சனி, 14 மார்ச், 2026

சிற்பம், சிற்பி, சிலை முதலியவை








 தலைப்பில் தந்துள்ள சொற்களை  ஆய்ந்து காண்போமா?

இந்தச் சொற்களுக்கு அடிப்படையான மூலச்சொல்,  சில் என்பதுதான்.  தமிழில் நாம் காணும் மூலச்சொற்களில் இது தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று என்னலாம்.

கண்ணாடிச் சில்,  சில்லை எற்றுதல், காலைக் குத்தின சில், உடைந்த சில், சில்லிகை, சில்லி துவாரம், சில்லிட்டுக் கனத்தது, சில்லபொல்லமாய், சில்லறை,சில்லறைச்செலவு,  கொட்டாங்காய்ச்சிச் சில்(லு),  இவை கண்டு பொருள் தெரிந்துகொள்க.

சில் -  சின்மை.  சில்+சில -  சிற்சில, சில்லோர் - பல்லோர், சில்லொண்டி, முதலானவும் பிறவும் கண்டறிக.

பெரிய கல்லிலிருந்து  சில்லுகள் பலவற்றைப் பேர்த்து எடுத்தபின்,  மீதமுள்ள உரிய கல்லை வைத்துச் செய்யப்படுவது சில் - சிலை என்று ஆனது. சில்லெடுத்துச் செய்பவன் தான்  சில்>  சில்+பு> சிற்பு>  சிற்பு+ இ > சிற்பி.  பின்னர் அழகான கல்லுரு,  சிற்பு+ அம் > சிற்பம் ஆகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

-----------------------------------------------------------------------------------------------------------------------------

The following draft is temporarily retained by the Editing staff for reference.  Please do not read.  Will be discarded later when no longer required

 தலைப்பில் தந்துள்ள சொற்களை  ஆய்ந்து காண்போமா?

இந்தச் சொற்களுக்கு அடிப்படையான மூலச்சொல்,  சில் என்பதுதான்.  தமிழில் நாம் காணும் மூலச்சொற்களில் இது தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று என்னலாம்.

கண்ணாடிச் சில்,  சில்லை எற்றுதல், காலைக் குத்தின சில், உடைந்த சில், சில்லிகை, சில்லி துவாரம், சில்லிட்டுக் கனத்தது, சில்லபொல்லமாய், சில்லறை,சில்லறைச்செலவு,  கொட்டாங்காய்ச்சிச் சில்(லு),  இவை கண்டு பொருள் தெரிந்துகொள்க.

சில் -  சின்மை.  சில்+சில -  சிற்சில, சில்லோர் - பல்லோர், சில்லொண்டி, முதலானவ்ம் பிறவும் கண்டறிக.

பெரிய கல்லிலிருந்து  சில்லுகள் பலவற்றைப் பேர்த்து எடுத்தபின்,  மீதமுள்ள உரிய கல்லை வைத்துச் செய்யப்படுவது சில் - சிலை என்று ஆனது. சில்லெடுத்துச் செய்பவன் தான்  சில்>  சில்+பு> சிற்பு>  சிற்பு+ இ > சிற்பி.  பின்னர் அழகான கல்லுரு,  சிற்பு+ அம் > சிற்பம் ஆகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

புதன், 11 மார்ச், 2026

மூத்திரம் ( மீத்ததை இருத்தல்)

இது ஒரு திரிபுச் சொல். இதை இவ்வாறு அறிந்துகொள்க.

உடலில் மிகுத்த நீரை, நம் உடல் வெளியேற்றிவிடுகிறது.  நீர்க்கழிவுகள் வெளியேறுவதால் உடல் நலத்துடன் வாழ்கிறது என்பது நீங்கள் அறிந்ததாகும்.

பகுதி என்ற சொல், பாதி என்று திரிந்து வழங்குகிறது. பகு>பா,  அதுபோல மிகு > மீ என்று திரிகிறது.

மிகுதி> மீதி,  மீதி+ அம் >  மீதம்.  தி என்பதில் உள்ள இறுதி இகரம் வீழ்கிறது.  மீத்+ அம்> மீதம்.  மிகுத்து அமை> மீத் அமை>மீத் அம்> மீதம் என்றும் காட்டலாம். எல்லாம் எப்படி விளக்கினால் சுருக்கமாகவும் விளக்கமாகவும் இருக்கும் என்பதே நாம் காண விழைவது ஆகும்.

அஞ்சு > அச்சம் என்பதுபோல் மிஞ்சு > மிச்சம் ஆகிறது.

பகுத்துண்ணுதல் என்பது பகுத்துண்> பாத்தூண் என்று திரிதலைத் தெரிந்துகொள்க. பகு> பா.   அதுபோல்,  மிகுத்திரு> மீத்திரு> மூத்திரு+ அம் > மூத்திரம் ஆகிறது.  இது பேச்சுவழக்கில் விளைந்த ஒரு சொல்.

இதை வேறு விதமாகவும் ஆசிரியர்கள் விளக்குதலால், இது பல பிறப்பி  ஆகும். பலரும் கூறியவை அறிந்துகொண்டு இங்கு கூறுவதால்,  இதுவே சிறந்த விளக்கம் என்று உணர்க.

மிகுத்தது > மீத்தது.  'இருத்தல்'  இது பேச்சு வழக்கில் ''கழித்தல்''.  இருத்தல் என்பது கழித்தலைக் குறிக்கும் ஓர் இடக்கர் அடக்கல்  -  பேச்சு வழக்கு என்பதை உணரவும். இறுதியில் இன்றைய வழக்கு மூத்திரம் ஆகும்.  மீத்து இருத்தல் > மீத்திரு >  மூத்திரு> மூத்திரம்.

உடலும் அதிக நீரைப் பயன்படுத்துகிறது.  அதுபோக மீதமிருப்பதும் வேண்டாததும்  ஆவது.  மீத்தது > மூத்தது. பயன்பெறாமல் இருந்ததும்  ஒரு மூத்ததே ஆகும்.   அறிக.

மீத்தது, மிகுத்தது, மூத்தது,  என இவை முல் என்ற மூல அடியிலிருந்து பிறந்த தமிழ்ச் சொற்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


திங்கள், 9 மார்ச், 2026

கம்பி என்னும் சொல்.

 கம்பி என்ற சொல், முதனிலைத் தொழிற்பெயர்.  இரும்பினால் ஆன அசையும் தடிகளையும் குறித்தபடியால், பொருட்பெயருமாகும்.

கம்பித்தல் என்னும் வினைச்சொல் தமிழில் இருப்பதால், இது தமிழ்ச் சொல்லே ஆகும். கம்புபோல் நீளமாக  இழுக்கப்பட்டு  வளைக்கவும் அசைக்கவும் படும் நிலையினதாகையால்,  கம்பு> கம்பி  என்று இகர இறுதியுடன் முடிந்த சொல்லாகும்.

கம்பு என்பதும் தமிழ்ச் சொல்லே. கடுமை உடையது என்ற பொருளில் கடு> கடும்பு  என்று  புகர விகுதி பெற்று இச்சொல் முடிகிறது. பின்னர் டுகர இடைக்குறைந்து, கம்பு என்றாகி வர,  முன்னிருந்த சொல் கடும்பு, சற்று வழக்கிறந்துவிட்டது.

தொடக்கத்தில் வரும்பால் கடும்பால் என்றது,  கடும்பு என்று கடைக்குறைந்தது. இதில் பு விகுதி எனக்கொண்டு,  கடுமை> கடும்பு எனினும் இதனால் இச்சொல் ஏதும் இழுக்குறாது நிற்கும்.  இதனால் கடும்பு என்ற குச்சியைக் குறிக்கும் சொல் வேறானது என்று உணர்ந்துகொள்க.

பிடிப்பதற்குக் கடுமையாக இருப்பதால், கடும்பிடி என்பது  கம்பி என்று குறைந்தது எனினும் ஒக்குமெங்க.   ஆகவே இது ஒரு பலபிறப்பிச் சொல் என்று கொள்க.  

கம்பித்தல் என்பது கற்பித்தல் போலுமொரு சொல் எனலாம்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை