சனி, 18 ஜூலை, 2026

கேந்திரம் என்பது

 மத்தியம் என்ற சொல்லுக்கு எழுதிய விளக்கத்தினை இப்போது  நினைவிற் கொள்வோம்.  அவ்விளக்கம் இங்கு உள்ளது.

https://sivamaalaa.blogspot.com/2025/12/blog-post_16.html

இதைச் சொடுக்கி,  இதன் பொருளை அறிந்துகொள்க. இது தொடர்புடைய பொருளாதலின், இதைப் பற்றிய விவரங்களைச் சுருக்கிக்கொள்கிறோம்.

கேந்திரம் என்ற சொல்,  கேளுந்திரம் என்ற சொல்லின் இடைக்குறை.  இதில் ளு என்பது குன்றியதுடன்,  திறம் என்பது திரம் என்றும் வந்தது.  இது இன்னொரு புதிய சொல்லின் பகுதியானல்,  ற என்ற வல்லொலி இடையினமாக மாறிவிடும். இதை பலசொற்களில் எடுத்துக்க்காட்டியுள்ளோம்.  பழைய இடுகைகளைப் பார்த்து, குறிப்பு எடுத்துக்கொள்க.

எடுத்துக்காட்டு.  சற்றுப் பரப்பு உடையதாகத் திறமாக அமைக்கப்படுவது பாத்திரம்.  திறம் என்பது திரமாகிப் பின்னொட்டாக ஆகிவிடுவதால்,  வல்லொலி ற  என்பது இடையின ரகரம் ஆகிவிடுகிறது.  அதாவது புதிய சொல்லின் பகுதியாக வருவதால்,  ற என்று வலித்து ஒலிக்கவேண்டியதில்லை. அதுதான் ஒலியமைப்பு மாற்றம்.

கே(ளு)ந்திரம் >  கேந்திரம்.

இதைக் கேள்> கேண்>...,  திரம் ( விகுதி),  ஆகவே >  கேந்திரம்  என்று விளக்கலாம்.  எப்படி விளக்கினாலும் மக்களுக்கு எளிய முறையில் புரிய வைக்கப்படுகிறதா என்பதே முக்கியம் ஆகும்.

இது ஒரு அரசியற் சொல் என்பது புரியவேண்டும்.  படையினர் ஒரு நடுவிடத்திலிருந்து கொடுக்கும் கட்டளை,  படையின் பகுதிகள் நாற்புறம் கேட்டு நடந்துகொள்ளும் நடுப்பகுதிலும் கேட்கவேண்டும்.  அப்போதுதான் படைநடத்துதல் ஒழுங்காக நடைபெறும். பண்டை படையினர் சொற்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.  ஆகவே ஒவ்வொன்றாகத்தான் ஆய்ந்து அறிந்துகொள்ள முடிகிறது.  மேலும் பல சொற்களை அறிந்துகொள்ள எல்லா இந்திய மொழிகளில் இதுபோன்ற் ஆய்வுகள் தொடரவேண்டும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.


------------------------------------------------------------------------------------------------------------------

விவரம் என்பது என்பது,  வி(ரி)+ வரு + அம் என்று அமைந்த சொல்.  விரித்து வருவித்தல். சமஸ்கிருதம் என்பது சம (ஸ்) கதமான ஓர் இணைமொழி.  சம் - சம  ( ஒலியில் சமமான),  க(த்)து+ அம் > கதம்,   கதம் என்றால் ஒலி அமைப்பு. சம ஒலி மொழியாகத் தொடங்கிப் பின் விரிந்து பெருகியது.

முகு > முகம்;  முகு > மூக்கு;  முகு> முக்கு+ இ+ அம் > முக்கியம்.

புதன், 15 ஜூலை, 2026

அரம்பை, அரம்பையர், ரம்பை, ரம்பா

 இந்தச்  சொற்கள்  வழக்கில் சற்று  குறைந்துள்ளன என்று தெரிகிறது.

அரம்பை என்பவள் ஒரு தேவருலக மாது என்பர். இச்சொல் பன்மையில் அரம்பையர் என்று வரும். இச்சொல் தலையிழந்தபின்,  ரம்பை, ரம்பா என்றும் வழங்கும்.

அரம்பை என்ற சொல்லின் பகவுகள் ( உட்பிரிவுகள்),   அரு+ அம்+ பை  என்பன. இவற்றை இணைத்தால் ''அரம்பை''  என்ற சொல் வந்துவிடும். பாணினியில் சமஸ்கிருதச் சொற்பிரிப்பின்படி,  வேறு பிரிப்புகள் இருக்கும்.  பிற எழுத்தாளர்கள்,  வேற்று விளக்கங்களும் அளித்திருப்பர்.  அவற்றை  அவர்களின் நூல்களில் அறிந்துகொள்ளவும். அரம்பை -  பாற்கடற் பாவையருள் ஒருவர்.

அரு என்பதே முதற்பகவு.  அரிய என்ற பொருள்தரும்.

அம் என்பது அழகைக் குறிப்பது. அம் - அம்மை : அழகு.

பை என்பது இளமை குறிக்கும் அடிச்சொல்.   பை> பய் என்றும் வரும்.  பய்> பயில். பயிலுதல் -  தொடக்கப் படிப்பைக் குறிக்கும்.  பய்- பயிர்:  முளைப்பனவில் இளம்பகுதி.  பய் > பயம்:  ஒன்றை முழுமையாக அறியாத போது தோன்றும்  அச்ச உணர்வு என்று சொல்க.  பை > யையன்.  இந்தச் சொல்  boy என்று இந்தோ ஐரோப்பிய மொழிகளில் வரும். கிரேக்க மொழிச்சொல் ''பைஸ்'' என்பது உறவுச்சொல்லாகக் காட்டப்பெறும். இளநாட்களில் விளைதல் ''பயத்தல்''  என் க.  இந்த இளமைப் பொருள் நாளடைவில் தேய்வுற்றது -  பிறமொழிகளில்.

அரம்பை என்பதில் இறுதியில் இச்சொல்லே பகவாகும்.

பொருள்:  அழகுடன் இளமையும் உடைய பேரழகி. இது தமிழிலிருந்து வருவது.

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின்னர்

பகிர்வுரிமை




திங்கள், 13 ஜூலை, 2026

காரன் சொல் - அப்பக்காரன், குருவிக்காரன் முதலிய பல

 குருவிக்கு  ஆர்  வந்தார்  >  குருவிக்கார் வந்தார்>   குருவிக்காரன் வந்தான் என்றபடி வந்த சொல்தான் இது.  இங்கு குருவிக்கு அவர்>   என்பதே குருவிக்கவர்> குருவிக்கார் என்றும் வரும்.  காரன் என்பது ,..கு+ஆர்+அன் என்பதன் பிறழ்பிரிப்பு.  ஆர் என்பது   ஆர்> ஆரன்,  இது  கு+ ஆர்+ அன் என்பதே.

அப்பத்துக்கு  அவர்>  அப்பத்துக்கவர்>  அப்பத்துக்கார்>  அப்பக்கார்>  அப்பக்காரன்.   இப்போது காரன், காரர் என்பன வந்தன.

இது போல் பிறழ்பிரிப்புச் சொற்கள் முன்னர் மொழியறிஞர்களால் எடுத்துரைக்கப் பட்டுள்ளன.

வாழ்கு+ இன்று+ ஆன் >  வாழ்கின்றான் என்று வந்தது காண்க.

அன்றி,  கின்று என்பது ஓர் நிகழ்கால இடைநிலை என்றனர்.  அதன் மூலம் கு+ இன்று  என்பதுதான்.  இலக்கணியர் இதை மறைத்தனர்.  நன்னூல் இப்படிச் சொல்லும்.  தவறு ஒன்றுமில்லை.  விரைவாக உணர்ந்துகொள்வதற்காக இலக்கணம் இப்படிக் கையாளும்.

இது வடநாட்டில்  கார் என்று குன்றிவழங்கும்.

இன்னொரு விளக்கமும் உண்டு. பின் சொல்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை