திங்கள், 24 செப்டம்பர், 2018

கோலாலம்பூர் ஐயப்பன்.






சவரி  மலைசென்று சாத்தாவைக் காண
உவரியாய்ச் சூழ்ந்துள்ள நீரும் --- இவரித்து
நிற்குமோ கண்டபற்றர் நீங்குவரோ வேண்டாமே
அற்கம் செலுத்தலம் பூர்.

இது வெண்பா.

இதற்குப் பொருள்:

உவரியாய்ச் சூழ்ந்துள்ள  நீரும் --  கடல்போல் சுற்றியும்
பெருகியுள்ள நீரும்; சவரி மலை சென்று  -  சபரி மலைக்குப் போய்;
சாத்தாவைக் காண -  ஐயப்பனைத் தெரிசனம் செய்ய;  இவரித்து 
நிற்குமோ -- தடையாக  எதிர்வருமோ; 
கண்டபற்றர்  நீங்குவரோ --  இதைக்கண்ட பக்தர்கள்
ஐயப்பனைத் தொழாமல் விலகிவிடுவரோ  (  மாட்டார்கள் ) ;
வேண்டாமே -  கவலையே உங்களுக்கு வேண்டாம்;  
அற்கம் செலுத்த -  காணிக்கை   செலுத்த; 
லம்பூர் -  கோலாலம்பூர் என்னும் நகரத்திலும் ஓர்
ஐயப்பன் கோவில் உண்டு;  (ஆங்குப் போகலாம் )  என்றபடி.

அந்தக் கோவில் இங்கு படத்தில் உள்ளது. கண்டு களிக்கவும்,

இந்தப் படத்தில் பாட்டியும் பேரனும் காணிக்கை செலுத்திவிட்டு
வெளியில் வந்து மகிழ்ச்சியுடன் தோன்றுகின்றனர்.

பாட்டி: வனஜா அம்மையார்; பேரன்: ஐயப்ப குருசாமி மோகன்.

கருத்துகள் இல்லை: