இந்தச் சொல்: '' திவாகரன்'' என்பது. இவனுக்கு ( சூரியனுக்கு), ஆதித்தன் என்ற பெயரும் உள்ளது.
இதைத் தீ+வார்+ கு+ அரு+ அன்: தீயைத் தொலைவிலிருந்தே வாரிக் கொணர்ந்து அருகில் சேர்த்துச் (சூட்டைத்) தருபவன் என்பது எமக்கு நன்றாக இருக்கிறது. நீங்கள் உங்கள் கருத்தைப் பதிவிடலாம். சூட்டைத் தருபவன் சூரியன் என்பதற்கு இது இனிய இணைப்பைத் தருகிறது. சூரியன் என்பது அன் விகுதி இல்லாமல் சூரியா என்று இருந்தாலும் அதுவும் நலமே. மடி> மரி என்ற இரண்டும் ஒருபொருள் தரும் போலிகள். டி என்பது ரி என்பதற்குப் போலியாக வரவில்லை? என்ன வேறு ஆதாரம் வேண்டிக்கிடக்கின்றது.
இந்தச் சொல்லைப் பலவழிகளில் விளக்கலாம். இச்சொல் ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கமுடையது ஆகும். பல ஆயிரக்கணக்கான அடிச்சொற்களைக் கொண்டது தமிழ்மொழி. இதிலுள்ள மூலங்கள் எல்லா உலக மொழிகளிலும் பரவியுள்ளது. சமஸ்கிருதம் என்பது இன்னொரு மொழி. அதுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது என்பதைச் சிந்திக்கவேண்டும். சமம்+ கதம்> சமக்கதம்> சங்கதம். என்றால் சமஸ்கிருதம். சமம் + ஸ்+ கதம் > சமம்+ ஸ்+ கிருதம்> சமஸ்கிருதம். இது என்ன பொருள் என்றால் சமமான ஒலியமைப்பு உடைய மொழி என்று பொருள். தமிழின் அடிச்சொற்களுடன் ஓரொலி உடைய மொழி சமஸ்கிருதம். ஏன் கிருதம் என்று சொல் வந்தது என்றால் மகம்> மிருகம் என்பதுபோல், கதம்> கிருதம் என்று முடிந்தது. அவ்வளவுதான் தெரியவேண்டியது.
கதம் என்பது, கத்து என்பது ஓரெழுந்துக் குறைந்து, கது என்று வந்தது. அம் விகுதி வந்தது. கது என்பதே நீண்டு காது என்று வந்து ஒலிவாங்கி என்ற பொருளைத் தந்தது. இன்னும் பல. இது நிற்க.
திவாகரன் என்பது சமஸ்கிருதம் என்றாலும் சரிதான். தமிழ் என்றாலும் சரிதான். திவாகர் என்றாலும் வேறுபடாது.
திருவாகும் அரன் > திருவாகு அரன் > திருவாகரன் > திவாகரன் என்றும் வரும். இப்படி வந்தால் அது ஒரு சொற்றொடராய் வந்து, ஒரு சொல்லாகி, ரு என்பது இடைக்குறையாகி, திவாகரன் என்று வரும். யாரைக் குறிக்கிறது. சிவனைக் குறிக்கும். சூரியனையும் குறிக்கும். பண்டைத் தமிழரின் வரலாற்றின் அவர்கள் இயற்கை எழிலர்களான சூரியன், சந்திரன், உடுக்கள் என இவற்றையும் தேவர்கள் என்றே கொண்டனர். நாளடைவில் சிவனைத் தனியாக அறிந்துகொண்டனர்.
அர்> அரு> அருகுதல் ( பலவாக இல்லாமை). அர் > .. இது சிவப்பு என்றும் பொருள். எ-டு: அர்> அரத்தம் > இரத்தம் > ரத்தம் ( சிவந்த நீர், செந்நீர் என்றும் கூறுப. மனிதர்கள் பெருகியதுபோல் சொற்கள் பல பின் தோன்றின. தொடக்கத்திலே இலக்கக் கணக்கில் தோன்றிவிடவில்லை. அர் என்றால் ஒலி என்றும் பொருள். அர்> அருச்சனை> அர்ச்சனை என்பதில் ஒலிப்பொருள். அர்> அரசன் என்பதில் ஒலிசெய்து மக்களை ஒன்றுகூட்டுவோனைக் குறித்தது. படைநடத்துகையில் இன்றும் இதை உணர்ந்துகொள்ளலாம். இது நிற்க.
இனித் தீ(ய்)வு + ஆகு+ அரன் > தீவாகரன் > திவாகரன் என்று பார்ப்போம். தீய்வு ஆகுமாறு அருகில் இருப்போன். சிவனும் தீமை செய்வோரை தீய்ப்பதற்கு அருகில் இருப்பவன் தான். அரன் என்பதற்கு தீயோரை அரித்தெடுப்போன் என்ற பொருளும் கூறியுள்ளனர். அரி+ அன் > அரன் என்பதில் ரி என்பதன் இகரம் கெட்டது.
மற்றொன்று: தீ+ வா( ர் )+ கு + அரன் > திவாகரன் ஆகும். தீயை அல்லது அதில் வரும் ஒளியை வரச்செய்து அல்லது வாரித்தந்து செயல்புரிவோன் என்க.
இன்னும் உள. இன்னொரு பதிவில் வெளிப்படுத்துவோம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
[இதை வரையும்போது சில பாகிகள் முன்னுக்குப் பின்னாக மாறிவிட்டன. இது யாம் செய்யாமல் கணினி தானேகவே செய்துவிட்டது. எனினும் யாம் இதில் ஏதும் மாற்றாமல் விடுத்துவிட்டதே நலம் என்று கருதுகிறோம். ]