இதன் அமைப்பறிவோம்.
இதை ஆ+ பரு+ அணி+ அம் என்று பிரிக்க:
அணி+ அம் > அணம் என்றுமாகும். இதன் அணி என்ற சொல்லில் உள்ள இகரம் கெடும். ஆகவே அணம் ஆம்.
ஆக்கத்திலும் ஈட்டியதாலும் பரிய (பெரிய) பொருள் என்றற் பொருட்டு, ஆ+ பரு> ஆபர என்று வந்தது. அணம் என்ற சொல்லின் அகரம், ருகரத்தில் இணைய, அஃது உகரம் கெட்டு, ரகரமாயிற்று.
இவ்வாறு நோக்க, ஆபரணம் என்பது பெரிய வகை அணிகலன் களுக்கு வழங்கப்பட்ட பெயர்க்குறிப்பு என்பது தெரிகிறது. நாளடைவில் இது சிறியவையாகிய அணிகலன்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது மறக்கப்பட்டு, ஆபரணம், அணிகலன் ஆகிய இரண்டுமே எல்லா வகை அணிகளுக்கும் வழங்க நேர்ந்துவிட்டது இவ்வாய்வின்மூலம் அறியப்படுகிறது.
ஆபரண் என்ற முதலிரு சொற்பகவுகளையும் இன்ன்னொரு வழியில் நோக்குவோம். அப்போது அது, '' பரணில் வைத்துக்கொள்வதற்கு ஆகும் பொருள்'' என்ற பொருளைத் தருகிறது. விலை உயர்ந்த சிறு அணிகலன் களைப் பெட்டிகளில் வைத்துப் பூட்டுவர்; அல்லது திருடர் மிக்கிருந்த இடங்களில் மண்ணிற் புதைத்து வைத்து, வேண்டிய போது எடுத்துப் புழங்குவர். இக்காரணியாலும், ஆன பரணின்கண் அடங்குவது என்று இன்னொரு பொருளைத் தந்து, சற்று பருமையுடைய அணிபொருட்களையே இச்சொல் குறித்தது.
இச்சொல் இருபொருட் பதிந்த ஒரு சொல் என்பது இவற்றினின்று தெளிவாகத் தெரிகிறது.
''அணிகலன்'' என்பதில் வரும் அணி என்ற சொல்லும் அண் என்ற அடியிலிருந்தே வருகிறது. இவ் அடி, அடுத்துவருவனவைக் குறிப்பது. ஒரு கதணியை அணிந்துகொள்வது என்ற வழக்கு, உடலை அடுத்து நிலைகொள்வது என்ற பொருளில்தான். இந்தச் சொல்லின் பொருள், ஆ பரண் அண் அம் என்பதிலும் உண்டு; ஆ+ பரு+ அண்+ அம் என்பதை நல்லபடி நோக்குக.. அணிதல் என்ற சொல்பொருள், உடலை அடுத்திருப்பதால் ஏற்பட்டதுதான். அணிபவை அனைத்தும் கலந்து அணியப்படுபவைதாம். கலந்து என்றால் ஒரு நேரம் தோடு, இன்னொரு நேரம் தொங்கட்டான் அல்லது வேறு என்பதுபோலும் கலந்தணிகை. அதனால்தான் அவற்றுக்கு கலன் ( கல+ அன்) என்று பெயர்வந்தது. பலவகை அணிபொருட்களைக் குறிக்கையில், இவ்வாறுதான் பொருந்தி அமையும். கல என்ற சொல், ஒரு மறைவான பல்பொருட் குறிப்பு ஆகும்.
இதிலிருந்து தமிழின் தற்தோற்ற நெறிமுறைகளையும் அறிந்துகொள்க. சமஸ்கிருதத்தைத் திற்ம்பட வளர்த்த நெறியாளர்களும் பண்டைத் தமிழர்களே ஆவர். இதன்பின் அது இவண்வந்த பிறரிடமும் வளர்ந்து பரவியது நாம் செய்த இறைவணக்கத்தின் பெரும்பயன் ஆகும். இவற்றை அறியாக் கதைகளால் மறைக்க முயன்றவர்கள் யாராயினும் அவர்கள் உண்மை அறிந்து போற்றுவதற்குக் கற்று அமையவேண்டும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடையது.