வியாழன், 30 நவம்பர், 2023

வான்மழை

 வாழ்கென வரமருள் குளிர்ந்த மழைத்துளி, 

வீழ்கென மகிழ்தரு ஆழ்மனம்  வாழ்கநீ!

உடலில் வீழ்கென ஓடிமுன்  நிற்க,

படலும் குன்றியப்  பெயலும் நின்றது;

வானம்  நீயே வரையாது  வழங்குவை

கானம்  இசைத்தனை கடுந்தரை மோதலில்;

ஏன் நின்  றனைநீ   ஏற்றிடு  நீயே

நான்முயல்  வேனே நனிஇன்   னொருநாள்

கூன்படு நோக்கு குறைத்தே

நnன்மகிழ்ந்திடவே  நனைத்திடு  கவினே.


இந்தக் கவிதை என்ன சொல்கிறது என்பதை உங்கள் கருத்துரையில் எழுதுக. இதற்கு முன் எழுதியுள்ள பொருள் தேடி எடுப்போம்.

செயற்கை மழை பெய்வித்தல் முதலியவை இக்காலத்தில் உண்டாதலால், வான்மழை என்பது பொருத்தமான தலைப்புதான்.

கருத்துகள் இல்லை: