போர்கள் விரிந்துபுன் வெடிகள் பொரிந்தன
யார்யார் இறந்தனர் யாரும் அறிந்திலா
குழப்பம் விளைந்தது அமைதியும் குலைந்தது
தணிந்திடல் இலாது வணிகமும் குறைந்தது;
பணந்தனை ஈட்டுதல் நாடுகள் கணித்தனர்;
இழந்தனம் மேன்மையை என்றனர் உழைந்தனர்;
ஒருவர் பாரதத் தாய்பெறு குலமகள்
இரவொடு பகலிலும் கரவாக் கண்விழித்து,
எண்கள் தம்முடன் பண்படப் பிணக்கிலாச்
சேவை மனத்தொடு கோவைப் பட்டனர்;
இந்திய நாட்டின் செந்தமிழ்ச் செல்வி.
மனந்தளர் வில்லா மாண்புறு கல்வி
நிர்மலா சீதா ராமன் நிதித்துறைத்
தருமம் நிறைந்த பெருமகள் அமைச்சர்,
உறுவரு மானம் உயர்த்திப் பாரதம்
விளங்கிடச் செய்த விண்ணுறு மேன்மை,
துலங்கிடச் சொல்வாய் தோழி,
கலங்குதல் அற்றுன் நற்றாய் மகிழவே.
அருஞ்சொற்களுக்கு விளக்கம்:
புன்வெடிகள் - தீய வெடிகள்.
உழைந்தனர் - துன்பமுற்றனர்
தருமம் நிறைந்த -- மக்கள் துயர் என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களின் துன்பம் நீங்க வேண்டும் என்று எண்ணியமையால், தருமம் நிறைந்த எனப்பட்டது.
வெடிகள் பொரிந்தன - இங்கு தீப்பிழம்புகள் பறத்தலைக் குறிக்கவேண்டி, மீமிசையாகக் கூறப்பட்டது.
தணிந்திடல் - வணிகத் துன்பங்கள் குறையாமல் என்று பொருள்.
ஈட்டுதல் பணம் வருமானம் சேர்த்தல்.
கரவா = அமைச்சர் என்ற முறையில் தன் கடமையை உணர்ந்து செயல்பட்டார் என்பதைக் குறிக்க இச்சொல். ஒளிவு மறைவின்றி, தன் சுகம் கருதாமல்.
இழந்தனம் - இழந்தோம்.
தாய் பெறு குலமகள் - பாரத நாட்டின் மேன்மைச் செல்வி.
எண்கள் தம்முடன் பண்படப் பிணக்கிலா - கணக்கில் சிறந்தவர்.
வரவு செலவு திட்டம் ( பட்ஜட்) தயாரிப்பில் சிறந்தவர் என்பது,
கோவைப் பட்டனர் - தம் வேலையைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்தார்.
இது மகள் தாய்க்கு எடுத்துச் சொல்லியது.
தருமம் நிறைந்த - இவர் பட்ஜட் மூலம் நன்மைகள் பல செய்துள்ளவர்.
நாட்டின் வருமானத்தை வெகுவாக உயர்த்தியுள்ளார். உறு வருமானம் என்ற தொடர் கவனிக்க,
பாரதம் விண்ணுறு மேன்மை - வானளாவிய மேன்மை பாரத நாடு அடைந்தது.
மகளைத் தாயின்பால் ஆற்றுப்படுத்தியது. தாயின் துன்பம்
களைவித்தது.
மெய்ப்பு பின்னர்
பகிர்வு உரிமை