சனி, 23 மே, 2026

மவுனம், மௌனம்

எண்ணங்களில் சிறியவை என்று பழிக்கப்படுவன பல. பெரியன என்று போற்றப்படுவனவும் உள.  இவற்றை இவ்வாறு சிறியன, பெரியன என்னாமல்,  உயர்வன,  தாழ்வன என்றும் பிரிக்கலாம். தெய்வப் புலவர் இதை, '' உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்,  மற்றது  தள்ளினும் தள்ளாமை நீர்த்து''  என்று அருளுதல் காண்க. மனவுணர்வின் அடிப்படையில் எழுவனவற்றை, இத்தகு சொற்களால் அளவிட்டுச் சொல்லும் தன்மை,  பல மனித இனத்தாரிடத்தும் காணப்படுவது.

மனிதன் அதிகச் சிந்தனையில் ஈடுபடுகையில்,  பெரிய கருத்துக்களை உணர்வதுடன்,  அதிகம்  பேசுவதோ  அலட்டிக்கொள்வதோ குறைந்துவிடுவதைக் காணலாம். ஏன் அதிகம் பேசுவதில்லை?  பெரிதானதை, உயர்வானதை எண்ணுவதால்தான். இவ்வாறே, கணக்கில் ஈடுபட்டிருக்கும் போதும் அதிகம் பேசுவது குறைந்துவிடுகிறது.

மா என்ற சொல், தமிழில் பெரிதைக் குறிக்கிறது.  இது மஹா என்று சமஸ்கிருதத்தில் வரும். இதுவே மகா என்றும் எழுதப்பெறுவது ஆகும்.ஆதிகாலத்தில் கண்ணாடி பளிங்கு முதலியவை இல்லாதிருந்தன. பிறகு அவை கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்தகாலத்தில்,  மகுரம் என்ற சொல் உண்டானது.  மக+ உரு+ அம் >  மகுரம் என்று திரிந்தது காண்க. பிள்ளை என்று பொருள்படும்  மகன், மகள் என்ற சொற்களும் இவ்வாறு தோன்றின. மகு+ உடு+ அம் >  மகுடம் என்று இன்னொரு சொல்லையும் காண்க. ஊதப்பட்டு மயக்குவதும் ''மகுடி''  ஆகிறது. இது மகு+உடு+ இ   >  மகுடி ஆகிறது.  பூவின் மொட்டும்  ஒரு மகவுதான்,  பிறப்பது.

முகு>மிகு> மகு  என்பன தொடர்புடைய அடிச்சொற்கள்.

முகு> முகுர்த்தம் என்றிருந்த சொல் நாளடைவில் முகூர்த்தம்  ஆனது.

முகு> முகு_+ உருத்தம்> முகுர்த்தம்> முகு+ ஊர்த்தம் > முகூர்த்தம் என்பது காண்க.

உரு> உருத்து= உருவினை உடையது.  உருத்தம் என்பதில் அம் விகுதி.  அமைவு குறித்தது.

உரு > ஊர் என்பது,  ஓர் அமைப்பினை அல்லது உருவினை அடைந்த இடம்.  மனிதனுக்கு உரு இருப்பதுபோல ஊருக்கும் ஓர் அமைப்பு அல்லது உரு உள்ளது.

மா என்பதிலிருந்து திரிந்த சொற்களின் வளர்ச்சி காட்டினோம்.

மகுடம் என்பது அரசன் உடுத்துக்கொள்ளும் தலையுடை.   பெரிய உடை என்றும் சொல்லவேண்டும்.

மவுனம் என்பது சிந்தனை ஆழ்வினால் பேசாமை.  உனம் என்பது உன்னுதல்> உன்னு> உன்னம்> உனம் ஆகிறது.   மா+ உனம்> மவுனம் ஆகும். மௌனம் என்பதும் அது.  உன்னுதல் சிந்தித்தல். உன்னித்தல் என்பதுமாம்.

அறிக மகிழ்வு

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை











புதன், 20 மே, 2026

வாசித்தல்.

 இது வந்தவிதம்:

வாய்>  வாயித்தல்> வாசித்தல்.  வாயினால் வெளிப்படுத்துதல்.

யகர சகரத் திரிபு.   இது போலித் திரிபு.  அதாவது போல இருக்கும் திரிபு.

இன்னொரு சொல் காணொப்புக்கு:

பாய்  -  ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு வேகமாச் செல். 

நீர் பாய்கிறது.

வேகமாக இடம்பற்றிக்கொள்ளும் அன்பு:  பாய்>  (பாயம்) > பாசம்

வேகமாகப் படர்வது பச்சை:  பாய்> பாசி.  ( பாய்> பாயி என்று  யி வந்து சொல் முடிவதில்லை.  அதற்குப் பதில் சி வரும்.)

அன்பாய் வழங்குவது ஆசி.    இது  ஆதல்>  ஆய்>  ஆசு  >  ஆசி.

ஆ> ஆய் என்ற எச்சவினையே இதன் உண்மையான அடிச்சொல்.  ஆனால் இப்படி சொல்வது தவிர்ப்பர்.  பாலி மொழிபோல் எச்சத்திலிருந்து சொல்லாக்கம் செய்வதைத் தமிழ்ப்புலவர்கள் விரும்பார்.  ஆகவே ஆய் என்பது தவிர்ப்பர்.

அறிக மகிழ்வு

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 18 மே, 2026

விஞ்ஞாபனம்

 இச்சொல்லை  (விஞ்ஞாபனம்)  இன்று தெரிந்துகொள்வோம்.

இந்தச் சொல்லைக் கேட்டவுடன்,  இது ஏதோ புரிந்துகொள்ளக் கடினமான ஒரு பொருளுடையது என்று எண்ணிவிடவேண்டாம்.  இது தமிழில் வழக்குடைய சொல்லே ஆகும்.

வியன் என்ற சொல் நல்ல வழக்குடைய சொல். வழக்கு என்று நாம் சொல்வது,  வழங்குதல் என்பதுதான். இன்னொரு வகையில் சொல்வதானால்  பயன்பாடு அல்லது உபயோகம் உடையது  என்பதுதான்.

அடிச்சொற்களைக் காண்போம்.

வியன்  -  விரிவு.  '' விரிநீர் வியனுலகம்''  என்ற குறள் பயன்பாட்டினைக் காண்க. ( விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலத்து உள்நின்று உடற்றும் பசி என்னும் குறளில் வருகிறது. தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரின் குறள் நூலைப் பார்த்து எழுதவில்லை ஆதலான் குறள் எண் மறதி ).

விர்> விய் என்று திரியும். விர்> விரி.  விர்> விய்> வியன்.  விய்> விஞ்.

விய் > வியம்> வியங்கோள்.   ( வியங்கோள் வினைமுற்று).

விய் > விய> விய+ ஆ > வியா.  விரிவாகும் என்று பொருள்.  பர> பார்> பாரி.  சேர்த்தால்  ' 'வியாபாரி''.    விரிந்து பரவலாகப் போய்ப் பொருளை விற்பவன் அல்லது பரப்புவன்.  One who goes round distributing or selling goods.  விய -  விரிந்து.  இப்போது விற்பவன் என்ற பொருளே உள்ளது.  சிறப்புப் பொருள் தொலைந்தது.

வியப்பு என்பது, கண்கள் விரியும்படி,  மனம் விரியும் படி அமையும் நிகழ்வு அல்லது நிலை.

இனி ஞாபனம் என்பது:

பகவுகள்:

நாவு > நாபு>  ஞாபு.

அண் > அன் (  அணுகிச் சொல்லுதலைக் குறித்தது).

அமை>  அம்.   அமைவு என்று பொருள்.>

வியன்> இடைக்குறைந்து,  வின்> விண்.

வாய்> வார் > வார்த்தை என்பதில்  ர்>ய் மாற்றம்.

வியன்> விய்.    விர்> விய்,  ர் >ய்  காண்க.

விய> வியர்> வியர்.  (  பரவலாக [ வெப்பத்தினால்] நீர் வெளிப்படுதல்.)

வின்> வினி> வினியோகம்> விநியோகம்.  பரப்புதல்.

ஒன்றைச் செய்பவனும் அதைப் பரப்புகிறான் அல்லது பிறர்காணச் செய்கிறான்.   வின்> வினை ( செயல், தீயவை பரப்புதல் முதலியவை).

வின்> வினா.  பிறரிடம் அறிந்துகொள்ள ஒன்றைக் கேட்டல்.  இதுவும் பரவுதல்தான்.

விண்(வியன், விஞ்),  நாவு> நாபு.   அண்> அன்  ( அணுகுதல்),  அம்..அமைதல்..

விரிவு என்பதே விண், வியன், விஞ்,  விந் என்றெல்லாம் வந்தன.

பிறரிடம் சென்று சொல்வது,  தெரிவிப்பது,  தெரிவித்தல்.

இலக்கணம்ப்படி எழுதிக் குழப்பாமல் எப்படி புரியவைப்பது என்று எண்ணி, இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. 

முறைப்படுத்தி  வாசித்துக்கொள்க.


அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை