இந்தச் சொற்கள் வழக்கில் சற்று குறைந்துள்ளன என்று தெரிகிறது.
அரம்பை என்பவள் ஒரு தேவருலக மாது என்பர். இச்சொல் பன்மையில் அரம்பையர் என்று வரும். இச்சொல் தலையிழந்தபின், ரம்பை, ரம்பா என்றும் வழங்கும்.
அரம்பை என்ற சொல்லின் பகவுகள் ( உட்பிரிவுகள்), அரு+ அம்+ பை என்பன. இவற்றை இணைத்தால் ''அரம்பை'' என்ற சொல் வந்துவிடும். பாணினியில் சமஸ்கிருதச் சொற்பிரிப்பின்படி, வேறு பிரிப்புகள் இருக்கும். பிற எழுத்தாளர்கள், வேற்று விளக்கங்களும் அளித்திருப்பர். அவற்றை அவர்களின் நூல்களில் அறிந்துகொள்ளவும். அரம்பை - பாற்கடற் பாவையருள் ஒருவர்.
அரு என்பதே முதற்பகவு. அரிய என்ற பொருள்தரும்.
அம் என்பது அழகைக் குறிப்பது. அம் - அம்மை : அழகு.
பை என்பது இளமை குறிக்கும் அடிச்சொல். பை> பய் என்றும் வரும். பய்> பயில். பயிலுதல் - தொடக்கப் படிப்பைக் குறிக்கும். பய்- பயிர்: முளைப்பனவில் இளம்பகுதி. பய் > பயம்: ஒன்றை முழுமையாக அறியாத போது தோன்றும் அச்ச உணர்வு என்று சொல்க. பை > யையன். இந்தச் சொல் boy என்று இந்தோ ஐரோப்பிய மொழிகளில் வரும். கிரேக்க மொழிச்சொல் ''பைஸ்'' என்பது உறவுச்சொல்லாகக் காட்டப்பெறும். இளநாட்களில் விளைதல் ''பயத்தல்'' என் க. இந்த இளமைப் பொருள் நாளடைவில் தேய்வுற்றது - பிறமொழிகளில்.
அரம்பை என்பதில் இறுதியில் இச்சொல்லே பகவாகும்.
பொருள்: அழகுடன் இளமையும் உடைய பேரழகி. இது தமிழிலிருந்து வருவது.
அறிக மகிழ்க
மெய்ப்பு: பின்னர்
பகிர்வுரிமை