பாரியா என்பது மனைவி என்று பொருள்படும் சொல். தமிழில் பெருவழக்கு உடைய சொல்லன்று. அருகியே எழுத்துலகில் பயன்பாடுடையது ஆகும்.
ஆடவனை மணந்துகொண்ட பெண்ணின் உடன்வாழ்வு, கணவனின் உயிர்வாழ்வு முழுவதும் தொடர்தல் மட்டுமின்றி, அவனிறந்த பின்னும் தொடர்வதாகும். பிள்ளைகளையும் வளர்த்து மணம் செய்வித்து, சிறப்புச் செய்வது மட்டுமின்றி அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பும் உடையவளாகிறாள்.
மணப்பெண் பெரும்பாலும் ஆடவற்கு வயது குறைந்தவளாய் இருப்பாள். அவன் உயிர்வாழ்க்கை முழுவதும் அவனுடன் ''பரவி'' நிற்பதுடன் அவள் கடமைகள் பின்னும் தொடர்வதால், ''பர(த்தல்)'' என்ற முதற்பகவு பொருந்துகிறது. பர(த்தல்) என்பது பார் என்று முதனிலை நீண்டு அமைகிறது.
அவன் வாழ்விடம் இயைந்து செல்வதால், இயை - இயா என்ற இரண்டாவது பகவும் மிகப் பொருத்தமுடைய தாகிறது.
இச்சொல் ''பாரியாள்'' என்றும் -ஆள் பெண்பால் விகுதி பெற்றும் வரும்.
பாரியா, பாரியாள், பாரியை என்ற மூன்று வடிவங்களும் ஏற்புடையனவே எனினும், பாரியை என்பது சிறந்த சொல்வடிவம் என்பது எம் கருத்தாகும்.
இது மலையாள மொழியில் நல்ல பயன்பாடு காண்கிறது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக