புதன், 19 செப்டம்பர், 2018

காமாக்கியா என்பது என்ன தெய்வம்?

மேகாலயாவில் காமாக்கியா பீடம் என்று ஓர் அம்மனைப் போற்றுமிடம் உள்ளது,  இச்சொல் யாது என்பதை இப்போது அறிந்துகொள்வோம்,

காமாட்சி என்பது ஒரு தெய்வத்தின் பெயர்.

காஞ்சி காமாட்சி அம்மையை உங்களுக்குத் தெரியும்.

இந்தச் சொல்லை இருவகையாகப் பிரிக்கலாம்.

மக்களைக் காக்கும் மாண்பினை உடையாள் என்பது ஒரு வகை.

கா :  காக்கும்;
மாட்சி :  மாண்பு.

இது தெய்வத்தைக் குறிப்பதால்  மாண்பு என்பதை மாண்பு உடையாள் என்று பொருள் கூறல் வேண்டும்.

கா+  மாட்சி  =  காக்கும் மாட்சி (உடையவள்.)

இனி இதனைக் காமம்+  ஆட்சி என்றும் பிரிக்கமுடியும்.

காமம் + ஆட்சி
=  காம +  ஆட்சி .  இதில் முதல் சொல்லில்  ( நிலை மொழியில்) உள்ள  இறுதி அகரம் கெடும் அல்லது விடப்படும்.   காம்+  ஆட்சி =  காமாட்சி ஆகிவிடும்.

காமாட்சிக்கு  ஓர் ~ ஆள் பெண்பால் விகுதி சேர்த்தால்:

காமாட்சியாள் என்றாகும்.

ஆட்சி என்பது ஆக்கி என்று திரியும்.   இன்னொரு சொல் எடுத்துக்காட்டாக:
பட்சி > பக்கி.

ஆகவே  ஆக்கியாள் என்று மாறிவிடும்.

காமாக்கியாள்.  இந்த ஆள் விகுதியில் உள்ள ள் பிற மொழிகளில் வருவதில்லை.

காமாக்கியாள்  >  காமாக்கியா.

முடிவு:  மேகாலயா முதலான மாநிலங்களில்  காமாக்கிய(/யா) என்றே வழங்கும்  இவ்வம்மனின் பெயர்.

அம்மனின் பெயர்:  எப்படிச் சொன்னாலும் முழுநிறைவே :  பூரணமே.
எல்லோரையும் வாழ்விக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: