வியாழன், 28 மே, 2026

விருத்தி என்பது.

 விருத்தி என்பதன் சொல்வரவியல். இப்போது சொன்னூல், சொல்லமைப்பியல், என்று பலவகையில் கூறலாம்.  தமிழில் சொல்லுக்குப் பஞ்சம் இல்லை.

விர் என்பது அடிச்சொல்.

விர்+ உ.   உ என்ற அடிச்சொல் முன்னிடத்தில் விரிதல் என்று பொருள்.  உ > உம்> உன்> உங்கள் என்பனவெல்லாம் முன்னிடத்தில் உள்ளோரையே குறிக்கிறது. படிக்காதவராக  ஒருவர் இருந்தாலும்,  இவை யெல்லாம் முன்னிடத்து உள்ளவரைக் குறிப்பதால்,  விர்+உ என்பதிலும் அதுவே பொருள் என்று கூறிவிடுவார்.

விர்+ இ .  இ என்பது இங்கு என்று பொருள்தருவதால்,  இங்கு விரிதல் என்பதன் இதன் பொருள் என்று அறிந்து கொள்ள அவ்வளவு இன்னல் உறார்.

விர் + அ.   விர.  அங்கு விரிதல்.  விரல் என்ற கையில் கடைக்கோடியில் (அ)  விரியும் உறுப்பு என்பதை அறிய அவ்வளவு கடினமா? விரியவும் செய்து அல்லாமல் சுருங்கவும் செய்து கையிறுதியில் இருப்பது விரல்.  இதற்கு அல் விகுதி புணர்த்தல் மிக்கப் பொருத்தமே.  இன்னொரு சொல்லைப் பார்ப்போம். 

ஈரல் என்ற சொல் காற்றையோ அரத்தத்தையோ  ( blood) உள்ளிழுப்பதும் வெளித்தள்ளுவதும் செய்யும் உறுப்பு.  செரிமானம் செய்யும் கல்லீரலும் இவ்வாறே குறிக்கப்பெறும். ஈர்ப்பதும் அல்லாமல் தள்ளுவதும் செய்வதால் அல் என்ற விகுதி பொருத்தமே என்க..

கந்தல் என்ற சொல்லைப் பார்ப்போம். கண் என்ற சொல்,  சிறு பொத்தல்களையும் குறிக்கும்.   சேலையில் பூச்சி கடித்துக் கண்கண்ணாகப் போய்விட்டது என்று சிற்றூர்களில் சொல்வர்.  உடல்துவாரங்களில் கண்ணும் துவாரமே. ஒன்பது வாசல் என்றும் சொல்வதுண்டு. இவை எல்லாம் பண்டை மக்கள் மொழியை நன்கு கையாளும் திறனுடையோராய் இருந்தனர் என்பதையே காட்டுகிறது.  புதிய தலைமுறையினர்க்குப் படித்தாலும் தெரியப்போவதில்லை.  கண்+து+ அல் >  கண்தல்> கந்தல்.  கண் என்பது இடம் என்றும் பொருள்படும். பழைய நூல்களை எல்லாம் நாம் இழந்துவிட்டால், இந்த மொழிநலங்களை எல்லாம் இழந்துவிடுவோம். கண்கள் உடையதும் அல்லாமல் இடை இடை வருவதும் உடைய துணி - கந்தல்.  ஒரு ''கந்தல்'' அல்லது கிழிசல் துணியை எடுத்தால்,  அதில் கிழிந்து பயனில்லாத பகுதியும் இருக்கலாம். கிழியாத ஏறக்குறைய நல்லதென்று கருதத்தகும் பகுதியும் இருக்கும். இதுபோல் கிழிந்தும் அல்லாமலும் இருக்கும் ஒன்றை,  அல்விகுதி கொடுத்து அமைத்தல்  தமிழின் திறனே  ஆகும்.  பந்தல் என்பதும் இப்படித்தான். பரவலாக நாலு அல்லது மேற்பட்ட கால்களுடன்,  அங்கு விரிக்கப் பட்டிருந்தாலும் காரியம் முடிந்ததும் அது கழற்றி அகற்றப்படும்.  ஆகவே பரப்பி வைத்துப் பின் சுருட்டி வைக்கப்படும். பரப்பியும் பின் அல்லாமலும் வைக்கப்படுவது  ஆகும்.

கந்தல் என்பதற்கு வேறு விளக்கங்கள்  அடுத்த இடுகையில்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை













ஆங்கை

செவ்வாய், 26 மே, 2026

சஹாரா என்ற அரபியிலிருந்து திரிந்த சொல்.

 சஹாரா என்ற சொல்லைக் கவனிப்போம். அரபிமொழியில் சாரா என்ற சொல் உள்ளது.  ஆனால் ஆய்வுகளில்,  சில தமிழ்ச்சொற்கள்  ஆப்பிரிக்க மொழிகளிலும் இருப்பனவாகக் கண்டுபிடித்துள்ளனர். கருப்பர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து ஆசியாவிற்கு வந்தவர்கள் என்பதும் சொல்லப்படுகிறது. மிக்க கருப்புடையோரும் சற்றுப்  பொன்னிற மானவர்களும் கலந்துதான் தமிழர் தோன்றினர் என்ற கருத்துக்களும் உள்ளன. இந்த ஆய்வுகளில் முடிந்த முடிபுகள் உண்டாகிவிடவில்லை என்ற கருத்தும் உள்ளது. இவை தெரிவியல்கள் ( theories)தாம் என்பர்.  சொல்லாய்வில் நாம் இந்த முடிபுகளுக்காகக் காத்திருக்கவேண்டியதில்லை.

அகத்தில்  ( உட்பகுதியில்)   தாவரங்கள் மிகக் குறைவாகிய இடமே பாலைநிலம் என்று குறிக்கப்பெறும்  இதையே தமிழில்  அக அறவு என்போம்.  அக அறா என்பதும் அது.  அக அறா  -  அகத்தில் தாவரங்கள் அற்ற என்று பொருள். பழந்தமிழில்,  இறுதியில்  ஆகார விகுதி பெற்ற சொற்கள் பல இருந்தன,  இன்றும் இவற்றுட் சில உள்ளன.  நிலா ( நில்+ஆ),  கல்+ஆ (கலா),  பல்+ஆ ( பலா, அதாவது பல சுளைகள் உள்ள பழம்), உல்+ ஆ  ( உலா). கலா என்பது தமிழ்ச்சொல் என்பார் பேராசிரியர் அனவரத விநாயகம் பிள்ளை. சமஸ்கிருதம் என்பதும் உள்நாட்டு மொழிதான் என்பதால்,  அது தமிழன்று  என்பது வலுவற்ற கருத்தாகிவிடுகிறது.  எம் முன் இடுகைகளில் இக்கருத்துகளின் விளக்கம் பரிமாறியுள்ளேம்.  அதாவது, அறா என்பது அறவு என்று வருதலும் உடைத்து. எதிர்மறை வினை எச்சமுமாம்.

அக எனற்பாலது,  சக என்று வரும். இது தமிழிலும் உளது.  அமணர் என்பதைச் சமணர் என்பதுடன் ஒப்பிட்டு அறிந்துகொள்க.  சக அறா>  சகாரா என்று வந்தது தெளிவாகிறது. காதிப் என்ற அரபிச்சொல்  காதை முதலிய சொற்களுடன் தொடபுற்ற சொற்கள். இந்தத் திரிபைச் சில இடுகைகளில் எடுத்துக் காட்டியுள்ளோம்.

சகாரா என்ற சொல் அரபியில் பாலை என்று பொருள்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.

இப்படித் திரிந்த சொற்கள் பல உள்ளன. இங்கு ஒன்றிரண்டு காட்டினோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை