத்திலிருந்தும் காணாமல் போய்விட்டது.  இப்படித் தொலைந்தவை பல. செத்தல் என்ற சொல் இருப்பதால் இதனை நாம் அறியலாகிறது.

ஆய்வின்படி சித்திரம் என்பது சரியான சொல் அன்று.  செத்திரம் என்றே இருந்திருக்கவேண்டும். இருந்தாலும் சித்திரம் என்றால் பின்னை வடிவம் அழகாகவே அமைந்திருத்தலின் அதனையே ஏற்று வைத்திருப்போம்.

இது ஒத்தல் என்ற சொல்லினின்று செத்தல் என்று அமைந்திருக்கவேண்டும். ஒகரச் சொல் எகரத் தொடக்கமாதலும் உண்டு.  எடுத்துக்காட்டாக எழுப்பு என்ற எகரச் சொல் யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் ஒழுப்பு என்று வழங்குகிறது. கந்தனை ஒழுப்பிவிடு என்பர்.  ஆகவே  ஒத்தல் > எத்தல் > செத்தல் என்பது தெளிவு. அகர வருக்கங்கள் சகர வருக்கங்கள் ஆகும்.  எத்தல் என்பது செத்தல் ஆன கதை அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். எப்போதும் எழுதுகோலும் கையுமாக இருந்து திரிபுகள் காதில் விழும்போதெல்லாம் உடன் பதிவு செய்துகொள்ளவ்ேண்டும்.  இப்போது தொலைப்பேசிகள் மிக்க வசதியைத் தருவனவாய் உள்ளன.

செத்துப்போ என்ற சொல்லில் பகுதி செ என்பதன்று.  சா என்பதே  ஆகும்,  சா> சாதல்.  சா - செத்தல் அன்று.   செத்து என்ற வினை எச்சம்  சா > சத்து என்பதே. ஏனைத் திராவிட மொழிகளில் சத்து என்று சரியாக எச்சம் வழங்குகிறது.  தமிழில் செத்து என்று திரிவடிவம் கொள்கிறது.  இதைக் கொண்டுபோய்  ஒத்தலாகிய செத்தலுடன் ஒப்ப வைத்திடுதல் தவறு.

ஓவியம் என்ற சொல்லிலும்  ஒ என்பதே பகுதி அல்லது அடி.  ஒ > ஒத்தல்.
ஒ+இயம் = ஓவியம்.  ஓ+ அம் =  ஓவம்.   என்றால் சித்திரம்.  ஓவச் செய்தி என்று மு வரதராசனார் ஒரு நூல் எழுதியுள்ளார்.  அதைப் படித்து ஓவம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.  ஆங்கிலத்தில் ஓவம் என்பது கருமுட்டை; அது வேறு சொல் ஆகும்.தமிழில் ஓவம் என்றால் ஓவியம்.  ஒன்று ஓ+ அம்; இன்னொன்று ஓ+இயம் ( இ+அம்).  ஒத்தல் என்பதில் உள்ள குறில் ஒகரம் ஓ என்று நீண்டதால்  முதனிலை திரிந்த ( நீண்ட) தொழிற்பெயர்.  சுடு> சூடம் என்பது போல.

புலிக்கு ஓவியகாயம் என்பதொரு பெயர். அழகிய புலி அடித்துக் கொன்று கடித்துத் தின்றிடும். காய்ந்தொழியும் காயமே உடைத்தாயினும்  ஓவியமாய் உலவுவது புலி.

சித்திரம் ஓவம் ஓவியம் என்பன ஒப்புமைக் கருத்தினவாகும்.  சித்திரம் என்பதன் தகப்பன் செத்திரம்.  அது இப்போது மட்கிவிட்டது.

ஒப்பு நோக்குக:  செந்தூரம் > சிந்தூரம்.
                                  நெட்டூரம் > நிட்டூரம் > நிஷ்டூரம்.  நெடிது ஊர்ந்துவரும் துயர். எ-இ வகைத் திரிபு.  ஊறு என்பதே  ஊறம்> ஊரம் என்றானது எனினும் ஒப்புக.   ஊறு என்பதும் ஒத்த பொருளினைத் தருவதாம்.

நம் பாட்டன் பாட்டிகள் இல்லாமை போலவே சொற்களும் அவற்றின் பாட்டன் பாட்டிகளை இழந்துவிடுகின்றன.  இருப்பின் பொறுப்பு டன் போற்றுவோம்.

பிழை இருப்பினும் புகினும் பின் திருத்தம்.பிழை என்றால் தட்டச்சுப் பிழை. கருத்தில் பிழைகள் இரா.

அறிக; மகிழ்க.

திங்கள், 24 செப்டம்பர், 2018

எசமான் ( எஜமான் ) என்ற சொல்.

இன்று எசமான் என்ற சொல் எப்படி ஆக்கப்பட்டது என்பதை அறிந்து இன்புறுவோம்.

இப்போது சில கவிதைகளும் சொல்லாய்வுமே செய்துவருகின்றோம்.
இலக்கிய ஆய்வு அல்லது நோட்டம் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால் சில நன் கு பிறரால் திருடப்பட்டுவிட்டன.  பல உரைகள் அழிக்கப்பட்டுவிட்டன. எமது மின்னஞ்சல் உள்ளும் புகுந்துவிட்டனர்.  அடிக்கடி கடவுச் சொற்களை மாற்றி இடர்விளைவிக்கின்றனர்.

தமிழில் நடத்துபவன் அல்லது தலைவனுக்கு இயவுள் என்றொரு சொல் உள்ளது.  இது கடவுள் என்ற சொல்லைப்போல உள் விகுதி பெற்ற சொல்.

இயக்கம், இயங்கு என்ற சொற்களில் இய என்ற அடிச்சொல் உள்ளது.

பெருமான் என்ற சொல் பெரு+ம்+ஆன் என்று அமைந்தது. மகர ஒற்று ஒரு சொல்லாக்க இடைநிலை ஆகும்.  மான் என்பது இறுதி என்று சிலர் சொல்வதுண்டு.  எனினும் மான் என்பது ம்+ ஆன் என்பதே.  ஆன் என்பதுஆண்பால் விகுதி.  பெண்பால் விகுதி ஆள் என்று வரும். இது நீங்கள் அறிந்ததே.

இய+ம்+ஆன் = இயமான்.  அதாவது இயக்குநன்.  இயவுள் என்ற பழைய சொல்லுமது.   யகரம் சகரமாகத் திரியும்.  வயந்தம் > வசந்தம்.  வாயில்> வாசல்.  நேயம் > நேசம்.

இருவர் நெருங்கிப் பழகுவது அன்பைப் பயக்கிறது.  பயத்தல் என்பது உண்டாக்குவதென்பதாகும்.  பய > பயன் என்பதும் காண்க.  இனிப் பய+ அம் = பாயம்.  இது பாசம் என்று திரியும்.  பசுமையான அன்பும் பசு+ அம் = பாசமாகும். இது ஓர் இருபிறப்பிச் சொல்.

இனி இயமான் என்பதற்கு வருவோம்.  இது இயமான் > இசமான் > எசமான் என்று திரிந்தது.  பின் எசமான் எஜமான் என்று மெருகு பெற்று,  மூலங்கள் வழக்கற்றுவிட்டன.

இது தான் எசமானின் கதை.  எசமான் என்பது இன்னொரு விகுதி -  அன்  பெற்று எசமானன் என்றும் சிலரிடத்துத் தவழும்.

அறிவீர் மகிழ்வீர்

பிழைகள் காணின் பின் திருத்துவோம்.

ஐயப்பன் கோவிலின் முன்

முன் இடுகையின் தொடர்ச்சி.

வனஜா அம்மையாருக்கு குருசாமி மோகனின் துணைவியார் ரஜனி
பூவைத்து விடுகிறார்.



கோலாலம்பூர் ஐயப்பன்.






சவரி  மலைசென்று சாத்தாவைக் காண
உவரியாய்ச் சூழ்ந்துள்ள நீரும் --- இவரித்து
நிற்குமோ கண்டபற்றர் நீங்குவரோ வேண்டாமே
அற்கம் செலுத்தலம் பூர்.

இது வெண்பா.

இதற்குப் பொருள்:

உவரியாய்ச் சூழ்ந்துள்ள  நீரும் --  கடல்போல் சுற்றியும்
பெருகியுள்ள நீரும்; சவரி மலை சென்று  -  சபரி மலைக்குப் போய்;
சாத்தாவைக் காண -  ஐயப்பனைத் தெரிசனம் செய்ய;  இவரித்து 
நிற்குமோ -- தடையாக  எதிர்வருமோ; 
கண்டபற்றர்  நீங்குவரோ --  இதைக்கண்ட பக்தர்கள்
ஐயப்பனைத் தொழாமல் விலகிவிடுவரோ  (  மாட்டார்கள் ) ;
வேண்டாமே -  கவலையே உங்களுக்கு வேண்டாம்;  
அற்கம் செலுத்த -  காணிக்கை   செலுத்த; 
லம்பூர் -  கோலாலம்பூர் என்னும் நகரத்திலும் ஓர்
ஐயப்பன் கோவில் உண்டு;  (ஆங்குப் போகலாம் )  என்றபடி.

அந்தக் கோவில் இங்கு படத்தில் உள்ளது. கண்டு களிக்கவும்,

இந்தப் படத்தில் பாட்டியும் பேரனும் காணிக்கை செலுத்திவிட்டு
வெளியில் வந்து மகிழ்ச்சியுடன் தோன்றுகின்றனர்.

பாட்டி: வனஜா அம்மையார்; பேரன்: ஐயப்ப குருசாமி மோகன்.

HOTMAIL given up. Hackers took over.

Please note that Sivamala has given up the HOTMAIL account which was being used previously.  I believe some virus operators have taken over that e-mail account.  Do not send any communication to that hotmail.

Hackers are waiting there for incoming mail. 

Any communication should be sent to the current email on record:  bisivamala@gmail.com.

Thank you.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

நீர்த்தேவதையும் ஐயப்பசாமியும்


நீர்த்தே வதையே எதற்கோ பெருமழை
பம்பையின் ஓரம் கொடுத்தாய்,
ஆர்த்தே எழுதரும் பற்றர் குழாம்கா
லடிவைப் பதனைத் தடுத்தாய்;
மூர்த்தியாம் மூலவர் ஐயப்ப சாமிகள்
முன்னுனை விட்டார் கெடுத்தாய்!
மாத்திரம் வெப்பமண் தந்திறுக் கம்பட
மாற்றிட் டிலைநெஞ் சிடித்தாய்

ிமைப் பக்கம் பற்றர்கள் நந்து மேலேறும்
ைகெல்லாம் ேறாகக் கிடக்கின்ற என்றும் 
ற்றர்கள் காலி வைக்கக் கூடுடியில்லை - ால
உள்ளுக்கு இழுக்கிறு என்றும்  ாம்பஉட்பச்
உயிரிகள் அலைகின் என்றும் குராமிகள்
உரையாடில் பிக்கொள்கின்றர்.  எப்பி ம
ேறுவ      என்று கைப்புகிறார்கள். அங்கு 
ெல்லிய இடர்ிலையை இப்பாடல் ாட்டுகின்று,

ு எழீர் ிரியிரத்ம். வெண்டையில் 
ாடப்பெற்றுள்ளு.  எல்லாம் வெண்பா அடிகாய்த்
ொடுக்கப்புகிறு இு.  ொல்லு வும்பியாக
ொடத்ாய் -த்ாய் -   கெடத்ாய்     - இடித்ாய் என்ற
ஒவ்ோர் அடியும் இயந்து முடிகின்று. 

ொருளுரை:
ீரின் ேவையே!  நீ ஏன் பம்பை நியின் ஓருள்ள
ிகில் பெரியையை ஏற்பத்ினாய்?
எப்பும் ஓலிெய்ுகொண்டு எழுகின்றக்ர் 
ூட்டங்கள் மையில் காலி வைப்ப
ிறத்ிவத்ாயே!  ங்கு எழந்துளியிருக்கும்
ூலான ஐயப்பாமிகள் உன்னு முன்ன
ிட்டால் நீ நிலைமையைக் கெடத்ுவிட்டாய்.
ீ மத்ிரம் மண்ணுக்கு வெப்பத்த் ந்து அ
இறுக்கம்பெறச் ெய்ு மாற்றித் ில்லை என்றால்
ங்கள் நஞ்சினை இடித்ுப்போட்டுவிட்டாய்.

ு அந்தீர்த்ேவையிடம் ெய்யப்பும் முறீடு.
ீர்த்ேவை : உருவ அணி.

ிழ்வீராக.        


ுறிப்பு:
{ மூலத்ில் இல்லாற்றங்கள் இங்கு சிசெய்யப்பட்ட:
9.12.2019)