சில் என்ற அடிச்சொல், ஒன்றுக்கு மேற்பட்டன என்று பொருள்படும். மணல்போல் நுண்மையாக இல்லாமல், சற்று பெரியனவாய் ஆனால் ஒரு பெரிய துண்டிலிருந்து பிரிந்து விழுந்து இருப்பனவைக் குறிக்கும்.
லகர மெய்யீறு, னகர மெய்யீறாகத் திரியும். சில்> சின்> சின்ன > சின்னது என்பன காண்க.
சின்> சினை ( விலங்குகளின் கரு முட்டைகள்). சினைகளில் முட்டைகள் பலவாய் இருக்கும். எ-டு: மீன் சினை. பசு சினைப்பட்டிருந்தால், கன்றுபட்டிருக்கின்றது என்பர். (கருவுற்று என்ற எச்சவினை, மாடு முதலியவற்றிற்குச் சொல்லலாகாது.)
சின்னம் என்பது. சின் என்றது அடிச்சொல். அம் என்பது அமைப்பு என்பதைக் குறிக்கும் அடிச்சொல், இங்கு ஒரு விகுதியாக வருகிறது. அம்> அமைப்பு என்ற பொருளைக் குறிக்கும் தமிழ் அடிச்சொல். இந்த அம் வந்த ஒரு சொல்லை எடுத்துக்க்காட்ட வேண்டின், நிறம் என்பதைக் காட்டுக. நிறு+ அம் > நிறம். நிறு என்றால் மாறிவிடாமல் நிற்கச் செய்வது என்பதே பொருள்.
நிறு > நிறுத்து. ( வினைச்சொல் பகுதியில் உண்டாகிறது. இங்கு து என்பது வினையாக்க விகுதி.). பொரு> பொருத்து என்ற சொல்லில் பொரு என்பது வினையடியாகவும் து என்பது வினையாக்க விகுதியாகவும் இருத்தலை உணர்ந்துகொள்வீர் நிறு என்ற அடிச்சொல் எப்படி உண்டானது என்றால், நில்> நின்று ( வினை எச்சமாகி), பின் ன் என்பது இடைக்குறைந்து, நிறு என்றாகி இங்கு மீண்டும் வினையாகிற்று. நிறு என்பது முன்வடிவில் நின்று என்று எச்சமாகி இடைக்குறைந்து நிறு என்றானது என்பதைக் கூறுவதில்லை. இங்கு இதை விரிவாக விளக்கியுள்ளோம்.
நில் > நிறு என்று வந்ததுபோலுமே சில் என்பதும் சிறு என்று திரியும். சில்லிடுதல் என்ற வினை, இடு என்ற துணைவினை பெற்று வரும்.
சில்லுதல், சின்னுதல் என்ற வினைவடிவங்கள் கிடைக்கவில்லை.
சிறுத்தல் என்ற வினை வழங்கியுள்ளது. சிறுப்பனவாதல் என்பதும் ஒக்கும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக