வியாழன், 2 ஏப்ரல், 2026

சரித்திரம் பிறழ்ந்துரை அல்லது பொய்யினைப் பரப்புதல்

 : நீ,

 பித்தனைப் போலவே அவன்சொல் கேட்டுப்

பிதற்றுவ தெறறுக்கடா

மத்தினைப் பிடித்து  மண்ணில் கடைந் திடில் 

மதுரத்    தயிர்மறுத்தே,

மெத்தச்  சுவைதரு  மோர்வரு   மோசொல்க!

மென்மேல்  பிழைசெய்கிறாய்

எத்தனை ஆண் டுகள் அடிமைப்  புத்தியில்

இருந்ததனால் அழிந்தாய்.


ஆரியர் என்றது  சங்கத்  தமிழரை

அறிவாளிகள்  அவரே;

சீரியகல்விப் பெருக்குடைப் பிறரையும்

குறித்திடும்  தொடரதுவே!

ஆரியன் என்றது இனப்பெயர் என்பவன்

அறிவுடையான்  அல்லனே!

ஆரென்ற பலர்பால் விகுதியும் தமிழிலே

பிறரொன்றும்  அறியாததே.


பொருள்:

எற்றுக்கடா -  எதற்கடா

மென்மேல்  -  மேலும் மேலும்

மத்து -  சிலுப்பிக் கடையும் கோல், 

மதுரத் தயிர் மறுத்து -  இனிய தயிரைக் கடையாமல்

மெத்த - மிகுந்த

சுவைதரு-  சுவையான

ஆர் என்ற...  -  வந்தார் சென்றார் என்ற பணிவுப் பன்மை விகுதி.

பிறர்  -  தமிழ்ப்புலவர் அல்லாதவரும் தமிழறிவு இல்லாதவரும்.

இனப்பெயர் -  ஓர் இனத்திற்கு வைக்கப்பட்ட பெயர்

சரித்திரம் என்பது சரியாகவும் திறமாகவும் சொல்லப்பட்ட வரலாறு. திறம் என்ற சொல் விகுதியாய் வரும்போது றகரம் ரகரமாகும்.

புனைவுகளுடன் சொல்லப்படுவது சரியாகச் சொல்லப்படாதது.  திறம்படச் சொல்லப்பட்டிருந்தாலும். திறம் என்பது ஒளிவு மறைவு இன்மை குறிக்கும்.  புனைந்து சொல்வதிலும் ஒளிவு மறைவு இன்மை கடைப்பிடிக்கப்படுதல் கூடுவதே.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை





செவ்வாய், 31 மார்ச், 2026

கொடுங்கோளூர் பெயர்க்காரணம். அஞ்சலி என்பது.

 இந்த ஊரின் பெயர், இப்போது திருவஞ்சைக்களம் என்பதாகவும் இது கேரளத்தில் உள்ளதாகவும் தெரிகிறது. இங்கு முன்னிருந்தவர்கள், அரசரின் அஞ்சலியைக் கண்டு இன்புற்றனர் என்று தெரிகிறது.

இது திருச்சூர் மாவட்டத்திலுள்ள மகாதேவசாமி கோயிலாகும். இது அஞ்சைக்களம் என்றும் சொல்லப்படுகிறது. அஞ்சைக்களத்தப்பனே  என்று தேவாரப்பாடலில் வருகிறது. தேவாரம் (913.1)

அஞ்சலி என்பது அகஞ்செலி  என்பதன் திரிபு.   அஞ்சை என்பது அகஞ்செய் என்பதன் திரிபே.  அஞ்சைக்களம் என்பது அஞ்சைக்குளம் என்று திரிந்துவிட்டதென்று தெரிகிறது.

அரசர்கள் அரியன மேற்கொள்தற்கு இங்கு வந்து வணங்கிப் பின் செயல் கொண்டனர் என்று அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை

வெள்ளி, 27 மார்ச், 2026

நிபந்தனை என்பது

 நி என்பது ஒரு சங்கத முன்னொட்டு என்றாலும்,  அது நில் என்ற தமிழ்ச்சொல்லின் கடைக்குறைச் சொல்தான்.  நில்- நி. அதாவது ஒரு நிகழ்வின் அல்லது எதிர்நோக்கும் நிகழ்வின் முன்நிற்பது.

பந்து என்பது பற்றி நிற்பது என்னும் பொருளது.  பல் + து.  இது தமிழ் முறைப்படி பற்று என்று வரும்.  ஆனால் சமஸ்கிருதச் சொல்லாக்கத்தில்  பல்> பன்  ஆகிறது.  இது எழுத்துத் திரிபு அமைப்பின்படி தமிழிலும் வரக்கூடியது.  பன்+து > பந்து என்று விளையாடும் பந்து என்ற சொல்லிலும் வருகிறது. இதற்குக் காரணம், பழங்காலத்தில் பந்துகள் கயிற்றினால் கட்டப்பட்டன.  அவ்வாறு கட்டி அதை அடித்து விளையாடினர். தேய்வை ( ரப்பர்)ப்   பந்துபோல் அடித்தவுடன் அமுங்கி எழக்கூடிய திறன் இதற்குக் குறைவு.

சங்கதத்தில் இது  முன் பற்றி நிற்கும் நிலையைக் காட்டுகிறது.

அன், ஐ என்பன விகுதிகள்.

அன் என்பது அண்டி நிற்பது,  அணுகி நிற்பது என்று பொருண்மை தரலாம்.  ஏற்ற முறையில் விளக்கி இதை மற்ற இரு பகவுகளினோடும் இணைக்கவேண்டும்.

எனவே முன்னரே பற்றி நிற்குமாறு  சொல்லப்படும் அல்லது விதிக்கப்படும் ஒரு நிலைப்பாடு ஆகிறது.

இதில் என்ன தெரிந்துகொள்கிறோம் என்றால் தமிழிலும் சங்கதத்திலும் எத்தகு உறவு உடையவை சொற்கள் என்பது. இதை மிக்க நெருங்கிய உறவு என்னலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை