புதன், 22 ஜூலை, 2026

அபாரம் இன்னொரு விளக்கம்

 இதை விளக்குவோம்.

முன்னைத் தந்த விளக்கம் இங்கு உள்ளது.  ஒரு சொல்லைப் பலகோணங்களில் தமிழில் ஆராயலாம்.  தமிழ்மொழியில் ஒரு சொல் சிலேயாடைகிப் பலவழிகளிலும் பயன் தரலாம்.

சிலேடை என்றது சிலவாக எடுத்துக்கொள்ளத்தக்கது என்று பொருள்.  இந்தப் பொருளை யாம் சொல்லில் பகுத்தே விளக்குகிறோம்.  சில+ எடு+ ஐ >  சிலேடை என்று அமைக்கப்பட்ட சொல்.

பல்பொருள் எடுபடத்தக்க சொல் சிலேடை.

அ+ பாரம் .  பர > பர+அம் >  பாரம்.  இது முதனிலை நீண்டு, அம் விகுதி பெற்றது.

அ என்பது அதிகம் என்பதன்  சுருக்கம்.  அது+ இகம் > அதிகம்.  இகத்தல்:  -  விரிதல்.  அங்கிருப்பது விரிந்து ஆவது என்பது பொருள்.

ஒன்று தன்னிலையினின்ற படி விரிந்து பரந்து காட்டினால் அது அபாரம் ஆகும்.

அதிகபாரம் உடையது என்றும் ஆகும்.

 இகத்தல் ikattal from Kadirvelu Pillai's "Tamil Moli Akarathi" (p. 201)

இகத்தல் - கடத்தல், நடத்தல், பழிந்த ல், புறப்படுதல், பொறுத்தல், போ தல், மீறுதல், விட்டு விடுதல்.


அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்

பகிர்வுரிமை உடையது.




திங்கள், 20 ஜூலை, 2026

மமதை மக்கர். இன்னும் சில

 மமதை என்பதன் சொல்வரவு எத்தகையது?

மமதை என்பது  மனத்தின் மருவுதலால்,  அம்மனத்தின் கண்ணே ஒரு மயக்கத்தினை விளைவிக்கும் ஓர் உணர்வுக்கு இடப்பட்ட பெயர். இது எவ்வாறு வந்த சொல் என்பதை இப்போது விளக்குவோம்..

மரு+  மது + ஐ>  ம  (ரு) மதை   > மமதை.

ருகரம் இடைக்குறைந்தது.

இதில்.   ஐ   விகுதி.

மிகுதியாய் வந்து முடிவது விகுதி.  மி- வி  போலித் திரிபு.   எ-டு: மிஞ்சு- விஞ்சு, (மிஞ்சுதல்  - விஞ்சுதல் ). 

மருமதை>  ம(ரு)மதை.

மயக்கினை விளைப்பது மது .


சில அரிய இடைக்குறைகள்:

இரு சொற்களுக்கும் பொதுவான இடைக்குறைச்சொல்.

மடக்கு> மடக்கர்> ம(ட)க்கர்> மக்கர்.

மயக்கு> மயக்கர்>௳(ய)க்கர்>மக்கர்.

கறுப்பிலம்>  க(று)ப்பிலம் > கபிலம்

கபிலம் என்பதற்கு வேறு உருவாக்கங்களும் உள.

நிகர், புகர்,  தகர்,  நகர்.

மகன்,  மகர்,  அன் விகுதிக்குப் பன்மையில் அர் வந்து முடிந்த சொல்.  மக+ அர்.

அர் விகுதியன்றி  ஆர் விகுதியும் வந்து முடியும்.  மகார் என்பது காண்க.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

.


சனி, 18 ஜூலை, 2026

கேந்திரம் என்பது

 மத்தியம் என்ற சொல்லுக்கு எழுதிய விளக்கத்தினை இப்போது  நினைவிற் கொள்வோம்.  அவ்விளக்கம் இங்கு உள்ளது.

https://sivamaalaa.blogspot.com/2025/12/blog-post_16.html

இதைச் சொடுக்கி,  இதன் பொருளை அறிந்துகொள்க. இது தொடர்புடைய பொருளாதலின், இதைப் பற்றிய விவரங்களைச் சுருக்கிக்கொள்கிறோம்.

கேந்திரம் என்ற சொல்,  கேளுந்திரம் என்ற சொல்லின் இடைக்குறை.  இதில் ளு என்பது குன்றியதுடன்,  திறம் என்பது திரம் என்றும் வந்தது.  இது இன்னொரு புதிய சொல்லின் பகுதியானல்,  ற என்ற வல்லொலி இடையினமாக மாறிவிடும். இதை பலசொற்களில் எடுத்துக்க்காட்டியுள்ளோம்.  பழைய இடுகைகளைப் பார்த்து, குறிப்பு எடுத்துக்கொள்க.

எடுத்துக்காட்டு.  சற்றுப் பரப்பு உடையதாகத் திறமாக அமைக்கப்படுவது பாத்திரம்.  திறம் என்பது திரமாகிப் பின்னொட்டாக ஆகிவிடுவதால்,  வல்லொலி ற  என்பது இடையின ரகரம் ஆகிவிடுகிறது.  அதாவது புதிய சொல்லின் பகுதியாக வருவதால்,  ற என்று வலித்து ஒலிக்கவேண்டியதில்லை. அதுதான் ஒலியமைப்பு மாற்றம்.

கே(ளு)ந்திரம் >  கேந்திரம்.

இதைக் கேள்> கேண்>...,  திரம் ( விகுதி),  ஆகவே >  கேந்திரம்  என்று விளக்கலாம்.  எப்படி விளக்கினாலும் மக்களுக்கு எளிய முறையில் புரிய வைக்கப்படுகிறதா என்பதே முக்கியம் ஆகும்.

இது ஒரு அரசியற் சொல் என்பது புரியவேண்டும்.  படையினர் ஒரு நடுவிடத்திலிருந்து கொடுக்கும் கட்டளை,  படையின் பகுதிகள் நாற்புறம் கேட்டு நடந்துகொள்ளும் நடுப்பகுதிலும் கேட்கவேண்டும்.  அப்போதுதான் படைநடத்துதல் ஒழுங்காக நடைபெறும். பண்டை படையினர் சொற்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.  ஆகவே ஒவ்வொன்றாகத்தான் ஆய்ந்து அறிந்துகொள்ள முடிகிறது.  மேலும் பல சொற்களை அறிந்துகொள்ள எல்லா இந்திய மொழிகளில் இதுபோன்ற ஆய்வுகள் தொடரவேண்டும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.


------------------------------------------------------------------------------------------------------------------

விவரம் என்பது என்பது,  வி(ரி)+ வரு + அம் என்று அமைந்த சொல்.  விரித்து வருவித்தல். சமஸ்கிருதம் என்பது சம (ஸ்) கதமான ஓர் இணைமொழி.  சம் - சம  ( ஒலியில் சமமான),  க(த்)து+ அம் > கதம்,   கதம் என்றால் ஒலி அமைப்பு. சம ஒலி மொழியாகத் தொடங்கிப் பின் விரிந்து பெருகியது.

முகு > முகம்;  முகு > மூக்கு;  முகு> முக்கு+ இ+ அம் > முக்கியம்.