திங்கள், 2 பிப்ரவரி, 2026

விளக்கமார் என்னும் பேச்சுச் சொல்

 விளக்கமார் என்னும் பேச்சுச்சொல் .

இந்த ''விளக்க-மார்''  என்னும் சொல்  நாம் தமிழ் பேசுகின்ற போது நாம் வழங்கும் சொல்லாகும்.  இந்தச் சொல் பிடிக்கவில்லை என்றால், இதே போன்ற பாணியில் அமைந்த ''கூட்டுமார்''  என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொள்ளலா9ம். செவிக்கினிய சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்ற  கொள்கை உடையவர்களும் உள்ளனர். மனிதன் பேசும் அனைத்துச் சொற்களும் நாவிலிருந்து அல்லது அஃது இயங்கும் வாயிலிருந்து வரும் சொற்கள்தாம். அதாவது இவை நாவொலிச் சொற்கள். இவற்றை ஒலிவடிவச் சொற்கள் என்று இலக்கண நூலார் கூறுவர்.

இந்தச் சொல்லில் வரும் மார் என்ற வடிவம், மலார் என்று அகரவரிசை யுடையாரால் பதிவு செய்யப்பட்டுளது.  மாறு என்பதும் காணப்படுகிறது.  ஆகவே கூட்டுமாறு, கூட்டுமார், விளக்கமார்,  விளக்கமாறு என்று பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. மாறு என்பதும் துடைப்பத்துக்கு வழக்கில் இருந்துள்ளது. 

மலார், மலாறு, மிலாறு என்பவற்றோடு மார் என்பதையும் கூட்டியுரைக்கத் தோன்றுகிறது. மிலார் என்ற வடிவமும் உண்டு.  ''மிலார்கள் தம்மில் பொலிந்தன பவளக்காய்கள்'' என்று பாரதிதாசனார் கவிதையில் வருகிறது. இந்த வடிவமும் அகரவரிசையில் இருந்திருக்கக் கூடும்.  மாறு என்றால் துடைப்பம் என்ற பதிவும் காணப்படுகிறது. எல்லா அகரவரிசைகளையும் பார்க்குமளவுக்கு நூல்கள் கிட்டவில்லை.

மலார் என்பது சிறு கிளைகளை அல்லது குச்சிகளைக் குறிக்கும் சொல். இது மிலார் என்றும் திரியும் என்பது கூறப்பட்டது. மலார் என்றது   பேச்சில் மார் என்று திரிந்துள்ளது. பாத்திரங்களை விளக்குவதற்கு அல்லது துடைத்து அழுக்ககற்றி  வைப்பதற்கு மலார்கள் பயன்பட்டன.  இந்தச் சிறிய இணுக்குகள் மென்மையானவை.  மெல் என்ற அடிச்சொல்லினின்றே  மலார் என்ற சொல்லின் தொடர்பினதான  மில் வருகிறது.  மெல்-மல்- மலார் என்ற திரிபு காணக்கிடக்கின்றது.   அர் என்பது அரு என்பதன் திரிபு.  அரு>அர்.  அரு என்பது சிறு வடிவினவாயவற்றையும் குறிக்கும். மெல்>மில்>மிலார்.   அர் இங்கு ஆர் ஆனது.  அர்> ஆர்: வந்தனர் (அர்> ஆர்) என்பதால் வந்தார். ஆர் என்பது, பன்மையும் ஆகும்.  வந்தார் என்பது பண்டைத் தமிழில் பன்மை, இன்று ஒருமையையும் குறிப்பது  வழுவமைதி என்றனர். மிலார்கள் அருகருகில் இருப்பவை,  அதனால் பொருந்துகின்றன. மிலாறு என்பது மலார் என்றும் வந்துள்ளது.

பழைய இடுகைகளில் பல திரிபுகள் காட்டப்பெற்றுள்ளன.  மெல்>மில்>மிலார்>மிலாறு என்பவற்றோடு கூறப்பட்ட பிறவும் தெளிவாம்,

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

வெள்ளி, 30 ஜனவரி, 2026

சமர்ப்பித்தல் என்பது.

 சமர்ப்பித்தல் என்ற சொல் எவ்வாறு அறிந்துகொள்வது.

அமைத்தல் என்ற சொல்லின் அடியுடன்,   அருமை குறிக்கும் அர் என்ற அடிச்சொல்லும் இனைந்திருப்பதுதான் அமர்(தல்) என்ற சொல்.  அர்> அரு> அருமை, அரிய, அரிது என்பவெல்லாம் உண்டாயின.  அர் என்ற சொல் உயர்ந்தோருக்குரிய பன்மை விகுதியாகவும் வழங்கிவருகிறது. தகுதியான முறையில் ஓரிடத்திருத்தலைத்தான் அமர்தல் என் கிறோம்.

அம் > அமை> அமைதல்.

அம்>  அம்மை> அம்மா( விளிவடிவம்).

அம்> அமிழ்.  அமிழும் போது பொருள் கீழ்நோக்கி இறங்குகிறது.    அம் > அமர்: அமரும்போது நிற்பவன் கீழ் நோக்கி உடலைக் கொண்டுபோய் உட்காருகிறான். அமையும்போது நன் கு இருப்புக்கொள்வதாக வரும் போது, அமைந்தது என்று சொல்கிறோம்.  அம் என்பதுடன் ஐ என்ற உயர்வு குறிக்கும் பழைய அடிச்ச்சொல்லும் சேர்ந்து வருவதை உணர்ந்துகொள்க.

அமர்தல் என்ற சொல்லில் அம், அர் என்ற பழைய அடிகள் உள.  அமர்ந்தால், உடல் தரைக்கு அருகில் செல்கிறது.  ஆகவே தரைக்கும் தலைக்கும் உள்ள இடம் குறுக்கமடைகிறது.   அரு> அருகுதல் என்பது குறைதலைக் குறிக்கும், குறுக்கத்தைக் குறிக்கும்.  ஆணவமுதலிய கேடுகள் குறைவதும்  இதில் குறிப்பாக  உள்ளது. உட்கார் என்ற சொல்லிலும்  ஆர் என்பதும்  அரு> ஆர் என்று திரிந்து அமைந்ததே.   உட்கு என்பது உள்+கு என்பதுதான். நிலம்நோக்கி உடல் செல்வது உட்செல்வது போன்றதே.  உள்+ கு  என்பது இக்கருத்தே. இதிலிருந்து அமர் என்பதில் வரும் அர் என்பதற்கும்  உட்கார் என்பதில் வரும் ஆருக்கும் உள்ள உறவினை நல்லபடி அறிந்தின்புறலாம்.

அமர் என்ற சொல்லே சமர் என்றபடி வருகிறது.    அமணர்- சமணர் என்பதுபோல் வரும் திரிபே இது.  சமர்> சமர்ப்பி என்பது,  ஒன்றைப் பெரியோனின் இடத்தில்  அமரும்படி  செய்வதுதான்.  அதாவது இயல்பான மொழியில் சொல்வதானால்  அமர்விப்பது.  இருப்பிப்பது.  இவ்வாறு அமைந்த சொல்தான்  சமர்ப்பித்தல் என்பதாகும்.

சமர்ப்பித்தல் என்பது அருமையான தமிழ்ச்சொல் ஆகும். இந்த  உயர்வான வழக்கில் இது பயன்பாடு காணும் சொல்லாய் இருப்பதால்,  இது ஒரு அரசவைச் சொல் ஆகும்.  பண்டை அரசவைச் சொற்கள் எல்லாவற்றையும் நாம் அறிந்துகொண்டுவிட்டோம் என்று சொல்வதற்கில்லை.  அதற்கு இன்னும் ஆய்வுகள் முடுக்கிவிடப்படுதல் வேண்டும்.

இச்சொல் சமகதம் அல்லது சங்கதம் என்னும் சமஸ்கிருதத்திலும் வழங்குகிறது.  சமஸ்கிருதம் என்ற தமிழுக்குச் சமமான ஒலிகளையுடைய மொழி என்பது பொருள். ஒலிமேம்பாடு என்று கருதாமல் அடிப்படை ஒலிகளை மட்டும் கொண்டால்  சம ஒலி மொழிதான் சமஸ்கிருதம்.  சம ஒலி என்பது பெரும்பான்மை பற்றி வந்த பெயர். எல்லாம் ஒன்றாக இருந்தால் அது வேறு மொழியாக இருக்காது.  ஆகவே வேறுபாடுகள் இருக்கும்.

மொழியின் அமைப்பு பற்றிய முழு அறிவும் திரிபுகளைப் பற்றிய தெரிவும் இல்லாத காலத்தில் செய்யப்பட்ட ஆய்வுகள் குறையுடையவையாக இருக்கும். ஒரு சொல்லுக்கு இங்கு சொல்லப்பட்டதுபோன்ற தெளிவுரைகள் அப்போது எழுதிற்றிலர் என்பதையும் உணர்க. உணரவே, இங்கு சொன்னவற்றின் ஆழம் அறியலாகும்.

தமிழ் அரசாட்சி நெடுங்காலம் நடைபெற்றது என்றாலும்,  தமிழ் அரசியற் சொற்கள் இன்னும் தொகுக்கப்படவில்லை.  விளக்கங்கள் இன்னும் எவரும் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை.  ஆனாலும் சமர்ப்பித்தல் என்பது ஓர் அரசியற் சொல். அதனை இங்குக் காட்டியுள்ளோம். உமக்கு இதைப்பற்றிய ஆய்வறிவு உண்டாயின் நீர் உம் கருத்துக்களை எழுதி ஒரு நூலாக வெளியிடுக. அதனால் தமிழுலகு பயன்பெறும்.

யாம் மேற்கோள் காட்டுவதற்கு தமிழ் அரசியற் சொற்கள் என்ற பெயரில் ஒரு நூலிருப்பதாகத் தெரியவில்லை.  இருந்து உமக்கும் தெரிந்தால்  அதனை எமக்குத் தெரிவிக்கவும். வெற்றுவாய் வீச்சினால் பயன் ஒன்றும் இல்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

செவ்வாய், 27 ஜனவரி, 2026

சிறிய வீடானாலும் சிறந்த பூக்கூடை ( கவிதை)

 சிறிய வீடானாலும் 

சிறந்தபூக் கூடையிலே

நறியபூ தமைநிறுத்தி

நாற்புறமும் மின் தீபம் 

உரியகண் பார்த்திடவே

உலையாத நன் கவினாம்

அரியவித் திருநாளில்

அகமகிழ்வு பெருகுவதே.


பொருள்:-


நறிய - நறுமணம் வீசுகிற

மின் - மின்னாற்றலினால் ஆன

உலையாத -  கலையாத, அழிதலில்லாத

அரியவித் திருநாள் -  வரும் 2026 புத்தாண்டு





பொம்மைகள் அலங்கரிப்பு