புதன், 15 ஜூலை, 2026

அரம்பை, அரம்பையர், ரம்பை, ரம்பா

 இந்தச்  சொற்கள்  வழக்கில் சற்று  குறைந்துள்ளன என்று தெரிகிறது.

அரம்பை என்பவள் ஒரு தேவருலக மாது என்பர். இச்சொல் பன்மையில் அரம்பையர் என்று வரும். இச்சொல் தலையிழந்தபின்,  ரம்பை, ரம்பா என்றும் வழங்கும்.

அரம்பை என்ற சொல்லின் பகவுகள் ( உட்பிரிவுகள்),   அரு+ அம்+ பை  என்பன. இவற்றை இணைத்தால் ''அரம்பை''  என்ற சொல் வந்துவிடும். பாணினியில் சமஸ்கிருதச் சொற்பிரிப்பின்படி,  வேறு பிரிப்புகள் இருக்கும்.  பிற எழுத்தாளர்கள்,  வேற்று விளக்கங்களும் அளித்திருப்பர்.  அவற்றை  அவர்களின் நூல்களில் அறிந்துகொள்ளவும். அரம்பை -  பாற்கடற் பாவையருள் ஒருவர்.

அரு என்பதே முதற்பகவு.  அரிய என்ற பொருள்தரும்.

அம் என்பது அழகைக் குறிப்பது. அம் - அம்மை : அழகு.

பை என்பது இளமை குறிக்கும் அடிச்சொல்.   பை> பய் என்றும் வரும்.  பய்> பயில். பயிலுதல் -  தொடக்கப் படிப்பைக் குறிக்கும்.  பய்- பயிர்:  முளைப்பனவில் இளம்பகுதி.  பய் > பயம்:  ஒன்றை முழுமையாக அறியாத போது தோன்றும்  அச்ச உணர்வு என்று சொல்க.  பை > யையன்.  இந்தச் சொல்  boy என்று இந்தோ ஐரோப்பிய மொழிகளில் வரும். கிரேக்க மொழிச்சொல் ''பைஸ்'' என்பது உறவுச்சொல்லாகக் காட்டப்பெறும். இளநாட்களில் விளைதல் ''பயத்தல்''  என் க.  இந்த இளமைப் பொருள் நாளடைவில் தேய்வுற்றது -  பிறமொழிகளில்.

அரம்பை என்பதில் இறுதியில் இச்சொல்லே பகவாகும்.

பொருள்:  அழகுடன் இளமையும் உடைய பேரழகி. இது தமிழிலிருந்து வருவது.

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின்னர்

பகிர்வுரிமை




திங்கள், 13 ஜூலை, 2026

காரன் சொல் - அப்பக்காரன், குருவிக்காரன் முதலிய பல

 குருவிக்கு  ஆர்  வந்தார்  >  குருவிக்கார் வந்தார்>   குருவிக்காரன் வந்தான் என்றபடி வந்த சொல்தான் இது.  இங்கு குருவிக்கு அவர்>   என்பதே குருவிக்கவர்> குருவிக்கார் என்றும் வரும்.  காரன் என்பது ,..கு+ஆர்+அன் என்பதன் பிறழ்பிரிப்பு.  ஆர் என்பது   ஆர்> ஆரன்,  இது  கு+ ஆர்+ அன் என்பதே.

அப்பத்துக்கு  அவர்>  அப்பத்துக்கவர்>  அப்பத்துக்கார்>  அப்பக்கார்>  அப்பக்காரன்.   இப்போது காரன், காரர் என்பன வந்தன.

இது போல் பிறழ்பிரிப்புச் சொற்கள் முன்னர் மொழியறிஞர்களால் எடுத்துரைக்கப் பட்டுள்ளன.

வாழ்கு+ இன்று+ ஆன் >  வாழ்கின்றான் என்று வந்தது காண்க.

அன்றி,  கின்று என்பது ஓர் நிகழ்கால இடைநிலை என்றனர்.  அதன் மூலம் கு+ இன்று  என்பதுதான்.  இலக்கணியர் இதை மறைத்தனர்.  நன்னூல் இப்படிச் சொல்லும்.  தவறு ஒன்றுமில்லை.  விரைவாக உணர்ந்துகொள்வதற்காக இலக்கணம் இப்படிக் கையாளும்.

இது வடநாட்டில்  கார் என்று குன்றிவழங்கும்.

இன்னொரு விளக்கமும் உண்டு. பின் சொல்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை

வியாழன், 9 ஜூலை, 2026

பரிபூரணானந்தம். பெயரமைவு



இந்தச் சொல்லை அல்லது சொற்றொடரை இப்போது கவனிப்போம்.

இது இறைவனுக்கு ஒரு பெயராகத் தாயுமான சுவாமிகள் பயன்படுத்துகிறார். பரிந்து -  இருப்பிடத்திலிருந்து வெளிப்பட்டுப் பரவி,  எங்கும் புகுந்து, ஆவிக்கு மகிழ்வினைத் தந்துகொண்டிருப்பது இறைமை என்னும் உடனறிந்திட இயல்பாக இயலாத நன்றான ஒன்றுதான் ''பரிபூரணானந்தம்'' .

''பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தமே'' என்ற பாடல் தொடரில் இது வருகின்றது.

பரிதல் என்ற சொல்லுக்கு கதிர்வேலுப்பிள்ளை எல்லாப் பொருள்களையும் விரித்துத் தருகிறார். இவற்றைச் சுருக்கமாக:

பரிதல் - அறுத்தல், அன்பு,  அன்போடு பேசல், இரங்கல், ஒடித்தல், ஒழுகல், தறித்தல், பங்கிடல், பரிந்து பேசுதல், வெட்டுதல்.

என்று சுருங்கச் சொல்லலாம். பரிதல் என்ற சொல், அதன் முன்வடிவில் பருத்தல் என்றிருந்தது. பரு> பரி. பருத்தது எல்லை கடப்பின் அறுபடும்; ஆகையால் அறுத்தல், அப்புறம் ஒடித்தல், ஒடிபட்டபின் இன்னொன்றுடன் இணைந்து நடத்தல், காதுதல் இன்ன பிறவும் அறிக

மனவுணர்வு கலந்து நடைபெறுதலும் இவற்றுள் வரும்.

புகு(தல்) என்பது பேச்சில் பூர்தல் என்றும் வரும். இதன் எச்சம் பூந்து என்று பேச்சில் வருவதுண்டு. இதைப் புகுந்து என்பதன் திரிபாகவும் கருதற்கு இடனுண்டு. புகு> பூர்> பூரணம் என்பதே இச்சொல்லின் அமைவு. சங்கதத்தில் (சமஸ்கிருதத்தில்) பூரணம் என்ற சொல் இருப்பின் இது தமிழ்த் திரிபுதான். பூர்தல் pūrtal from Kadirvelu Pillai's "Tamil Moli Akarathi" (p. 1065)
பூர்தல் - நிறைதல். என்பதும் கூறப்படுகிறது.

ஆக நன்று அம் > ஆ+ நன் + து + அம் > ஆனந்தமானது காணலாம்.

வினைச்சொற்கள் எங்கு இருக்கின்றனவோ. அந்த மொழிக்குரியவை சொற்கள்.  இங்கு சொற்கள் ஆவன:  பரிதல், பூர்தல், ஆதல், நன்று, அமைதல் என்பவை.

இவற்றைக் கூட்டிப் பொருளுரைத்துக்கொள்க.

சமஸ்கிருதம் என்பது சம + கதம். கதம் - ஒலி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை