சனி, 4 ஏப்ரல், 2026

அகந்தை என்பது

அகந்தை என்பது தமிழ்ச்சொல் அன்று என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, நம் எண்ணக்கோட்டம் தவிர.

இதில்  அகம்+ தை என்ற இரு பகவுகள் உள்ளன.   அகம் என்பது உள் என்று பொருள் தருவது.  தை என்பது ஒரு பெயராகவும் வினையாகவும் உள்ள சொல்.  தைத்தல் ஒரு வினை.  தை என்ற மாதம், இயற்கை வளத்தில் நிலைகளுடன் மக்கள் வாழ்வு செய்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டுசென்று தைத்தல் அல்லது இணைத்தல் என்ற பொருளில் அமைந்த பெயராகும்.  தைத்தல் என்ற நூல்கொண்டு தைத்தல் மட்டுமன்று,  தடவுதல் கூட ''தைத்தல்'' என்பதில் அடங்கும்.  தை+ இல்+ அம் >  தை+ ல் + அம் > தைலம்,   அல்லது  தையிலம்> தயிலம்> தைலம் என்றும் காட்டலாம்..  இது சிற்றூர்ச் சொல். தைவருதல் என்றால் தடவுதல். '' நரந்தம் நாறும் என் தலை தைவரு மன்னே'' என்று ஒளவையின் புறநானூற்றுப் பாட்டில் வருதல் கண்டு கொள்க.(  புறம் 235)

தையல்காரன் என்ற சொல்லில் வரும் தை என்ற சொல்லையும் கவனிக்கவும். taugo என்ற செருமானிய மொழிச்சொல்லும்  டை என்ற ஆங்கிலச்சொல்லும் அறியத் தக்கனவாகும். கழுத்துக்கட்டுக்கு ''டை'' என்பர்.  டையும் தையும் ஒன்றுதான்.

அகந்தை என்ற சொல்லில் தை என்பது ஒரு விகுதி என்று சொல்லலாம்.  தை என்ற விகுதிக்கு இணைப்பு என்ற பொருளும் காணற்குரியது ஆகும்.  தா+ இ என்ற இருபகவுகள் பழங்காலத்தில் இணைந்த ''தை'' என்றும் ஆயின என்பது  அறிதற்குரியது. குழந்தையைத் தாய் தருகிறாள்.  தா என்ற சொல் தருவதைக் குறிப்பதுடன் தாய் என்பதற்கும் விளக்கத்தைத் தருகிறது.  ய் ஏன் வந்தது? என்று கேட்டாலே சிந்திக்க இயக்கம் உண்டாகும்.

அகத்துடன் இணைந்தியங்கும் தம்ன்மை உடையது இறுமாப்பு.   ஆகவே விகுதி அழகாக  அமைந்துள்ளது.

ஒருபொருட் சொற்கள்

அகங்காரம்

இறுமாப்பு 

தன்மதிப்புமிகை

உட்கரணம்


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

செருக்கு

இடும்பு

சமுன்னதி

சளுக்கு

கற்பம்

காட்டிகம்

தெறிப்பு

பெத்தரிக்கம்

தற்பெருமை

மமதை

மேட்டிமை

வாமிலம்  (வாயினால் மிலைந்துகொள்ளுதல்)------  முதலியவை.



வியாழன், 2 ஏப்ரல், 2026

சரித்திரம் பிறழ்ந்துரை அல்லது பொய்யினைப் பரப்புதல்

 : நீ,

 பித்தனைப் போலவே அவன்சொல் கேட்டுப்

பிதற்றுவ தெற்றுக்கடா

மத்தினைப் பிடித்து  மண்ணில் கடைந் திடில் 

மதுரத்    தயிர்மறுத்தே,

மெத்தச்  சுவைதரு  மோர்வரு   மோசொல்க!

மென்மேல்  பிழைசெய்கிறாய்

எத்தனை ஆண் டுகள் அடிமைப்  புத்தியில்

இருந்ததனால் அழிந்தாய்.


ஆரியர் என்றது  சங்கத்  தமிழரை

அறிவாளிகள்  அவரே;

சீரியகல்விப் பெருக்குடைப் பிறரையும்

குறித்திடும்  தொடரதுவே!

ஆரியன் என்றது இனப்பெயர் என்பவன்

அறிவுடையான்  அல்லனே!

ஆரென்ற பலர்பால் விகுதியும் தமிழிலே

பிறரொன்றும்  அறியாததே.


பொருள்:

எற்றுக்கடா -  எதற்கடா

மென்மேல்  -  மேலும் மேலும்

மத்து -  சிலுப்பிக் கடையும் கோல், 

மதுரத் தயிர் மறுத்து -  இனிய தயிரைக் கடையாமல்

மெத்த - மிகுந்த

சுவைதரு-  சுவையான

ஆர் என்ற...  -  வந்தார் சென்றார் என்ற பணிவுப் பன்மை விகுதி.

பிறர்  -  தமிழ்ப்புலவர் அல்லாதவரும் தமிழறிவு இல்லாதவரும்.

இனப்பெயர் -  ஓர் இனத்திற்கு வைக்கப்பட்ட பெயர்

சரித்திரம் என்பது சரியாகவும் திறமாகவும் சொல்லப்பட்ட வரலாறு. திறம் என்ற சொல் விகுதியாய் வரும்போது றகரம் ரகரமாகும்.

புனைவுகளுடன் சொல்லப்படுவது சரியாகச் சொல்லப்படாதது.  திறம்படச் சொல்லப்பட்டிருந்தாலும். திறம் என்பது ஒளிவு மறைவு இன்மை குறிக்கும்.  புனைந்து சொல்வதிலும் ஒளிவு மறைவு இன்மை கடைப்பிடிக்கப்படுதல் கூடுவதே.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை





செவ்வாய், 31 மார்ச், 2026

கொடுங்கோளூர் பெயர்க்காரணம். அஞ்சலி என்பது.

 இந்த ஊரின் பெயர், இப்போது திருவஞ்சைக்களம் என்பதாகவும் இது கேரளத்தில் உள்ளதாகவும் தெரிகிறது. இங்கு முன்னிருந்தவர்கள், அரசரின் அஞ்சலியைக் கண்டு இன்புற்றனர் என்று தெரிகிறது.

இது திருச்சூர் மாவட்டத்திலுள்ள மகாதேவசாமி கோயிலாகும். இது அஞ்சைக்களம் என்றும் சொல்லப்படுகிறது. அஞ்சைக்களத்தப்பனே  என்று தேவாரப்பாடலில் வருகிறது. தேவாரம் (913.1)

அஞ்சலி என்பது அகஞ்செலி  என்பதன் திரிபு.   அஞ்சை என்பது அகஞ்செய் என்பதன் திரிபே.  அஞ்சைக்களம் என்பது அஞ்சைக்குளம் என்று திரிந்துவிட்டதென்று தெரிகிறது.

அரசர்கள் அரியன மேற்கொள்தற்கு இங்கு வந்து வணங்கிப் பின் செயல் கொண்டனர் என்று அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை