திங்கள், 9 மார்ச், 2026

கம்பி என்னும் சொல்.

 கம்பி என்ற சொல், முதனிலைத் தொழிற்பெயர்.  இரும்பினால் ஆன அசையும் தடிகளையும் குறித்தபடியால், பொருட்பெயருமாகும்.

கம்பித்தல் என்னும் வினைச்சொல் தமிழில் இருப்பதால், இது தமிழ்ச் சொல்லே ஆகும். கம்புபோல் நீளமாக  இழுக்கப்பட்டு  வளைக்கவும் அசைக்கவும் படும் நிலையினதாகையால்,  கம்பு> கம்பி  என்று இகர இறுதியுடன் முடிந்த சொல்லாகும்.

கம்பு என்பதும் தமிழ்ச் சொல்லே. கடுமை உடையது என்ற பொருளில் கடு> கடும்பு  என்று  புகர விகுதி பெற்று இச்சொல் முடிகிறது. பின்னர் டுகர இடைக்குறைந்து, கம்பு என்றாகி வர,  முன்னிருந்த சொல் கடும்பு, சற்று வழக்கிறந்துவிட்டது.

தொடக்கத்தில் வரும்பால் கடும்பால் என்றது,  கடும்பு என்று கடைக்குறைந்தது. இதில் பு விகுதி எனக்கொண்டு,  கடுமை> கடும்பு எனினும் இதனால் இச்சொல் ஏதும் இழுக்குறாது நிற்கும்.  இதனால் கடும்பு என்ற குச்சியைக் குறிக்கும் சொல் வேறானது என்று உணர்ந்துகொள்க.

பிடிப்பதற்குக் கடுமையாக இருப்பதால், கடும்பிடி என்பது  கம்பி என்று குறைந்தது எனினும் ஒக்குமெங்க.   ஆகவே இது ஒரு பலபிறப்பிச் சொல் என்று கொள்க.  

கம்பித்தல் என்பது கற்பித்தல் போலுமொரு சொல் எனலாம்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்ன

பகிர்வுரிமை

வெள்ளி, 6 மார்ச், 2026

ரசம் என்பது

 சாப்பிடும் போதெல்லாம்  ரசம் என்பதை மறந்துவிடல் ஆகாது.  இது ஓர் இன்றயமையாத தேறலாக இப்போது இடம்பிடித்துள்ளது.

பலவித மருந்துக் குச்சிகள், இலைகள், இணுக்குகள், கொழுந்துகள், வேர்கள் இன்னும் இவை போல்வனவற்றை வேகவைத்து, இவற்றை இறுத்து, வரும் ரசத்தை மட்டும் ஒரு கோப்பையில் ஊற்றி அருந்தும் நீர்க்கலவைக்கு   ''இறசம்'' என்று சொல்வோம்; எனினும் இது ரசம் என்றே வழங்குகிறது.  எழுத்தில் வேண்டுமாயின் இரசம் என்று எழுதலாம்.  இதை இறசம் என்று எழுதினால் இது இறுத்துக் குடித்தலுக்கு ஏற்ற பெயராக  அமைகிறது.

இவ்வாறின்றி,  போட்ட குச்சி முதலியவற்றை நீக்க மீதமாக இருக்கும் நீரின் காரணமாக,  இரு+ சு+ அம் >  இரசம் > ரசம் என்றும் கூறினாலும் பொருந்துவதாகவே தெரிகிறது.

அரைத்து நீருடன் கொதிக்கவைத்து இறக்குவதால்,  அரை+ சு+ அம் >  அரைசம்> அரசம்> ரசம் எனினும் பொருத்தமே  ஆகும்.

அரிய மருந்துப் பொருள்களை வேவித்து இறக்குவதால்  அரு+ சு+ அம்> அரசம் > ரசம் எனினும் பொருத்தமே.

உரைத்து வழித்து நீரிலிட்டுக் கொதிப்பித்து இறக்கி,  அதைக் குடித்தாலும்,உரை+ சு+ அம்>  உரசம்  ( ரை என்பது ர என்றானது ஐகாரக் குறுக்கம்)  உகரம் அகரமான திரிபு வழியாக  ரசம் என்றே  ஆகும்.   உகரம் இகரமாக ஆகும் என்பதை முன்பு நிறுவியுள்ளோம்.  பழைய இடுகைகளில் கண்டு தெளிக.

உரிய மருத்துவம் என்ற பொருளில்,  உரி+ சு+ அம் >  உரிசம்>  உரசம் > ரசம் என்றும்  ஆகும்.

இன்னும் பலவிதமாக வரலாம்.  ஆகவே இதைப்  பல்பிறப்பிச் சொல் என்று முடிக்கவேண்டும்.

நாவில் சற்று உறுத்தலான சுவையுடன் வருவதால்,   உறு+ சு+ அம் > உறசம்>  ரசம் என்றுமாகும்.

உடன் உருப்பட வேண்டின் குடிக்கவேண்டும் என்ற பொருளில்,  உரு+ அ+ சு+ அம் > உரசம் > ரசம் என்றுமாகும்.

சம/ஸ்கிருதம் என்பது தமிழின் இணைமொழியாக வளர்ந்ததே ஆதலின்,  ஆரிய மொழி என்னும்  அயலார் மொழி அன்று.   ஆர் என்ற பணிவுச் சொல் உடையோரான பெரியோர்க்கு உரிய மொழி என்ற கருத்தில்  ஆரிய மொழியாகலாம். இங்கு அனைத்தும் தமிழ் மூலமாகவே கூறியுள்ளோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது


புதன், 4 மார்ச், 2026

அருமை என்பதன் உணர்ச்சி எப்போது வந்தது: அருமை, அரு> ஆர்

அருமை என்னும் உணர்வு:

 மனிதனுக்கு அருமையானது ஒன்று என்ற எண்ணம் எப்போது பிறக்கிறது? ஏதேனும் ஒன்று மிக்கத் தொலைவிலிருந்தால்,  அது  அருமை என்ற எண்ணம் எளிதில் வருவதில்லை.  அது அருகில் வந்தபோதே அது அவனைப் பாதிக்கிறது. இதை இன்னும் சிந்தித்து விரிவாக்கலாம்.  ஆனால் இதை விட்டுவிட்டோம். அருகு-  அது குறைந்த போதும் அதன் அருமையை உணர்கிறான்.  எடுத்துக்காட்டாக, குளிருக்குத் தீக்காய்தல் அருமை.  ஆனால் தீ குறைந்துவிட்டால் அதன் அருமை உணரப்படுவதாகிறது. ஒரு மனிதன் மதிக்கத் தக்க பல அருங்குணங்களை உரியவனாகிறான். அதனால் அவன் உணர்ந்து போற்றற் குரியவனாகிறான்.  

அரு என்பது ஆர் என்று திரிதல்:

இப்போது அரு> ஆர் என்று திரிந்து,  வந்தார் (ஆர்), போனார் (ஆர்) என்று அவன்றன் அருமை உணரப்படுகிறது. இதற்கு முன், ஒருவனே அல்லன், பலர் வந்த போது அந்த அருமை உணரப்பட்டது.  நம் வீட்டுக்குப் பலர் வந்தனரே, என்னே அருமை என்று எண்ணிப் பூரித்தான். அரு> ஆர் என்று பலரைக் குறிக்கும் விகுதியாய் அது இருந்தது.  வந்தார்.  (ஆர்).

இதற்கு மாற்றான சிந்தனை என்னவென்றால்,  மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் என்று எண்ணுவது ஒன்று.  கடல், உலகம் என்பன விரிந்தனவாகவும் தொலைவிலும் உள்ளனபோலும்.  மழையும் தொலைவில் பெய்தாலும் அருகில் பெய்தாலும் அன்ன (பன்மையில்).  கலி - மகிழ்வு என்ற உண்டுபண்ணுதற் குறிப்பில்,   ஆர்கலி என்ற சொல் படைப்புறுகின்றது..  ஆர்கலி வாரணம் என்ற தொடரைக் கவனிக்க.  வாரி+அண்+ அம்> வாரணம். இகரம் கெட்டது( தொலைந்தது).

அருணவம்  ( அரு, அண், அவம்).

அருகும்  தொலைவும்

அருணவம்:  அருமை,  அது அருகில் இருந்தாலும்,  (அண்> அண்மை);  அவம் -  அவ் அண்மை கெட்டுத் தொலைவில் இருந்தாலும்.  ஆகவே அருணவம் என்ற சொல் இரண்டையும் உட்படுத்தி அமைந்திருந்தாலும் என்று  அறிக.  அவி+ அம்- அண்மை கெடுதல் அல்லது மாறியமைதல்.

தனிமைச் சுவை உடைய சொற்களைக் கொண்டது தமிழ். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.