வியாழன், 6 செப்டம்பர், 2018

சமாளித்தல் - சொல்.

ஒருவன் மற்போரில் சிறந்தவன்.  அவனுடன் சென்று பொரு(து)வதாயின் தகுந்த பட்டறிவும் பயிற்சியும் இருந்தாலே முடியும் ........  என்று அறிந்தோர் சொல்வர்.   இல்லாவிட்டால் பொலிசை இல்லாமல் கொடுக்கல் வாங்கல் செய்தது போல் ஆகிவிடும்.

மற்போரின்போது அவனுடன் சம ஆளாய் நிற்கவேண்டாமோ?

சம ஆளாய் நில்!

சம ஆள்!

சம  ஆள்  இ     (  இ என்பது வினைச்சொல்லாக்க விகுதி).

சமாளி.

நம்மவன் திறனை நாமே ஐயுறலாமோ?  இவன் சமாளித்துவிடுவான்.

அதாவது:  சம ஆளாய் நின்றுவிடுவான்.

இப்போது சமாளி என்பதன் பொருளும் அமைப்பும் புரிந்திருக்குமே....

அறிந்து மகிழுங்கள்.



கருத்துகள் இல்லை: