ஞாயிறு, 31 டிசம்பர், 2023

Family new year


 


Our blog friends- -( family ) express their 2024 greetings to all our readers.

Happy New Year to all.

Leah photo

 

Happy new year to you Leah!


சனி, 30 டிசம்பர், 2023

புத்தாண்டே வருக வருக!

 


இருபதணை இருபத்து நான்கே வாவா!

இருக்கின்றார் அனைவர்க்கும் மேன்மை தாவா!

பொருவதனைப் பொருந்தாத புகழே தாவா,

புதுமனைகள் இலார்க்கெங்கும் போற்றித் தாவா!


அறிந்தநிலை அரசியலார் வணிகவலர் ஓங்கும்

செறிந்தவள நாடுகளே புவிமிசையே வேண்டும்

தெரிந்துணர்ந்த பெருமக்கள் வருந்துவறம் கூரார்

நிறைந்தநில வாழ்வுதனை நீவழங்க. வேண்டும்


யாவருக்கும் எமதினிய மூவெட்டு வருடும்

நாவினிக்கும் நல் வாழ்த்து உரித்தாக்கு கின்றோம்

நோவுநொடி  யாதுமிலா இன்பவாழ்வு மேவி

யாவினிலும்  நனிசிறந்த நல்வாழ்வு வாழ்க


பொருள்:

இருபதணை இருபத்து நான்கே வா-வா!  - வருட எண்ணிக்கையில் இருபதை அடுத்து எழுதப்படும் 24ம் ஆண்டே வருக.  அணைதல் - அடுத்து இருத்தல்.

இருக்கின்றார் அனைவர்க்கும் மேன்மை தாவா!-  யாவருக்கும் உயர்வு தருவாயாக

பொருவதனைப் பொருந்தாத புகழே தாவா, -  போர் நடத்துதலை இல்லாத ஒரு உயர்வைத் தருவாயாக

புதுமனைகள் இலார்க்கெங்கும் போற்றித் தாவா! -  வீடில்லாதவர்களுக்கு

வீட்டைக் கட்டிக் கொடுப்பாய்.


2

அறிந்தநிலை அரசியலார்-   அரசாளத் தெரிந்த அரசியல்

சேவையாளர்கள்.

 வணிகவலர் - வணிகத்தில் சிறந்தோர்

 ஓங்கும் -  மேவி நிற்கும்

செறிந்தவள நாடுகளே புவிமிசையே -  வளமான நாடுகள்  

தெரிந்துணர்ந்த பெருமக்கள்--  அறிவார்ந்த மக்கள்

 வருந்து  வறம் கூரார் - வறுமைப் பிடியில் இல்லாதவர்கள்.

வறம்கூர்தல் -  வறுமை அடைதல்.  வறம் - வறுமை.

இவர்களுக்கு:

நிறைந்தநில வாழ்வுதனை நீவழங்க. வேண்டும் -  நிறைந்த புவி வாழ்வு 

கொடுக்கவேண்டும்.


3.

 எமதினிய---எமது இனிய

 மூவெட்டு ----மூன்றெட்டு,  மூ+ எட்டு

வருடும் -  பெருக்கலில் வரும்.  24 எண்.

நாவினிக்கும் -  நாவு  இனிக்கும்,  சுவையான

நல் வாழ்த்து  அன்பான நற்செய்தி

 உரித்தாக்கு கின்றோம்  -  உரியதாய்  ஆக்குகின்றோம்.

நோவுநொடி  யாதுமிலா இன்பவாழ்வு மேவி   - நல்ல உடல் நலத்துடன் இருந்து

யாவினிலும்  நனிசிறந்த நல்வாழ்வு வாழ்க-  மிக்க இனிமையாக வாழ்க என்றபடி


அறிக மகிழ்க.









சாட்சி - இன்னொரு முடிபு

 சாட்சி என்ற சொல்லுக்கு இன்னொரு முடிபு கொள்வோம். [ முடிப்பு வேறு, முடிபு எனல் வேறாகும் ] முடிபு conclusion at end of a research ].

ஆடு> சாடு>சாடு+ சி>சா( டு)+சி>சாச்சி.

இச்சொல்லே மக்களிடை வழங்கிய, இன்றும்  அருகிவிடினும் வழங்கி வருகின்ற , சொல்லாகும். எழுத்தில்  இது சாட்சி என்றே வரும்.

சொல்லாக்கத்திலும் சொல்லாக்கப் புணர்விலும் வல்லின ஒலிகள் விலக்கப் படுதல் நடைமுறை ஆகும். யாம் முன்பு பல எடுத்துக் காட்டுகள் பழைய இடுகை களில் தந்துள்ளோம். பீடுமன்>பீமன்>வீமன் என்பது காண்க.

இது பல இடுகைகளில் யாம் தந்த ஒன்றாகும். பீடுடைய மன்னன் என்பது பொருள்.

கடப்பல்> கப்பல் : இங்கும் டகரம் (வல்லினம்)   நீங்கியது காணலாகும்.

அண்மையில் மடங்கை >மங்கை என்பதும் காட்டப்பெற்றது. ஆடவனுக்கு மடங்கிப் போம் அகவையினள் என்பது சொல்லாக்கப் பொருள்.

ஆள்தல்>ஆடுதல் என்பன தொடர்புடையன. ஆள்>சாள்>சாடு தொடர்பினவே. இவை பின்னர் விளக்கப்படும்.

சாட்சி என்பவன்/(ள்)   சான்றுகளின் பான்மையில் ஆளுமை உடையவன்.

பேசியில் எழுதுவதால் இத்துடன் முடிப்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

குறிப்புகள்:

கடத்தல் (வினை): கடப்பு+அல்>கடப்பல்,  
நீரில் கடந்து செல்லற்கு உரிய மிதப்பூர்தி.
கடப்பல் - மீட்டுருவாக்கம்.

மடங்குதல். (வினை). மடங்கு+ ஐ.
தங்கை,  அக்கை என்பவற்றோடு ஒப்பிட்டுக்கொள்க.

இவை எளிமையான சொல் மீட்புகளை
அடிப்படையாகக் கொண்டவை.

இச்சொற்களில் ஐ (உயர்வுக் குறிப்பாக) உள்ளமையால் அக்காலத்தில் பெண்கள்
மன்பதைத் தலைவிகளாயிருந்து வழி நடத்தினமை புலப்படும். 
அத்தை என்பதிலும் இது தெரிகிறது . அத்தன் அண்ணன் என்பவற்றுக்கு ஈடாக, அத்தள், அண்ணள் என்னும் சொற்கள் இல.

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

Christmas greetings

 We wish our readers celebrating Christmas a merry Christmas and Happy New Year.

கருமவினையின் நீங்குக ( ஆசிரியப்பா)

 மக்களில் பல்லோர் தக்கநல் உணவிலார்

நக்கலர் பழிக்க நைந்துகீழ் அணாவினர். 

அவர்தமை இழித்தல் வருநாள் நமக்கொரு

அவமது  உணருக  அதுநமக்கு இழுக்கிடும்

இனிவரும் பிறவியில் அதுபோல்  கிடந்துழந்

தலைந்திடல் நிகழின் கழுவாய்  உளதோ?

கருமம் இதுவென ஒருவிட  அறிந்திலார்

ஒருமந்   திரியும் ஊழலில்  விழுந்தின்று

தெருவலி காட்டுநர் புரைமகன்  ஆகவே

புரிகுற்  றத்தினுக் கடைந்தனர் சிறையை.

அயலர் மனத்தினில்  அத்துயர் விளைத்தமை

வியப்பென அல்லாத   உறுதி விளைவே.

வீண்வினை தொகுத்தல் நீங்கி

தான்விடு தலைதான்  காண்கவாழ்  வினிதே..  




அரும்பொருள்:

நக்கல் -  நகைப்பு.   நகு+ அல் > நக்கல், இங்கு ககரம் இரட்டித்தது.

நக்கலர் -நகைப்போர், ஏளனம் செய்வோர்.

நக்கு அலர் என்று பிரித்தல் இங்கு பொருந்தாது.

அவம் -  கெடுதல்.  அவமது = அவம் அது

ஒருவிட  -  விலகிட, நீங்குவதற்கு

இழித்தல் -  பழித்தல்

வீண் வினை -   தேவை யில்லாமல் கர்மா  ஆவது

கழுவாய் -- பிராயச்சித்தம்

சனி, 23 டிசம்பர், 2023

இராமபிரான்

 இராமன் என்ற நாடாள்வார் தியாகச் செம்மல்,

 அரண்காட்டில்  வனவாசம் பொறுத்து வாழந்தார்.


வியாழன், 21 டிசம்பர், 2023

அள், அன் பால் விகுதிகள். தமிழ்மொழியில்.

 பெண்மக்கட்கு ஏன் அள் விகுதி வந்தது என்பதை இங்கு ஆய்வாக்கம் செய்கிறது இந்த இடுகை.

ஆ ஈறு விளியில் ( அழைத்தல் )

ஆ எனற்பாலது பெரும்பாலும் விளியில் தோன்றும் ஒலியாகும்.

"தோழா, நான் சொல்வதைக் கேள்" என்று ஒருவனை விளித்துப் பேசுகையில் இச்சொல் (தோழா)  என்று ஆகாரம் (  ஆவன்னா அல்லது ஆ என்ற ஒலியில்) முடிவதைக் காணலாம்.

கண்ணன் என்பது எழுவாய் வடிவம்.  அதாவது, சொல்லின் தொடக்க வடிவமாகும்.  கண்ணனை அழைக்கின்ற பொழுது,  இது "கண்ணா!"  என்று ஆகாரத்தில் முடிகிறது.

அயல் மொழிகட்கு  இத்தகைய சொற்கள் சென்று வழங்கும்போது,  விளிவடிவமே வழங்குகிறது.   எழுவாய் வரவேண்டிய இடத்திலும்,  கண்ணன் என்று வாராமல் கண்ணா ( அதாவது கிருஷ்ணா) என்று வரும்.   கிருஷ்ணன் என்பதில்  அன்,  விகுதி (  தமிழுக்குரியது) .

அள் என்பதன் பொருண்மைத் தெளிவு

தமிழில்  அள் என்பதே  அன் விகுதியின் பெண்பால் வடிவம்.  ள் ஈற்றுச் சொற்கள் அல்லது விகுதிகள்  அ, இ மற்றும் உ என்ற முச்சுட்டுகளுக்கும் வராமல் அகரத்திற்கு மட்டுமே உள்ளது. அயலில் இள் விகுதியும் வருவது ஆய்வுக்குரியது.  எடுத்துக்காட்டு:  உறுமிளா ( இள் ஆ).  கண்ணுறும் தகைய அழகி என்பது.

அள் என்பதை அவள் என்பதன் சுருக்க வடிவம் என்று கொள்ளலாம். அப்படிக் கொண்டால் சுட்டு இருமுறை வந்தது என்று கொள்ளவேண்டும். அ அள் என்ற இரண்டன் கலவை வகர உடம்படுமெய்யுடன்  அவள் என்றாகும். இவ்வாறின்றி அள் என்பது ஒரு தனிவிகுதி என்று கொள்வது இடரின்றி முடியும். இது சரியானால் அன் என்பதும்  தனி ஆண்பால் விகுதி என்று முடிக்கவேண்டும்.

சுட்டு இரட்டிப்பதைக் கவனிக்காமல்  அகரச் சுட்டு இருமுறையும் வந்தது என்று கொண்டால்,  அள்,  அ அள் ( அவள் )  என்பன இரண்டும் சுட்டிலிருந்தே வந்தன என்று சொல்வது எளிது.  அவ்வாறாயின் அள் என்பதற்குத் தனிப்பொருள் கூறுதல் தேவைப்படாது.

இனி அள் என்பதற்குத் தனிப்பொருள் யாது என்று காண்போம்.

அள் -  செறிவு,  பற்றுதல் செய்வது,

அள்ளல் -  நெருக்கம்

அள்ளாடுதல் -  செறிதல்

அள்ளி - நெய்   (  உருகுதல் உடையது )

அள்ளிக்குத்து -  தெளித்தல்

அள்ளிக்கொட்டு -  பரவுதல்

அள்ளிக்கொண்டுபோதல் -  பேரளவில் எடுத்துச்செல்லுதல்

அள்ளிருள் -  செறிந்த இருட்டு

அள்ளுதல் -  செறிதல்

அள்ளுகொள்ளை -  பெருங்கொள்ளை

அள் விகுதி தரும் தெளிவு 

அள் என்ற அடியிற் பிறந்த மேற்காட்டிய சொற்களை நோக்கினால்,  பெண்ணுக்கு அள் விகுதி வந்ததன் காரணங்கள் உடன் புரியும்.   நெய் என்பதே நேசம் என்பதற்கும் அடிச்சொல்.  நெய்  ( உருகி ஒன்றாவது ),  செறிவுடையது.  பரவுதல் என்பது விரிவாவது. இவ்வாறு பொருள் பெருக்கலாம்.  

நெய்+ அம் > நேயம் முதனிலை நீண்டு விகுதி பெறுதல்

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்னும் பாரதியாரின் தொடரையும் காண்க.

அன் விகுதியும்  அன்பு என்பதன் அடிச்சொல்லாய் உள்ளது.  அண் > அன் அணுக்கக் கருத்து.

உள் விகுதி சொல்லமைப்புக்கு உதவுகிறது எனினும் இது பால் ( ஆண், பெண் பாகுபாடு )  காட்டுவதில்லை.  காட்டும் சொற்கள் கண்ணுற்றால் ஈண்டு கருத்துரையில்  எழுதித் தெரிவியுங்கள்.   தமிழிலானாலும் பிறமொழிகளிலானாலும் இருப்பன காட்டலாம்.  நன்றி

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

மெய்ப்பு பார்க்கப்பட்டது:  23122023 1506











திங்கள், 18 டிசம்பர், 2023

இலக்குவன்

 இன்று இலக்குவன் என்ற பெயரைத் தெரி ந்து  கொள்வோம் 

இது இலட்சுமணன் என்றும் எழுதப் படுவதாகும்.

இதிலுள்ள தமிழ் மூலங்கள்: இல், அ, கு, அன் என்பன.

"இடத்திலே அங்கு  சேர்ந்து அல்லது கூடி இருந்தவன்.". என்பது இம் மூலங்களின் பொருள்.

இல்   - இடம்,   நெஞ்சில் (இல்) என்பதுபோல். வீட்டில் என்றுமாம்.

அ - அங்கு.

கு - சேரந்து

அன் இருந்தவன்.

இலக்கு என்ற தனிச்சொல்லுக்கும் இடம் என்பதே பொருள்.

வகர உடம்படு மெய். 

வனவாசத்தில் கூடி இருந்தவன் .

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின் 





ஞாயிறு, 17 டிசம்பர், 2023

இராமர் வெளிநாட்டுக் கடவுள் அல்லர்.

 பல ஆண்டுகட்கு முன்பே இராமர் ஆரியர் அல்லர் என்பதை எழுதியிருக்கிறோம்.அதற்கான ஆதாரத்தை எங்கும் தேடி அலையவேண்டாம்.  சொல்லிலே அதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டால் அப்புறம் அலையவேண்டியதில்லை.  ஆரியர் என்று யாரும் வெளியார் இல்லை.  ஆர் விகுதிச் சிறப்புடைய தமிழ்ச் சங்கப் புலவர்களே  ஆரியர்.  வாத்தியம் வாசித்தவர்களுக்கும் இப்பெயர் உண்டு.

[ வாழ்த்து இயம் >  வாழ்த்தியம் > வாத்தியம்,  இடைக்குறைச் சொல்]

இர் என்பது அடிச்சொல்.

இர்:  இருள். இரவு, இரா.

இர்+ உள்:  இருள்.  உள் என்பது ஒரு விகுதி.  கட+ உள் > கடவுள் என்று ஆகும்.  கடந்து நிற்பதாகிய பேரான்மா என்று பொருள். இன்னும் உள் விகுதி பெற்ற சொற்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டு:  செய்+ உள் > செய்யுள்.  உயிருடன் ஆகி வாழும் நாள் ஆயுள்.  ஆ+ உள் > ஆ(ய்) + உள் >  ஆயுள்.  இஃது ஆயுசு என்றும் திரியும்.  மூலச்சொல்:  ஆயுள் என்பது தான்.

இருளின் நிறம் கருப்பு.  இரா என்பது ஆ விகுதி பெற்ற சொல். நிலா, பலா என்பன போல.  நிலா என்பது இறுதி ஆ விகுதி.  பல் > பலா:  பல சுளைகள் உள்ள பழம். விகுதி இதுவுமது.

இர்+ ஆம்+ அர் > இராமர்.   இருளாம் நிறமுடைய அவர் என்று பொருள்.

இராமரும் நீலம்.

இப்போது வெள்ளை நிறம் கொடுத்தால் அது சேர்த்தி இல்லை.  அவருடைய நிறம் நீலம் அல்லது கருப்பு.

தென்னாட்டில் இராமர் தென் கோடி வரை பயணம் செய்துள்ளார்.  அறந்தாங்கி  ( அரண் தாங்கி)   வழி  சென்றதாகக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன என்று அறிகிறோம். எம்மிடம் இப்போது இதற்கான குறிப்புகள் இல்லை.

அயோத்தி என்பதும்  அய(ல்) + ஒத்தி .  முன்னாளில் தென் திசையில் ( அயலில்) இருந்த தம் நகரை ஒப்ப எழுப்பப்பட்ட இன்னொரு நகரம்.  அய ஒத்தி> அயோத்தி.  இது காரணப்பெயர்.

அ= அங்கு.  வேறிடத்தில்.

அ அ > அய  , யகர உடம்படுமெய்.  அங்கு அங்கு என்று பொருள்.

அல் என்பதன் இறுதி எழுத்து மறைந்த கடைக்குறையுமாகும்.

அ அல் . > அயல்.  ( அங்கு அல்லாதது என்றும் பொருள்.)  வேறிடத்தது என்பதாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

வெள்ளி, 15 டிசம்பர், 2023

மங்கை என்ற சொல்.

 2020ம் ஆண்டில் எழுதிய எம் சொந்தக் கவிதையில் இப்படி எழுதினோம், ( உண்மையில் எழுதினேம் என்று எழுதுவதுதான் இன்னும் சரியானது).  அந்தக் கவிதையின் பகுதி வருமாறு:

சிங்கை என்னும் மங்கை தனைப் போற்றிப் பாடியே
சீருடன் வாழ்கவென்று பாடி யாடுவோம்
கைகள்கொட்டி இங்குமங்கும் கூடி யாடுவோம்.

இந்தக் கவிதை இங்கு இன்னும் இருந்தாலும்,  அதை நீங்கள் மறந்திருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் பலவற்றையும் மறந்துவிடுவதால்தான் நம் வாழ்க்கையும் செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  சாலையில் வண்டி ஓட்டுகின்ற பொழுது,  முன் கண்ட வண்டிகளை மட்டுமே நினைத்துகொண்டிருந்தால் இப்போது எதிரில் வரும் வண்டியுடன் மோதுவதும் விபத்துக்குள்ளாகுவதும் நேரும். நீங்கள் மறந்துவிட்டதும் சரிதான். இப்போது நினைவுக்குக் கொண்டுவருக.

இப்பாட்டில் மங்கை என்ற சொல்லால் சிங்கையைக் குறித்துள்ளோம்.

சிங்கை ஓர் இளம் நாடு ஆகையால் எதையும் எளிதில் செய்ய அரசால் முடிகிறது என்று சொல்லலாமோ?   தெரியவில்லை.  இருக்கலாம்.

தமிழர்களைப் பொறுத்தவரை வயதிற் குறைந்த பெண்களைத் தாம் தமிழர்கள் பண்டை நாட்களில் மணந்துகொண்டனர்.  அதற்கு முன் குழந்தைகளைத் திருமணம் செய்துகொள்ளும் முறையும் இருந்திருக்கிறது.

பத்துப் பன்னிரண்டு அகவையில் பெண்மக்கள் எளிதில் மடங்கிச் சொல்கிறபடி கேட்டு நடப்பர்.  அதனால் ஆடவர்கள் பெரிதும் இவ்வயதுப் பெண்களையே மணந்துகொண்டனர் என்று தெரிகிறது.

இதற்குரிய வினைச்சொல் மடங்கு என்பதுதான்.

மடம் என்ற சொல்லும் ஒருவகையில் இதையே குறிக்கும்.

இதை மிக விரித்து எழுதாமல் சுருக்கி வரைவோம்.  ஐயப்பாடு உண்டாயின் கருத்துரை மூலம் கேட்டறியுங்கள்.

வினைச்சொல்: மடங்குதல்.   மடுத்தல் என்பதுமாம்.

மடங்கை  ( இதைத் தங்கை என்ற சொல்லுடன் ஒப்பிடுக)

இச்சொல் வழக்கற்று ஒழிந்தது.  இஃது மீட்டுருவாக்கம்.

மடங்கை என்பது இடைக்குறைந்து  மங்கை ஆகும்.

டகர முதலிய வல்லெழுத்துக்கள் குறைதல் முன் பலமுறை கூறியுள்ளோம்.

ஓர் எடுத்துக்காட்டு:  கடக்கும் பலகை மிதப்பு ( பழங்காலத்தில்)  
கடப்பு> கடப்பல்> கப்பல்.  டகரம் கெட்டது.  இதுபோலவே:

மடங்கை >  மங்கை.

மடந்தை என்பது இன்னொரு திரிபு  அல்லது இணையான சொல்.

அதாவது, மங்கை என்பதன் அடிச்சொல் மங்கு(தல்) என்பதன்று. மடங்கு(தல்) என்பதே. மடு(த்தல்) தொடர்புடையது..*

அறிக மகிழ்க.

மெய்ப்பு:: பின்னர்.

மெய்ப்பு 16122023 1805

மெய்ப்பு 18122023 0942

வியாழன், 14 டிசம்பர், 2023

சிதைவு, சிதிலம் - சொற்கள்.

 ஒரு கல்லை எடுத்துக்கொண்டால் அது சிதைவு அடைவது தேய்வதன் மூலமாகவோ உடைதல் முதலிய காரணங்களாலோ இருக்கலாம். எப்படியானாலும் கல் சிறிதாகிவிடும் அல்லது சிறிய துண்டுகளாகிவிடவும் கூடும்.

சிதை என்ற சொல் சிது+ஐ என்று பிரிய,  சிது என்பதே அடிச்சொல். ஐ என்பது விகுதி.  விகுதி என்ற சொல் மிகுதி> விகுதி என்று திரிந்தது. மி - வி திரிபுகள் பல. முன் இடுகைகளில் அறிக.

சிது என்பதன் மூலத்தோற்றத்தை சிறிது என்பதன் குறையிலிருந்து அறியலாம். சிறிது என்பதில் றி குறைந்தால் மீதமிருப்பது சிது தான். சிது என்பதன் மூலம் சில் என்பதுதான்,  இப்போது அதுவரை செல்லவேண்டியதில்லை.

ஒரு மரம் ( கட்டை )தேய்ந்து விடுமானால் சிறியதாகும். எவ்வளவு சிறியதாகும் என்பது அதன் தேய்மானத்தைப் பொறுத்ததாகும். எப்பொருளுக்கும் இது பொருந்துவதாகும்.

சிறுசு என்பதே சிசு என்று இடைக்குறைந்தது.   று மறைவு.

இனிச் சிதிலம் என்ற சொல்:  சிது + இல் + அம் >  சிதிலம் ஆகும்.  இல் என்பது இடம் என்று பொருள்படும்.  மூக்கில் என்றால் மூக்கிடம் என்று பொருள் என்பதைக் காண்க.   கல் சிதிலம் அடைந்துவிட்டதென்றால் தேய்ந்து அல்லது உடைந்து சிறிதாகிவிட்டது அல்லது உருக்குலைந்து விட்டதென்று பொருள்.

இங்கு கூறப்பட்ட சொற்களில் உள்ளீடுகள் யாவும் தமிழென்பதை அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்


புதன், 13 டிசம்பர், 2023

சேட்டைகள் செய்வோர்.

கண்டதே காட்சி கொண்டதே கோலமென்று

கண்டதும் செய்வோர் பற்பலர் ஞாலமேல்.

உண்டபின் வேலை ஒன்றுமில் லாததால்

ஒன்றும் பயனிலாச் செய்கைகள் செய்தார் .

மண்டைப் பைத்தியம் மண்டிய காரணி

மன்றினில் ஏறினர் நன்மதி வற்றவும்

காவலர்  கவன்றிட  மேவியே 

தாவியங்  கோடினர் தகுதியில் செயலே.


இது இன்றைக்குச் சிலர் செய்யும் சேட்டைகளைக் குறிக்கிறது.

காரணி =  காரணம்.  மன்று =  சபை.  வற்றவும் - குறைவுறவும்.

மேவி - மேற்கொண்டு   கவன்றிட -  கவலையுற

தாவியங்கு    -  தாவி  அங்கு,  மண்டிய -  கூடின

அறிக மகிழ்க

மெய்ப்பு  - பின்னர்

படத்தில் கிரண் என்ன செய்கிறார்.



படத்தில் கிரண்குமார்



சமைத்தாரோ  மற்றார்  சமைத்ததைத் தானாய்ச்

சுவைத்தாரோ வேண்டுமினி என்றே ------ அழைத்தாரோ

அப்பனே வேண்டாம் அயிர்த்தலே தைவானில்

ஒப்பவுல  வுங்கால் இது,


அரும்பொருள்:

அப்பனே -   ஆடவரை முன்னிலைப் படுத்திய வெண்பா.

வேண்டுமினி என்றே -  இன்னும் உணவு கொடுங்கள் என்று.

ஏகாரம் றே  -  அசை.

அயிர்த்தல் -  சந்தேகித்தல்.   ஏ = இசைநிறை\

ஒப்ப -  பிறருடன் ஒத்துக்கொண்டு குழுவாக

உலவுங்கால் -  இன்பச் செலவு சென்ற பொழுது

இது  -  இது நடந்தது,  நடந்தது என்று இணைத்துக்கொள்க.


செவ்வாய், 12 டிசம்பர், 2023

பீதி என்ற சொல்

 இந்தச் சொல்,  பிய்தல் வினையடியாக உண்டான சொல். எனினும் வேறு வழிகளிலும் விளக்குறக்கூடும்.  இது ஒரு தமிழ்ச்சொல்.  நிகண்டுகளிலும் இலக்கியத்திலும் இடம்பெற்ற சொல்தான்.

காட்டில் ஒரு குழுவாகச் செல்லும் போது அக்குழுவிலிருந்து ஒருவன் பிரிந்து தனியாகிவிட்டால்.  அதுவும் காட்டு வழிநடந்து முன் பயின்றிராதவனாயும் இருந்தால், அவனுக்கு அரட்சி ஏற்படும்.  இது தனிப்பட்டதனால்  வந்த அச்சம்.  

பிய்தல்  வினை.

பிய்~தல் :  பிய்தி >  பீதி   (  தி என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி).

இது போலும் திரிபுற்ற இன்னொரு சொல்,  எடுத்துக்காட்டு:

செய் >  செய்தி >  சேதி.

வினைச்சொற்களும் இவ்வாறு தோன்றும்.

வாய் -  பெயர்ச்சொல்.

வாய்+ தி >  வாய்தி  >  வாதி > வாதித்தல்.

வாக்கியத்தில்:

மேயப் போன மாடு மீண்டும் வரும்வரை வாதித்தாலும்,  இதற்கு ஒரு முடிவு இல்லை.

யார் அப்பா அம்மா என்று நாவினால் சொல்லும் திறம் ஒருவனுக்கு வேண்டும். அவ்வாறு யாரும் இல்லாதவன் நாதி இல்லாதவன் என்பர்.  இது நா என்னும் உறுப்பினடியாக எழுந்த சொல்.

நா >  நாதி.   

இதை  ஒருவகை நாத்திறம் என்னலாம்.

இல்லாதவன்  அநாதி >  அநாதை.

இங்கு   தி விகுதி திரிந்து தை  என்று வந்தது   என்றாலும்   தை என்ற விகுதி பெற்றது என்றாலும் வேறுபாடு ஒன்றுமில்லை.

அ என்ற  எதிர்மறை முன்னொட்டு அல் என்பதன் கடைக்குறை.

இனி, பேய் > பேய்தி > பீதி   என்று திரிந்தது என்றும் கூறுதல் கூடும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

Leah and the spectacle in her mouth

 




வாய்திறந் தாளே வண்ண  இலியா
வான மண்டலம் உள்ளே இழைந்தது!
வாய்திற மீண்டும் என்று சொல்லவே
வண்டமிழ் நாவும் இன்றும் விழைந்தது.

Notes:
இலியா - பிள்ளையின் பெயர்.
நாவும் என்றதனால் மனமும் என்பது பெறப்படும்.
இழைந்தது -  சென்று நகர்வு கொண்டது.
வண்டமிழ் நாவு -  தமிழில் பேசுதல் குறித்தது.


Leah slowly opened her mouth,
And appeared in there, a galaxy;
"Once more" said we in language of the South.
Whilst she winked as star of the sea.



வியாழன், 7 டிசம்பர், 2023

[அ]வித்தை - சொல்லும் தொடர்பினவும்.

சொல்லமைப்பு :  வித்தை அவித்தை.

வித்தைக்கு  எதிர்ச்சொல்  அவித்தை என்பது நீங்கள் அறிந்தது.  வித்தை என்பது கல்வி ஆயின்,  அவித்தை என்பது கல்லாமை,  படிப்பறிவு இன்மை என்று பொருடரும்.  இடனுக்கேற்ப,   ஆன்மிக அறிவின்மையும் இதன் பொருளாகலாம்.  அதாவது, இறையியலிலும்  ( theology  ) இச்சொல்லே பயின்றுள்ளது.

அல் என்பது அல்லாதது.  அல் என்பது அ என்று குறைந்தும் குறையாதும்  அன்மைப் பொருளில் வரும்.  அல் >  அ >  அ+ வித்தை >  அவித்தை ஆகும். அன் என்றும் வருதல் உளது.  எ-டு:  அன்மொழி (த் தொகை).  அன்முறை என்பதில் னகர ஒற்று புண:ர்ச்சித் திரிபு.

அவித்தை என்பது  அவிச்சை ( த - ச திரிபு),  அவிஞ்ஞை,  அவித்தியை என்று   சில வகைகளில் திரிதல் உள்ளது. இவற்றுள் மூல எதிர்மறை வடிவம் அவித்தை என்பதே.  ஐந்து வகை மாயைகளில் அவித்தையும் ஒன்று.  

இறையியல் பொருண்மை  அடைவு:

மற்றவை தமம், மோகம், அநிருதம் என்ப. தமம் என்பது தன் "அம்" விகுதியை இழந்து  சு விகுதி பெற்று. தமசு என்று மாகும். தமம், தமசு ஒரு பொருளன; இருள் என்பதே அது.  சு  :  இது தமிழ் விகுதி:  எ-டு: பரி(தல்) > பரிசு.   மனிதனின் சொந்த மனத்து இருளால் பிறழ உணர்தல். ஒன்று வேறொன்றாய்த் தெரிவது. தம்மிலிருந்தே தோன்றுவதால் தமம் ஆகிறது. அநிருதம் என்பது அல்+ நில்+ உரு+ து + அம் = அ( ல்) + நி ( ல் ) + ( உ) ரு + து அம் > அனிருதம் அல்லது அநிருதம். என்றால்: நில்லாதது, இல்லாதது, பொய்யானது. உருநிலை அற்ற ஒன்று.  அ என்ற முன்னொட்டு அன் என்றும் வரும்.  அன் என்பதைப் பயன்படுத்தினால் பிற ஏற்றபடி மாற்றிக்கொள்க.  இறையியலுக்கான சொற்களைப் படைக்கும்போது,  சொல்லாக்கத்தில் திரிபுகளை உய்த்துக்கொளல் தேவையே ஆகும்.  இவையெல்லாம் இவ்விறைக்கொள்கையில்  இவர்கள் தாமே கண்டு புனைந்தவை ஆதலின்,  சொற்களைத் திரித்தே அமைத்தல் இயலும்.

வித்தை, சொல்லும் முடிவும்:

இனி வித்தை என்ற சொல்லை அறிவோம்.

 அவித்தை என்பது 'வித்தை இன்மை' என்பதால் வித்தை என்பது எப்படி அமைந்தது என்பதையும் அறிதல் வேண்டும். 

இங்கு இது விளக்கப்பட்டுள்ளது.  விரிவு வேண்டின் கருத்து இடுக. 

https://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_33.html

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

உசிதம் சொல் தரவு

 இச்சொல்லை ஆய்ந்து இன்று வருவழி கண்டறிவோம்,

உய்தல் என்ற சொல் ஓரளவு பயன்பாடு கண்டுள்ள சொற்களில் ஒன்று. இந்த வினையிலிருந்து உசிதம் என்பதை அடைவுசெய்வோம். உய்தல் என்பதன் பொருளாவன: 1. உயிர்வாழ இயலுதல் 2 காப்பாற்றப் படுதல்  3  இடரின் அல்லது துன்பத்தின் நீங்குதல்  என்பது நாம் இயல்பாய் அறிபொருளாம்.  உசிதம் என்பது உய்தல் சொல்லடி வரவினது ஆயின்,  இடர் அல்லது துன்பமின்றி முடித்தல் (3) என்பது மிகப் பொருந்திய சொல்லாக்கப் பொருளாகும்.

இதன் அமைப்பு இவ்வாறு:

உய் + (இ )+ து + அம் எனின் உயிதம் என்றாகும் (அல்லது உய்தம்.)

இ = இங்கு

து =  உடையது  ( உரிய)

அம் -  அமைப்பு.

இதை வாக்கியப்படுத்தினால்:  இந்தச் ( சூழ்நிலையில் )  துன்பம் நீங்கிவிட உரிய அமைப்பு  என்று பொருள் கிட்டுகிறது.

உயிதம் என்ற மூலவடிவு இல்லாதொழிந்தது.  தமிழன் தன் நூல்களனைத்தையும் பாதுகாத்து வைத்திருக்க இயன்றவனாகில்  இருந்திருக்கும். ஆனால் சிறிது காலத்தின் முன் யாழ்ப்பாணத்தில் ஒரு நூலகமே எரிந்து சாம்பலானதாகச் செய்தித்தாள்களில் வந்ததே!  என்னென்ன சொற்கள் அழிந்தன என்று  இப்போது சொல்லமுடியுமோ? இவ்வாறு தமிழன் என்ற இவனுக்கு ஏற்பட்ட வரலாற்று இடர்களுக்கெல்லாம் விளக்கம் எவ்வாறு காண்பது.  தென்னாட்டுப் போர்க்களங்க ளெல்லாம்  அளவற்றவை ஆயினவே.  ஆதலின் "உயிதம்" என்பதே மீட்டுருவாக்கம். யகர வருக்கம் சகர வருக்கமாகும் என்பதை முன் இடுகைகளில் கொடுத்துள்ளோம்.

உயிதம் -  உசிதம்  ஆகும்.  உய்தம் > உசிதம் எனினும் ஏற்புடைத்து என்க.

இனி, மிக்க உயரத்தில் வைத்துப் போற்றக்கூடியது என்ற பொருளில்:

உச்சி  > உச்சி + து + அம் >  உச்சிதம் , பின் சகர மெய் இடைக்குறைந்து உசிதம் எனினும் சரிதான்.

உ(ச்)சி >  உசி து  அம் > உசிதம் எனினுமாம்.

இங்கு இது அமையும் என்பது இங்கு+ இது + அம் > இங்கிதம் ஆனது நினைவுக்கு வரும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின். 

சில திருத்தங்கள்: 07122023 2037

Please refrain from making any changes.

வெள்ளி, 1 டிசம்பர், 2023

சந்நியாசி என்ற சொல்

 சந்நியாசி  என்பது பொருளுடன் நாடறிந்த சொல்லே  ஆகும்.

இதற்குப் பல்வேறு பொருண்மைகள் இந்திய மொழிகளில் காணலாம், பொதுவாக அறியப்படுவது என்னவென்றால் சந்நியாசிகள் மக்களைச் சார்ந்து வாழாமல் ஒதுங்கி வாழ்வர் என்பதுதான். பெரும்பாலும் திருமணமாகாதவர்கள் என்ற கருத்தும் உள்ளது. ஆகித் துறந்தவர்கள் என்றும் உள்ளனர்.

எந்த மொழியில் எவ்வாறு  பொருளறியப்பட்டாலும், நாம் தமிழின் மூலமாக இதற்குப் பொருள் அறிவோம்:

சன்னி என்பதை  "தன்னி" எனப் பொருத்துதல்:

தன் -  தன் பிறந்த இடம். தன் சொந்த வாழ்வாதாரங்கள்.

நி  -   நீங்கி,

நீத்தல் -  விட்டு நீங்குதல்  ( உலகுதொடர்பானற்றை விட்டு விலகுதல்) என்றும் பொருள் தரும்.  நீப்பேன் ( விட்டு நீங்குவேன்),  எதிர்மறை:  நீயேன் (விட்டு நீங்கமாட்டேன்) என்ற வடிவங்கள் இப்போது வழங்கவில்லை.  இன்னொரு காட்டு:  காத்தல் (வினை),  காப்பேன்,  காவேன்  என்பன உரியவான வடிவங்கள்.  ஈகார இறுதிக்கு யகர உடம்படுத்தல் வரும்.  நீவு(தல்) என்பது வினையாயின் நீவேன் என்று எதிர்மறையில் வரும். இவற்றை வாக்கியங்களில் பயன்படுத்தி உணர்ந்துகொள்க.

பற்றுக்கோடு  அல்லது ஆதரவு:

ஆசு > யாசு>யாசு+ இ >  யாசித்தல்.

ஒ.நோ:  ஆ+ து+ அ + அர் > ஆதவர் ( வகர உடம்படுமெய்),  >  யாதவர்.   ஆவளர்ப்போர் என்பது,  இங்கு ஆ > யா ஆனது. து = உடைமைப் பொருள்.

பற்றுக்கோடு அல்லது ஆதரவு வேண்டுதல். இரத்தல்.

ஆகவே தன் நிலையின் நீங்கிய ஒருவன்  பிறரிடம் யாசித்து வாழ்தல் என்று தமிழ் மூலங்களின் மூலம் பொருள் கிட்டுகிறது.

நீங்குதல் பொருளதான நீ என்பது,  நி என்று குறுகியது,  பழம் + நீ என்பது பழநி என்று குறுகியது போன்றதே.  இளநீர் என்பது எளனி என்று பேச்சில் குறுகி ஒலித்தலும் காண்க.  வாய் நீர் என்பது வாணி (வாணி ஊத்துது என்பர்) என்றும் தண்ணீர் என்பது தண்ணி என்றும் ஆகுதல் தெளிவு. நான் நீ என்ற பதிற்பெயர்களில் நீ என்பதும் தன்னின் நீங்கியோனாய் எதிரில் நிற்போன் என்றே பொருளாதலின் நீக்கக் கருத்தே ஆகும்.

நீ என்பதும் குறுகி  நின்,  நினது,  நின(பன்மை),  நின்றன் ( நின் தன்) என வேற்றுமை வடிவம் படும்.

சந்நியாசி:  இச்சொல் தமிழிலிருந்து புறப்பட்டுப் பிற இடங்களுக்கும் பரவிற்று என்று முடிக்க.

ஆசி என்பது யாசி  என்றானது,  ஆனை > யானை என்பது போலாம்.

சந்நியாசி இறந்துவிட்டால் அவருக்கு நிலக்கொடைகளும் வழங்கினர் என்பதாகத் தெரிகிறது. நினைவிடங்களும் அமைத்தனர். இவற்றுக்கு   ஆண்டிசமாதிகள் என்பர்.  சந்நியாசிகளுக்குத் தமிழ் நாட்டில் ஓர் ஏற்றமிருந்தமை இதனால் பெறப்படும். தமிழ்நாட்டு மக்கள் இறையன்பர் ஆதரவாளர்கள்.  இவ்வாறு இறந்தோரின் அடக்கவிடங்கள்  மலாய் மொழியில் KRAMAT எனப்படும். மதித்துப் போற்றுதற்குரிய இடங்களாக இவை கருதப்படுகின்றன. ( SACRED). இங்கு அடக்கமானவர்களிடம் குறைகளுக்கு மாற்று வேண்டுவோரும் உண்டு.  ( நில் வரத்தி :  நிவர்த்தி)

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

வியாழன், 30 நவம்பர், 2023

வான்மழை

 வாழ்கென வரமருள் குளிர்ந்த மழைத்துளி, 

வீழ்கென மகிழ்தரு ஆழ்மனம்  வாழ்கநீ!

உடலில் வீழ்கென ஓடிமுன்  நிற்க,

படலும் குன்றியப்  பெயலும் நின்றது;

வானம்  நீயே வரையாது  வழங்குவை

கானம்  இசைத்தனை கடுந்தரை மோதலில்;

ஏன் நின்  றனைநீ   ஏற்றிடு  நீயே

நான்முயல்  வேனே நனிஇன்   னொருநாள்

கூன்படு நோக்கு குறைத்தே

நnன்மகிழ்ந்திடவே  நனைத்திடு  கவினே.


இந்தக் கவிதை என்ன சொல்கிறது என்பதை உங்கள் கருத்துரையில் எழுதுக. இதற்கு முன் எழுதியுள்ள பொருள் தேடி எடுப்போம்.

செயற்கை மழை பெய்வித்தல் முதலியவை இக்காலத்தில் உண்டாதலால், வான்மழை என்பது பொருத்தமான தலைப்புதான்.

புதன், 29 நவம்பர், 2023

சன்னுத என்ற சமஸ்கிருதச் சொல் அமைப்பு

 வெகுசுருக்கமாக,  சன்னுத என்னும் சொல்லை அறிவோம்.

சன்னுத:

தன் என்பது சன் என்று வரும். இது தகர சகரப் போலி.

எ-டு:  தனி  - சனி. தனிச்சிறப்புடைய கோள்.

             தங்கு -சங்கு  ஓர் ஓட்டுக்கூட்டினுள் தங்கி வாழ்வது.

அ, இ, உ மூன்றும் சுட்டு.

உ - முன்.

உது -  முன்னது, முன்னிருப்பது.

உத -  முன் அங்கிருப்பது.   உ, து,  அ.   (அ என்றால் அங்கிருப்பது.)

முன்னதாய் அங்கிருப்பது.

நாரத சன்னுத -  நாரதன் உன் முன்னிருப்பதான என்று பொருள்.

பாணினி இலக்கணத்தின்படி இது வேறு விதாமான விளக்கம் உடையது,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

செவ்வாய், 28 நவம்பர், 2023

Dog's love for the child.

 


When the dog is with the child
The world is so peaceful; 
The child is soft and mild.
 Combs the fur  being 'teaseful'.






This little dog is happy when the child sits on her head, even though it has to bear the weight.

Well, when you like it, there is no problem!



A real friend......this dog.



Sweets for the sweet pet.

திங்கள், 27 நவம்பர், 2023

உச்சரித்தல் என்ற சொல் அமைப்பு.

இங்கு இது புதுவதாய்  ஆராய்வோம்.

உது  என்பது சுட்டடிச் சொல்.  உகரமுதலானது.

உது என்றால் முன்னிருப்பது, முன் கொணர்வது என்று பொருள்.

உது  >  உத்து.

இங்கு தகரம்  இரட்டித்தது.   அதாவது து என்பது த்து என்று அழுந்தி வெளிவந்தது.   அது என்பது அத்து என்று தோன்றிச் சிலவிடத்துச் சாரியையாவும் வருதல் போலும்.

உத்து: பொருள் "முன் கொணர்ந்தது."

உத்து > உச்சு.  இது தகர சகரத் திரிபு அமைதல்.

இனி  அரு என்றால் அருகில் இருப்பது   

அரு  + இ :  >  அரி.    அருகில் இடுதல், வைத்தல். 

உச்சு + அரு + இ  >  உச்சரி >  உச்சரித்தல் ( வினைச்சொல்_-)

முன் கொணர்ந்து  அருகிலாக்குதல். defining for you.

நாவின் மூலம் முன் கொண்டுவந்து அருகிலமைத்தல்.

முன் இதன் ( அரு + இ) பொருண்மையை ஆய்வறிஞர் சிலர் கண்டுகொள்ளாமல் விலகிச் சென்றுவிட்டதால்  இது  விளக்கமுறா தொழியலானது. இதனை இங்கு உளப்படுத்தியுள்ளோம். இது கணக்கில் விடுபாடு போலவே. 

Pro-nounce என்பதில் உள்ள முன்னொட்டும் இப்பொருளதே என்பது மகிழ்விக்கிறது.

உ - முன்மைப் பொருள்.

அரு இ - அண்மைப் பொருள்.

இரட்டைப் பொருத்தம் ஆகிவிட்டது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

லதா தமிழ்

 இலையைத் தருவது கொடி.

இலை  >  ல.

தரு(வது)  >   தா.

ல+ தா >  லதா.  என்றால்  இலையைத் தரும் கொடி.

தமிழ் மூலம் மெய்ப்பிக்கப்பட்டது.

பேச்சு :

இலை -  எல - ல (என்று பலுக்குவர்.)

தரு  -  வினைப்பகுதி.  தா  என்பது ஏவல்வினை

பலுக்குதல் - உச்சரித்தல்.


அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்.

கணபதியை வணங்கி வரப் பொறுத்தருள்க

ஐஞ்சீர் விருத்தம்





இந்தப் படத்தில் அம்மன் இயல்பாக உள்ளார்



 நீயே  பணிந்தேன்  சிரித்தாய் இன்றேன் கவலைமுகம்,

தாயே எளியேன் எதுவும் செய்தேன் ஏலாததோ

வாயே  திறக்கத் துணிவே இல்லேன் நாலுதிசை

ஆயும்  கணங்கள்  பதிகால் வீழ்வேன்  பின்சரணே.


பணிந்தேன்,  நீ சிரித்தாய் ---  முன்னர் பணிந்தக்கால் நீ சிரித்தாய்.

இன்றேன்  கவலைமுகம்  -  இன்றைக்கு ஏன் கவலை தோய்ந்த முகத்துடன்

இருக்கின்றாய்;

வாயே  -  உன்னை வாழ்த்துவதற்கு வாய்.

திறக்கத் துணிவே இல்லேன் -   பயன்படுத்தவும் துணிச்சல் இல்லாதவன் ஆனேன்;

நாலுதிசை ஆயும் கணங்கள் பதி -  நான் கு திசையும் ஆட்சிசெய்யும் கணங்களின் அதிபதி,  

கால் வீழ்வேன் -  அடிகளைப் பணிவேன்,  

பின் சரணே -  பின் தாயாகிய உன்னிடம் சரண் புகுவேன்


இது துர்க்கை அம்மனை நோக்கிப் பாடிய பாட்டு.



சனி, 25 நவம்பர், 2023

At Durgai Amman Temple Singapore

 After worshipping Sri Sivan,  devotees worship Sri Durga for spiritual peace and grace.








எமையாளும் இறைவிநீ  துர்க்கை யம்மா

என்றும்நீ  துணைசெய்வாய் எம்மில் நின்றே

சுமையாக வருந்துன்பம் சுருண்டு வீழச்

சோர்வகற்றிக் கூரறிவு சூழத்  தந்தாய்!


--- சிவமாலா


வெள்ளி, 24 நவம்பர், 2023

தீபாவளியும் அதற்கான விளக்கங்களும்

 தீபாவளியைப் பற்றிய விளக்கங்கள்  உலகிற் பல  உள்ளன. சமண மதத்தினர்  கூறும்  விளக்கம்  ஒன்று, புத்த  மதத்தினர் சொல்வது  இன்னொன்று, இந்து சமயத்தினர் கண்டது வேறொன்று, வரலாறு சொல்ல வருவோன் வரைந்து வைத்தது மற்றொன்று என்று இவை பலவென்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இவை அனைத்தையும் படித்துப் பேசிக்கொண்டிருப்பது  சிலர்க்கு வாடிக்கையும் வேடிக்கையும் ஆகும்.

மற்றவன்  சொல்வதுதான் உம்மை ஆளும் தன்மை உடையதா? அவன் சொல்வது எதுவாயினும்  உமக்குச் சொந்தப் புத்தி இல்லையா என்று  எண்ணிப்பார்த்தால் உமது வலிமையின்மை உமக்கு விளங்கிவிடும். 

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்

உண்மை அறிவே மிகும்  

என்றார்  தேவர் தம் இனிய  திருக்குறளில்.

இதன் பொருளை மணக்குடவர் என்னும் பண்டை உரையாசிரியர் சொல்லும் உரையுடன் உற்றுநோக்கி அறிவோமாக.

மணக்குடவர் உரை: நுண்ணியவாக ஆராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும் என்றவாறு.

மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார். அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்தென்றார்.

ஊழ் என்ற சொல் பொருண்மை கருதுங்கால் சிலருக்கு மருட்டுவதாக இருப்பினும் இதன் அடிச்சொல் உள் என்பதுதான்.  ஒருவற்கு அவன்பால் உள்ளிருப்பது எதுவோ அதுவே ஊழெனலாகும். இதைத்தான் தெளிவு மிக்கில்லாதது என்று எண்ணப்படும்  சொல்லாகிய விதி என்பதும் எடுத்துச்சொல்லும். முன்னரே எது அகற்றற்கு இயலாததாகி ஒருவன்பால் உள்ளதோ அது விதி. சாலையைக் கடக்கையில் கவனமாய் இருக்கவேண்டும் என்பது கடமை. அது தவறின் இடர் விளையும். விளையின்  அது விதி எனப்படும். இதில் விளைவன யாவும் -  மரித்தல் உட்பட -  விதியினுள் அடங்கும்.   கணியத்தின் வழி இது முன் கூறுதற்  கியல்வதாயின் அதுவும் விதியே. இவ்வாறு விதி என்பது விரிவுடைப் பொருளதாகிறது. ஆகவே ஊழென்பது உண்மை அறிவு.  அடிப்படை அமைவு என்றும் கூறலாம்.

[ கணியம் என்பது சோதிடத்தை.]

எதைப் படித்தாலும் அவனுள் இருப்பதை வைத்துதான் அவன் பேசுவான். இதைப் புத்தி என்று சிலர் நினைத்தாலும்,  அஃது உண்மையன்று. புத்தி என்பது புதுவதாய்த் தோன்றி வழிகாட்டும் அறிவு. உண்மை அறிவு என்றால்  முன்னரே உளதாகிய அறிவு. புதுமுறை அறிவு பரப்பியதால் கௌதமருக்குப் புத்தர் என்று பெயர் வந்தது. இவரை இவ்வாறு கூறியோர் தமிழர் என்பது தெளிவு. 

உண்மை அறிவுக்கு மாறானது புத்தறிவு. (  புத்தி ).

புதிய நடப்புகளில் எவ்வாறு நடந்துகொள்வது என்று தெரிந்து நடப்பது புத்தி.

தீபாவளி என்பதற்கு இவ்வாறு நோக்கினால் பலவிதமாகப் பொருள் கூறலாம். தீயை முதன்முதல் உண்டாக்கக் கற்றுக்கொண்டு, காற்றின் துணைவலிமையைப் போற்றிக்கொண்டு வாழ்வதற்கு மனிதன் அறிந்துகொண்ட தினத்தைக் கொண்டாடுவதுதான் தீபாவளி.  தீ எரிகையில் பாயும் வளி. அதைக் கட்டுக்குள் வைத்துப் பயன்படுத்திக்கொள்ளும் தன்மை எல்லாமும்  அவனுக்குக் கைவந்த நாள் அதுவாகும்,  தீப ஒளி என்பதும் நல்ல பொருள்தான்.  எப்படியாயினும்  இது இயற்கையும் தொடர்புடைய ஒரு பண்டிகை என்பது தெளிவாகும்.  இதில்  ஆரியன் என்று யாரும் தொடர்புபட வில்லை. உம்முடன் தொடர்பு கொண்டவை தீயும் காற்றுமே ஆகும். பொங்கல் என்பதற்கு பொங்குதல் தொடர்பாவது போல் எரிதலும் காற்றும் தீபாவளிக்கு உரியனவாகுகின்றமை தெளிவு.  வட இந்தியாவின் டி-வளி என்பது இதற்கு மிக்கப் பொருத்தமுடையதாகிறது.  உமக்குப் பொருந்தியவாறு சிந்தித்து வாழ்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சோதிடம் என்ற சொல்:  சொரிதல் வினைச்சொல். சொரி + தி > சோர்தி  > சோதி.  சொரியும் ஒளி.  எப்படி ர் போகும்? இப்போது பாரும். வரு > வார் > வாருங்கள்> வாங்க. எங்கே போனது  'ர்'? இதே போல் எழுத்து மொழியிலும் பல . கேளும் சொல்வோம். பழைய இடுகைகளைப் பார்த்துப் படித்ததுக்கொள்ளுவீராக.
.

கிராமம். சொல்லமைப்பு

 கமம் சொல்:

கமம் அல்லது அதன் அடியாக உள்ள கம் என்ற  ஈரெழுத்து ஒரு சொல், இன்று வழக்கில் இல்லை.  இதைப் பழைய நூல்களில் ஈரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.  மொழி என்ற சொல்  இந்நாட்களில்  language  என்ற  பொருளில் வழங்குகிறது.  அதனால் மொழி என்பதைச் சொல் என்பதற்கு ஈடாக இங்குப் பயன்படுத்தவில்லை. இற்றை மொழி  பெரிதும் மாறுபட்டுள்ளது.  புறநானூற்று மொழியில் எழுத முடிந்தாலும் எழுதினால் பொருள் மாறுபட்டு அறியப்படலாம் ஆகையால்  தவிர்த்தலே நன்று.  பொருள்கூறுதற்குரித்தான வாய்ப்பில் கூறுதல் ஏற்புடைத்தாகலாம்,

கமம் என்ற சொல்லின் பகுதி அல்லது அடி,  கம் என்பது.  இது கும் என்பதன் திரிபு என்று சொல்வதும் ஏற்புடையதே,   கும், குடும் , ( குடுமி) ( குடும்பம்) , கும்> கம்  >  கமம்  என்று புரிந்துகொள்க.  அகர வருக்கச் சொற்கள் ஒன்று மற்றொன்றாக மாறும் தன்மை உடையன. பழைய இடுகைகளில் கண்டு தெளிக. அகர வருக்கம் என்றால்  அ முதல் ஔ வரை உள்ளவை.

அடு  குடு என்பவற்றில் பொருள் அணிமையையும் கருத்தில் கொள்ளவேண்டும்.  அடுத்துச் செல்வது முன் நடப்பது.  குடு>  கூடு என்பதில் அடுத்து செல்லும் எதுவும் கூடித் திரள்கிறது என்பதை உணர்ந்தால் இவற்றில் உள்ள பொருள் அணுக்கம் தெரிந்து விடுவதோடு  திரிதன்மைகளையும் உணர்ந்து கொள்ளலாம்.

க என்பது க்ர என்று பூசைசெய்வோர் மொழியில் திரியும்.  இது இயல்பு.. பிற புற என்பன ப்ர என்றாகும்.  "புற கு ஆரம்"  என்றால் புறத்தே இணைந்து சூழவருதல்.

ஆர்தல் என்றால் சூழ்வருதல்.   ஆர் > ஆரம்.  அம் விகுதி பெற்ற சொல்.

மறைமொழி மக்கள் தாம் கூறுவன தெளிவு தேடியறியத் தக்கனவாய் இருத்தலை விரும்புதல் உலகெங்கும் காணப்படுவது ஆகும்.  மலாய் சீனம் என்று எம்மொழியாரிடமும் இது காணப்படுகிறது. இது அவர்களின் பெருமைப்படக் கடைப்பிடிக்கும் நடவடிக்கை.  நிறைமொழியார்க்கு மறைமொழி உயர்வாகும்.

கீழ்க்காணும் இடுகையைப் படித்து மேலும் அறிக.

குறிப்புகள்:

கிராமம் முதலிய சொற்கள்: 

https://sivamaalaa.blogspot.com/2020/01/blog-post.html

வியாழன், 23 நவம்பர், 2023

காக்கைகுத் தெரிந்த கடவுள்

(இணைக்குறள்  ஆசிரியப்பா.) 

இது சில அடிகள் குறைந்தியன்ற ஆசிரியப்பா.


பதுமநா  பசாமி கோவில்  திருமுன்

ஒதுங்கி நின்ற நோயுற்ற காக்கை:

சாமியை  நோக்கி

தவம்செய நிற்பது  போல்நிற்   கிறது.

என்ன  வென்று  வினவலாம் என்று

முன்னில்  அணுகிட

ஒன்னும்  விளங்க  வில்லை.

என்னவோ விண்ணப்பம் 

தெரியவும் இல்லை.

எனக்கேன் தெரிய   வேண்டும் என்று

தனக்குள் நினத்துக் கொண்டதோ?

விரட்டினாலும் போகவும்  இல்லை. 

கடவுளை அறிந்தது காக்கை,

மடமுறு மனிதன் தடமறி  யானே


பொருள்:

( மிரட்டு விரட்டு)

திருமுன் - சந்நிதி முன்.

பதும நாப -  பத்ம நாப

மடமுறு -  அறியாமை கொண்ட

தடம் -  செல்நெறி.  போகும் பாதை.



செவ்வாய், 21 நவம்பர், 2023

கிரகம் என்ற சொல் அமைப்பு

 கிரகம் என்பது இரகம் என்பதன் பிரிப்புத்திரிபு  ஆகும்.

இரு  அகம் -  இரகம் -  கிரகம்.

இருப்பதற்கான அகம் என்பது வீடு.  அதுதான் இரகம்.

கார் இரு அகம் -  காராகு இரு அகம் -  காராகிரகம்,  ~ கிரகம் ஆனது.

பிரித்ததில் வந்த சொல்.  பிறழ்பிரிப்பு  என்னலாம்.

இரகம்  ( இருஅகம்,  இருக்கும் வீடு)  என்பது  அக்கிரகாரம் என்ற சொல்லிலும் உள்ளது;  https://sivamaalaa.blogspot.com/2016/06/blog-post_86.html

அஃகு + இரக(ம்) + ஆர்(தல்) + அம்>  அக்கிரகாரம்.[ ஃ இங்கு  க்  ஆனது. ]

குறைந்த மனைகள் உள்ள பகுதி.  சிறிய சுற்று எல்லை உடையது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

திங்கள், 20 நவம்பர், 2023

மோடி -எழுந்த சூரியன் கோழிக்குத் தெரியவில்லை

முன்-னரே எழுந்-ததே மோ-டிஎன் சூ-ரிய-னும்

இன்-னுமே இரண்-டுமூன் றாம்-சே வல்-கூ-வின,

ஒண்ணுமே புரிந்தி( ல்)லை கோ-ழிகள் ஆ-றறி-வை

என்றுமே பெற்றுய்ய அன்றிறை வைத்ததிலை.




பொருள்:

முன்னரே - பொழுது விடிந்துவிட்டது என்பது.

சேவல்கள் இன்னும் விடியவில்லை என்று நினைத்தன.

கோழிகள் அறிந்துகொள்ளத் திறனில்லை என்பது

எழுந்த சூரியன் -  உதய சூரியன்.

புரிந்திலை - புரிந்து இல்லை

வைத்ததிலை = வைத்ததில்லை

ஒண்ணுமே - அறியத் தக்கனவற்றில் எதையுமே.

என் சூரியன் -  என்னும்  சூரியன்.  வினைத் தொகை. 

பெற்றுய்ய - அடைந்து முன்னேற

இறை - இறைவன்.


அறிகமகிழ்க

மெய்ப்பு பின்னர் 

This post was hacked now restored 20.11.23

இரண்டாவது முறையாகத் திருத்தம்: 21.11.23

வெள்ளி, 17 நவம்பர், 2023

ஐஸ்வரியம் சொல்லெழுந்த விதம்.

 இதைச் சுருக்கமாகவே சொல்லிவிடுவோம்.  ஐஸ்வரியம் என்ற சொல் முன் ஒருக்கால் எம்மால் விளக்கப்பட்டது எனினும்,  அது நீக்குண்டது.  இது கள்ளப் புகவர்களாலோ மிகுதியாகிவிட்ட  இடுகைகளைக் குறைக்க வேண்டி நேர்ந்ததாலோ இருக்கக்கூடும். பழைய இடுகையை நீங்கள் பதிவிறக்கி வைத்திருந்தால், இங்கு சொல்லும் உள்ளுறைவுடன் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். வினாக்கள் எழுந்தால்,  கருத்துரைப் பகுதியில் எழுதி, எம்மிடம் விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்.

ஐஸ்வரியம் என்பதில் மூன்று பழந்தமிழ் உள்ளீடுகள் உள்ளன.  ஆசு,  வரு-தல்,  இயம் என்பவை  அவை.

ஆசு என்பது பற்றுக்கோடு.  இதை இன்று ஆதாரம் என்ற சொல்லால் குறிக்கிறோம்.  அதாவது பொருளாதாரம்,  இனி  வருதல் என்பது உங்களுக்கு வரும் செல்வம்,  இயம் என்பது இ,  அம் என்ற விகுதிகள்.

இங்கு விகுதிகட்குப் பொருள் கூறலாம்.  இ  -  இங்கு.  அம்  -  அமைதல். சேர்க்க இயம் ஆயிற்று,

ஆதல் என்பது  ஆசு என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது.  பொருள் ஆதல் என்பது ஆக்கம் எனவும் படும். ஆசு என்பது ஆதல்தான்.  சு என்பது ஒரு விகுதி.  பெயர் வினைகளிலும் வரும்.   மாசு,  ஏசு எனக் காண்க.

வரியம் என்று முடிதலால்,  பொருள் வரவே இதன் பொருள். வருவதும் செலவாவதுமாக இல்லாமல் நின்று நிலவும் பொருட்திரட்சி என  அறிக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

வியாழன், 16 நவம்பர், 2023

பத்துக்குமேல் வாங்காத (தயங்கிய) பழங்காலப் பூசாரிமார்.

 

பத்துக்கு மேல் தயக்கம் -  எண் வரலாறு


மிகப் பழங்காலத்தில், மனிதனுக்கு எண்ணத் தெரியவில்லை.  அவனுக்கு - பழம் எத்தனை பறித்தான்,  முயல் எத்தனை வேட்டையாடினான் என்று இவற்றை அறிந்துகொள்வதற்கே  எண்கள் தேவைப்பட்டன. அரிசி முதலிய கூலங்களை ஒன்றாகக் கூட்டி, பெரிய இலைகளில் எடுத்துக்கொண்டு அப்படி எடுப்புற்றவற்றைக் கொண்டே எண்ணிக்கை கூறினான் ( எ-டு: ஒரு கட்டு அல்லது ஒரு மூட்டை).  விரிந்த இலைபோல்வதற்கு ஒரு மூட்டுப்போட்டுக் கட்டி,அதைத்தான் "மூட்டை"  என்றான்.  மூட்டு இடப்பட்ட விரி அல்லது விரிப்பு என்று இதை இன்று உணர்ந்துகொள்கிறோம்.

ஒன்பதின் மேற்செல்ல அவன் தயங்கினான் என்பதே உண்மை.

எண்கள் அப்போதுதான் அமைந்துகொண்டிருந்தன.

மரங்களிலும் குகைகளிலும் குடி இருந்த காலத்தில் எங்கேயோ  இன்னொரு மரத்தடியில்தான் பூசை ( பூசெய்)  நடைபெற்றது.  வருகிறவர்களெல்லாம் எளிதாக ஆளுக்கொரு பழம் கொண்டுவந்து சாத்தினால், பூசாரி என்ன செய்வான் பாவம்.  வைத்துக்கொள்வதற்கு  வசதிகள் எதுவும் இல்லை. ஒன்று அவன் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடவேண்டும்.  அல்லது பக்கத்தில் திரியும் ஆடுமாடுகளுக்கு ஊட்டிவிட வேண்டும்.  அல்லது உரமாகப் பாவித்து மரத்தடிகளில் போட்டுவிடவேண்டும்.  அவன் தயங்கியதற்கு அதற்குரிய எண் இல்லாதது மட்டும் காரணமன்று.  பற்பல காரணங்கள்.  எல்லாம் சொன்னால்தான் நம்புவீரென்றால் அதற்காக ஒரு கட்டுரையை எழுதவேண்டும்.  ஆகவே நம்புவது நல்லது.  ( நம்பினார் கெடுவதில்லை!) 

ஒன்பதின் மேல் கொஞ்ச காலம் பல என்று சொல்வதே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.  அது அவனின் "தயக்கத்தையே"  இன்று காட்டுகிறது.  நாளடைவில் ஒருவாறு  பல்+ து  ( பல-து)  என்பதையே பத்து ஆக்கிக்கொண்டு ஓர் எண்ணை உண்டாக்கிக்கொண்டான்.  இன்றளவும் அது தமிழில் நன்றாகவே வழங்கிவருகிறது.

பூசைகள் செய்யும்போது மட்டும் அந்தத் தயக்கம் அவனுக்கு ஏன் மேலிட்டு நின்றது ?  தயங்கும் எண் என்பதைக் காட்ட  அவன் தயம் என்றே அதைச் சொன்னான். தய + அம் = தயம்.   ஓர் அகரம்  ஒழிந்தது.   பகு அம் >பகம் என்பதில் ஓர் அகரம் தொலைந்தது போலுமே.  வேறுபெயர் ஏதும் வைக்காமல்  தயம்>  தசம் என்பதையே பத்துக்கு மேற்கொண்டது  ஒரு குறுக்குவழியே  ஆகிவிட்டது. இன்று சிறந்த எண் பத்து, தசம் என்பவை ஆகும்.

தய- தயங்கு.

த - தடை கொண்டு நிற்பது,   அ>ய:  ஆங்கு என்று பொருள்.

த டு:  இதில் டு என்பது வினையாக்க விகுதி.  படு,  விடு என்பவற்றிலும் வினைவிகுதியே  ஆகும்.

தசம் (daśa) என்ற சொல் தமிழ் மூலத்துப் பிறப்பு  ஆகும்.  இது உலக முழுதும் பலமொழிகளில் கிடக்கலாம்.  ஆய்வு செய்து கொண்டுவாருங்கள்.

பல என்பது மலாய் முதலிய மொழிகளில் "பு-லோ"  என்று திரிந்து இறுதி நீண்டுள்ளது. sa puloh  (10)

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்   

திங்கள், 13 நவம்பர், 2023

சொல்லமைப்புத் தந்திரங்கள்: பத்தாயம்

 சொல்லமைப்புத் தந்திரங்கள் பலவாறு வேறுபட்டு வளர்ந்துவந்துள்ளன. எவ்வாறு என்பதை இப்போது ஆய்ந்து மகிழ்வோம். குறைகள் காண்பது நம் நோக்கமன்று. குறைகள் ஏற்படவே செய்யும். நீண்ட நெடிய வரலாறு உடையதன்றோ தமிழ்மொழி.  சொல்லாக்கத்தின் கருத்தாக்களாக மக்களும் திகழ்ந்துள்ளனர்;  புலவர்களும் இருந்துள்ளனர். 

காக்கா அல்லது காக்கை என்ற சொல்லில் அந்தப் பறவையே அந்த முயற்சிக்கு ஊற்றுக்கண்ணாகத் திறன் காட்டியுள்ளது. பல மொழிகளில் இது நடைபெற்றுள்ளது.  க்ரோ என்ற சொல்லும் கத்தொலியைக் கறந்து வடித்த சொல்தான். சீனர்களின் செவிகட்கு நாய்கள் காவ்காவ் என்று கத்துவதுபோல் கேட்டுள்ளது. வெள்ளைக் காரனுக்கு பவ்வௌ என்று கத்துவது தான் சரியென்று தோன்றியுள்ளது. இதுபோன்ற சொற்களை ஒப்பொலிச் சொற்கள் நம் மொழிநூலார் பெயரிட்டுள்ளனர்.

பூனை மியாவ் என்று கத்துவதாகச் சொல்வர்.  ஆனால் நம் பண்டைத் தமிழர்  அது ஞை  என்று கத்துவதாகக்   கருதி,  பூஞை என்று பெயரிட,  அது திரிந்து பூனை  ஆகிவிட்டது.  இதுவும் ஒப்பொலிச் சொல்லே.

இன்னொரு தந்திரம்

குருவி பிடிக்கும் பொறிக்குக் குருவிப்பொறி என்று பெயரிட்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.  ஆனால் அதற்குப் பத்தாயம் என்று பெயரிட்டனர். குருவியைப் பற்றிக்கொள்ளும் கருவி  ஆதலின்  பற்று ஆயம் என்று பெயர் வந்தது.  ஆக்கித் தருவது கருவி எனற் பொருட்டு,  ஆ+ அம்,  ஆ - ஆக்கு என்னும் வினைச்சொல், அம் -அமைப்பு  என்னும் பொருள்தரும் விகுதி.  இச்சொல்லில் பற்று என்பது பத்து என்று  பேச்சுவழக்குக்கு ஒப்பத் திரிந்தபடியால்,  இது சிற்றம்பலம் என்பது சி(த்)தம்பரம் ( ல் - ர்)  என்னும் திரிபு போல் ஆயிற்று. 

இப்படிச் சொற்கள் பல திரிந்துள்ளன.  ஒன்பதின் மேற்படுவது பத்து.  பத்து என்று ஒரு சொல் அமைக்கவேண்டி நேர்ந்தபோது  அடிச்சொல்லாகப்  "பல்"  (பல)  என்பதைக் கொண்டனர்.  பல் +  து > பற்று > பத்து ஆனது.   இங்கும் பற்று என்று எழுத்துப் புணர்வினால் ஆன சொல்,  பத்து என்றே ஊர்வழக்கை ஒட்டியே திரிந்து அமைந்தது.  து என்பது ஒன்றன்பால் விகுதி ஆயினும்,  ஓர் எண்ணே குறிக்கப்பெறுவதால்  பொருந்துவதாயிற்று. பன்மை விகுதி கொள்வதாயின் " அ"  என்பதை இடவேண்டும்.  எழுத்துகள் புணர்ந்து பல என்று வரின், இன்னொரு சொல் அவ்வடிவு கொண்டு நிலவுதலால்,  அது பொருந்தாதது ஆயிற்று என்க.  எருது என்ற சொல்லின், எருவுக்குப் பயன்படும் விலங்கு என்ற பொருளில் எருது என்று விகுதி புணர்த்தினர்.  இங்கு அதன் ஒருமை எண்ணிக்கை கருதப் படாமல் விலங்குக்குப் பெயராகவே அமைப்புற்றது.  ஒன்றுக்கு மேற்பட்ட எருது என்பதற்கு  எருதுகள் என்று கள் விகுதி இணைப்புற,  ஒருமை குறிக்கும் து விகுதியொடு  கள் விகுதி புணர்க்க, ஒருமை பன்மை மாறுபாடு கருதப்படாதது ஆயினது கண்டுகொள்க. [ஏர்+ து>எருது என்று சொல்வதுண்டு]

ஒருவன் உண்மை பொய் என்ற இரண்டும் வந்து எதிர்கொள்கையில் உண்மையையே பற்றிக்கொள்தல் வெண்டும்.  யாரும் பற்றி ஒழுகத் தக்கது உண்மை.  அதனால் அதுவும் பற்று+ அம் > பற்றம் ஆகி,  ஊர்த்திரிபின் முறையையே தழுவி,  பத்தம் என்று  திரிந்தது.    ஆகவே பத்தம் என்றால் உண்மை என்று பொருள்.  இதற்கு எதிர்ச்சொல் ஆவது பத்தம் அல்லாதது என்று பொருள்படவேண்டுமே.  அதனை அல் ( அல்லாதது) + பத்தம் என்று அமைக்கலாம். அது அற்பத்தம் (அல்பத்தம்)  என்று வரலாமே  அப்படியானால் அரபிச்சொல் பாணியில் " அல்கதீப்"  என்பதுபோல் அமைந்தாலும் சரியானதாகவே தோன்றும்.  ஆனால் அல்பத்தம் என்பது திரிபுற்று  " அபத்தம் " ஆகி இன்றுவரைத் தமிழில் வழங்கிவருகிறது.

ஊர்களில் வற்றிப்போய் விட்டது என்று தமிழ் வித்துவான் சொன்னால் வீட்டில் உள்ள பாட்டி வத்திப் போய் விட்டது என்றுதான் சொல்வாள். காரணம் பேச்சுமொழிச் சொல் வத்திப்போய்விட்டது என்று சொல்வதுதான்.  ஆய்வாளன் ஒருவன் பேச்சுமொழி வடிவம் எழுத்துவடிவில் வராது என்று முடிபாகச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. செய்யுள் வழக்கு உலக வழக்கோடு வேறுபடும்.  நாம் உலக வழக்கு என்று சொல்வது நகர வழக்கு, வட்டார வழக்கு, ஒருசாதியினர் வழக்கு, பலசாதியினர் வழக்கு, தமிழ்நாட்டின் ஒருமூலையில் மட்டும் உள்ள வழக்கு, பல ஊர்களின் வழக்கு என்று உண்மையில் எண்ணிறந்தன வாகும். இவை பலவும் அறியாமல் ஊர்வழக்கு என்று சொல்லக்கூடாது சொல்லாக்கத்திற்குப் பயன்படாது என்று சொல்லுதல் மடமை.  இலக்கணம் என்பது ஒரு மொழியை எழுத்திலும் பேச்சிலும்  பிழைபடக் கையாளாமல் முறையாகப் பயன்படுத்துவது எப்படி என்னும் நூல்தான்.  புதிய சொற்களை நீங்கள் உண்டாக்கிக் கொள்வதற்காக எழுதப்பட்ட இலக்கணம் அன்று.  புதிய சொற்களை நீங்கள் உண்டாக்கிக் குவித்தாலும் அவற்றை யாரும் பயன்படுத்தாவிட்டால் அவை குப்பைதான்.

ஊர்வழக்கில் உள்ளவை முன்பே உள்ள சொற்கள் தாம். அவற்றின் வழக்கியலை யாரும் ஒழித்துவிடவும் இயலாது.

இவையும் பிற பலவும் தந்திரங்கள் என்றே கூறத் தகுவனவாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


ஞாயிறு, 12 நவம்பர், 2023

தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும்

 ஆபாலும்   இட்டினிய பாயசம் பண்டங்கள்

தீபா வளியன் றுணவுமகிழ்----வேபாய

எய்துக இல்லத்தில் எல்லாமும் இன்பமொன்றே

பெய்திடத் துர்க்கை அருள்.


எல்லாத் தெய்வங்களின் ஆசியாலும் எல்லா நலமும் பெறுவீர்

யாவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் உரியனவாகுக.


ஆபால்  -  ஆகும் பால் ( கறந்த பால்),   ஆவின் பாலுமாம்.என்பது  குறிப்பு

இட்டினிய -  இட்டு இனிய

பாய - பெருகி ஓடிவர

எய்துக -  அடைக

பெய்திட -  இன்ப மழைபோல்  இறையருள்.


செவ்வாய், 7 நவம்பர், 2023

அதி(கம்) என்பதற்கு மற்றொரு முடிபு.

அதி என்பது ஒரு முன்னொட்டு  ( prefix)  என்று வகைப்படுத்தப் பட்டது  எனினும் முழுச்சொல் அன்று.  அதிகம் என்ற சொல்லின் முன்பாதி என்று எடுத்துக்கொள்ளலாம்.  இதன் பொருள் :"மிகு" என்பதுதான்,  அதிமதுரா என்ற சொல்லின் அதி என்பது முன்னொட்டாக வருகிறதைக் கண்டிருப்பீர்கள்.  அதிவேகம் என்ற சொல்லிலும் அது ஒரு முன்னொட்டாக வருதலை அறியலாம்.

அதிகுணன், அதிகாரம், அதிகாலை, அதிகோரம், அதிகோலம்,அதிசங்கை என்பவற்றிலும் அதி முன்னொட்டு வருதல் காணலாம்.

இதனை ஒன்றின் மேற்பட்ட எண்ணிகையில் விளக்குவதற்கு வழியுள்ளன என்பதை அறிக.  அதி என்பது ஒரு சமஸ்கிருத ( சமத்கிருத என்று எழுதுவதுண்டு)  ஒட்டுமுன்னி   [PREFIX] என்று சொல்லலாம்.  இதற்குக் காரணம் அதி என்பது ஒட்டிய சொற்கள் பல ஆங்குள்ளன. இதனை உபசர்க்கம் என்றும் கூறுவர். 

கிருபானந்த வாரியார் சுவாமிகள் தமிழ் என்ற சொல்லுக்கு ஒரு சொற்பொழிவில் நூறு பொருள்கள் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது போல,  பெரும்புலவர்க்கு யாவும் எளிதாகும்.  ஐயப்பன் என்ற சாமி,  பிரம்மன், விட்ணு, சிவபெருமான்,  வினாயகப் பெருமான்,    திருவுடைய முருகன் ஆகிய ஐந்து ஒன்றான கடவுள், காரணம் ஐ என்றால் ஐந்து என்று ஒரு பற்றாண்மைசால் புலவர் கூறியது போலவே திறனுடையார் பல்வேறு வகைகளில் கேட்போரைக் கவர்ந்துசெல்ல முடியும். சீவக சிந்தாமணியார் ஒரு வரிக்கு ஒருபொருள் போதருமாமாறு எதுகைகளை அடுக்கியவாறு போல, புலவர்தம் திறம்தான் என்னே என்போம்.

சிங்கப்பூர் என்பது சிங்கம் என்ற இந்தியச்சொல் வருவதால் இந்தியர்களால் அமைக்கப்பட்ட சொல் என்று ஒருவர்கூற,  அது உண்மையில் சின்-ஜா-போ என்ற சீனமொழிச் சொல்லின் திரிபு என்று இன்னொருவர் கூற, கேட்பவர் ஒரு முடிவுக்கும் வரவியலாத நிலை வரக்கூடும்.

அதிகம் என்பதை நாம் முன்னர் விரிவரிவனப்புச்  செய்துள்ளோம் . ஆயினும் இங்கு ஒரு சுட்டடிச்சொல்லமைப்பாக விளக்குவோம்.

அது  -  இஃது அஃறிணை ஒருமைச் சொல்.

இ  -       இங்கு  என்று பொருள்தரும்  சுட்டடிச் சொல்.

கம் -     கடக்கும்  அல்லது வரும் என்னும் பொருளிய இடைக்குறை.  இதில்             "டக்கு" என்ற எழுத்துக்கள் மறைந்தன.  இதுவும் தமிழிலக்கணப்படியான              சிறந்த விளக்கமே ஆகும்.   கடந்து இங்கு வந்துள்ளபொருள் இங்கு மிகுதியை உண்டாக்கும்.  ஆதலின் அதிகம் ஆகிறது.

கடக்கும் என்ற சொல் குறைந்து வரும் இன்னொன்று "வேங்கடம்" என்பது ஆகும்.  வேம் -  இது வேகும் என்ற சொல்லின் குறை.  ஆகும் என்பது ஆம் என்று குறைவுற்றது போலுமே ஆம்.  கடக்கும் என்பது கடம் என்று குறுக்கிப் பயன்பாடு கண்டது.  வேக்காளம் மிக்கதான கடக்கும் இடம், வேங்கடம் என்று பெயர் பெற்றது.  காரணப் பெயர்.

அவகடம் அல்லது அபகடம்:  இங்கும் கடம் என்பது கடத்தற்கரியதொன்றையே குறித்தது.  அவம் ஆனதும் கடக்கவேண்டிய அரிய நிலையை உண்டாக்குவதுமாகிய செயல்.  வ-  ப போலி.

மற்ற இடத்தினது இங்கு வருமேல் மிகுதிப்படுதல்.

இன்னும் பல எழுதலாம்.  உங்களுக்கும் ஓய்வு தேவை.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.



திங்கள், 6 நவம்பர், 2023

முயற்சி திருவினை

 எழுந்துநிற்  பதற்குமொரு  பயிற்சி  வேண்டும்

எழுந்ததும் விழுந்தாலும் அமர்ந்தி   ருந்தே  ,

அழுந்துயர் அடுத்தலிலா  முயற்சி  வேண்டும்

விழுந்தமை தனைஎண்ணி வியர்ப்ப  தின்றிக்

குழந்தையைப் போலதற்கு மனமே வேண்டும்

விழுந்தரம் அடுத்துவெற்றி எனவே  தாண்டு!


தொழுங்கரம்  தேவனருள்  ஈர்த்த வாறே

துலங்குவதே யாவதுமே  உலகின்  மீதே.


பொருள்:

விழுந்தரம் -  விழுந்தடவை அல்லது  விழுந்த பொழுது.

தரம் தர நடந்தன என்றார் கம்பநாடர்.

கரம்  -  கை.  (கர் - கை திரிபு)

ஒ நோ:       அர் - ஐ.  ஆர் -  ஐ  என்பவுமாம்.

வந்தனர்,  வந்தனை, வந்தார் என்ற விகுதிகள் ஒன்றிலிருந்து

இன்னொன்று திரிந்த தொடர்புடையவை.

ஏனைச் சொற்கள் எளியவை.

சனி, 4 நவம்பர், 2023

காசி என்னும் சொல்.

 இன்று காசி என்னும் சொல் பற்றியும் தொடர்புடைய ஒருசிலவற்றையும் தெரிந்துகொள்வதுடன் இச்சொல்லைத் தமிழ் மூலங்களைக் கொண்டு, சற்று ஆய்வுசெய்தறிந்திடுவோம்.

"காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்  தமை நன்னெறிக்கு  உய்ப்பது  வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே"   என்பது மிக்க வான்பொருளுய்க்கும் தேவாரப் பாடலாகும்.

இங்குக் கசிதல் என்ற வினைச்சொல் பொருந்திப் பொருள்மிகுக்கும் சொல்லென்க. ஒருவன் காசிக்குச் செல்வதே  இறையை எண்ணிக் கசிந்துருகுவதற்காகத் தான்.

வெள்ளி போல் உருகி ஊற்றுமிடத்து அதில் ஒளிபடுமானால் வெண்மை மின்னி அழகுறுத்தும் என்பதில் ஐயமில்லை.  ஒளியில் மின்னுதல் என்பது இதன் பொருள் என்று ஏனை மொழியினர் கொண்ட பொருளும்  ஏற்புடையதே ஆகும்.
பட்டு மின்னுதல் என்பது மட்டற்ற மகிழ்வு தரும் பொருளாயினும்,  தேவாரம் தரும் பொருள் மனத்துக்கண் நிகழும் கசிவே ஆகுமாதலின்.  அம்மனத்தையே தளமாகக் கொண்டு பொருள் விளக்குதல் இன்னும் சிறப்புடைத்து என்பது  மேம்பாடுடைய கருத்தெனக் கொள்க.

சுடு > சூடு என்று முதனிலை ( அதாவது முதலெழுத்து ) நீண்டு பெயர்ச்சொல் ஆவது போலுமே,  கசிதல் -  கசி >  காசி என்று அமைந்து,  மனம் கசிந்துருக இறைவணக்கம் இயற்றுமிடம்  என்று பொருள் கொள்வது மிகுந்த  சிறப்புடைத்து ஈண்டு என்று முற்றுவிப்போம்.

இப்பெயர் தென்காசி என்று தென்னாட்டிலும் மீள்வருகைகொள்வதால்,  தென் காசிக்கும் இப்பொருள் கொள்ள இடனாகின்ற தென்க.

காசி என்பது காக்குமிடம் என்று காத்தல் அடியாக நின்று,  இருபிறப்பியுமாகும்.
மாசி என்பதில்  மா (பெரிது) என்ற சொல்லுடன் சி விகுதி வந்ததுபோலும் இஃது  விகுதிபேறு ஆகும். மாசி எனின் சிறப்புடைய மாதம். நாசி என்பது நாவின் மேலிருப்பது என்று பொருள்படும் உறுப்பின்பெயர். அதாவது  மூக்கு, நாவொலிகட்குச் சிறப்புச்செய்வது.  சி -  சிறப்பு எனினுமாம். ஆசி என்பது ஆக்கம் சிறக்க என்பது.     ஒப்பிட்டுக்கொள்க. 

இதனைக் காஷி என்று எடுத்தொலித்தல் பின் வந்த மெருகூட்டல்.

அறிக மகிழ்க


மெய்ப்பு பின்னர்.

புதன், 1 நவம்பர், 2023

மந்திரவித்தை வேறுபெயர்கள்

 மந்திரவித்தை என்பது எல்லாக் காலங்களிலும் மக்களிடைக் கடைப்பிடிக்கப்பட்டே வந்துள்ளது.  இதை ஒரு கலையென்று கூறலாம்.  ஆங்கில உலகில் இதை ஓர் அறிவியல் என்று சொல்கிறார்கள். Occult Science என்னும் இதுபற்றி எழுதப்பட்ட நூல்களும் உள்ளன. இது கலையா அறிவியலா என்பதைப் பற்றி நீங்கள் வாதத்தில் ஈடுபடலாம்.  தென் கிழக்காசியாவில் இது பயிலப்பட்டு பயன்பாட்டில் உள்ளதொன்றாகும்.

அசுரமாயம்,  பூதாசனம், சித்திரகருமம், இந்திரஜாலம்,  மாயாஜாலம், கர்மண, கிர்திஹாரம், மந்திரவித்யா, மந்திரரத்னா  என்பவை முதல் சமஸ்கிருதத்தில் பல சொற்கள் உள்ளன. இந்தச் சொற்களை எல்லாம் வேண்டியாங்கு மந்திரவித்தையைக் குறிக்கப் பயன்படுத்துதல் கூடும்.

தமிழில் மந்திரம்செய்தல் என்று வழக்கில் சொல்லப்படும் இதற்கு,  ஒட்டியம் என்றொரு  சொல்லும் உள்ளது.  சூனியம் செய்வோர் பூசனை செய்யும் காளிதேவிக்கு  ஒட்டியக் காளி என்றும் சொல்லுவர்.

ஓர் உண்மை நிகழ்வை அறிந்தபின்  அதை வேறுபடுத்தவே மந்திரங்கள் செய்யப்படுகின்றன. எ-டு   ஒரு பெண் ஓடிப்போய்விட்டாள்,  அவளைப்பற்றி நிகழ்வறிந்த பின் செய்யப்படுவதே மந்திரவேலை.  ஓடிப்போனவள் திரும்பவேண்டும் என்பது குறிக்கோள்.  இதனால் இந்த மந்திரம் ஒட்டியம் எனப்படுகின்றது.  ஒட்டிச்சென்று இயல்விப்பது ஒட்டிய மந்திரம்.  ஒட்டுவித்தை. ஒட்டுமந்திரம்.  இரண்டாம் உலகப்போர் முடிந்துபின் துணிப்பஞ்சம் இருந்ததால் துணிகளை ஒட்டுப்போடும் தையல்காரர்கள் அதிகமிருந்தனர். இதழொலிகளால் ஆன கவியும் ஒட்டியம் எனப்படும்.

பில்லி,  சூனியம் என்ற வழக்குகளும் உள்ளன.  புல்லுதல் என்றால் ஒட்டிச்செல்லுதல் என்று பொருள். புல்,  மரம்போல் மேலெழாமல் தரையுடன் ஒட்டிவளர்வதால்  (புல்லி வளர்வதால்)  அஃது அப்பெயர் பெற்றது. புறக்காழனவே புல்லென மொழிப என்பது  தொல்காப்பியம்.  ( மரபியல் காண்க). ஆனால் வரையறவுகள் இன்று வேறுபட்டுவிட்டனவால், தொல்காப்பியர் காலத்தின் "புல்லும்"  இன்று நாம் குறிக்கும் புல்லும் வேறுபடுதல் கொள்க.

பில்லி என்பது புல் > புல்லி> பில்லி என்று திரிந்தது.  உ-இ திரிபு.

சூழ்தல், உன்னுதல் என்ற இருசொற்களின் பகவொட்டாகத் தோன்றிய சொல்லே "சூனியம்"  என்ற மந்திரவகை.  சூழ் உன்னியம்.> சூ(ழ்) + (உன்)னியம்.  சூழ் ~தல்  என்பது ஆலோசித்தல்,  ஊன்றி எண்ணுதல்.  உன்னுதல் என்பது அவ்வாறு எண்ணியன முன் கொணர்தல். உன்னுதல் என்பது தியானித்தலுமாகும்.   சூன்யமென்பது ஒன்றுமின்மை என்பது இங்குப் பொருளாகாது.  எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் என்ற குறள் நினைவிலிருக்கிறது.  சூனியம் என்பது மிக்கத் திண்ணியனவாய் எண்ணி நிகழ்த்தப்படுவது.  பில்லிசூனியம் என்பன இணைச்சொற்களாய் உலகவழக்கில் ஒருபொருட்குறிப்பின வாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


தொடர்புடைய மற்ற இடுகைகள்:


If these connections do not take you to the post,  there may be a fault in connection.
You have to search manually to reach these posts. We are sorry about that.





சனி, 28 அக்டோபர், 2023

பாண்டு, பாண்டியர், மற்றும் தொடர்புடைய சொற்கள்.

 தலைப்பிற் கண்ட சொற்களுடன்  சிறிது நேரம் செலவிட்டு அவற்றை அறிந்துகொள்வோம்.

பாண்டியன் என்ற சொல்லைப்  "பண்டு " என்ற சொல்லுடன் சேர்த்துக் கவனித்த சில தமிழறிஞன்மார்  பாண்டிய அரசகுலம்  மிக்கப் பழமைவாய்ந்த  மரபாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.  இது மிகவும் சரியானதாகவே தோன்றுகின்றது.  எப்படி என்று வினவலாம்.   மூன்று முடியுடை வேந்தருள் ஒருவரே ஆதியில் இம்மரபினைத் தோற்றுவித்தவராக இருந்திருக்கவேண்டும். பாண்டியர்களே அவ்வாறு செய்து நிலைநாட்டினர். மேலும் முச்சங்கங்கள் நிலவின என்ற வரலாறும் பாண்டிய மன்னர்களை  முன்னிலைப்படுத்திய  வரலாறாகவே சொல்லப்படுகிறது. மேலும்  தென்னாடு என்பது நீண்ட கடற்கரையை உடையதாகவே இருந்துள்ளது.  இந்தியாவின் ஆதிக்குடிகள் என்போர்  பெரும்பாலும்  கடல்நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டு,  மீனுணவு உட்கொண்டு வாழ்ந்தவர்களே. அவர்கள் தெய்வம் மீனவப் பெண்தகையான மீனாட்சியே.  அது உண்மையில் கடல்நாகரிகமே, அதாவது மீன்நாகரிகமே.  அவர்கள் நாட்டைப் பிடித்து ஆண்டாலும் மீனே அவர்களை ஆட்கொண்டு சிறந்தது.  நீரிலிருந்து துள்ளி எழுந்து விழும்போது,  இந்த மீன்கள் மின்னின,  மின்னுதல் >  மின் > மீன் என்பது முதனிலை நீண்டு அமைந்த தொழிற்பெயர்.  தகைமையில் இம் மீன்கள் விண்மீன்களை ஒத்தன.  ஆறுகளிலும் மீன்கள் கிடைக்குமென்றாலும்  நிலம்சார்ந்து வாழ்ந்தோருக்கு  மற்ற உணவுகள் ஒத்த அளவிலோ மேலாகவோ கிட்டின.  இம் முன் மரபினரோவெனின் மீனைத் தம் கொடியிற் பொறித்தது இயல்பானதே ஆகும். இவர்களின்  முதல் ஆட்சித் தலைமை ஒரு பெண்ணாகவே இருந்தமையால்,  அவர்  மீனாட்சியம்மை யாகினார்.  வாழ்க மீனாட்சியம்மை மகிமை.

பாண் அடிச்சொல் வந்த மற்ற சொற்பயன்பாடுகள்: 

கேரளத்து மலைகளில் தமிழ்ப் பேசிய குறவர்கள்,  பாண்டிக்குறவர் எனப்பட்டனர்.  பாண்டி என்பது அவர்கள் பழங்குடிக் குறவர்கள் என்ற பொருட்டாகும்.  இதன்மூலம் பாண்டி என்ற சொல்லுக்குப் பழமைப் பொருள் உண்மை தெளிவாகிறது.  அதேபோல் பசு வகைகளிற் பழமையானவை பாண்டிப் பசு எனப்படுகிறது.  பாண்டிப்பசுவின் பால், மிக்க இனிமையுடையதாகும். 

பாண்டல்  ( பாண்டு+அல்)  என்பது பழையதாய் உதவாமற் போன பொருட்களைக் குறிக்க வழங்கும் சொல் .(  எடு:  பாண்டல்நெய்,  பாண்டல்கருவாடு, பாண்டல்மீன் எனக் காண்க.)  

இவற்றில் அடிச்சொல்:  பாண்டு. பாண்டு என்பது பண்டு என்பதன் நீட்சியே ஆகும்.  

பாண்டிகன் என்ற சொல்லோ கோயில்களில் திருப்பள்ளி எழுச்சி பாடுவோனைக் குறிக்கிறது.  இச்சொல்லில் வரும் பாண் என்ற அடிச்சொல் பண் > பாண் என்ற என்று பாட்டினைக் குறிக்கும் சொல்லுடன் பொருளியைபு உடையதாகின்றது.  இவ்வகைப் பாட்டுக்காரர்கள் நம் எண்ணத்திற்கும் எட்டாத பழங்காலத்திலிருந்தே இவ்வேலையைச் செய்துவந்தவர்களாய் இருக்கவேண்டும் என்று கூறுவதன்மூலம்  "பண்டு"   (பழங்காலம்) என்பதனோடு இணைக்கலாம். இம்முயற்சிக்கு  வேறு அடைவுகள் ஒன்றுமில்லை.  படித்தவர் சொல்கிறார் என்பதே தவிர, இதுவா அதுவா என்று முற்றுறக் கூற முடியாத நிலைமையே மிஞ்சும்.  இருபிறப்பி  இது என்றும் கூறி முடிக்கலாம்.  கொண்டுவந்த பண்களை கோயிலில் வீழ்த்திச்செல்பவர்கள் என்பது இச்சொல்லின் பொருளாதல் கூடும். இகுத்தல்  வீழ்த்துதல்,  இ - இங்கு, கு-  சேர்(ப்போன்).

பண்கள் அல்லது பாட்டுகள் முன்னரே எழுதப்பெற்று அல்லது புனையப்பட்டு மெட்டு அல்லது இராகம் அமைத்துப் பின்னரே பாடப்படும்.  புதிய பாடல்கள் புனைந்து பாடுவோர் பெரும்பொருள் வரவை எதிர்பார்ப்பதே இயல்பு.   ஆதலின் இயல்பான நிலையில் பண்கள் பழையவை.  இந்தப் பழமையிலிருந்து பண் -  பண்டு என்பதற்கு பழையது என்ற பொருள் வந்திருகிறது  என்பது தெளிவு.  பண் என்பது பண்ணுதல் அல்லது செய்தல் என்னும் வினையிலிருந்து வருவதால், பண்ணும் நேரம் வேறு,  அது உணவாயின் தின்னும் நேரம் வேறு.  பண்ணப்பட்ட நேரம்  முன் செல்கிறது. பயன்பட்ட நேரம் பின்வருகிறது.  இதுவே பெரும்பான்மையும் இயல்புமாம்.  ஆதலின் பண்+ து >  பண்டு என்று அமைக்க ப்பட்டது  முன் பண்ணினதையே பெரிதும் குறிக்கும்.  ஆதலின் பண். பண்டு என்பதன் பழமைத் தொடர்பை உணர்ந்துகொள்க.  ஆகவே பாண்டு என்பதும் அது.  பல பண்கள் நல்லனவாய் அமைந்தவை.  ஆதலின் பண்ணாகும்  என்று சொன்னால் நன்றாகும் என்பதும் பொருளாம்.

பண் பாண் பாண்டு என்பன தொடர்பில் பல உள்ளன.  எல்லாவற்றையும் இங்குக் கூற இயலவில்லை.  சிலவே கூறினோம்.'

வாக்கியம்:   பண் அது பழைமை:   இப்போது அது என்பதற்குத் து என்ற இறுதியை மட்டும் விகுதியாக்கினால்:-  பண் + து >  பண்டு, (பழமை). பண்டு > பாண்டு.  பண் பாடுவோர் பாணர்.  ( பண்- பாண் கண்டுகொள்க.)  பாண்டு+ இ+ அர் >  பாண்டியர் ஆகும்.  ( பழங்காலத்திலிருந்து , இ - இங்கு,  அர் - இருப்பவர்(கள்).  )   பண்ணுதல் -  வினைச்சொல்.

அறிக மகிழ

மெய்ப்பு பின்


செவ்வாய், 24 அக்டோபர், 2023

அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்?

 பரிசுகள் வழங்கினோம்,


உதவி புரிந்த வாசகர்கட்கு நன்றி தெரிவிப்பது கடமையாகும்.

உதவி புரிந்த உயர்மன வாசகர்க்கு
இதயம் கனிசெயல் இயற்றலும் கடனே.

இதயம் கனி  -  அவர்களின் இதயம் கனியுமாறு
செயல் இயற்றலும் -- ஏதேனும் செய்தலும்
கனிசெயல் -  வினைத்தொகை.  இங்கு வலி மிகாது.

வாசி அகர் > வாசகர் என்றும் பிரிக்கலாம்.
வாசி + அ + கு+ அர்>  வாசகர்,   இங்கு  அ என்பதை இடைநிலை என்று கொள்க.

கண்ணுக்குத் தெரியும்படி இருப்பது " இங்கு"  இருப்பது.  ஆனால் மனம் அங்கு இருக்கிறது.  அதாவது உடலினுள்.  அ =  அங்கு,  கு=  இணைந்து.  "தனியாக இல்லாமல் உடலுடன் இணைந்து. "  ஆகவே அகமாயிற்று.

அறிக மகிழ்க
மெய்ப்பு - பின்னர்

Food delivery problems

 https://www.msn.com/en-sg/news/singapore/foodpanda-customer-unhappy-with-rider-who-left-his-food-outside-the-door-without-telling-him/ar-AA1iJazj?ocid=socialshare&pc=U531&cvid=9d5859bf8188468fb43e7abf9ae231fa&ei=29


https://www.msn.com/en-sg/news/singapore/foodpanda-customer-unhappy-with-rider-who-left-his-food-outside-the-door-without-telling-him/ar-AA1iJazj?ocid=socialshare&pc=U531&cvid=9d5859bf8188468fb43e7abf9ae231fa&ei=29

வீட்டுக்குச் சாப்பாடு வரவழைக்கும் போது  கவனமாய் இருங்கள். கொண்டுவருகிறவர்களுக்கு மண்டைக்குழப்பம் அச்சம்  ஆகியவை ஏற்படுவதுண்டு.  நடந்ததைச் சொல்லப்பயந்து ஓடிவிடுவதுண்டு.

சனி, 21 அக்டோபர், 2023

சமுத்திரம்

 https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_91.html

முந்நீர்  என்பதும் முத்-  திரை  ( மூன்று நீர்) தான்.   ஒப்பிட்டு அறிந்துகொள்க.

திரை என்பதும் நீர்தான்.

சமுத்திரம் என்பது தமிழ்தான்.   சமஸ்கிருதம் என்பது வெளிமொழி என்பது ஓர் இடுபுனைவு ஆகும்.   வெள்ளைக்காரன் எழுதிவைத்தது.  சமஸ்கிருதம் பயன்படுத்தியவர்கள் முன்னையப் பூசாரிகளான பண்டை இனத்தவர்களே.  வால்மிகியே பூசைமொழியில் முதற்பாவலரும் பெரும்பாவலரும் ஆவார். இலக்கணம் வகுத்தவன் பாணப் புலவன் ஆகிய பாணினி (  பாண்+இன்+ இ).

சமுத்திரம் பற்றிய இதர ஆய்வுகள்:

https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_19.html

https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_18.html

https://sivamaalaa.blogspot.com/2016/02/blog-post_28.html   முந்நீர். - சமுத்திரம்.

தம் மு( த்) திரை > சம் முத் திரை >add அம்

>சமுத்திரம்.

திரம் என்பதில் ஐகாரம் குறுகிற்று. 

திறம் திரம் ஈறானது எனினுமாம். Then define accordingly.


வியாழன், 19 அக்டோபர், 2023

அஸ்தினாபுரம்

 இன்று அஸ்தினாபுரம் என்ற சொல்லைக் கவனிப்போம்.

இந்த அஸ்தினாபுரம் என்னும் சொல். தமிழில் பழைய நூலாகிய சீவக சிந்தாமணியிலே உரையாசிரியர் வழியாக நாம் எதிர்கொள்கிறோம்.   வேறு பிற்கால நூல்களில் உள்ளது என்பதும் ஏற்கத்தக்கதே.  இங்கெல்லாம்  அஸ்தினாபுரமென்பது அத்தினாபுரம் என்றே காணப்படுகிறது.    வடவொலி நீக்கி அவ்வாறு   காணப்பட்டதா,  அதுதான் மூலமா  மூலத்தின் எதிரொலியா என்றெல்லாம் அறிந்துகொள்ள வழியேதும் இல்லை. 

பாண்டவர்,  பாண்டு என்ற சொற்களும் கவனிக்கத்தக்கவை.  இவற்றை இங்கு இடுகைப்படுத்தவில்லை.

பகு என்ற சொல் முதனிலை நீண்டு பாகு என்றாகும்.  இதன் சொல்லமைப்புப் பொருள் இனிப்பானது என்பதன்று.   பாகுபடுத்தப்பட்டது என்பது.  வழக்கில் காய்ச்சப்பட்ட பாகுகளெல்லாம் இனிமை பயந்ததனால்,  இச்சொல் இறுதியில் இனிமைப் பொருளதானாது.  பகு என்ற சொல்லுக்கு எவ்வாறு பொருந்துமெனின்,  உணவின்போது இது தனிச்சிறப்பு உடைமையினால்,  ஏற்புடைத்தாயிற்று.  உணவின் மிக்க இனிமையான பகுதி.  பல உணவிலும் ஒரு மணிமுடியாய் இருக்கும் பகுதியுணவு. ( "பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன்"  எனக்காண்க. ) காரண இடுகுறிப்பெயராவது இஃது.  பாகு >  பாகு+ தி >  பாத்தி,  அல்லது  பாகு> பா > பாத்தி.  பகுத்தியலும் வயலின் பகுதி.  இங்கு  கு என்னும் விகுதி மறையும்.  அது பாத்தி என்னும்.  சொல்லில் தேவையற்றதும் தடையும் ஆகும். பாகு தனியாகவும் காய்ச்சப்படுவது.  பத்தி (பகுக்கப்பட்ட உரைப்பகுதி ).  பகுத்தி > பத்தி.  வினைச்சொல் பகு என்பதே.

இதை ஏன் கூறுகிறோம் என்றால்,  அத்தி, பத்தி, சத்தி, முத்தி என்பனவும் இவைபோலவன பிறவும் பாத்தியில் குகரம் மறைந்தது போல்  இடைமறைவு அல்லது குறைப்பட்ட சொற்களா என்பதை ஆராய்ந்தறிவது அறிவுடைமை.

அஸ்தினாபுரம் எல்லா இனிமையும் பயக்கும் படி    வடிவமைக்கப்பட்ட நகரமாகும்.  இந்த இனிமை அல்லது மகிழ்ச்சி  ( நல்ல மதிப்பீடு)  மனத்தில் தோன்றுவது ஆகும்.   மனம்  என்பது அகம்.   அகம் என்பது உள் என்றும் பொருள்படும்.  அகத்தில் இன்பம்தரும் நகரம்  அகத்தில் இன் ஆகும் ஒன்றாவது.  அகத்து இன் ஆகு புரமே  அகத்தினாபுரம் ஆகி,  அத்தினா புரம் என்று குறுகிற்று.  அந்நகரத்தினர் தென்பகுதி அரசர்கள் அல்லது தென்பகுதியிலிருந்து வடபகுதி ஓரிடம் அடைந்து ஆங்கு அரசோச்சியவர்கள்.

யானை நகரம்,  அஸ்தின் என்ற அரச நகரம் என்றும் முன் கூறியுள்ளனர்

இன் என்றால் இன்பம், இனிமை.  தாழ்மை உடையது எதுவும் புன்மையாகும். துன்பம் என்பதொன்று.

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.  குறள் 1152

இவ்வாறு திரிந்த சொற்கள் சிலவற்றைப் பழைய இடுகைகளிலும் காணலாம்.

இன்னா - துன்பம்.  இதுவன்று அடங்கிய சொல் 

இன் ஆ புரம் > இன்பம் ஆகும்  ( ஆக்கும்) நகரம்).  ஆபுரம் என்பது வினைத்தொகை.

நிறைய மாடுகளும் பாலும் உள்ள நகரம் எனினும்  ஆகும்.  ஆ - பசு. ( வீட்டுக்குப் பசுமை தருவது பசு. )   கோமாதாவினால் சிறப்புற்ற நகரம் ஒரு சிறப்பு ஆகும்.

சமஸ்கிருதம் என்பது சில வெளிநாட்டுச் சொற்கள் இருப்பதால் இந்தோ ஐரோப்பியம் ஆகிவிடாது. வெளிநாட்டு மொழி அன்று. ( வரலாற்றாசிரியர்: ரோமிலா தாப்பார்).

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்னர்.


திங்கள், 16 அக்டோபர், 2023

பாஞ்சாலி

 இன்று சாலி  என்று முடியும் ஒரு சொல்  காண்போம்

முதலில் பாஞ்சாலி  என்ற பெயரின் பொருளாய்  அறியப்பட்டவை:  அரசி,  அழகுள்ளவள் என்பவை. பொம்மை போலும் அழகியவள் என்றும் பொருளென்பர்.  இன்னும் வேறுபட்ட பொருட்களையும் கூறுவர். இது பழைய நூல்களில் வரும் பெயர் ஆதலினால்,  அவ்வந் நூல்களில் பொருள் விரிக்கப்படாதவிடத்து,  ஆய்வின் மூலமாகவே இதைக் கூறுவர். இயல்வது அதுவே.

பழம்பெயர்களில்  சிலவற்றை நாம்  ஆய்ந்து பிறர்பால் அறியாத பொருட்களை நாமே கூறியுள்ளோம்.  இவற்றைப் பழைய இடுகைகளில் கண்டுகொள்க.

திரௌபதி என்பதைத்   திற+ அவ+ பதி+ ஐ   என்று பிரித்தால்,  மிகவும் திறமுடையவர்களால், அவம் ( அவி+ அம் >  அவம்,  அவிபடுதல் )  செய்யப்பட்டு, பதி+ஐ  -  பதை,  பதி என்பதன் பெண்பால்,  பெண்தெய்வம்  ஆனவள் என்று பொருள்படுகிறது.   இது உண்மையில் இவள் ஏன் கருநிறம் அடைந்தாள் என்பதற்கு ஒரு விளக்கமாகிய பெயரே ஆகும்.  இப்பெண்ணின் இயற்பெயர் இது என்று எண்ண இடமில்லை.  இன்னொரு வழியிலும் பார்க்கலாம்.   திரு+ அவ+பதை  என்று பிரிக்க,  உயர்ந்த  அவிபட்டு எரிந்துவிட்ட + பெண்தெய்வம் என்று பொருள்படும்.  இரண்டிலும் தமிழில் பொருள் அறிய இடனிருப்பதால், நம் நேயர்கள் எதையும் ஏற்கலாம்.   இஃது  ஒரு பல்பிறப்பிச் சொல் என்னலாம். இப்பெருங்காவியம் பாடியவர்களின் நோக்கம் இதில் வரும் பாத்திரங்களின் உயர்வினையும் பிற கணிப்புகளையும் மக்களுக்கு உணர்த்துதலே ஆதலின், பெயர்கள் பெரும்பான்மை புனைவுகளே  ஆகும். இப்பாத்திரங்களின் இயற்பெயர்களைக் கூறினாலும், அதனால் நீர் பெறும் அறிவு  0  என்பதாகவே இருக்கும்.  யாகத் தீயிற் புறப்பட்டுக் கருநிறம் கொண்டாள் என்பது,  அவ்வம்மையின் நிறத்திற்கு  ஏற்புறுத்தல் என்னும் உத்தியே  ஆகும்.   திற(ம்), திரு என்பவவையே  அல்லாமல்.  திரி ( திரிதல்) என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.  திரி+ அவி + பதை  என்றவாறு.

இவ்வம்மை ஒரு தென்னாட்டு அரசியாய் இருந்திருத்தல் இதனால் அறியக்கூடும்.  இவ்வம்மைக்குக் கிருஷ்ணை என்னும் பெயரும் உள்ளது.  கிரு என்பது  கரு என்பதன் திரிபு.   மூலம் கரு என்பதே. கரு -  கருப்பு என்பதன் அடிச்சொல்.  

ஒப்பிடுக:  கிருஷ்ணயசுர்வேதம் ,  சுக்கிலயசுர்வேதம்.   சுக்கில எனின் வெள்ளை நிறம்.

இனிப் பாஞ்சாலி என்பது:   பாண் என்பது  அம்மையார் பெயர்  பாண் +  சால் + இ என்று அறிய  வழிசெய்கிறது.   சால்  என்றது நன்மைப் பொருளது.  சாலுதல் - நிறைவும் ஆகும்.  இகரம் பெண்பால் விகுதி.  பரம்பரையாகப் பண்களில் சிறந்து விளங்கிய வழிவந்தவர் என்பது இதன் பொருள்.  பாணர்களும் அரசு ஓச்சிய காலம் பழங்காலம் ஆகும்.  ஆகவே இவ்வம்மை ஓர் இளவரசி என்றதில் ஓர் ஐயம் ஏற்படவில்லை.

பாணர் என்பதன் அடிச்சொல் பாண் என்பது.  பண் > பாண் தொடர்புடைய சொற்கள்.  பண்+ அர் =பாணர்.  முதனிலை நீண்டு அர் என்னும் பலர்பால் விகுதி பெற்றது. பண்ணன் எனினும் பாடுகிறவன் என்றே பொருள். ஒப்பு நோக்குமாறு:   வள்  என்பது வண் என்று திரியும்.  வண்ணம் என்பது பொருட்கள் (meanings ) பலவினொன்றாகும்.  வண் + இ =  வாணி.  முதனிலை நீண்டு இகர விகுதி பெற்று,  வண்ணம் உடையாள் என்று பொருள் படும்.  வாழ்நன் என்பதும் வாணன் என்று திரிதல் உளது.  [ பள்: பள்ளு, பாட்டு.  பள்> பண்,  இதுவும் பாட்டு. கண்டுகொள்க  ]

பாண் என்ற சொல் வாண் என்றும் திரியும்.  வாணபுரம் என்ற ஊர்ப்பெயர் பாணர்கள் ஆண்ட இடங்களில் ஒன்று  ஆகும்.  இது இன்று திருவல்லம் என்று அறியப்படுகிறது.  ( வேலூர்).  கர்நாடகாவில்  புங்கனூர் (  முனைவர் பேரா.இராசமாணிக்கனார், சோழர் வரலாறு.) என்பது இன்னொன்று.  பிற நூல்களில் அறிக.

னகர  ணகர ஒற்றீறும்  சொல்லாக்கப் புணர்ச்சியில்  ஞகர  ஒற்றாகும் என்று உணர்ந்துகொள்க.  வல் > வன் >  வன்+சு+ இ >  அனை >  வஞ்சனை என்பதுபோலும்  அமைந்தது.   வன்+ சி >  வஞ்சி -  வஞ்சிப்பா.

வான் >வான்+சை > வாஞ்சை   ( பொருள் உயர்ந்த அன்பு).

திரௌபதை அம்மன் என்னும் தெய்வம் பிராம்மணர் அன்று.  பாணர் குலத்து திரௌபதைக்குக் கண்ணன் உதவியதில் சாதி இல்லை என்பது தெளிவு.  

இந்தத் தெய்விக வடிவு,  வாழ்வாங்கு வாழ்ந்து விண்ணகக் கண்ணனருள் பெற்று,  வான் எய்தினள்,  அருள் பாலிக்கின்றனள்.  பால் = பகுப்பு. பாலித்தல் - யாவருக்கும் வேண்டியவிடத்து அருள் பகிர்ந்தளித்தல்.  பால்+ + தல்: இங்கு "இ" வினையாக்கவிகுதி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்.

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

Birthday of Leah

 


A nice board to welcome guests to the  celebration hall.   Leah appears with smile in the board photo.



Comfortable in the hands of the mother is birthday girl Leah.

In the lovely embrace of my mummy's hands

I am ignited into a certain happiness;

I feel the silk, forget my milk,

Imbued into an unknown  part drowsiness!