செவ்வாய், 18 செப்டம்பர், 2018

effective, x.e~. = கேட்கும் xகேட்காது. ( colloq.)


ஒரு மருந்து நோயைக் கட்டுப்படுத்தவல்லது,  சரிப்படுத்திவிடும் என்றெல்லாம் எழுத்தில் குறிப்பிடுவார்கள். இந்தக் கடினப் பதங்களையெல்லாம் மக்கள் இயல்பான பேச்சில் கையாளுவதில்லை.

உனக்குச் சோகை பிடித்திருந்தால் இந்த மருந்து கேட்கும் என்று பேச்சில் சொல்வர்.  அகராதிகளைப் பொருத்தவரை,  காதால் கேட்கப்படுவதைத் தான் கேட்கும் என்போம்.

ஆனால் மருந்து நோயைக் கேட்கிறது என்பதை நீங்கள் அறிந்ததுண்டோ?

சோகை நோயில் இரத்த ( அரத்த )  சோகை என்பது கடின வகை என்று கூறுவதுண்டு.  சோகை பிடித்தவன் எப்போதும் உடல் வலிமை குன்றிக் காணப்படுவான். இப்படிப் பேசிக்கொள்வார்கள். நோயைப் பற்றி அறிய வேண்டின் மருத்துவரை நாடவும்.  இப்போது சோகை என்ற சொல்லைக் காண்போம்.

சோர்வு என்பதே நமக்குச் சொல்லப்படும் அறிகுறி.

சோர்தல் >  சோர்கை >  சோகை.  இதில் ஒரு ரகர ஒற்று மறைந்தது.

சோகை என்பது ஒரு நோயின் பெயராய் ஆகிவிட்டது. இதற்கு ஆங்கிலத்தில் எனிமியா என்பர்.  இது நோயோ அல்லது நோயின் அறிகுறியோ என்பதை மருத்துவர்பால் உசாவி அறிக.

ரகர ஒற்று மறைந்த சொற்களை முன் இடுகைகளில் கண்டி மகிழவும்,



B12. Mecobalamin. Neromethyn.  Peripheral Neuropathies.

திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை: