செவ்வாய், 4 செப்டம்பர், 2018

அருளாளர் நாராயணகுருவின் எதிர்கால ஞானம் -( முன்னுணர்வு).



அருள்மிகு நாராயண  குருக்களும் கவி குமரனாசானும்


நம் சிங்கைத் தீவில் வாசுப் பிள்ளை என்று ஒரு மலையாளி இருந்தார். இவரை அறிந்த பின் சீர்மிகு நாராயண குருக்களின் வரலாற்று நிகழ்வுகள்  சிலவற்றை அறிந்துகொண்டோம். 

குருக்கள் மாதவம் புரிந்து பல அரிய ஆற்றல்களைப் பெற்றிருந்தார் என்று அறியலானோம்.  காந்தியடிகள் கேரளா சென்ற காலை ஸ்ரீ நாராயண குருக்களைச் சென்று கண்டு தமது பணிவன்பினைத் தெரிவித்துக்கொண்டார் என்று கூறுப.  குருக்களின் புகழ் எங்கும் பரவியிருந்தது.
சிங்கப்பூரிலும் ஸ்ரீ நாராயண மிஷன் என்னும் மடாலயம் இயங்கிவருகின்றது.

குமரனாசான் என்பவர் ஓர் மலையாளக் கவியாவார்.  அவர் குருக்களை பலமுறை சென்று தரிசித்ததுடன் அவர்தம் இறையுரைகளையும் பெற்று மகிழ்ந்தவர்.

ஒரு சமயம் வழக்கம்போல் குருக்களைச் சென்று கண்டு அவர்தம் ஞான உரைகளைக் கேட்டு உயர்நிலையை உணர்ந்தார்.  பின் இறையுணா அருந்திவிட்டு  அன்று சற்று விரைவாகவே விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார்.  குரு இருந்துவிட்டு நாளை போகலாமே என்று சொல்லிப்பார்த்தார்:  குமரனாசான்  கேட்கவில்லை. அவ்விடத்திருந்து ஆசான் அகன்றக்கால், குருவானவர் சற்று கவலையுடன் காணப்பட்டார்.

அருகிலிருந்த ஏனைச் சீடர்கள் குருவைத் துருவிக் கேட்கத் தொடங்கிவிட்டனர். ஏன் எப்போதுமில்லாத கவலையுடன் காணப்படுகிறீர்கள் என்று அவர்கள் வினாவினர்.   கேள்விகள் ஒரு நெருக்கடி நிலைபோன்ற சூழலை எட்டவே குருக்கள் அவர்தம் மனத்துக்கண் இருந்த ஆழ்ந்த  கவலையை வெளியிட வேண்டியதாயிற்று.

“குமரனாசான் இன்று நம்மை விட்டுப் பிரிந்துவிடுவார்.” என்பதை வெளிப்படுத்தினார்.   எப்படி என்றனர் சீடர்கள். அவர்  ஓர் ஆற்றைக் கடக்கப் போகிறார்; அங்கு வள்ளம் கவிழ்ந்து உயிர் துறப்பார்  ----  என்பதைக் குருக்கள் விளக்கினார்.  சீடர்கள் “ குருவே நீங்கள் எப்படியாவது தலையிட்டுக் காப்பாற்றுங்கள்”  என்றனர் . 

 “ இயற்கையின் முடிவுகளில் யாம் என்றுமே தலையிட மாட்டோம்”  என்றனர் குருக்கள். ம் மியுரையைக் குமான் புறந்தள்ளிப் புறப்பட்டுவிடுவார் என்பும் குருவானர் நன்`குணர்ந்தே.  “எது நடைபெற வேண்டுமோ அது நடைபெறும். அதில் தலையிட்டு மாற்றங்கள் செய்யாமல் நம் நேரம் வரும்வரை நாமும் சென்றுகொண்டிருப்பதே இறைவனுக்குப் பிடித்தது”  என்று சொல்லிவிட்டார்.

 சில மணி நேரத்தில் அவர் சொன்னதுபோலவே மடத்திற்குச் செய்தி வந்தது.  கவி குமரனாசான் படகு கவிழ்ந்து உயிரிழந்தார்.
இந்நிகழ்வு குரு ஒர வருவதுரைஞர் என்பதைக் காட்டிற்று.

அருளாளர் நாராயணகுருவின் வரலாற்றினைப் படித்துள்ளேமெனினும் குரு பற்றிய இத்தகு நிகழ்ச்சி யொன்று அங்குக் கூறப்படவில்லை.  அதாவது குரு ஓர் முன்னுரைஞர்    என்பதும் குமரனாசானின் மரிப்பினை முன்னறிந்திருந்தார் என்பதும் அந்நூலில் கூறப்படவில்லை. இது மேற்கூறியவாறு அறிந்தவர்வாய்க் கேட்டுணர்ந்தது ஆகும்.

குருவானவர் தாம் செய்த எதற்கும் விளம்பரம் தேடாது அமைந்து வாழ்ந்த உயர்பெற்றியினர் என்பதும் இதன் மூலம் தெரிகிறது.

(குமரனாசான் பற்றிய ஒரு வலைத்தளம் செல்லத்தக்க சான்)றிதழைப் பெற்றிருக்கவில்லையாதலின் அங்குச் சென்று எதையும் ஆராய இயலவுமில்லை. )

குறிப்பு:  ஒரு என்பது ஓர் என்றும் ஓர் என்பது 
ஒரு என்றும் தன் திருத்த மென்பொருளால் 
மாறிக்கொள்கிறது.  திருத்தியுள்ளோம். மீண்டும்
பின்னர் நோட்டமிடுவோம். நன்றி.

கருத்துகள் இல்லை: