வியாழன், 12 பிப்ரவரி, 2026

சர்வம் என்பது

 இதைப் பற்றிச் சற்று விரிவாக இங்கு எழுதியுள்ளோம்.

https://sivamaalaa.blogspot.com/2022/02/blog-post_8.html

ஒரு சரிவில் கொட்டிய நீரனைத்தும் சரிவினடிக்குச் சென்றுவிடுவதால், அடியிற் சென்று மீட்டாலன்றி, எல்லாம் ஓடிவிட்டது என்றுதான் சொல்வர். சரிவிலிருந்து மீட்டல் அரிய ஒன்றே ஆகும்.  இதன் அடிச்சொல் சரு என்பதுதான்.  அரு> சரு> சருவு> சருவம்> சர்வம் என்றானதுதான் இச்சொல். சரு என்பதற்கு முந்திய அடி அரு என்பது கூறினோம். மீட்டல் அரிது  என்பதை அரு என்ற அடி காட்டுகிறது. சரிதல் என்பது  சொன்னவன் பக்கம் சாய்ந்துகொள்வது என்ற பொருண்மையால் ஒத்துக்கொள்ளுதல் உணர்த்துகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 9 பிப்ரவரி, 2026

ஜீவன் என்ற சொல்.

 ஜீவன் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். இது சீவித்தல் என்று வினையாகவும் வரும். இதற்குப் பல சொல் தோற்றங்கள் சொல்லப்பட்டிருந்தாலும்,  இதைத் தமிழ் மூலத்தது என்று  ஆய்வாளர் சிலர் கூறியுள்ளனர்.

மனிதன் இறந்தபின் மீண்டும் மறுபிறவி கொள்கிறான் என்பது ஒரு கொள்கையாகும். மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதார் பலராயினும், நம்புவோரும் பலராவர்.  Lobsang Rampa முதல் பலர் பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி மறுபிறவி உண்டென்று கூறுவர்.  தமிழ்ச் சங்க காலத்திலும் மறுபிறவி நம்பிக்கை உடையோர் பலர் இருந்தனர்.

உயிர் >  யிர் >  ஜிவ் > ஜீவன்,  ஜீவித்தல் என்று வருதல் கூடுமென்பர். இது இலங்கை ஆய்வாளரின் கருத்து.

சீர் வருந்ந >  சீவன்ன  > சீவன் என்று வருதலும் கூடுமென்க.

சீர் மிக்கது என்பது புவி வாழ்வே என்பது இதன் கருத்தாக,  உயிர்> உசிர்> சீர்> சீர்வன்ன >  சீவன் என்றாகுமென்ப.

சிர் > சீர்,  வருந்ந என்பது வருகின்ற  என்பது. இன்று என்ற சொல் இன்னு, இன்னக்கி என்றெல்லாம் பேச்சுமொழியில் வருகிறது. ஆகவே வருகின்ற என்பது வருகின்ன -  வருன்ன ,  இதில் வரு என்பது வ  என்று குறுகும்.  வரு என்ற மூலவடி,  வந்த என்ற இறந்தகால வடிவத்தில், தன் ருகரமிழந்து, வந்த  எனவாதல் அறிக. சீவன் என்பதில் இந்த வன் மட்டும் உள்ளது.  வந்> வன். இதில் அன் விகுதிபோலும் அழகு வந்துவிட்டபடியால், அதையே இறுதிநிலை ஆக்கிவிட்டனர்.

வரு என்ற வினைப்பகுதியும்  வருந்து என்ற வினைப்பகுதியும் இவற்றின் காலவினைத் திரிபுகளுடன் கலந்து மயங்குமாறு விளைதல்,  தவிர்க்கப்பட வேண்டியது ஆகும்.

உயிர் என்ற சொல்லே ஜீவன் என்று வந்தது என்று பிற அறிஞரும் கூறியுள்ளனர்.

தலைச்சொல் இழக்கை பல சொற்களில் வந்துள்ள காட்சி ஆகும். எ-டு:  அரங்கன் - ரங்கன். இனி ரங்கா என்பது விளிவடிவம்.  பண்டை நாட்களில் கீழே நெடுஞ்சாண்கிடையாக  விழுந்தோ, நின்று முன்வாட்டாகச் சாய்ந்தோ வணங்கிய கடவுள், ''சாய்மி''   என்பது சாமி  ஆயிற்று.

சமஸ்கிருத மொழிச்சொற்கள் தமிழிலும் தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருதத்திலும் கலந்துள்ளன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.



வியாழன், 5 பிப்ரவரி, 2026

சந்தா வாய்தா

 இப்போது சந்தா என்ற சொல்லைப் பார்ப்போம்.

இந்தச் சொல்லில் இரண்டு பகவுகள் உள்ளன.  ஒரு சொல்லின் பகுதிச் சொற்களைத் தாம் பகவுகள் என்று குறிக்கின்றோம். பகவுகள் ஆவன:

அண்> சண்> சண்+தா> சண்தா > சந்தா  ஆகும்.  இதைச்

சண்> சம்>  சந்தா  என்று குறிக்க, இன்னும் தெளிவாகும்.

முழுச்சொற்கள் வாக்கியத்தில் புணர்கையில்  சண்+தா> ச ண்டா என்று வல்லொலி மிக்குப் புணரும்.  சொல்லாக்கத்திலும் கூட இவ்வாறும் வருவதுண்டு. எடுத்துக்காட்டாக,  அண்> சண்>  சண்டை.  இறுதியில் வந்த ''தை'' விகுதி: சொல்லாக்கப் புணர்வில், டை என்று மாறிவிட்டது. தை என்பது இதில் விகுதி யன்று, விகுதி டை தான் என்று வாதிட்டாலும்,  இந்த வாதத்தினால் எந்தப் பெரும்பயனும் விளையப்போவதில்லை. இருவழிகளிலும் இதனை விளக்குதல் கூடுமென்று வைத்துக்கொள்வதில் ஒன்றும் இழுக்காது என்றுணர்க. மொழியில் போதுமான சொற்களின் தொகுதி வேண்டுமென்று முயற்சி செய்யும்போது, இதை எல்லாம் நுணுகி  ஆய்தலினால் பயன் இல்லை. 

''நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர் 

பயனில  சொல்லாமை நன்று''

என்ற பொய்யாமொழிப் புலவரின் வாக்கினை சிரமேற் கொள்க.

சண்+தை,  சண்+டை என்ற இரண்டு சொற்களிலும், ஒரே அடியிலிருந்து இரண்டு சொற்களைப் படைத்தளித்தல்  திறனே என்று கொள்க.  விகுதிகள்தாம் மாறின.   அடுத்துச்செல்லாமல் சந்தையு மில்லை,  சண்டையும் இல்லை.

பண்டைக் காலத்தில்,  அடுத்துச் சென்றுதான் பணம் கட்டினர்,  சந்தா என்பதற்கு அதுவே பொருள்.  வாய்தா என்பதற்கும் அதுவே பொருள்.  இடம் என்றால் அதற்கு இன்னொரு சொல்: வாய்.  இச்சொல் பலபொருள் உள்ள சொல். இடத்திற்குத் தந்தது  வாய்-தா.   தா என்பது முதனிலைப் பெயராய்த் தருபொருள் குறித்தது.

வாய்தா என்பது  :  வாய் - இடம்;  தா-  தருவது. முதனிலைத் தொழிற்பெயராய், இங்குச் சொல்லின் பகவாய் வந்தது.  நிலவரிக்கு இது பெயராய் வந்து,  இங்கு வாய் - என்பது இடம் என்று பொருள்படும் தமிழ்.   அப்புறம் வாய் என்பது வாயென்னும் முக உறுப்பையும் குறிப்பதால்,  வாயினால் கேட்டுப்பெறுவது என்றும் பொருள்பட்டது. இது அரபுக்களினுடன் ஏற்பட்ட தொடர்பினால்  அங்கும் சென்று வழங்கி,  அரபுச் சொல் என்றும் நினைத்தனர்.

பல தமிழ்மூலங்களை அரபு மொழியிலும் காணலாம்.  அல் காதிப்  என்போர் முன் காலத்தில் தமிழரிடை இருந்த காப்பியக் குடியினர் போல,  நூல்கள் ஓதும் வகுப்பினர்.   ஸ்க்ரைப்  (scribes)  என்று ஒரு குடியினர் இஸ்ரவேலரிடம இருந்தமை போலும் இது. பழைய யூத புராணத்தையும் படித்து இதை அறிந்துகொள்ளலாம்.  பாரிசிகள்,  சாதுசிகள் என்றவர்களும் இருந்தனர்.  Dead Sea Scrolls என்ற நூலையும் படியுங்கள். C J Buckle SJ  எழுதியவையும் படிக்கலாம்.

Sadusee என்ற சொல்லுக்கும்  சதை என்ற தமிழ்ச்சொல்லுக்கும் ஏதும் நீங்கள் தொடர்பு அறிகிறீர்களா என்பதை எமக்குச் சொல்லுங்கள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை