செவ்வாய், 4 செப்டம்பர், 2018

குரவர் குரு என்ற சொற்கள்


 குரு குரல்


குர் என்பது  ஓர் ஒலிக்குறிப்புச் சொல்:


(குர்)   >    குரீஇ   :   குருவி



குர்  >  (  குரு. ) .:   ஒலி.
குரு >  குருவி  ( குர் என்று ஒலியெழுப்பும் பறவை).
குரு >  குரை  ( ஒலி யெழுப்புதல் -  நாய்).
குரு >  குரம்   (ஒலி)
குரு > குரல்  ( தொண்டையிலிருந்து எழும் ஒலி)
குரு > குரவை  ( ஒலி, ஒலி எழுப்பி மகளிர் விளையாடுதல் )
குரு > குருமி  (ஒலி)
குரு > குருமித்தல் (ஒலித்தல்)
குரு >  குரூஉ  (குரு)
குரு > குரோதம் ( ஒலி எழுப்பிப் பகை காட்டுதல்)-  குரோதித்தல்.
குரு > குரவன்  ( ஆசிரியன் : ஒலி எழுப்பிக் கற்பிக்கிறவன்).
குரு :  ஆசிரியன்:   ஒலி எழுப்பிக் கற்பிக்கிறவன்.

குரைத்தல் > குலைத்தல். ( ர > ல போலி)

தொடக்கத்தில் குரு என்பதும் குரவன் என்பதும் ஆசிரியனைக் குறிக்கக் காரணம் அவன் பெரிதும் ஒலிசெய்து கற்பித்ததனாலேதான்.

வாத்தி என்ற சொல்லும் வாயொலியைக் குறித்து எழுந்தது: வாய்> வாய்த்தி > வாத்தி > வாத்தியார்.

உப+ அத்தியாயி என்பது உபாத்தியாயி.1  அது வேறு.  வாத்தியையும் உபாத்தியாயியையும் குழப்பிவிட்டனர்.

ஓலைச்சுவடிகள் அதிகமில்லை. பகர்ப்பு ( காப்பி) செய்வதற்குச் செலவு  (பண்டமாற்று )  ஆனதால் வாயினால் கத்தியே " படித்தனர்".

------------------------
 1  உபாத்தியாய  :  முன் காலத்தில் வேதம் இலக்கணம் முதலியன சொல்லிக்கொடுத்தோர்.. உபாத்தியாயினி என்பது அவர் மனைவியையும் குறிக்கும்.



கருத்துகள் இல்லை: