சிசு
திறையள-த்தல் tiṟaiyaḷa-ttal from University of Madras "Tamil lexicon" (p. 1931)
திறையள-த்தல் tiṟai-y-aḷa- , v. intr. திறை +. To pay tribute; கப்பங்கட்டுதல். தீர்ந்து வணங்கித் திறையளப்ப (பு. வெ. 10, 3).
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
சிசு
திறையள-த்தல் tiṟaiyaḷa-ttal from University of Madras "Tamil lexicon" (p. 1931)
திறையள-த்தல் tiṟai-y-aḷa- , v. intr. திறை +. To pay tribute; கப்பங்கட்டுதல். தீர்ந்து வணங்கித் திறையளப்ப (பு. வெ. 10, 3).
ஒரு சொல்லை அமைக்கப் பல தந்திரங்களைக் கையாளவேண்டியுள்ளது. அவ்வாறு அமைப்பதில் இலக்கணம் படித்த புலவர்கள் திறனுடையோர் என்றுதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். வாழ்க்கை முழுவதையும் கல்வியில் செலவிட்டுப் பலவற்றை அறிந்து உளப்புலம் அடைந்தோரை நாம் போற்றத்தான் வேண்டும். என்றாலும் சில பழஞ்சொற்களை ஆய்வுசெய்கையில், பாமரர்கள் புலவர்களை வென்றுவிட்டதைப் போலவே தெரிகிறது.
நிமை என்பது முதனிலைத் தொழிற்பெயர். நிமைத்தல் என்பது வினைச்சொல். இது இமைத்தல் என்றும் வரும்.
நிமை இடும் நேரமே நிமிடம் எனப்படுகிறது. நிமை+ இடு+ அம் > நிமிடம். நிமை என்பதில் உள்ள ஐகாரம் குன்றிப் புணர்ந்தது. இது சொல்லாக்கப் புணர்ச்சி. நிமை எனற்பாலது நிம் என்று நின்றது.
நிம் என்பது ஓர் தமிழ் அடிச்சொல். நிம்> நிமிர் என்பதில், மனிதன் கூனுதல் இன்றிச் சரிப்படுத்திக்கொள்கிறான். நிம்+ ஐ > நிமை என்பதில் நிற்கும் இமை தன் இயக்கத்தை மேற்கொள்கிறது. இதில் சேர்ந்த ''ஐ'' இதைக் குறிக்கிறது. நிமைத்தல் என்பது ஆகும் தொழிற்பெயர். இமைத்தல் என்பதும் அது.
நிமித்தம் என்பது நிமிர்ந்து இடுவித்தலுக்கான நோக்கினைக் குறிக்கிறது. இங்கு ''இடுத்தம்'' என்பது குறுக்கப்பட்டது. வல்லொலியான டுகரம் விலக்குண்டு சொல் நன்கு அமைகிறது. இது சொல்லாக்கத்தில் கடைபிடிக்கப் படும். எ-டு: பீடு+ மன் > பீமன். பீடுடைய மன்னன் என்பது. காரணப்பெயர்.
ஒரு மத்து என்பது சுற்றியுள்ளவற்றை மருவிச் சுற்றுகிறது. அதனால் அதற்கு இப்பெயர் வந்தது. மரு> மருத்து> மத்து என்று ருகரம் நீங்கியது காண்க.
ஒரு பொருளின் நடு என்பது அதன் சுற்றியுள்ள பாகங்களை மருவி நிற்பது ஆகும். மருவாமை இருப்பின் அது நடுவாகாமை உணர்க. மருவி இயல்வதினால், மருத்து+ இயம் > மருத்தியம்> மத்தியம் ஆயிற்று. ருகரம் நீங்கிற்று. இந்நீக்கம், நாட்கடப்பினாலோ, கருதி விலக்கினதாலோ நடைபெறலாம்.
நிமிடம் ( நிமை+ இடு+ அம்) என்பது சரி. இதில் இடு என்பது பொருந்தி நிற்கிறது. நிமிஷம் என்பது சம ஒலி அமைப்பு ஆகும். அதுவே சம(ஸ்) கிருதம் என்பது. கத்து> கது> கதம்> கிருதம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
இந்தச் சொல்: '' திவாகரன்'' என்பது. இவனுக்கு ( சூரியனுக்கு), ஆதித்தன் என்ற பெயரும் உள்ளது.
இதைத் தீ+வார்+ கு+ அரு+ அன்: தீயைத் தொலைவிலிருந்தே வாரிக் கொணர்ந்து அருகில் சேர்த்துச் (சூட்டைத்) தருபவன் என்பது எமக்கு நன்றாக இருக்கிறது. நீங்கள் உங்கள் கருத்தைப் பதிவிடலாம். சூட்டைத் தருபவன் சூரியன் என்பதற்கு இது இனிய இணைப்பைத் தருகிறது. சூரியன் என்பது அன் விகுதி இல்லாமல் சூரியா என்று இருந்தாலும் அதுவும் நலமே. மடி> மரி என்ற இரண்டும் ஒருபொருள் தரும் போலிகள். டி என்பது ரி என்பதற்குப் போலியாக வரவில்லை? என்ன வேறு ஆதாரம் வேண்டிக்கிடக்கின்றது.
இந்தச் சொல்லைப் பலவழிகளில் விளக்கலாம். இச்சொல் ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கமுடையது ஆகும். பல ஆயிரக்கணக்கான அடிச்சொற்களைக் கொண்டது தமிழ்மொழி. இதிலுள்ள மூலங்கள் எல்லா உலக மொழிகளிலும் பரவியுள்ளது. சமஸ்கிருதம் என்பது இன்னொரு மொழி. அதுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது என்பதைச் சிந்திக்கவேண்டும். சமம்+ கதம்> சமக்கதம்> சங்கதம். என்றால் சமஸ்கிருதம். சமம் + ஸ்+ கதம் > சமம்+ ஸ்+ கிருதம்> சமஸ்கிருதம். இது என்ன பொருள் என்றால் சமமான ஒலியமைப்பு உடைய மொழி என்று பொருள். தமிழின் அடிச்சொற்களுடன் ஓரொலி உடைய மொழி சமஸ்கிருதம். ஏன் கிருதம் என்று சொல் வந்தது என்றால் மகம்> மிருகம் என்பதுபோல், கதம்> கிருதம் என்று முடிந்தது. அவ்வளவுதான் தெரியவேண்டியது.
கதம் என்பது, கத்து என்பது ஓரெழுந்துக் குறைந்து, கது என்று வந்தது. அம் விகுதி வந்தது. கது என்பதே நீண்டு காது என்று வந்து ஒலிவாங்கி என்ற பொருளைத் தந்தது. இன்னும் பல. இது நிற்க.
திவாகரன் என்பது சமஸ்கிருதம் என்றாலும் சரிதான். தமிழ் என்றாலும் சரிதான். திவாகர் என்றாலும் வேறுபடாது.
திருவாகும் அரன் > திருவாகு அரன் > திருவாகரன் > திவாகரன் என்றும் வரும். இப்படி வந்தால் அது ஒரு சொற்றொடராய் வந்து, ஒரு சொல்லாகி, ரு என்பது இடைக்குறையாகி, திவாகரன் என்று வரும். யாரைக் குறிக்கிறது. சிவனைக் குறிக்கும். சூரியனையும் குறிக்கும். பண்டைத் தமிழரின் வரலாற்றின் அவர்கள் இயற்கை எழிலர்களான சூரியன், சந்திரன், உடுக்கள் என இவற்றையும் தேவர்கள் என்றே கொண்டனர். நாளடைவில் சிவனைத் தனியாக அறிந்துகொண்டனர்.
அர்> அரு> அருகுதல் ( பலவாக இல்லாமை). அர் > .. இது சிவப்பு என்றும் பொருள். எ-டு: அர்> அரத்தம் > இரத்தம் > ரத்தம் ( சிவந்த நீர், செந்நீர் என்றும் கூறுப. மனிதர்கள் பெருகியதுபோல் சொற்கள் பல பின் தோன்றின. தொடக்கத்திலே இலக்கக் கணக்கில் தோன்றிவிடவில்லை. அர் என்றால் ஒலி என்றும் பொருள். அர்> அருச்சனை> அர்ச்சனை என்பதில் ஒலிப்பொருள். அர்> அரசன் என்பதில் ஒலிசெய்து மக்களை ஒன்றுகூட்டுவோனைக் குறித்தது. படைநடத்துகையில் இன்றும் இதை உணர்ந்துகொள்ளலாம். இது நிற்க.
இனித் தீ(ய்)வு + ஆகு+ அரன் > தீவாகரன் > திவாகரன் என்று பார்ப்போம். தீய்வு ஆகுமாறு அருகில் இருப்போன். சிவனும் தீமை செய்வோரை தீய்ப்பதற்கு அருகில் இருப்பவன் தான். அரன் என்பதற்கு தீயோரை அரித்தெடுப்போன் என்ற பொருளும் கூறியுள்ளனர். அரி+ அன் > அரன் என்பதில் ரி என்பதன் இகரம் கெட்டது.
மற்றொன்று: தீ+ வா( ர் )+ கு + அரன் > திவாகரன் ஆகும். தீயை அல்லது அதில் வரும் ஒளியை வரச்செய்து அல்லது வாரித்தந்து செயல்புரிவோன் என்க.
இன்னும் உள. இன்னொரு பதிவில் வெளிப்படுத்துவோம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
[இதை வரையும்போது சில பாகிகள் முன்னுக்குப் பின்னாக மாறிவிட்டன. இது யாம் செய்யாமல் கணினி தானேகவே செய்துவிட்டது. எனினும் யாம் இதில் ஏதும் மாற்றாமல் விடுத்துவிட்டதே நலம் என்று கருதுகிறோம். ]