சுவர் என்பது எவ்வாறு வந்தது - தமிழில்?
இதைச் சுருக்கமாக, சுற்றிலும் இருப்பது என்று சொல்லிவிடலாம். சுற்றிலும் என்பது , சு என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது. இங்கு இருப்பது என்பதை இரண்டாகது பகவாக எடுத்துக்கொண்டால், இ என்ற எழுத்தைப் போட்டு விளக்கலாம். சு+ இரு> சு+ வ்+ இரு> சுவிரு என்று வந்து . சுவரு என்று திரிந்ததாகக் கொள்ளலாம் என்றாலும், இரு என்னாமல் வரு என்று எடுத்துக்கொள்வதே இயல்பானதாகும். சு+ வரு > சுவரு என் க. வரு என்பது பேச்சுக்குச் சரியாகலாம் என்றாலும், வர் என்று குறுக்கியே இணைத்தால், அதிக விளக்கம் இன்றி முடித்துக்கொள்ளலாம். அரசுக்கு வருகின்ற வசூல் பணம், வரு என்பதினின்றே குறுகி, வர்> வரி என்றே ஆக்கமுறும் சொல். சு+ வர் என்பதும் இவ்வாறே '' சுற்றி வரும் அடைப்புத்தடுப்பு'' என்று ஆகிறது. இதிலிருந்து சு+வர் > சுற்றிவரும் வீட்டின் அடைதடுப்பு என்று சுருக்கி முடிக்க.
இந்த உண்மையை, எந்த நூலையும் பார்த்துத் தெரிந்துகொள்ளாமல் நாம் சரியாகச் சொல்லியிருக்கிறோம்.
சு+வர் என்னாமல் சு+ வம் என்றாலும் சரிதான். வரு என்ற சொல், வம் என்றும் திரியும். '' வம்மினோ'' என்றால் வருமினோ என்று சொல்வதே ஆகும். ''வம்மின் மக்காள்'' என்பது இவ்வாறும் திரியும் என்பது அறிந்துகொள்ள, பழந்தமிழ் அறிந்திருக்கவேண்டும். பழந்தமிழ் உரையாசிரியர்களின் எழுத்துக்களையும் வாசித்து அறிந்திருக்கவேண்டும். இற்றை நாட்களில் இதை அறிந்தோர் சிலரே ஆவர்.
சுவரைச் செவர் என்ற பேச்சுத் தமிழ் பொருந்தாது. அது வெறுந்திரிபுதான்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
பகிர்வுரிமை