ஞாயிறு, 31 அக்டோபர், 2021

தீபாவளி வாழ்த்துக்கள்

 

தீபத்தை ஏற்றியே திவ்விய நல்லொளியால்

ஆபத் தெனப்படும் அத்தனையும் --- தீர்பெறவே,

வாவாநீ   தீப ஒளித்திரு வோங்குநாள்

மேவாநின் றாயெல்லாம் மேல்.


மேவாநின்றாய் -  மேவுகின்றாய். ( ஆநின்று என்னும் இடைநிலை).

தீர்பெற -  முடிவுற.

திருவோங்கு நாள் மேவாநின்றாய் -  உயர்வு மிகுந்த நாளாய் மேவுகின்றாய்.\

எல்லாம் மேல்  -  எல்லாம் உயர்வு.

"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்" என்றார் தெய்வப்புலவர் நாயனார்.

அதன்படியே " எல்லாம் மேல்" என்று வெண்பா இற்றது.  

திவ்விய:

திரு + இய  ( இது  "ரு"  இடைக்குறைந்து ) >  திவ்விய.

இன்னொரு வழியில்:

தீ + இய >. திவ்விய.  இங்கு  முதனிலைக் குறுக்கம்,  தீ என்பது தி என்று குறிலாயிற்று. வகர உடம்படுமெய் தோன்ற "வ்விய" என இரட்டித்தது.

இறைவணக்கத்தில் தீயின் பெருமையை இது காட்டுகிறது. 

இச்சொல் இருபிறப்பி.

வட்டமாய்ப் பூமி வடிவுடனே சுற்றிவர,

நட்டமாய்ப் பல்துயர் நாடுவதை --- விட்டகல,

வாழ்கவே மன்பதை வாழ்கவே பத்திநெறி

வாழ்கமொழித் தீபத் தொளி.

நட்டமாய் -  இழப்பாக.

பல் துயர் -  பற்பல துன்பங்கள். தீங்குகள்.

நாடுவதை -  மக்களை நோக்கி வருதலை

விட்டகல -  வரும் துன்பங்களின் இடத்தை விடுத்து  நீங்க.

மன்பதை -  சமுதாயம் குமுகாயம்.

பத்தி -பக்தி

வாழ்க மொழி -  தாய்மொழி வாழ்க.

தீபத்து ஒளி -  மொழி சார்ந்து, தீபத்தின் ஒளி வாழ்க என்பது.

பூமியோ ஒரு வட்டத்ததில்தான் சுற்றி ஓடிக்கொண் டிருக்கிறது.  மனிதனுக்கும் ஒரு வட்டம்,  ஓர் அறம், ஓர் ஓட்ட நெறி உண்டே.  பூமி போலன்றி இவன்  வட்டத்தை விட்டு  ஓரங்களுக்கு ஓடித் துயரங்களை  உருவாக்கித் தானும் பிறரும் துன்புறச்  செய்கிறான்.

இந்நிலை மாறி  இத் தீபாவளியில் பல துறைகளிலும்

இன்ப முண்  டா கட்டும்.


வீட்டினை விட்டு வெளியுலகு செல்லாமல்

கூட்டில் குருவியாய்க் குன்றினுமே --- பாட்டினில்

பண்பாட்டில் பல்பல கார அடிசிலிடை

விண்போல் வியன்கொள்வோம் நாம்.


வீட்டினை -   வாழ்விடத்தை.  விட்டு -  நீங்கி.

வெளியுலகு -  பிற இடங்களுக்கு.

கூட்டில் குருவியாய் --  பல இருப்புக் கட்டுப்பாடுகளுடன்.

குன்றினுமே --  சிறப்பு குறைந்துவிட்டபோதும்

பாட்டினில் -  வீட்டில் இசை நுகர்வதில்.

பண்பாட்டில் -  கலாச்சார ச் செயல்பாடுகளில்.

பலகாரம் -  சிற்றுண்டிகள்.

அடிசில் - உணவு.

விண்போல் -  ஆகாயம் போல

வியன் - விரிவு.

இரட்டுறல்:  பல் -பலகார - அடிசில்

பற்பல -  கார - அடிசில்  

என்று இரட்டுற லாகும்.




தீபா வளிதன்னில் தேங்கா முன்னேற்றம்

நாபா டியபாங்கில் நாட்டினது ---- சீர்பாடி,

ஆடிடுவோம் நன்மைத்தேன் ஊறவே கூடிடுவோம்

பாடெலாம் பக்கம் களைந்து.


தேங்கா - நின்றுவிடாத.

முன்னேற்றம்  -  குமுக வளர்ச்சி

நா  பாடிய பாங்க்கில் -  நாவால் மகிழ்ந்து புகழ்ந்த வாறே

நாட்டினது சீர் பாடி -  வாழும் நாட்டின்னற்புகழைப் பலரும் அறிய இசைத்து

நன்மைத் தேன் ஊறவே  -  நலங்கள் யாவும் தேன்போல் பெருகிட.

பாடெல்லாம் பக்கம் களைந்து --  துன்பத்தையெல்லாம் பக்கத்தில் வீசிவிட்டு.




கொண்டாடும் யாவர்க்கும் கூடுக வாழ்வெளியே

ஒண்டிய வாழ்வினர்க்கும் ஊணுடை ---- வெண்டிங்கள்

தண்ணன்பு தந்துமகிழ் தாய்போல் தகைநல்கி

விண்ணுயர்வை எட்டுக வென்று.


வாழ்வெளி - வாழ்வின் சிறப்பு.

ஒண்டிய வாழ்வினர் - ஏழை மக்கள்

வெண்டிங்கள்  - வெண்ணிலவு

~  தண்ணன்பு -  நிலவுபோல் குளிர்ந்த அன்பு.

ஊணுடை -  உண்ணவும்உடுத்தவும் கொடை.

தகை - தகுதியான.

நல்கி  - வழங்கி

விண்ணுயர்வு - மிகுந்த உயர்வு

வென்று - வெற்றியடைந்து.


யாவர்க்கும் யாழிசைத் தீபா வளிவாழ்த்து

யாவரும் வெல்கஅன் பால்.


யாழிசைத் தீபாவளி -  இசைகருவிகள் மீட்டியபடி

கொண்டாடும் தீபாவளி.   பாட்டுக் கச்சரி வீட்டில் வைத்து.

தமிழனுக்கே உரிய யாழிசையும்  பாரதத்துக்கே உரிய பாவளியும்  இணைந்தபடி காண்க இப்பாடலில்.

இங்கு யாழ்  ஏனை  இசைக்கருவிகட்கும் பதில்நிலை ( பிரதிநிதி) யாய் நிற்கின்றது .

பா -  பாட்டு.  பா + அளி = பாவளி.  பாவின் ஈர்ப்பில் தோன்றும் அளி:   அன்பு, கருணை.

இவ்வாண்டில் தீபாவளிக்கு இப்பாடலில் நாம் காணும் மகிழ்பொருள் இது:

தீ -  தீபம்

பா -  பண்

அளி -  அன்பு.

சேர்த்தால் " தீபாவளி".  வகர உடம்படு   மெய் சந்தி.

மூன்றும் உண்டு.  அனைவரும் வாழ்க. அன்னை அருள் பொழிக.

மெய்ப்பு பின்பு

பிறழ்வுகள் காணின் பின்னூட்டம் செய்க




கொவிட்19 நிலைமை 31102021

 [Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 31]

 

அக்டோபர் 30, நண்பகல் 12 மணி நிலவரப்படி, 1,627 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்,

- பிராணவாயு தேவைப்படுவோர்: 267

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவோர்: 69

- தீவிர சிகிச்சைப் பிரிவில் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளோர்: 60

- தீவிர சிகிச்சைப் பிரிவின் பயன்பாட்டு விகிதம்: 68.1%


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில்,

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.7%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 0.8%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போர்: 0.3%

- உயிரிழந்தோர்: 0.2%

  

அக்டோபர் 29 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / 2 தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 84%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%

- Booster தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 15%


அக்டோபர் 30 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 3,112 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வாராந்திர நோய்ப்பெருக்கு விகிதம்: 1.14.


go.gov.sg/moh301021

Wins & Losses: Singapore goes from 1st to 39th in Covid Resilience Ranking, but economy is on track

 Wins & Losses: Singapore goes from 1st to 39th in Covid Resilience Ranking, but economy is on track  by Anna Maria Romeiro

Click to read the article:

https://theindependent.sg/wins-losses-singapore-goes-from-1st-to-39th-in-covid-resilience-ranking-but-economy-is-on-track/

On Bloomberg’s list Singapore is now ranked lower than South Africa, with its nearly three million Covid cases and 90,000 deaths, and whose vaccination rate is yet to reach 20 per cent.


You may also want to read:


The PM's wife,  Mdm Ho insisted that the number of cases has nothing to do with the Vaccinated Travel Lane “VTLs or incoming visitors or returning Singaporeans.  It has nothing to do with non VTL arrivals too.”    


Click to read:-

https://theindependent.sg/getting-covided-should-not-be-a-stigma-ho-ching/


அபிப்பிராயம் - பிற்கருத்து.

 கடின ஒலிகளை விலக்கி,  மெல்லோசை தழுவச் சொல்லை அமைத்தலை இடைக்காலத்தில் கடைப்பிடித்தனர்.  மனிதன் போகப்போகத்தான் பல தந்திரங்களை அறிந்து  அவற்றைத் பயன்படுத்திக்  கொள்கிறான். இதை ஒரு முன்னேற்றம் என்றாலும்,  பிற்போக்கு என்றாலும் ஒன்றையடுத்து  ஒரு முத்திரையிடுதலானது ஒரு பிற்கருத்தே ஆகும்.  அதாவது அபிப்பிராயம்.  அபி என்பதில் அ-  அடுத்து,  பி -பின்னர் அல்லது பின்னால்,  பிராயம்:  பிர - பிறப்பிக்கப்பட்டு,  ஆயம்  -  ஆயதாக  மேற்கொள்ளப்பட்டது.  பிறக்க ஆயது - "பிராயம்" ஆனது. அபிப்பிராயம் - அதன்பின் கருத்து என்பதன்றி வேறில்லை பிராயம் - வயது என்பது வேறு. homonym.  ஒத்தொலிச் சொல் அல்லது ஒத்தொலிக் கிளவி. இப்படிப் புனைந்து ஆக்கம் செய்கையில் பல மனிதர்கள் அதை எட்ட இயலாமல் சிந்தனைச் சுழலில் சூழிருளில் வீழ்தலுறுவர்.  இங்குக் கண்டு தெளிக.

பல கடின ஒலிச்சொற்கள் மெலிப்பொலி மேற்கொண்டன:  எ-டு:  பீடுமன் > பீமன்.  கடின ஒலியான டு விலக்குண்டது. இதுபோல்வன தந்திரச்சொற்புனைவு.  இலக்கணம் "கிலக்கிணங்களில்" இல்லை.  இவற்றுள் பலவற்றை எடுத்துக்காட்டியுள்ளோம்.  இன்னொன்று கடலைக் கடக்க உதவும் கப்பல்:  இது உண்மையில் கடப்பல் ஆகும்.   டகரம் விலக்குண்டது.  கட - பகுதி. பு இடைநிலை.  அல் - விகுதி.  இலக்கணத்தில் இதை அறிந்திருந்தனர்.  ட - இடைக்குறை.  

வரு என்பது வினைப்பகுதி.  வந்தான் என்ற வினைமுற்றை எடுத்துக்கொள்க. இந்த ரு என்னும் எழுத்தை விலக்காவிட்டால்,  வருந்தான் என்று உருக்கொண்டு, வருந்த மாட்டான் என்று பொருள்பட்டு,  பொருள்மயக்கம் உண்டாகும்.  ஆதலால், ரு என்ற சொல்லின் ஈற்றை  வீசி எறிந்தனர்.  பின்பு  வந்தான் என்று அமைந்தது.   வந்தான் என்பதே இறந்தகால வினைமுற்று என்று இயலில் பதிந்துவைத்து,  எறிந்ததைச் சொல்லாதுவிட, உமக்கும்  மூளைக் குழப்பம் ஏற்படாதொழிந்தது.  கடின ஒலிகளை விலக்கியது மொழி இயலின் ஒரு தந்திரம்.  பொருள் மயக்கு உண்டான போது விலக்கியது இன்னொரு தந்திரம்.  என் வாத்தி எமக்கு எப்போதோ சொல்லிவிட்டார்.  உங்கள் வாத்தி உங்களுக்குச் சொல்லாமலா இருப்பார்?  தமிழாசிரியர் தம்ழுணர்வு மிக்கோர்.  எனினும் என்னவுள்ளது என்று  இங்கு அறிந்து மகிழ்க.

இதனை ஒன்றுக்கு மேற்பட்ட நெறிகளில் தமிழாவது காண்புறுத்தல் இயலும். இன்னொரு வகை இங்குள்ளது.  அதனையும் வாயித்து  ( வாசித்து,  யி>சி)   மகிழுறுக:   https://sivamaalaa.blogspot.com/2020/07/blog-post_6.html.   சொல்லியலின் பட்டியலில் இன்ன பிற  உள்ளன. நேரம் கிட்டினால் படித்துச் சிந்தனை விரிக்க.

பயில்தொறும் நூல்நயம் என்றார்  தெய்வப் புலமை நாயனார்.  சிந்திக்கும் தொறும் சொல்நயம் விரிப்பீராக..

மெய்ப்பு பின். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.


சனி, 30 அக்டோபர், 2021

கோ - அரசன்; கோ - மாடு, எப்படி?

 இன்று கோவன், கோன் என்ற சொற்களைக் கவனிப்போம்.

கொடுத்தல் என்பது வினைச்சொல். இது முதனிலை நீண்டு பெயராகும் போது கோடு என்று வரும்.  இப்போது இச்சொல்லில் அன் என்ற விகுதியை இணைக்குங்கால் :-

கோடு + அன் = ( கோடன்.) 

கோடு + வ் + அன் =( கோடுவன்), இது டுகரம் இடைக்குறைந்து, கோவன் ஆகும்.

கோடு + அன்  =( கோடன்), இது டகரம் இடைக்குறைந்து:  கோன் என்றாகும்.

கொடுத்தல் என்ற பொருளேயன்றி,  கோடு என்பதற்கு மலையுச்சி என்ற பொருளும் இருந்தது.  எடுத்துக்காட்டு:  திருச்செங்கோடு.   இது ஓர் ஊரின் பெயராகவும் உள்ளது.  திரு என்ற அடைமொழி இன்றி, செங்கோடு என்பதனோடு அன் விகுதி இணைக்க,  செங்கோடன் என்று வரும்.  இது செம்மையான மலையுச்சியை உடையவன் என்று பொருள்பட்டு, அவ்விடத்து ஆட்சியாளன் என்ற பொருளைத் தரும்.

கடின ஒலிகளை விலக்கி,  மெல்லோசை தழுவச் சொல்லை அமைத்தலை இடைக்காலத்தில் கடைப்பிடித்தனர்.  மனிதன் போகப்போகத்தான் பல தந்திரங்களை அறிந்து  அவற்றைத் பயன்படுத்திக்  கொள்கிறான். இதை ஒரு முன்னேற்றம் என்றாலும்,  பிற்போக்கு என்றாலும் அதற்கு ஒரு முத்திரையிடுதலானது ஒரு பிற்கருத்தே ஆகும்.  அதாவது அபிப்பிராயம்.  அபி என்பதில் அ-  அடுத்து,  பி -பின்னர் அல்லது பின்னால்,  பிராயம்:  பிர - பிறப்பிக்கப்பட்டு,  ஆயம்  -  ஆயதாக  மேற்கொள்ளப்பட்டது.  பிறக்க ஆயது - பிராயம் ஆனது. அபிப்பிராயம் - அதன்பின் கருத்து என்பதன்றி வேறில்லை பிராயம் - வயது என்பது வேறு. homonym.  ஒத்தொலிச் சொல் அல்லது ஒத்தொலிக் கிளவி. இப்படிப் புனைந்து ஆக்கம் செய்கையில் பல மனிதர்கள் அதை எட்ட இயலாமல் சிந்தனைச் சுழலில் சூழிருளில் வீழ்தலுறுவர்.  இங்குக் கண்டு தெளிக.

பல கடின ஒலிச்சொற்கள் மெலிப்பொலி மேற்கொண்டன:  எ-டு:  பீடுமன் > பீமன்.  கடின ஒலியான டு விலக்குண்டது. இதுபோல்வன தந்திரச்சொற்புனைவு.  இலக்கணம் "கிலக்கிணங்களில்" இல்லை.  இவற்றுள் பலவற்றை எடுத்துக்காட்டியுள்ளோம்.

இப்போது கோட்டைக்குத் திரும்புவோம்.

பெரும்பாலான அரண்கள், மலையுச்சிகளில் அமைக்கப்பட்டன.  ஆகவே, கோடு + ஐ = கோட்டை ஆகி அரண் ஆகிய அமைப்பைக் குறித்தது. பின்னாளில் மலை இல்லாத இடத்தில் அமைந்த அரணையும் கோட்டை என்றே கூற, அது தன் அமைப்புப் பொருளை இழந்தது.

கொடு, கோடு என்பன வளைவு என்று பொருள்படும்.  ஒருவன் ஒன்றைப் பிறனுக்குத் தருகையில், பண்டை வழக்கப்படி வளைந்து கொடுத்தான். அதனால் வளைவு என்று பொருள்தரும் சொல், கொடுத்தல் ( தருதல் ) என்னும் பொருளை அடைந்தது.  வாங்குதல் என்பதும் வளைவு.  வாங்கறுவாள் - வளைந்த அறுவாள்.  வாங்கு -  வளைந்த இருக்கை. இது மலாய் மொழிக்குச் சென்று "பங்கூ" என்று, இருக்கையைக் குறித்தது.  " வாங்குவில்"  என்றால் வளைந்த வில். " வாங்குவில் தடக்கை வானவர் மருமான் "  என்ற தொடரில் வாங்குவில் என்றது காண்க.

குன்றுதோறும் ஆடுதல் என்பது பல குன்றுகளில் ஆட்சிபுரிதல் என்ற பொருளை உடைய தொடர்.  ஆள்> ஆடு என்று திரியும்.  (ஆட்சி).

போரில் மலைகளைப் பிடிப்பது சிறப்பு.  அங்கிருந்து எதிரியின் படை நடமாட்டங்களை எளிதிற் கவனிக்கலாம்.  மலையை உடைய குறுநில மன்னர் இருந்தனர்.  பாரி வள்ளல் பறம்புமலைக்குச் சொந்தக்காரன்.  மலையமான்- இவனும் மலையை உடையவன்.  மலைய -  மலையை உடைய.  மலையன் என்பது மலைக்காரன் என்று பொருள்தரும். குன்றத்திலுள்ளவன் குன்றன். இனிக் குன்று > இடைக்குறைந்து குறு >  குறு + அன் = குறவன்.

மாடு என்றால் அது ஒரு செல்வம்.  அது பல வரவுகளைத் தருவது.  பால், தயிர் இன்னும் உள.  அதுவும் கோடு என்ற கொடுத்தல் சொல் கடைக்குறைந்து கோ என்றாகி,  மாட்டினைக் குறிக்கும்.  மாடல்ல மற்றையவை என்ற தொடரில், மாடு என்ற சொல் ( குறளில் ) செல்வத்தைக் குறித்தது அறிந்துகொள்க.

இன்னும் உள. அவை பின்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு:  பின்னர்.


வெள்ளி, 29 அக்டோபர், 2021

29102021 கோவிட்19 சிங்கை

 [Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 29]

 

அக்டோபர் 28, நண்பகல் 12 மணி நிலவரப்படி, 1,732 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்,

- பிராணவாயு தேவைப்படுவோர்: 294

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவோர்: 75

- தீவிர சிகிச்சைப் பிரிவில் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளோர்: 61

- தீவிர சிகிச்சைப் பிரிவின் பயன்பாட்டு விகிதம்: 72.8%


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில்,

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.7%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 0.9%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவோர்: 0.1%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் கடுமையாக நோய்வாய்ப்பட்டோர்: 0.1%

- உயிரிழந்தோர்: 0.2%

  

அக்டோபர் 27 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / 2 தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 84%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%

- Booster தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 14%


அக்டோபர் 28 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 3,432 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வாராந்திர நோய்ப்பெருக்கு விகிதம் - 1.13.


go.gov.sg/moh281021

பைரவர் வைரவர்

 காலபைரவருக்குரிய தேய்பிறை அட்டமியும் முற்றவே, இன்று இன்னொரு தினம் ஆயிற்று.  காலபைரவரைப் போற்றினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம் நம்பிக்கை.  "எதையும் நம்புவதென்பதைவிட அதைத் தேடிச்செல்வதுதான் நம் மதம்" என்று வேறுபாடாகச் சிலவேளைகளிற்  குறிக்கப்படும் ஒரு வாழ்வியல் முறையின் இலக்கணம்  தான் -   நமது,   என்றும் சொல்வர்.   எனினும் எதையும் நம்பாமல் வாழ்வதென்பது இயலாத வேலை.  இல்லை என்பவன் இல்லை என்பதை நம்புவது போலவே உள்ள தென்பவன் உள்ள தென்பதை நம்புகின்ற படியால் நம்பிக்கை இல்லாத வாழ்வே உலகில் இல்லை என்ற முடிவுக்கு வந்தாலும் அது சரியாகவே இருக்கும் என்று தோன்றுகின்றது.

பைரவர் என்பது துர்க்கையம்மனின் ஒரு போராளி அல்லது படைஞன் என்று சொல்லப்படுகிறது.  பைரவத் தெய்வம் என்பது  அம்மனின் கணம்.  பைரவர் சேத்திரபாலன் எனவும் குறிக்கப்படுவார். பைரவர் என்பதும் அவரின் பெயரே.  துர்க்கை யம்மன் காடுகிழாள் எனவும் குறிக்கப்பட்டு,  பைரவரின் தாயாய்  "காரிதாய்" எனப்படுதலும் உளது. 

இவைதவிர,  சிவபெருமானின் 64 திருமேனிகளில் பைரவரும் ஒன்றாகிறார். மேலும் அறுபத்து நான்கு பணிகளைச் செய்யுங்கால் ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வோர் அடைமொழியில் பெயர் இணைக்கப்பட்டும் அறியப்படுகிறார்.  

பைரவ வழிபாடு பற்றி இத்துணை விரிவாகப் பல்வேறு கருத்தீடுகள் கிட்டுதல் கொண்டு, இவை அமைந்து உலவுதற்குக் கழிபல யாண்டுகள் சென்றிருத்தல் வேண்டுமென்பதை நீங்களே சிந்தித்து அறிந்துகொள்ளலாம்.  Rome was not built in a day என்பதை உன்னுக.

இவை புராணங்களிலிருந்து பெறப்பட்டனவாக உச்சம் பெற்று ஒரு புறம் நிற்க, நாட்டு வழக்கில் வைரவர் என்றால் நாய் என்று அறியப்படுகிறது.  மேலும் தொன்மங்களும் வைரவரைச் சிவபெருமானின் வாகனம் என்று சொல்கின்றன.  இவை அனைத்தையும் இங்கு விரித்துரைத்தல் இயலாதது.

இவ்விடுகையில் வைரவர் - நாய் என்ற பொருளுக்குரிய சொல்லமைப்பை மட்டும் அறிவோம். இதிலும்கூட, இச்சொல் ஒரு பல்பிறப்பி  ( பல்வேறு உள்ளுறைவுகளால் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் ஒரு முடிபு கொள்ளும் சொல் ) . இவை எல்லாவற்றையும் இங்குச் சொல்லாமல் ஒன்றை மட்டும் சொல்லி மற்றவற்றை அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளின்போது எடுத்துக்கூறுவோம். ஓரே இடுகையில் இதைச் செய்து முடித்தல் இயலாது.

இனி அமைப்பு விளக்கம்:

வை + இரவு + அர் ( அல்லது அன் ) >   வயிரவர்   (  இது ஐகாரக் குறுக்கம்  வை - வ) > வைரவர்.

வை =  வய்.

வயி என்பதில் இகரம் கெட்டது.  ஆக வய் > வை ஆனது.

இதனைப் பொருண்மையில் வரையறவு செய்ய:-

இரவில்  ( வாசலின்முன் காவலுக்கு ) வைக்கப்படுபவர் என்றாகிறது.

இரவில் வைரவர் - பைரவர் என்ற தேவரை அல்லது கடவுளை வீட்டு வாசலில் நிறுத்தும் வழக்கம் எங்கும் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ( இருந்திருந்தால் பின்னூட்டம் செய்தல் வேண்டுகிறோம்).  நாயை இரவில வாசலில் ( கட்டியோ கட்டாமலோ) வைக்கும் வழக்கம் இருந்தது. கட்டாமல் விட்ட வீடுகளிலும் அது வாசற்பக்கம் படுத்துக் கவனமாகக் காக்கும் தன்மையது. ஆனால் வீட்டின் பின் பக்கத்திலும் சுற்றுவட்டத்திலும் அங்கிருந்துகொண்டே அது கவனம் கொள்ளும் திறனுடையது.  ஆதலின் இச்சொல் நாயைக் குறித்ததற்கு இது ஒரு காரணமாகிறது.  வைரவர் - பைரவர் என்பது வ-ப மாற்றீடு.

பிற, வாய்ப்புக் கிட்டுங்கால் பின்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

மேலும் வாசிக்க:-

இங்குப் பயன்படுத்திய சொல்: வாகனம்.  முன்னேற்றப் படிகள்

https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_28.html

வாகனம்:  https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_26.html

வியாழன், 28 அக்டோபர், 2021

சிங்கப்பூர் தொற்று கோவிட்19 இன்றை 28102021 விவரம்

 [Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 28]

 

அக்டோபர் 27, நண்பகல் 12 மணி நிலவரப்படி, 1,777 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்,

- பிராணவாயு தேவைப்படுவோர்: 308

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவோர்: 76

- தீவிர சிகிச்சைப் பிரிவில் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளோர்: 66

- தீவிர சிகிச்சைப் பிரிவின் பயன்பாட்டு விகிதம்: 79.8%


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில்,

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.7%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 0.9%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவோர்: 0.1%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் கடுமையாக நோய்வாய்ப்பட்டோர்: 0.1%

- உயிரிழந்தோர்: 0.2%

  

அக்டோபர் 26 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / 2 தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 84%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%

- Booster தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 14%


அக்டோபர் 27 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 5,324 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வாராந்திர நோய்ப்பெருக்கு விகிதம் - 1.15.

புதன், 27 அக்டோபர், 2021

கோவிட்19 நிலவரம் 28102021

 [Sent by Gov.sg – 27 Oct]


As of 26 Oct 2021, 12pm: 

- 1,787 cases in hospital

- 289 require O2 supplementation 

- 79 under close monitoring in ICU 

- 67 critically ill in ICU

- Overall ICU utilisation rate: 79.2%.


2,856 cases discharged; 435 are seniors above 60 years.


Over the last 28 days, of the infected individuals: 

- 98.7% have mild/no symptoms

- 0.9% require O2 supplementation

- 0.1% under close monitoring in ICU

- 0.1% critically ill in ICU

- 0.2% died


As of 25 Oct: 

- 84% of population completed full regimen/received 2 doses of vaccines

- 85% received at least 1 dose

- 13% received boosters


As of 26 Oct, there are 3,277 new cases. The weekly infection growth rate is 1.11.


go.gov.sg/moh261021


📱Access the Gov.sg WhatsApp infobot for the latest COVID-19 news. Type “hello” to get started.

சத்துரு.

 இன்று தமிழன்று என்று கருதப்பட்ட சத்துரு என்ற சொல்லினை முன்வைத்து அதனைப் பிழிந்தாய்வு  மேற்கொள்ளுவோம்.  சொல்லை ஆய்வு செய்வதென்பது ஒருவகையில் பழத்தைப் பிழிந்து சாறு சக்கை விதைகள் என்று பிரிப்பது  போன்றதுதான்.  உரையாசிரியர் கலையில், பொழிப்புரை என்று உண்டன்றோ, அது போல்வதே பிழிந்தாய்வு என்பதும்.  இது நிற்க.

சாத்துவதென்பது, அணிவித்தலென்றும் பொருள்தரும்.  அம்மனுக்குச் சந்தனம் சாத்துதல் என்று சொல்வர்.  இது மேனியெங்கும் தெளித்து அப்புதல் செய்து முழுக்காட்டுவது போன்றதே.

பிடிபட்ட திருடனைச் சார்த்து சார்த்து ( அல்லது சாத்து சாத்து ) என்று சரியாகச் சாத்திவிட்டார்கள் என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம்.  இதற்குப் பொருள் அடி உதையெல்லாம் கொடுக்கப்பட்டன என்பதே.

ஓர் உருவிற்கு அல்லது படிமைக்கு இவ்வாறு சாத்துவது அறிந்து தெளிவாகும் வழக்கே ஆகும்.  இதை " உருவிற்குச் சாத்துதல்" என்றும் சொல்லலாம்.

ஒருவனுடன் பகைமை ஏற்பட்டுவிட்டால் இவ்வாறு ஓர் உருவிற்குச் சாத்துவது போல அவன் பல தொல்லைகளையும் தந்துகொண்டிருப்பான்.  இவ்வாறு அடிக்கடி நடப்பதைப் பேச்சுவழக்கில் இரு கூட்டத்தாருக்கு மிடையில் "பூசல்"கள் இருந்தன என்பர்.  இவ்வாறு பூசுதல், சார்த்துதல், சாத்துதல் என்பனவெல்லாம், அணியியல் வழக்காக,  எதிரியின் நீங்காத தொல்லைத்தரவுகளை விளக்கவல்ல வழக்கின என்பது தெளிவாகும்.

உருவின்மேல் சாத்துதல் என்ற சாத்துரு ( சாத்து + உரு)  என்பதே,  முதனிலை குறுகி, சத்துரு என்று வந்து எதிரி என்று பொருள்படுகிறது.  இது முறைமாற்றுச் சொல்லமைப்பு.  Reverse formation.

சொற்கள் முதனிலை திரிதலென்பதும் குறுகுதலென்பதும் பெருவரவிற்றான சொல்லாக்க நிகழ்வே ஆகும்.  இனி,  சில சொற்களைக் காண்போம்.

காண் >  கண்  ( இங்கு வினை குறுகி விழிக்குப் பெயர் அமைந்தது).

தோண்டு >  தொண்டை ( இங்கு தோண்டுதல் என்ற வினை, தொண்டு என்று குறுகி ஐவிகுதி பெற்று ஒரு சினைப்பெயராகியது.

பாடு >  படனம் > பஜன்.

இன்னும் பல உள்ளன. இதுபோன்ற நீட்சிக்குறுக்கத்தை ஒரு வரைவேட்டில் பதிந்து வைத்துக்கொள்ளுங்கள்.  நிபுணர்  ( நிற்பு உணர்)  ஆகிவிடுவீர்கள்.  அப்புறம் நீங்களும் சொல்லாயுநர் ஆவீர்கள்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.



செவ்வாய், 26 அக்டோபர், 2021

பலர் வீழ்ந்த பரிதாப நிலை.

 பிழைப்பவர் யார்யார் இனியே அறியோம்

இழப்பவர் யார்யார் உயிரை  அறியோம்

தழைக்கும் தகுதியே தாங்குவர் தழைப்பர்

நுழைக்கும் தனைநோய் நுண்மி எனப்பயம்.


நெருநல் உளனே  இன்றிலை  என்றதோர்

பெருநல  உலகில் பின்நிகழ் வறியாது

கருணைத் தெய்வம் வணங்கிக் கலங்கி

வெறுமையில் கிடக்கும் வீண்மை வாழ்வு.


முன்வந் தனர்காண் இந்நாள் கண்டிலம்

தன்வந் தரிக்கே முன்னறி   வியல்வது

இன்தமிழ்  எண்ணி வந்தனர் தமக்கே

இன்தர  விதுவே இருக்கும் வரைக்குமே.



கிருமி நாட்டில் எங்கும் பரவிவிட்டது. community infection. may surge.

நோய் நுண்மி--  கிருமி (தாக்கும்( என்று பயம்)

நெருநல் = நேற்று.

இன்றிலை -  இன்று இல்லை

பின் நிகழ் வறியாது - இனி நடப்பவை அறியாமை

கண்டிலம் = காணவில்லை

தன்வந்தரி - வைத்தியர்.

இன் தரவு - இனிய வழங்கல்

பரிந்து தவித்தல் -  மனமிரங்கித் தவித்தல்,  பரி + தாபம்.

பரி - வினைச்சொல். பரிதல்.

தவி + அம் > தாவம் > தாபம்,  இது வகர பகரப் போலி அல்லது

மாற்றீடு. தமிழே  ஆகும். 

வீட்டுக்கு வந்த சாமியார்.

 ஒரு சாமியார் என்னைப் பார்க்கவந்தார்.  அவரை அன்புடன் வரவேற்று, இருக்கையில் அமர்வித்தேன்.  தலைதாழ்த்திக் கும்பிட்டுக்கொண்டேன். அவர் ஆசீர்வாதம் வழங்கினார்.  என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று கேட்டார். சாமி , எந்தச் சொல் எப்படி அமைந்தது என்று சிந்தித்து என்னிடம் வந்து பேசுகிறவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்றேன். 

ஆசீர்வாதம் பெரியோரிடம் பெற்றுக்கொள்வது தொன்றுதொட்டு நம் பண்பாட்டில் நாம் கடைபிடித்துவருவதாகும்.

ஆ - இது ஆக்கம் குறிக்கிறது.  ஆகு அல்லது ஆ என்ற வினைச்சொல்லும் அதுவே. ஆக்கம் என்பது தொழிற்பெயர். ஆ, ஆகு என்பவை வினைகள். அவ்வளவு தான் வேறுபாடு ஆவது.  இது வேறு சொற்களிலும்  அமைப்பாகப் போற்றப்பட்டுள்ளது. எ-டு:  ஆகு + ஊழ்=  ஆகூழ்.   ஆகும்  ஊழ்   ஊழ் என்பதை இன்னோர் இடுகையில் பகிர்ந்துகொள்வோம்.

[இங்கு யாம் சொல்லவிழைந்தது:   ஆ, ஆகு என்பன முன்னொட்டுக்கள்.  இவை சொல்லின்முன் வைக்கப்படும் சொல்விரி ஆகும்.  இதை ஆங்கிலர் prefix  என்பர்.  காயம் என்பது பழந்தமிழ்ச் சொல்.  இது பின் ஆகாயம் என்று விரிந்து, வானுக்கு மற்றொரு பெயரானது.  காயம் என்பது வெங்காயம், பெருங்காயம், புண் எனப்படும் காயம் , ஆகாயம் எல்லாவற்றையும் குறித்தபடியினால், வேறுபடுத்த ஆகாயம் என விரிக்கப்பட்டது. இது பின் அயலிலிலும் சென்றது நம் பாக்கியமே.  ( பாகு+ இயம் > பாக்கியம் , நற்பகுதி. நற்பேறு.)  சொல்லின் அமைப்பின்படி நாம் பெறுவனவெல்லாம் பேறுதாம்.  துன்பமும் நாம் பெறுவதுதான். எனினும் நற்பேறு ஆவதையே பேறு என்பதுபோல் இது).]

பகு+ தி :  பகுதி.

பகு > பாகு (முதனிலை நீட்சி) >  பாக்கு  (இங்கு ககரம் இரட்டிப்பு)

கமுகு வெட்டிப் பகுக்கப்படுவதால் பாக்கு என்று சொல்கிறோம்.

பாக்கு + இயம் = பாக்கியம்.

பாகு இயம் > பாக்கியம் என்றாலும் மேல் கூறியவற்றைச் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. ஒன்றைச் சொன்னால் பத்தை உணர்ந்து கொள் என்று யப்பானிய மொழி ஆசான்கள் சொல்வார்கள்.  இப்படி இரட்டிப்பதை உணர்ந்துகொள்க.

ஆசீர்வாதம் என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அதனை இங்குக் காண்க.

https://sivamaalaa.blogspot.com/2016/11/blog-post_18.html

இச்சொல்லை வேறொரு கோணத்திலிருந்து மறுபார்வை செய்வோம்:

ஆ-  ஆக்கம்

ஆகு அம் > ஆக்கம் என்று கண்டோம். இங்கு ககரம்  இரட்டித்தது.  கு என்ற ஈற்றில் உகரம் கெட்டது அல்லது வீழ்ந்தது. இவ்வாறு இரட்டித்த இன்னொரு சொல்:  வேக்காளம்.  வேகு + ஆளம் , இதிலும் கு என்பதன் ஈற்று உகரம் கெட்டு,  ககரம் இரட்டித்தது, அதாவது க்கா என்று வந்தது.  தகு அது - தக்கது எனினுமது.

இதில் ஆகு என்பது நிலைமொழி அன்று;  இதற்கு அந்தப் பெயரில்லை. அம் என்பது ஓர் அடிச்சொல், இங்கு விகுதியாய்ப்  பயன்படும். அது வருமொழி அன்று.  இது சொல்லாக்கம்.  புணரியல் சந்தி அன்று.

பின்னூட்டமிட்டால் மேலும் விளக்குவோம்.

சீர் -   சிறப்பானது.

வாழ்த்து+ அம் > வாழ்த்தம் > ( இடைக்குறைத்து ) > வா(ழ்த்)தம்

>  வாதம்.

இனி,  வாய்+த்து+ அம் > வா(ய்த்த)ம் > இடைக்குறைந்து :  வாதம் என்பதே. அதாவது வாயினால் வெளிப்படும் வாழ்த்து அல்லது சொல்.

படச்சுருள்களைத் தணிக்கையர் வெட்டுதல்போன்றவையே இடைக்குறைகளும் மற்ற குறைச்சொற்களும்.  தொல்காப்பியம் இவ்வாறு புனைவுகள் செய்தலைப் புலவர்களுக்குச் செய்யுளியற்ற உரிய விடுகையாக்கினார்.  ஆனால் அவருக்கு முன்னரே  மொழியிலும் இவ்வமைப்பு ஏற்பட்டிருந்தது.  அது பின்னும் தொடர்ந்தது.

வாழ்க்கையின் கெடுபிடிகளிலிருந்தும் பலர் விடுபட நினைத்துத் துறவு மேற்கொண்டனர். இதைச் சிற்றூர் மக்கள் தப்பி ஓடுவது என்று தரக்குறைவாகக் கண்டனர் என்று தெரிகிறது.  பெரியோர் " இல்லறமே நல்லறம்" என்று போதித்து மாற்ற நினைத்தது தமிழ் இலக்கியங்களின் மூலம் தெரிகிறது.  இச்சொல்லின் அமைப்பு அதைக் காட்டுவதாகும்:  

தப்பு + அம் >  தபு + அம் > தபம் > தவம்.  ( ப வ போலி).

அழகான சொல்லானது:  கம்பனும் இச்சொல்லைக் கவினிய பாங்கில் பயன்படுத்தினான். இங்கே:

...................................................

தாங்கரும் தவமேற்கொண்டு

பூழி வெங்கானம் நண்ணிப்

புண்ணிய நதிகளாடி

ஏழிரண் டாண்டில் வாவென்

றியம்பினன் அரசன்..........   

என்பது அவன் கவியின் பகுதி.

[I seldom refer to books. This is from memory. If not correct, please reproduce this for me in

comments column.]

தாங்கரும் தவம் என்றான் கம்பன்.  எவ்வளவு கடினமானது இல்வாழ்வு என்பது இதிலிருந்து தெரிகிறது.  இவர் ஏன் சாமியாரானார் என்று கேட்கத் தோன்றியது. ஆனால் கேட்கவில்லை.  புத்தரைக் கேட்டாலும் இவரைக் கேட்டாலும் ஒரே பதில்தான்.

பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்

பிறவார் உறுவது பெரும் பேரின்பம் என்றார் 

கூலவாணிகன் சாத்தனார்.

நாம் நம் அருமைச் சாமியாரை விட்டு எங்கோ வந்துவிட்டோம்.  அவரிடம் உரையாடிக்கொண்டிருந்தேன்.  அவர் என்னிடம் தெரிவித்தது:  கடவுளுக்கு உலகைப் படைக்கும்போது சில எழுத்துக்களே சிறப்பானவையாகத் தோன்றின என்றார்.  எந்த எழுத்துக்கள் என, அவர்: ஆ வா, ள தா,  ம,   ஏ என்ற  எழுத்துக்கள்தாம் என்றார்.  ஏன் அப்படி என்று கேட்டேன். இதற்கான பதிலை அவர் கூறினார்.  இந்த எழுத்துக்களிலிருந்து நீங்கள் ஏன் இவை சிறப்புடையவை என்று கூறுங்கள்.  

தெரியவில்லை என்றால் பதில் வெளியிடப்படும். 

இங்கே காண்க:   https://sivamaalaa.blogspot.com/2021/10/blog-post_26.html

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்


விடைகள்

சாமியார் கூறிய விடை 

ஆ  தா  ம  :    ஆதாம்

ஏ  வா  ள   :    ஏவாள்.



குறிப்பு:

கூட்டுறபகுதி பிச்சைக்கண்ணு கதை வெளியிடுக

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

குறுக்கலும் குக்கலும் ( குக்கல்- நாய்)

 ஓநாய்களை பிடித்துப் பழக்கி நாயாக்கினான் மனிதன் என்று விலங்கியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.  நாய்கள் மனிதனின் நண்பன் ஆனபின், வேடன் தன் வேலைகளைப் பலவழிகளில் குறுக்கி நேரத்தை மிச்சமாக்கிக் கொணடான் என்பதை மாந்தவளர்ச்சி நூல் உரைக்கின்றது.  ஒரு பெரிய விலங்கு மனிதனோடு சண்டையிட வரும்போது,  நாய் அவனுக்கு உதவியது.  அது அவ்விலங்குக்கும் அவனுக்கும் இடையில் குறுக்கிட்டு,  அவனுடன் சேர்ந்து அவ்விலங்குடன் போரிட்டு, அதனை மடக்க உதவியது.  இவ்வாறு குறுக்கிட்டுக் காத்ததன் காரணமாக, அது குறுக்கல் எனப்பட்டது.  சிலர் அன் விகுதி கொடுத்துக் குறுக்கன் என்றும் கூறினர். நாளடைவில் இச்சொல் குறுகிற்று.  எவ்வாறு?

குறுக்கல் >  குக்கல். ஆயிற்று.

குக்கல் என்பது நாய் என்று பொருள்படும் சொல்..

அவ்வாறே குக்கன் என்ற சொல்லும் ஆகும்.

வேட்டையாடின விலங்கு கிடக்குமிடத்திற்குச் சென்று, குக்கல் அதனைத் தானுண்ணாமல் பத்திரமாகக் கொணர்ந்து,  வேடனிடம் சமர்ப்பித்தது.  இப்போது வேடனின் வேலையும் நேரமும் குறுகிற்று.  இவ்வாறு நாயினால் வரும் நன்மை அனைத்தும் நோக்க, நாய் வேடனுக்குக் குறுக்கல் மட்டுமன்று, பெருங்குறுக்கலும் விழுகுறுக்கலும் ஆம் என்பது விரிக்கவேண்டாமை உணர்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.






மனிதன், நாயுடு, நாயகன், பிறசொற்கள் ஒருங்கிணைப்பு.

 மனிதன் தோன்றி அவனுடைய குமுகாயம் அல்லது சமுதாயம் எவ்வாறு விலங்குகளைப் பயன்படுத்தித் தன் வாழ்க்கையில் முன்சென்றான் என்பதானது பெரிதும் அறியவேண்டிய தொன்று ஆகும். விலங்குகளின் உதவியின்றி மனிதன் முன்னேறியிருக்கமுடியாது.  மனிதன் உயர்நிலை குறிக்கும் பல சொற்களையும் ஆராய்ந்தால் -----  நாமறிந்த மொழியிலே இதைச் செய்தாலும் ஓரளவு போதுமானது -----  அவை விலங்குகளோடும் தொடர்பு பட்டிருப்பதை அறியலாம்.

மனிதன், மந்தி:

மனிதன் என்ற சொல்லையே ஆராய்வோமே.  மனிதன் என்ற சொல்லுக்கு அடிச்சொல் " மன்னுதல்"  --- ( மன் )  என்பதே அடிச்சொல்.  மாந்தன் என்பது,  மன் என்ற சொல்லின் நீட்சி யன்றி வேறன்று. மன் > மான்  ஆகும்.  மன்+ இது + அன் > மனிதன்.   மன் > மான் > மான்+ (  இ ) து + அன் >  மாந்தன்.  இந்தச் சொற்களின் அமைப்பில்  இது, து என்பன த்  என்ற அளவிலேதான் குறுகி நிற்கின்றன.

இப்போது மந்தி என்ற விலங்கை எடுத்துக்கொள்வோம்.   மன் + இது + இ >  மன் + த்  + இ > மந்தி என்று பெருங்குரங்கு ஆகிய விலங்குக்குப் பெயர் ஆகிறது.

அடிச்சொல் ஒன்றுதான்  :  அது மன் என்பதே.

நாயுடு, நாயகன் முதலியவை

நாய் என்பது ஒரு விலங்கின் பெயர். இந்த விலங்குதான் வேடர்களின் உயிர்நாடி நண்பனாக வரலாற்று முதன்மை பெறுகிறது.  வேட்டுவத் தொழிலென்பதே மனித இனங்களின் மிக மூத்த தொழில்களில் ஒன்றாகும். நாயை உடன் வைத்திருந்தவன் மனிதக் கூட்டத்துக்கு மிக்க உதவியாக இருந்தான்.  உடன் என்ற சொல்  உடு + அன் என்பதாகும்.  அடிச்சொல் இங்கு உடு என்பதே.  உடு என்பதன் மூலம் உள் என்பது.   உள் - உடு;  சுள் > சுடு என்பவற்றை ஒப்பு நோக்கி அறிவு பெறலாம்.  அதாவது நாயுள்ளவன்; நாயுடையவன்; நாயுடனிருந்தவன்.  அவன் நாயுடு  ஆகிறான்.  நாயை வீட்டில் வைத்திருந்தவன் காவலுடையவன். வேறு மனிதர்கள் வந்து அவனைக் காக்கும் நிலைவருமுன், விலங்குகளே அவ்வேலையைச் செய்தன.  அவனும் நாயை அகத்து வைத்துக்கொண்டு  " நாயகன் " ஆனான்.   நாய் + அ + கு + அன் > நாயக்கன் என்பதும் அதுவே.

இங்கும் நாய் என்ற விலங்குக்கான சொல் வன்மை பெற்று நிற்கின்றது.


மாடன், மாடி  முதலியவை:

மாடு வளர்ப்பு மனிதனின் வழக்குக்கு வருமுன்,  மாடுகள் காடுகளுக்கு உரியவையாய் இருந்தன.  பழக்கியபின்,  மனிதனுடன் அருகிலே கொட்டகையில் வாழ்ந்து அவனுக்குப் பாலும் அளித்தன. 

மாடு மனிதனைக் காத்தது உணர்ந்த மனிதன் அவனைக் காத்த சிற்றூர்த் தெய்வத்தையும் " மாடன் "  "  மாடி "  என்று வணங்கினான்.  மாடு என்ற விலங்கும் மனிதன் உணவு உண்டாக்குவதற்குப் பலவகையிலும் உதவியது.  அதனால் மடு > மாடு ஆயிற்று. ( மடுத்தல்: உண்ணுதல் ). முதனிலை திரிந்த தொழிற்பெயர். மாடன் மாடி என்ற தெய்வங்களும் மீண்டும் வந்து வந்து அவனுக்குக் காவலாய் இருந்தன என்று மனிதன் உணர்ந்தான். மடிதல்,  மீண்டு திரும்புதல்.

இயற்கையில் காட்டில் வாழ்ந்த மாடு, மனிதனால் எடுத்துக்கொள்ளப்பட்டு  வீட்டு விலங்கு ஆகிற்று.  கொள் >  (முதனிலை திரிந்து நீண்டு)> கோ(ள்)  ஆகிற்று. பழக்கப்பட்ட விலங்கு என்று, அதைக் கோ என்றான். ( முதனிலை திரிந்து நீண்டு கோள் ஆகிப் பின் ளகர ஒற்று வீழ்ந்த கடைக்குறை ஆகிக் கோ ஆனது.)   பொருள்: கொள்ளப்பட்டது,  மாடு. மாடு முதலிய வளர்த்துச் செல்வனாகித் தலைவனானவன்,  கோ - ஆட்சியன் ஆயினான்.  இவ்வாறு ஒரே அடிச்சொல்லே  அரசனுக்கும் மாட்டுக்கும் வந்தது.

இடு ஐயன் - இடையன்

மாடு ஆடு வளர்ப்பினால் செல்வநிலை பெற்று, பிறருக்குக் கட்டளை இட்டவனே இடு + ஐயன் > இடையன் ஆனான்.   கட்டளை இடும் தலைமகன். இடையிலிருப்போன் என்பதன்று. இடுதல் என்பது:  பிறர்க்கும் உணவிடுதல், ஊதியம் இடுதல் எனப் பிற இடுதல்களையும் தழுவுவது இச்சொல்.

இதனை அடுத்தடுத்து மேலும் அறிவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின். 

குறிப்பு: 

சில கூடுதல் விவரங்கள்:  

சந்நிதி  https://sivamaalaa.blogspot.com/2016/12/blog-post_16.html


சனி, 23 அக்டோபர், 2021

வீட்டுக்குள் குளம் அமைத்துக்கொள்ளுங்கள்.

 இது கொவிட் தொற்றுக் காலமாக விருப்பதால்,  வீட்டினுள் பூட்டிக்கொண்டு வாழவேண்டிய நிலையில் பலர் உள்ளனர்.  நேரம் போவதற்குத் தொலைக்காட்சி பார்க்கலாம்.  வானொலி கேட்கலாம். கணினியில் வரும் செய்திகள் வாசிக்கலாம்.  ஆனால் இன்னொன்றும் செய்யலாம்.  அதுதான் ஒரு சிறிய  குளம் அமைத்து, அதனைச் சூழச் செடிகொடிகள் வளரவிட்டு இயற்கையைப் போற்றி மகிழ்வது.  பார்ப்பதற்கு வீடு குளிர்ச்சியாக இருக்கும்.

திரு கரு-ஜீ  அவர்கள்,  இப்போது ஒரு குளம் அமைத்துக்கொண்டு உள்ளார்.  விரைவில் நல்ல செடிகொடிகள் தொட்டியைச் சூழ  அமைப்புறும்.  செழித்து வளரும். அது முழு அமைப்பை அடைந்த பின்னர் இன்னொரு படத்தை எடுத்து உங்களுக்குத் தருவோம்.  இப்போது தொடக்கநிலைக் குளத்தைக் கண்டு, தோன்றியபடி நீங்களும் பின்பற்றலாமே.  செலவு ஒன்றும் அதிகம் ஆகாது.

நாய் வளர்ப்பவராக இருந்தால்,  அது குளத்தில் போய்ப் பாய்ந்துவிடாமலும் செடிகொடிகளைக் கடித்துவிடாமலும் பார்த்துக்கொள்ளவேண்டிய கூடுதல் வேலையும் உங்களுடையதாகிவிடும்.

வாழ்த்துக்கள்.






வெள்ளி, 22 அக்டோபர், 2021

கோவிலில் கொரனா


 அறிந்து கவனம் மேற்கொள்க.

பெரிய குடும்பம் - சிறிய குழந்தைப் பேச்சு ( விஜைடிவி)


 இக்குழந்தை திறமைசாலி.  வாழ்த்துக்கள்

Singapore recovery stalled by 100k seniors who won’t get jabs —Australian newspaper

 இந்தச் செய்தியை இங்குச் சொடுக்கி வாசிக்கவும்.


https://theindependent.sg/singapore-recovery-stalled-by-100k-seniors-who-wont-get-jabs-australian-newspaper/ 



Singapore  — Who’s to blame for  Singapore’s “stalled” recovery from Covid-19?

தொடர்ந்து மேலுள்ள இணைப்பைச் சொடுக்கி வாசிக்கவும்.

கோவிட்19 23102021 சிங்கப்பூர்

 [Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 22]

 

அக்டோபர் 21, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,613 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 346 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 61 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.6%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.0%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.1%

- உயிரிழந்தோர்: 0.2%

  

அக்டோபர் 20 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 84%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%


அக்டோபர் 21 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 3,439 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


go.gov.sg/moh211021

போஷாக்கு என்ற அயற்பதம்

ஓர் அயற் பயன்பாட்டுக்காக ஒரு சொல்லைப் படைத்தளிக்கும்படி ஒரு தமிழ்ப் புலவனைக் கேட்பதாக வைத்துக்கொள்வோம்.  இது ஒரு வகையில் தமிழ் இலக்கண விதிகளைக் கவனிக்கவேண்டாத ஒரு கட்டற்ற கடமை என்றே சொல்லவேண்டும். இதற்குக் காரணம், பயன்பாடு வேறு மொழியில் என்னும்போது குடாப்பிலிருந்து வெளிவந்த கோழிபோல எப்படி வேண்டுமானாலும் செயல்படும் வசதி ஏற்பட்டுவிடும்.  தமிழென்பதோ பல இலக்கண விதிகள் உள்ள மொழி.  இதில் பலவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டிய கட்டுப்பாடு உள்ளது.  மற்ற மொழிக்கு எனில், அம்மொழிக்கு இலக்கணங்கள் இருந்தால் அவற்றை ஒரு வேளை கவனத்தில் கொள்ளவேண்டி வரலாம்.

போஷாக்கு என்ற சொல்லின் வினை,  போஷித்தல் என்பதாகும்.  ஆகவே போஷி என்ற சொல் எவ்வாறு வந்ததென்பதை முதலில் அறியவேண்டும். போஷித்தல் என்பது ஊட்டமளித்தல் என்ற பொருளது ஆகும்.

ஊட்டச்சத்துக்கள் என்று கருதத்தக்கவை எல்லாம் உடலுக்கு வெளியில்தாம் உள்ளன.  மனிதன் உடலுக்கு ஊட்டமளிக்க,  இவ் வெளியில் கிட்டும் உணவுகளைத்தாம் உட்கொள்ள வேண்டும். அதாவது உடலுக்குள் போகும்படிச் செய்தல் வேண்டும்.

போ > போ இ  > போ இத்தல் .

இது புது > புதுப்பி > புதிப்பித்தல் என்பது போன்றது.  ~பி  என்ற பிறவினை ஆக்க விகுதியானது, உண்மையில்  புது +ப் + இ  என்பதே ஆகும்;  அணிவித்தல் என்பதில் வி என்பது உண்மையில் வ் + இ  என்பதே.  ப் வ் என்ற இடைநிலைகள் உடம்படுத்துவன.  வசதியின்பொருட்டு  ~வி என்றும் ~பி என்றும் விளக்கப்படும்.

அசைஇ ,  காணி(~த்தல்)    என்று வருவனவற்றில் இ என்பதும் வேறன்று. 

இது பின்பு  போயி > போஷி > போஷித்தல்  ஆனது.  ( உடலினுள் போமாறு செய்தல் ).   அதாவது உண்ணுதல் மூலம் ஊட்டச்சத்தை அளித்தல்.

போஷக்கு என்ற தொழிற்பெயரில்,  போஷி + கு >  போஷாக்கு என்று சொல் அமைந்தது.  கு என்பதும் ஒரு சொல்லாக்க விகுதியே. எ-டு:  குறு > குறுக்கு. இதற்கு ஆக்கு என்ற தமிழ்ச்சொல் பின்புல உதவியாயிருந்தது.

இவ்வாறு போஷாக்கு என்ற சொல் அமைந்தது காணலாம்.

இனி, புசித்தல் :  புசி > புசி ஆக்கு > பூசாக்கு > போசாக்கு என்று வந்தது எனினும் அவ்வாறும் அமைதல் கூடுமாதலால், இஃது ஓர் இருபிறப்பி என்று முடிக்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.




வியாழன், 21 அக்டோபர், 2021

22102021 covid singapore

 [Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 21]

 

அக்டோபர் 20, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,718 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 337 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 67 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.7%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.0%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.1%

- உயிரிழந்தோர்: 0.2%

  

அக்டோபர் 19 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 84%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%


அக்டோபர் 20 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 3,862 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


go.gov.sg/moh201021


🔹 தற்போது நடப்பில் உள்ள கட்டுப்பாடுகள், சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பைப் பாதுகாக்கவும் நிலைமையைச் சீர்ப்படுத்தவும், நவம்பர் 21 வரை நீட்டிப்பு


🔹 பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும்  நபர்களுக்கும் ஆதரவு நீட்டிப்பு


go.gov.sg/mohpr201021

சூளை என்பது மற்றும் கயிலை மலை

 கள் என்பது கருப்பு என்று பொருள்தரும் அடிச்சொல்.  இச்சொல்லை நம் முன் தமிழ் ஆய்வாளர்கள் ஆய்ந்துள்ளனர்.  அவர்கள் ஆய்வின்படி,  காளி என்ற சொல்லும் கருப்பம்மை என்ற கருத்தறிவிக்கும் சொல்லாகும்.  கள் என்பது அடியானால் அது காள் என்று முதலெழுத்து நீண்டு, இகர விகுதி பெற்றுப் பின்னர்தான் காளி என்றாகும்.  முதலெழுத்தை இலக்கணத்தில் முதனிலை என்பார்கள். ( a technical term in grammar ). 

கள் என்ற அடிச்சொல்,  காள் என்று திரிந்தது போலவே, சுள் என்பது சூள் என்று திரிந்துள்ளது.   சுள் என்ற அடிச்சொல்லின் பொருள்  "வெம்மை" என்பதாகும்.

சுள் >  சுள்ளை.

இது மட்கலம் சுடும் சூளையைக் குறித்தது.  சுள் + ஐ என்று ஐவிகுதி பெற்றுள்ளது.  இது வெள் > வெள்ளை என்பதுபோலும் விகுதிப்பேறுதான்.

சுள் >  சூளை.  

இது மேற்குறித்தவாறே  நீண்டது, விகுதியும் பெற்றது.  சூளை என்பதும் சூடு மிகுத்து செங்கல் முதலியன சுடும் இடமே ஆகும்.  இதைக் காளவாய் என்றும் கூறுவதுண்டு.

காளவாய் என்ற சொல்லில் "காள்" என்ற ஒரு சொல்லும் வாய் என்ற இன்னொரு சொல்லும் கூடியுள்ளன. " வாய்" என்பது இடம் என்று பொருள்தரும் சொல்.  காள்+வாய் = காளவாய் என்பதில்,  அகரம் இடைநிலையாய் வந்துள்ளது.  இதை "அவாய்" என்று பிரிக்கவேண்டாம்.  நெருப்பு எரிந்து புகை எழும்பிக் கருப்பாவதால்,  கருப்பு என்ற பொருள்தரும் சொல்லுடன் வாய் என்பது இணைந்து இச்சொல் அமைந்தது பொருத்தமாகும்.  ( A furnace where bricks are made by heat.)

படுசூளை என்பது வட்டமான சூளை.   மூடியது போன்ற சூளை மூடுசூளை எனப்படும் என்று அகரவரிசைகள் தெரிவிக்கின்றன.  இப்போது செங்கல் செய்யும் தொழில் முன்னேற்றம் அடைந்துள்ளது.  இந்தச் சொற்கள் இப்போது வழக்கத்தில் இருக்கக்கூடும்.  அறிந்தோர் பின்னூட்டம் செய்க.  மால் என்பது திருமால் என்னும் கடவுளைக் குறிப்பதுடன்,  காளவாயையும் குறிக்கிறது. மால் என்பது கருவலான நிறம்.  சூட்டினால் இந்நிறம் ஏற்படுவதால், மால் என்பது காளவாயையும் குறித்தது.  இது  (மால்) இப்போது இப்பொருளில் எங்கும் வழங்குவதில்லை என்று தெரிகிறது. 

சுள் - சுடு என்றும்  சூள் -  சூடு என்று திரியும் தொடர்புடையவை.  சுடுதல் என்ற வினை, முதனிலை நீண்டு சூடு ஆகும் என்றும் அறிக.

கிணறுபோல் வெட்டப்பட்ட காளவாய்  "கைக்காளவாய்"  என்பது.  

கை> கய் > கயம்.  கயமென்பது நிலக்குழியில் நீர் நிற்கும் பகுதியாகும். அதாவது குளம் ஆகும்.    கை என்ற சொல்லுக்கு உள்ள பல பொருளில் நிலக்குழிவு என்பது ஒரு பொருள்.  இப்பொருளைக்   "கைக்காளவாய்" என்பதன் மூலம் மீட்டெடுக்க இச்சொல் வசதி செய்கிறது.  இனிக் "கைலாசம்" என்ற சொல்லையும் காண்க.

கைலாசம் https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_26.html

ஒரு மலையிலிருந்து கீழ் நோக்கின்,  அதன் கை  -   அதாவது,   பக்கங்கள் கீழ்நோக்கி இறங்குவன ஆகும்.    இதுவும் ஒரு நிலக்குழிவே  ஆகும்.  கைலாசம் என்பது உச்சியிலிருந்து நோக்கக் கீழ்ப்பகுதியில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.  மலையிறக்கம் என்பது.  ஆகவே கை என்பது குழிவு குறிக்கும் என்று தெரிகிறது.  மேலும் அது கயம் என்பதனுடன் பொருந்துகிறது.

குழி என்பது வட்டமாகவோ நாற்கோணமாகவோ இருக்கலாம்.  இஃது உண்மையில் தரையில் உள்ள குழிவுதான். நம் கைகளும் தோளிலிருந்து கீழிறங்குவனவே யாகும். கயம் அல்லது குளம், நிலமட்டம் ஒரு புறத்து இறங்கி இன்னொரு புறத்து மேலேறி வரும்.  நடுவிற் குழிவு.  கையுடன் ஒப்பிட , கைகளில் எலும்பு சதை நரம்புகள் முதலிய உள்ளன.  கயத்தில் நீர் இருக்கும். 

இதனால்  கை > கய் > கயம் என்பது உறுதியாகிறது.

எனினும், கைலை அல்லது கைலாசம் என்பது மலையின் இறக்கத்தில் உள்ள பகுதி என்பது முன்னர் இருந்த எழுத்துரைகளில் காணப்பட்டது.  அது இப்போது கிட்டவில்லை. கைலாசம் என்பது மலையுச்சியைக் குறிக்கவில்லை. தாழ்வான பகுதிகளில் மக்கள் செல்லத்தகும் நிலப்பகுதிகளையே குறித்தது.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்

குறிப்பு:

[ ஒரு கலைச்சொல்லையோ அறிவியற் சொல்லையோ பயன்படுத்தினால் அதை எப்படி அவற்றைக் கற்றோர் பயன்படுத்தினரோ அப்படியே பயன்படுத்தவேண்டும்.  வேறு பொருளில் அதைப் பயன்பாடு செய்வது தவறே ஆகும். காரணம் பொருளைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் தவிர்க்கப்படவேண்டும். எடுத்துக்காட்டாக, mutatis mutandis, prima facie, fee simple முதலான சட்டத்துறைச் சொற்கள்.]


மலேசியா எச்சரிக்கை: தடுப்பூசி போடாதோருக்கு.....

 வாழ்க்கையே "கஷ்டகாலம்"  (இடர்க்காலம்)   ஆகிவிடும்:

இங்கே சொடுக்கி வாசிக்கவும்.


https://theindependent.sg/life-is-about-to-get-even-harder-for-malaysians-who-refuse-the-covid-vaccine/


பொய்ச் செய்திகளால் பலர் அஞ்சுகிறார்களோ?


சிவமாலாவும் குடும்பத்தாரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். எல்லாம்

நலமே.

நம் சிவமாலா மூன்று/நான்கு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டுள்ளார்:

"ஃப்ளூ"  என்னும் சளிக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி.

"நிமோனியா"வுக்கு எதிரான தடுப்பூசி

கோவிட்19க்கு எதிரான 2 தடுப்பூசிகள் ( ஃபைசர் )

சிங்கப்பூரில்:-

மாடர்நா மற்ற ஊசிமருந்துகள் பற்றிய பட்டறிவு ( அனுபவம்) எங்களுக்கு இல்லை. ஃபைசர், மற்ற சளிக்காய்ச்சல் தடுப்பூசி, நிமோனியாத் தடுப்பூசி இவற்றால் எந்தப் பாதகமும் ஏற்படவில்லை. நலமாகவே உள்ளோம். மதுவருந்துவதானால் உங்கள் மருத்துவரை ( டாக்டரைக்) கலந்தாய்வு செய்துகொள்ளவும்.

மலேசியாவிலும் நல்ல மருத்துவவசதிகள் உள்ளன. மருந்துகளும் வாங்கலாம்.

நலமுடன் வாழ்வோம்,


புதன், 20 அக்டோபர், 2021

20102021 சிங்கைத் தொற்று

 [Sent by Gov.sg – 20 Oct]


As of 19 Oct 2021, 12pm, 1,738 COVID-19 cases are warded in hospital. There are 338 cases of serious illness requiring oxygen supplementation and 71 in the ICU. 


Over the last 28 days, of the infected individuals, 98.6% have mild or no symptoms, 1.0% requires oxygen supplementation, 0.1% requires ICU care, and 0.2% has died.


As of 18 Oct, 84% of our population has completed their full regimen/received 2 doses of vaccines, and 85% has received at least one dose. 


As of 19 Oct, there are 3,994 new cases in Singapore. 


go.gov.sg/moh191021

கோவிட் காலத்தில் திருமணம் செய்யலாமா?

முன்னுரை:

திருமணம் என்பது அறிவியற் படி ஓர் இயற்கை நிகழ்வன்று. உயிரினங்களிடை மணவினை நிகழ்வுகள் இல்லை என்றே தெரிகிறது. ஆயினும் கடவுள்தான் மணமக்களை ஒன்றாக இணைத்தார் என்று கிறித்துவ வேதாகமம் சொல்கிறது. 

விலக்கிவைக்கலாமோ?
 அவ்வாறு இணைத்ததை விலக்கி வைக்க மனிதர்கட்கு அதிகாரமில்லை அல்லது ஆளுமை இல்லை என்று இயேசு பிரான் சொன்னார் என்று கூறப்படுகிறது. " What God hath put together, let no man put asunder" என்பது அவர்தம் திருவாக்கு என்று கூறப்படும். ஆனால் இங்கிலாந்து மன்னர்கள் தாங்கள் கத்தோலிக்கர்களாய் இருந்த அஞ் ஞான்று, இந்தக் கட்டுப்பாட்டை மறுத்து மணவிலக்குப் பெற்று, மறுமணம் செய்துகொண்டனர். இதனால் "ஆங்கிலிக்கன்" திருச்சபை பிரிவதாயிற்று என்பது மதவரலாறு ஆகும். இதனால் இந்தத் திருச்சபை போப்பாண்டவரின் ஆட்சியின் கீழ் வருவதில்லை. இதனால் மணவிலக்கு மறுப்புக் கொள்கை நெகிழ்தலுற்றுத் தளர்ந்தது.

இந்துக்களுக்குப் புனிதச் சடங்கே!

ஆயினும் இந்துக்களிடை அல்லது சனாதன தருமத்தில், இறைவர்க ளிடையிலும் திருமணங்கள் நடைபெற்றனவாகத் தொன்மங்கள் கூறுவதால், திருமணம் என்பது இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட நிகழ்வு என்றே விதிகள் அறியப்படுதல் வேண்டும். வேறு நூல்களும் உள. ஆனால் எந்த இந்துக்கடவுளும் மணவிலக்கு நிகழ்த்தியதாகத் தொன்மங்கள் கூறவில்லை ஆதாலால், மணவிலக்கு என்பது இந்துக்கள் அறிந்திராத ஒன்று ஆகும். 1955 ஆண்டுக்குப்பின் சட்டங்கள் வந்தன. ( Hindu Marriage Act, 1955, இந்தியா). ஆனால், ஆங்கிலச் சட்டங்களின்படி மணவிலக்கினை இந்துக்கள் பெற்றுக்கொள்ளும் வசதி இருந்தது.

திருமணம் என்பது வாழ்க்கை ஒப்பந்தம் என்று இஸ்லாம் சரியாகக் கருதியது.

தொற்றுநோய்க் காலம்

தற்போது மகுடமுகி என்னும் நோய்த்தொற்றுக் காலமாதலால், இந்துத் திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டுதாம் உள்ளன. ஆயினும் கட்டுவிதிகளுக்கு உட்பட்டு இப்போது நடைபெறுகின்றன. நோய்க்காலம் ஆதலால் திருமண விழாவைத் தள்ளிவைப்பதா வேண்டாமா என்பது பெற்றோருக்குப் பெரியதோர் இடர்ப்பாட்டினைத் தருகிறது. இவற்றையும் தாண்டிச் சில மணவிழாக்கள் நடைபெறுகின்றன. முகக் கவசம் அணிந்து. இடைத்தொலைவு கடைப்பிடித்து உணவினைப் பைக்கட்டுகளில் விழாவில் பகிர்வு செய்து தாலிகட்டி ஒருவாறு இவ்விழாக்கள் முடிவுறுகின்றன. மணமக்கள் இரக்கத்துக் குரியவர்களாகி விடுகின்றனர். கூடுதலான விருந்தினரைக் கூப்பிட முடியவில்லையே என்று கவலை ஏற்படுகின்றது.

நடத்துவதா நிறுத்துவதா?

இதுபற்றி ஒரு சிறு கவிதை:


நோய்த்தொற்றே என்றாலும் வாய்த்தடையே என்றாலும்

மன்றலும் நின்றிடாதே!

காய்கனியாய் ஆவதையே காசினியில் யாராலும்

போய்த்தடை உய்த்தலெளிதோ?

மன்றல் - திருமணம்
காசினி -  உலகம் 
உய்த்தல் - உண்டாக்குதல்

பாலொடு பழமுன்பது மேலும் நிறுத்திவைத்தே

யாரும் அதைக்கொண்டுதான்,

சால நலமொன்று கோலும் நெறிகண்டு

ஞாலம் வளர்தலுண்டோ?


பால் பழம் - திருமணத் தம்பதியர் ஒன்றித்து உண்ணும் ஒரு  நிகழ்வு
கோலும் -  உண்டுபண்ணும்


முற்றுரை:

நோய்த்தொற்றுக் காகத் திருமண வைபவத்தை நிறுத்தலாகாது என்பதே இப்போது மக்களின் கருத்தாக உள்ளது. பெற்றோர் முதுமையில் முந்திக் கொண்ட நோய்த் தொற்றினால் இறந்துவிட்டாலும் மணமக்கள் - இளந் தலைமுறையினர் - பிழைத்துக் கொள்ளலாமே! அதை ஏன் நிறுத்திவைக்கவேண்டும் என்பதே பின்புலத்துச் சிந்தனை ஆகும்.

மெய்ப்பு - பின்பு







செவ்வாய், 19 அக்டோபர், 2021

19102021 தொற்றுநிலவரம் சிங்கப்பூர்

 [Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 18]

 

அக்டோபர் 17, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,651 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 327 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 66 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.6%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.1%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.1%

- உயிரிழந்தோர்: 0.2%

  

அக்டோபர் 16 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 84%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%


அக்டோபர் 17 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 3,058 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


go.gov.sg/moh171021

திங்கள், 18 அக்டோபர், 2021

கலித்தல், காலகண்டர், காலண்டர்.

 காலண்டர் என்று நாம் சொல்லும் நாட்காட்டியைக் குறிக்கும் அதே பெயர்.  ஆங்கிலத்தில் எப்படி உருப்பெற்றதென்பதைத் தெரிவிக்கும் கதைகள் உள்ளன. இதற்குக் கூறப்பெறும் சொல்லாக்க விளக்கங்களில், உள்ளது எவ்வளவு, கதை எவ்வளவு என்று எளிதில் அறிய முடியவில்லை.  பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்த  கிறித்துவ பூசாரிகள்  பிறையைப் பார்த்து,  உரக்கக் கூவி எத்தனை நாட்கள் இம்மாதத்தில் உள்ளன,  எந்தெந்த விழாக்கள் வருகின்றன என்று தெரிவிப்பார்களாம்.  கெலெ என்ற இந்தோ ஐரோப்பிய மூலச்சொல் கத்துதல் என்று பொருள்படும்.  கத்திச் சொன்னதனால் "கெலெ" என்பதிலிருந்தே இந்த நாட்காட்டிக்குப் பெயர் அமைந்தது என்று ஐரோப்பிய மொழியறிஞர்கள் கூறுவர்.  இப்போதுள்ள ஆங்கிலத்தில்  "கால்" என்பதும் அழைப்பது, ஒலி எழுப்புவது என்றே பொருள்படும்.  காகிதம்,  அச்சு இயந்திரம் முதலிய இல்லாத அல்லது வழக்குக்கு வராத காலத்தில் இது அவர்கள் கூறுகிறபடி நடைபெற்றுச் சொல் அமைந்திருக்கலாம்.

தமிழில் இதற்கு முன்பே "கலித்தல்" என்ற சொல் வழக்கில் இருந்தது. இந்தக் "கெலே" என்பது இந்தோ ஐரோப்பியத்தில் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. இச்சொல் கலித்தல் வினையிலிருந்து அயலில் சென்று வழங்கியிருத்தல் தெளிவு..

கலித்தல் -   பொருள்:  ஒலித்தல்.

இலத்தீனில் பல தமிழ்ச்சொற்கள் உள்ளன. எடுத்துக்காட்டு: கல்குலஸ்.  தமிழர் கல்லைக் குலுக்கிப் போட்டுக் கணக்குப் பார்த்தபடியால்,  அதிலிருந்து "கணக்கு" என்று பொருள்படும் கல்குலஸ் என்ற சொல் உருவெடுத்தது. எண்களை  (1-9 & 0 ) வழங்கியவர்களும் இந்தியர்களே என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட வரலாறு.

பஞ்சாங்கம் இருந்தபடியாலும் அதிலிருந்து நாட்களைக் கணக்கிட்டுக் கொண்டதாலும் நாளை மட்டும் அறிவதற்கு ஒரு தனி ஏடு  முன்னர் ஏற்படவில்லை. ஐந்து அடங்கிய ஏடு பஞ்சாங்கம்.

ஒரு நாளுக்கு ஒன்றாகக் கிழித்து நாளை அறியும் ஏடுகள் வந்த பொழுது, தமிழர் அதனைக் காலத்தைக் கண்டுபிடிக்கும் ஏடு என்ற பொருளில் " காலகண்டர்" என்றனர் .  கண்டு கண்டாகக் காலம் கணிக்கப்பட்டது எனினுமாம்.  இது காலண்டர் என்பதனுடன் ஒலியொற்றியது போலிருப்பினும், இது வேறு சொல்லே என்றறிக.

காலே என்ற இந்தோ ஐரோப்பிய மூலத்தையும் தமிழே வழங்கியுள்ளது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.


சனி, 16 அக்டோபர், 2021

நமோ நம, நமோ நம! என்ற வாழ்த்துத் தொடர்.

 இப்போது நாம் தலைப்பில் குறித்துள்ள தெய்வவாழ்த்துத் தொடரைக் கவனித்து அதன் அமைப்பை அறிந்துகொள்வோம்.  இது ஓர் அருமையான சிறந்த, மனநலம் வருவிக்கின்ற தொடராகும்.  இது தமிழிலிருந்து சென்ற தென்பதை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூறியுள்ளனர்.  அவர்கள் கூறியவற்றை இவண் எழுதுதலைத் தவிர்த்துக்கொள்வோம்.  அவற்றை அவர்களின் எழுத்துக்களில் அல்லது நூல்களில் கண்டுகொள்க.  இவர்கள் கூறிய கருத்து அல்லது சொல்லாக்க விளக்கம் எதுவும் இங்கு கைக்கொள்ளப் படவில்லை. மறுப்பதற்கு அவை மறுவாசிப்புக்கு அருகில் இல்லை.

இப்போது இத்தொடரை ஆய்வு செய்வோம்.  

நமோ  என்பது நலமோ என்பதன் இடைக்குறை.  இடைக்குறைகள் தமிழில் பெரிதும் வழங்குபவை.  இவ்விடைக்குறைகளுடன்,  பகுபதங்களில் வருவன எனப்படும் தொகுத்தல் விகாரத்தையும் அடக்கிக்கொள்ளவேண்டும்.   எ-டு:  என்னில்  >  எனில்;  தன்னில் > தனில்.   இவை தேடாமல் தரத்தக்க எளிமையன ஆகும்.

நம என்பது நலம்  அவை என்பது.   நலம் அ என்பதில்  அ என்பது சுட்டும் பன்மை விகுதியும் ஆகும். அ என்பது உரிமையும் காட்டும்: "நம".    உன கழல்கள் என்னும் தொடரில் உன் என்பதனோடு அ சேர்ந்தது. " கழல்கள் உன" என்பது வாக்கியமாய்க்  கழல்கள் உன்னவை என்று பொருள்படும்.  உன்னது என்பது ஒருமை.  வருகின்ற அன் அ என்பது வருகின்றன என்றாகி அ பன்மை குறித்தது போலுமே  ஆகும்.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்:  பல்+ அ = பல. பல் என்பதன் பொருள் - சில என்பவற்றிலும் மிக்கவை , எண்ணிக்கையில் மிக்கவை.

ஒப்பீடு:  நலம் அல்லது நன்மை என்பதே பிறமொழிகளிலும் வணக்கம் கூறும் சொற்களாய் உள்ளன. எ-டு:  Good Morning.  (  இங்கு Good  என்பது  "காட்"  ( கடவுள்) என்ற பொருளுடையதன்று என்று இப்போது முடிவு செய்துள்ளனர் ). எனவே நலம் என்பதே இதன் பொருளாகவேண்டும்.

நலமே நலமாகும்( தன்வினை), நலமாக்கும்.(பிறவினை).

நம என்பது நலம் அவை என்று மட்டுமின்றி நம்மவை ஆகும் என்றும் இரட்டுறலாகும்.

நாராயணன் என்பவர் நீரின் அமைப்பு என்பது வேதங்கள் சொல்வது.

"நலமோ நலம் பல "  அல்லது "நலமோ நம்மவை"என்ற முழக்கமே நமோ நம.  நாராயணதே நமோ நம!

நாராய என்பது நீர் ஆய  என்பதே.  இயற்கைத் தெய்வம். இறைவன் எங்குமுளான்.  இயற்கையிற் பொதிந்து இயல்கின்றான் என்பதே தத்துவம் ஆகும். பாலில் நெய்போல் என்பது அப்பர் வாக்கு.  அது அப்பர் ( நாவுக்கரசர்) வாக்கும்  upper வாக்கும் ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



வெள்ளி, 15 அக்டோபர், 2021

16102021 Covid Sg

 [Sent by Gov.sg – 16 Oct]


As of 15 Oct 2021, 12pm, 1,593 COVID-19 cases are warded in hospital. There are 322 cases of serious illness requiring oxygen supplementation and 48 in the ICU. 


Over the last 28 days, of the infected individuals, 98.6% have mild or no symptoms, 1.1% requires oxygen supplementation, 0.1% requires ICU care, and 0.2% has died.


As of 14 Oct, 84% of our population has completed their full regimen/received 2 doses of vaccines, and 85% has received at least one dose. 


As of 15 Oct, there are 3,445 new cases in Singapore. 


go.gov.sg/moh151021

வியாழன், 14 அக்டோபர், 2021

திரு. உரூபன் பிறந்தநாள்

 இன்று திரு ரூபன் அவர்களின் பிறந்தநாள்.  அவருக்கு நம் வலைப்பூவின் வாழ்த்துக்கள் உரியவாகுக.  ஆனால் கோவிட19 காரணமாக யாரையும் கூப்பிடவில்லை.  "கேக்" என்று சொல்லப்படும் இன் திண்ணப்பம் சாப்பிடலாமென்றால், ஒன்று வாங்கிவந்தால் அதைச் சாப்பிட்டு முடிக்கமுடியாது.  சீனிமயமாக வேறு இருக்கும்.  ஆதலால் பீசா எனப்படும் சைவப் பிசைப்பொதிவு உண்டுகளித்தோம். பின்னர் தேனீர் (கொழுந்துநீர்)  அருந்தி  சிவமாலாவுடன் விழாவைத் திரு ரூபன் முடித்துக்கொண்டார்.  இந்தத் தொற்றுப் படையெடுப்பு மட்டும் இல்லையென்றால் ஓர் ஐம்பது பேர்களை அழைத்துக் கொண்டாடுவதாக இருந்தோம்.  கிருமியால் பாதிக்கப்பட்டோர் தொகை ஏறிக்கொண்டிருக்கிறது. இறங்கி அடங்குமா என்று தெரியவில்லை. கிருமித்தொல்லை ஒழியத் தொழுவோமாக. " தொழுவாரவர் துயராயின துடைத்தல் உனகடனே" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியுள்ளது நினைவுக்கு வருகிறது.  (மேற்கோளில் வேறுபாடு காணின் பின்னூட்டம் இடுங்கள்.)  (  மூளையும் உடலும் களைத்துப் போய் உள்ளது) மன்னிக்கவும்.  நம்மை இறைவனே காக்கவேண்டும்.

பிசைப்பொதிவு  நன்றாகவே இருந்தது. அதை நாங்கள் இருவரும் உண்ணுமுன் எடுத்த அவ்வுணவின் படம் இங்குள்ளது.


இரண்டு பிசைப்பொதிவுகள் உள்ளன. சிறியது சைவம். பெரியதில் முட்டை உள்ளது.  யாம் உண்டது சிறியது. கோவிலில் கொண்டாடி யிருக்கலாம், ஆனாலும் நுழைவோர் கட்டுவிதிகள் (entry regulations) உள்ளனவாகையால் அதுவும் இயலவில்லை.   நோய்நுண்மிகளிடமிருந்து விடுபாடு அடையும் நாளை எதிர்நோக்கி நிற்போம்.

மாவைப் பிசைந்து உள்ளீடுகளைப் பொதிந்து செய்யப்படுவதால்  "பிசைப்பொதிவு"  ஆனது.  பொதிவாப்பம் என்றும் குறிக்கலாம்.  Pizza. "சைவமாகக்" கிடைக்கும்.


குரு பெயர்ச்சி 2021ல் தூக்கிவிடும் 5 சிகர இராசிகள் | Athisara Guru P...

புதன், 13 அக்டோபர், 2021

Oct14 Covid19

 [Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 13]

 

அக்டோபர் 12, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,619 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 291 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 42 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.5%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.2%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.1%

- உயிரிழந்தோர்: 0.2%

  

அக்டோபர் 11 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 83%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%


அக்டோபர் 12 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 2,976 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


go.gov.sg/moh121021


சுகாதார நடைமுறைகள், கூடுதல் (Booster) தடுப்பூசிகள், எல்லைக் கட்டுப்பாடுகள், கொவிட்-19 கிருமியுடன் வாழ்தல் ஆகியன பற்றிய ஆக அண்மைய விவரங்கள் குறித்த முக்கிய கேள்விகளுக்கு விடை காண go.gov.sg/covidfaq121021 என்ற இணைப்பை நாடுங்கள்.

செவ்வாய், 12 அக்டோபர், 2021

அடுதல் -ஆடு, அட்டி, அட்டை, ஆடை பிறவும்

 அடுதல் என்ற வினைச்சொல் இவ்வலைப்பூவில் நன்கு விளக்கப்பட்டுள்ளது.  இவற்றை நீங்கள் படித்தறிந்திருந்தாலும் அல்லது படித்துமறந்திருந்தாலும், அல்லது பிறநூல்களில் வாயிலாக முன்னரே அறிந்திருதாலும்   அது இப்போது பெரிதும் பேச்சுவழக்கிலும் இயல்பான எழுத்து வெளியீடுகளிலும் அருகிக் காணப்படுவது என்பதை மறுப்பதற்கில்லை. அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது  என்பதைச் சொல்லும்போது இவ்வினை சிலருக்கு நினைவுக்கு வரும். அடுப்பு  அடுக்களை  அடிசில் முதலியவற்றைச் சந்திக்கும்போது,  அடுதல் வினை மறக்கப்பட்டுவிடும்.  ஒன்றை மறந்துவிட்டீர் என்கையில் எல்லோரும் அதை நினைத்துக்கொள்வார்கள். இதை எழுதுவதன் பயன் அதுதான். நினைவு வட்டத்துக்குள் அச்சொல்லைக் கொணர்தல்.

ஆடுறு தேறல் என்றால்  ஆட்டுக்குட்டியின் பானமன்று:  சுடவைத்த தேறல்.   அடுதல் என்ற வினையே முதல் எழுத்து நீட்சித் திரிபு எய்தி,   ஆடு என்று ஆகிச் சுடுதலைக் குறித்துள்ளது.  ஆடுகள் என்ற விலங்குவகை,  எல்லாம் கூட்டமாக இருந்து வாழ்பவை.  அடுத்தடுத்து நின்று ஒன்றையொன்று உராய்ந்துகொண்டு பே என்று கத்திக்கொண்டு நிற்பதால்,   அடுத்தல் முதன்மைக் காரணமாக,  அடு> ஆடு என்ற பெயர் பெற்றன.  ஆண்டுபல கழிந்துவிடினும் சொற்களிலிருந்து அடிப்படைப் பொருள் நன்கு வெளிப்படுகின்றது,காணலாம். 

"டிலே" என்ற ஆங்கிலச்சொல்லுக்குத் தாமதம் என்ற சொல் வழங்கிவருகிறது.  இது தாழ் +  மதி + அம்  = தாமதம் என்றான சொல்.  ழகர ஒற்று இடைக்குறைந்து, மதி என்பதன் இறுதி இகரம் கெட்டு அமைந்த சொல். ( வாழ்த்து + இயம் = வாத்தியம் என்பது இவ்வாறு ழகர ஒற்று இடைக்குறைந்த சொல் என்பதைத் தமிழாசிரியர் கூறியுள்ளனர்.)  மாதம் என்ற சொல்லும் இறுதி இகரம்  கெட்ட சொல்லே. ( மதி + அம் ).  மதி என்பது இங்கு காலமதிப்பைக் குறித்தது.  இதே காரணத்தால் நிலவுக்கும் மதி என்ற பெயர் ஏற்பட்டது.    மதி + அம் = மாதம், இது படி + அம் = பாடம் போன்று முதனிலை நீண்டு,  முதற்பகுதியின் ஈற்று இகரம் கெட்ட சொல்.  முதனிலை என்பது சொல்லின் முதலெழுத்து என்பது.

அட்டி என்ற சொல்லும் தாமதப் பொருளில் வரும்.  அடு + இ=  அட்டி.  அடு என்பது ஒன்றை அடுத்த வாய்ப்புக்கு அல்லது காலத்துக்குத் தள்ளிவைப்பது என்பதனால் அமைந்த சொல்,  இதுவாகும்.  அடுத்துச் செய்வோம் அடுத்துச் செய்வோம் என்று சொல்வதாலும்  செய்தக்க இன்று செய்யாமல் நாளை என்பதாலும் ,  அடு என்ற சொல்லில் தாமதப் பொருள் கிளைத்தெழுகிறது என்பதைக் கவனிக்கவேண்டும்.

அட்டியல் என்ற நகைவகையும் சிறுசிறு நெடுங்குழைகள் அடுத்தடுத்து வருமாறு அமைப்புறுவதால்  அடு + இயல் >  அட்டியல் ஆயிற்று.  இது அட்டிகை எனவும் குறிக்கப்படும்.

அட்சரம்  இங்குக் காண்க https://sivamaalaa.blogspot.com/2020/12/blog-post_4.html

எரியும் நெருப்பின் மேல் ( அடுத்து ) வைக்கப்படுவதால், அதனால் ஏனம் சூடேறிச் சமையல் நடைபெறுவதால்,  அடு என்ற கருத்தில் சுடுதல் கருத்து தோன்றியது.  அடுத்து வைத்தாலன்றிச் சூடேறாது. இங்கு அடுதல் என்பது நெருப்பைத் தொடுமாறு வைத்தல்.

அட்டை என்பதும் காகித அட்டையைக் குறிக்கையில்,  அடுத்தடுத்து ஒட்டாக வைத்துச் செய்யப்படுவதனால் வந்த பெயர்.   அட்டை என்ற பூச்சியும் அடுத்து வந்து ஒட்டிக்கொள்வதால் வந்த பெயர்.

ஆடை என்பதும் உடம்பை அடுத்து ஒட்டி அணியப்படுவதால்  அடு + ஐ > ஆடை என்று முதனிலை நீட்சியை உட்படுத்தி ஐ விகுதி பெற்று அமைந்தது.  ஆடுதலால் என்பர் சிலர்.

இவ்வாறு பல. இவை கொண்டு பிறவும் நீங்கள் தாமே அறிந்துகொள்ளலாம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



திங்கள், 11 அக்டோபர், 2021

கிருமிகோவிட் 12102021

 [Sent by Gov.sg – 11 Oct]


As of 10 Oct 2021, 12pm, 1,613 COVID-19 cases are warded in hospital. There are 292 cases of serious illness requiring oxygen supplementation and 41 in the ICU. 


Over the last 28 days, of the infected individuals, 98.5% have mild or no symptoms, 1.2% requires oxygen supplementation, 0.1% requires ICU care, and 0.2% has died.


As of 9 Oct, 83% of our population has completed their full regimen/received 2 doses of vaccines, and 85% has received at least one dose. 


As of 10 Oct, there are 2,809 new cases in Singapore. The fall in the no. of cases is likely due to fewer swabs over the weekend.


go.gov.sg/moh101021

அட்சதை , அடுதல் வினை.

 தொடக்கத்தில் மந்திரங்கள்  தன்னிகரற்ற கடவுளை  ( The One without a Second ) வணங்கப் பயன்படுத்தப்படவில்லை.  பேய்கள் விரட்டவும் மற்ற வியப்புக்குரிய செயல்களைச் செய்யவுமே பயன்பட்டன.  அட்சதை என்பது பெரும்பாலும் மந்திரித்த அரிசி ஆகும்.

மனித வளர்ச்சி நூலின்படி ( anthropology  ) மனிதன் வேளாண்மை விளைச்சல் செய்யும் திறன்பெற்ற பின்னர்தான் அரிசியின் பயன்பாடு பேரளவில் வந்து மந்திரம்  செய்வதற்கும் அது பயன்பட்டிருக்கமுடியும்.  ஆகவே மந்திரம் செய்யும் திறனை மனிதன் பெற்றது உழவுதொழில் முன்னேறி வளர்ச்சி அடைந்த பின்புதான்.

ஓடும் உடும்பை நிறுத்தும் திறன்பெற்ற  இந்தோனேசிய வழியினரான ஒரு மந்திரம் செய்யும் பெரியவரை,  பெக்கோக் என்னும் மலேசிய ஊரின் காட்டுப்பகுதியில் நம் திரு மா மணி அவர்கள் கண்டு அளவளாவியிருக்கிறார்.

இன்னும் சில மந்திரங்கள் பற்றிய அறிதல்கள் உள. எனினும்  இது சொல்லாய்வு ஆதலின் அதனுட் செல்லவில்லை. 

ஒரு பேராத்மா பற்றி மனிதன் அறிய சற்றுக் காலம் சென்றிருக்கவேண்டும்.

பேயை அல்லது பிற  ஆவிகள், மற்றும்  விலங்குகளை அடக்க மந்திரித்த அரிசி பயன்பட்டது.

அடுதல் என்பது எதிரியை அடக்குதல் என்றும் பொருள்படும்.  அடு, அடக்கு என்பன ஒரு மூலத்தவை.

அடு  +  அ + தை  >  அட்டதை >  அட்சதை எனச் சொல் அமைந்தது.

அட்டதை > அச்சதை.   இங்கு  தை விகுதி.  ( து + ஐ)

அட்ட, அட்டு என்பன வினை எச்சங்களாகவும் வரும்.

அடு அ  மற்றும் அடு உ  என்பன டகரம் இரட்டித்து அமையும்.   சுட்ட என்பது போலவே.

சமஸ்கிருதம் பாலி முதலிய மொழிகளில் எச்சங்களிலிருந்தும் சொல் அமையும். 

படு + ஆ + சு >  பட்டாசு.  ( பட்டு, அதாவது தீபட்டு,  செயல்படுவது.)  சு என்பது பரிசு என்பதில்போல விகுதி ஆகும்.

அடலேறு என்பதில் அடுதல் உள்ளது தெரிகின்றதன்றோ?

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

ஓய்வுபெற்று வீடுவாங்குதல்

 செல்வத்தைச் சேர்த்துவைத்தீர் செய்யும் வேலை

சீரான ஓயும்பொற் காலம்  தொட்டீர்.

பல்வித்தை நீரெவையும்  பயில வேண்டாம்

பார்த்துமெல்ல ஒருவீடு வாங்கிப் போட்டால்

மல்யுத்தம்  போல்வாழ்வு மாறி  டாமல்

மதிப்போடு  மேன்மைபெற வழியுண்  டாகும்.

சொல்பத்தும் காசாகும்  சூழல்  தன்னில்

சொகுசாக  ஊணுறக்கம்  கொள்வீர் நீரே.


இது யாம் சொல்வதன்று.  ஒரு வீடு வாங்கி விற்பவர் தம் விளம்பரத்தில்

தந்துள்ள "வாழ்க்கை ஆலோசனை".  யாம் கவிதையாக்கி உள்ளோம்.

இது உண்மைதானா?  வாங்கிப்

 போட்டுவிட்டால் வீட்டைப் பிள்ளைபோல் பார்த்துக்கொள்ள வேண்டுமே.

அதற்கும் அணியமாக ( தயார் )  இருக்கவேண்டும். யாரையும் வீட்டில் 

வாடகைக்கு வைத்து அவர் புதிய வீட்டைப் பழைய வீடாகத் 

திருப்பிக்கொடுப்பாரே.  புதிப்பிப்பு வேலைகளுக்கு இங்கு அதிகம் 

செலவாகிறது. வீடுவாங்கும் வாய்ப்பும் நோக்கமும் இருந்தால் நீங்கள்

 கருதும் இடத்தில் வாங்கிப் போடுங்கள். இந்த விளம்பரம் சிந்தனையைக் 

கிளறியது.   அது ஒரு சிறு கவியாயிற்று.  நன்றி.


தொட்டீர்  - தொடங்கினீர்

இங்கு ஓயும்காலத்தைப் பொற்காலம் என்கிறார்கள்.

பல்வித்தை -  பணம்பண்ணும் கலைகள்.

மல்யுத்தம் -  மற்போர்.  வாழ்க்கை போராட்டம்போன்றது என்பது.

உது - உத்து > உத்தம்  முன்செல்வது. ( சண்டையிட ) இது

யுத்தம் ஆயிற்று.  ஆனை> யானை என்பதுபோலும் திரிபு.

சொல்பத்தும் -  சொல்வது பலவும்.  பத்து என்பது பல என்ற்பொருட்டு.

சூழல் - சுற்றுச்சார்பு.

சொகுசு  -   சிறப்பு.

சொக்குதல் வினைச்சொல்.  சொக்கு + சு ( விகுதி) >  சொக்குசு, இது

இடைக்குறைந்து சொகுசு ஆயிற்று.  கண்டோரை மயக்கும் சிறப்புத்

தன்மைகள்.













ஞாயிறு, 10 அக்டோபர், 2021

கோலாகலம் - பதம்பிரித்தல் எவ்வாறு.

 கோலாகலம் என்ற சொல்லைப்  பார்த்தமட்டில்,  அது இருசொற்களாய் இருந்து இணைக்கப்பட்டு ஒருசொல்லானது என்பது புரியும்.  இத்தகைய சொற்களைக் கூட்டுச்சொல் என்பர்.   அதாவது இரு சொற்களின் இணைப்பு.

இதைப் பிரித்து அந்த இருசொற்களையும் காண்போர்,  கோலம் + கலம் என்று பிரிப்பதே பெரும்பான்மை.

கலம் என்பதன் பொருள் வருமாறு:-  1. பாத்திரம் , ஏனம்.   2.  புட்டி.  3.  குப்பி.   4. தேறல்.   5. கப்பல்  6. மரக்கலம்   7.நட்சத்திரம்,  பூரம், பரணி, இரேவதி.  8. ஆபரணம்.  9.யாழ்   10.  உழுபடை  11. ஆயுதம்  12.  பனையோலையில் எழுத்து.  13.  ஓர் முகத்தலளவு. 14 காகிதம்.

கோலம் எனில் அழகு.   கோலாகலம் என்பது அழகிய மேற்கண்ட  14  பொருள்களில் ஏதேனும் ஒன்று.  எனவே  இப்பொருள் கூறல் மனநிறைவை அளிக்கவில்லை!

விழா கோலாகலமாக நடைபெற்றது என்னுங்கால்,  மேற்கண்ட எதுவும் அத்துணைப் பொருந்துவதாகத் தெரியவில்லை. கலம் - கல+ அம் , கலவை என மேற்கொண்டு,  " அழகுகளின் கலவை " ( கலம்பம் > கதம்பம்) என ஏன் பொருள் விரித்தல் ஆகாது ? -  என்னும் கேள்வி உங்கள் மனத்துள் எழவும் கூடும். இங்கு அதனுட் செல்லவில்லை.

கோலாகலம் என்பதற்குத் தனிப்பொருள் உள்ளது.  அது  ஒழுங்குமுறையற்ற கண்டபடியான ஆனால் பெரும்பாலும் மகிழ்சியான கூக்குரல் என்பதாம்.

கோலம் எனின் அழகு,  உருவம்,  ஊர்கோலம்,   நிறம்,  வெளித்தோற்றம்,  பிறவி (...என்றும் வருமிடம் " மானிடக் கோலம்"),   முயற்சி  ( கோலுதல் வினை: கோலு+ அம்)  ,  நீரோட்டம். இன்ன பிற.

இங்குக் கலம் என்பதைக் கூட்டினால்,  செயற்கிளர்ச்சி அடக்கத்தில் நின்றுபோனது போலும் ஓர் உணர்வைத் தரக்கூடும். 

இவ்வாறின்றி அலம்புதல் என்ற சொல்லின்  அலம் என்ற அடிச்சொல்லைக் கொண்டு இணைப்பதனால் இன்னும் சிறந்த பொருளைப் பெறலாம்.  அலம்புதல் என்பதற்கு,  அலட்டுதல்,  ஆரவாரித்தல்,  குழப்படி, வீணானவை செய்தல், பிதற்றுதல் என்று சற்றும் அடங்கிப்போகாத செயல்களைக் காட்டும் பொருள் உள்ளது.  இன்றைப் பேச்சு வழக்கில் இப்பொருளெல்லாம் இல்லாவிட்டாலும் நிகண்டுகளில் உள்ளன.  ஆகவே:

கோலம் + ஆகு + அலம் >   கோல + ஆகு+ அலம் >  கோலாகலம் என்று சரியாக அமைகின்றது.

எனவே இதனைக் கவனித்துப் பதம் பிரித்தல் மேலானது என்பதை முன்வைக்கின்றோம்.

கலம் என்பதற்கு மேற்கண்ட பொருள்களைக் கொள்ளாமல்,  கலத்தல்  (  கல+ அம் > கலம்,  கலாட்டா போல  : கல+ ஆட்டு+ ஆ)  எனின் ஒருவகையில் பழைய பதப்பிரிப்பைத் தக்க வைத்துக்கொள்ளலாம்.  இஃது ஒர் இருபிறப்பி  என்பது இதன் மூலம் தெளிவாகலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்னர்.

குறிப்புகள்:



K. kala, M. kalam, Tu. kara.

தெலுங்கு: கலமு.

சனி, 9 அக்டோபர், 2021

Covid19 10102021

 [Sent by Gov.sg – 10 Oct]


As of 9 Oct 2021, 12pm, 1,569 COVID-19 cases are warded in hospital. There are 302 cases of serious illness requiring oxygen supplementation and 40 in the ICU. 


Over the last 28 days, of the infected individuals, 98.4% have mild or no symptoms, 1.3% requires oxygen supplementation, 0.1% requires ICU care, and 0.2% has died.


As of 8 Oct, 83% of our population has completed their full regimen/received 2 doses of vaccines, and 85% has received at least one dose. 


As of 9 Oct, there are 3,703 new cases in Singapore. 


go.gov.sg/moh091021

நோய்நுண்மி அழியப் பிரார்த்தனை

 





நீசநோய்  நுண்மியே  நெடுமுடி  முகியே

நீங்கிச் செல்வாய் ஈங்குநமைக் கடந்தே!

ஈசுவரி   எம்சிவை இட்டதொரு கட்டளையே

இனி இவண் ஏகாதே  உன் தீயும் வேகாதே.


------ என்கிறார் நம் அர்ச்சகர்.


அவ்வாறே  ஆகுக.  அகிலம் திகில் நீங்குக.


வெள்ளி, 8 அக்டோபர், 2021

கோவிட்19 - 08102021

 [Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 7]

 

அக்டோபர் 6, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,520 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 255 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 37 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.3%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.4%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.1%

- உயிரிழந்தோர்: 0.2%

  

அக்டோபர் 5 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 83%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%


அக்டோபர் 6 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 3,577 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


go.gov.sg/moh061021

வீடு, அகம், இல். அறியவேண்டியவை

மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லும் தோன்றுவதற்கு ஒரு நிலைக்களனும் உரிய காரணிகளும் இருக்கவேண்டும்.  இதுதவிர சொல்லாக்கத்திற்கு  வேண்டிய மூல அல்லது அடிச்சொல்லும்,   ஒட்டுக்களும் ( முன்னொட்டு, பின்னொட்டு முதலியவை )  தேவைப்படும்.  இவை எல்லாம் கிட்டாதபொழுது,  குறிக்கவேண்டிய பொருளுக்கு  அடுத்து வாழும் மற்ற இன மக்களிடையே  ஒரு பெயர் இருக்கிறதா என்று பார்த்து, நம்மிடம் இல்லையாதலால் அம்மக்கள் சொல்லைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  எடுத்துக்காட்டாக,  கடலிற் செல்லும் கலத்திற்குப் பெயரே இல்லாதவர்களாக நாம் இருந்தால் "ஶிப்" என்பதை ஆங்கிலரிடமிருந்து பெற்று வழங்கலாம்.  இதற்கு காசு எதுவும் கொடுக்கவேண்டியதில்லை; திருப்பித்தா என்று கேட்கவும் மாட்டார்கள். அவர்கள் நிலத்தை நாம் எடுத்துக்கொண்டால் தகராறு வந்துவிடும்;  பெரும்பாலும் சொல்லுக்கு அப்படி வருவதில்லை.

சில சொற்கள் நம் முன்னோரே படைத்திருந்தாலும்,  அவற்றுள் திரிபு ஏற்பட்டு  ,  ஒரு சொல்‌ என்ன சொல் என்று தெரியாமற் போய்விடலாம். நாம் பயன்படுத்தும் சொல் ஒவ்வொன்றையும் கேட்பவர் எவ்வாறு அமைந்தது என்று கேட்பதில்லை ஆதலினால்,  இவ்வாறு தெரியாமற் போனதில் ஏதும் சங்கடம்  ஏற்படுவதில்லை. தாம் கடந்து  செல்லற்குக் கடினமான நிலையே தம்கடம் . அது பின் சங்கடம் என்று திரிந்துவிட்டதிலிருந்து இந்நிலையை நீங்கள் உணர்ந்துகொள்ளலாம். இங்கே சொடுக்கி அறியவும்:  https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post_20.html 

நல்லவேளையாக,  ஷிப் என்பதற்குத் தமிழில் பல சொற்கள் உள்ளன.  இவற்றுள் கப்பல் என்பதும் ஒன்றாகும்.  இது ஓர் இடைக்குறைச் சொல்.  கடப்பல் என்பது கப்பல் என்று திரிந்துவிட்டது. கடலை அல்லது நீர்நிலையைக் கடப்பதற்கு உதவுவது கடப்பல் >  க(ட)ப்பல்> கப்பல்..  டகரம் இடைக்குறைந்தது.  பலர் தங்கி இருந்து பேசுவதற்கோ பாடுவதற்கோ எதற்குமோ உள்ள இடம்,  தங்கு> சங்கு> சங்கம் ஆனது.  இது தகர சகரப் போலிச் சொல் ஆகும். இவை திரிசொற்கள். தொல்காப்பிய னா ரி ன்  காலத்திலே திரிசொற்கள் இருந்தன. ஒருசொல்லைக் கண்ட  மாத்திரத்தில் அதன் பொருளும் காரணமும் தெ ரி ந் து,  விடாது அவரே சொல்லியிருக்கிறார்.

நம் மொழியில் சில சொற்கள் மிக்கப் பழங்காலத்திலே அமைந்தது என்பது நாம் ஆய்வில் நமக்குத் தெரிகிறது.  நாம் எங்குச் சென்றாலும் திரும்பி வீட்டுக்குச் சென்று விடுகிறோம்.  இவ்வாறு ஒரு குறித்த நேரத்திற்கப்பால் விட்டுச்சென்று நாம் சேருமிடம்தான் வீடு.   இது விடு என்ற வினைச்சொல்லிலிருந்து அமைகிறது.  படு > பாடு,  சுடு> சூடு  என்பனபோல்  விடு>  வீடு  ஆயிற்று, எதையும் விட்டுச் சென்று தங்குவதால்.  இப்படி விட்டுச் செல்லும் வழக்கம்,  பண்டை நாளிலே ஏற்பட்டது.  இது எல்லா நாடுகளிலும் காணப்படுகிறது.  விலங்குகட்கும் பறவைகட்கும்  ஊர்வனவற்றுக்கும்  கூட "வீடு" இருத்தல் அறியமுடிகிறது.

வீடு என்ற சொல்,  வீட்டிலிருந்து தொலைவில் இருக்குங்கால் ஏற்பட்ட விட்டுச்செல்லுதல் கருத்தில் விளைந்தது ஆகும்.  வீட்டைக் குறிக்கவேண்டிய தேவை பலருக்கும் வெளியில் எங்காவது போயிருக்கும்போதுதான் ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் சிந்தித்து அறியமுடிகிறது. இறந்தபின் செல்வதும் வீடு என்றே சொல்லப்படும்.

இதைப்போலவே,  அகம் என்ற வீடு குறிக்கும் சொல்லும்,  வீடு   "அ ,"  அதாவது அங்கு இருப்பதாகவே உணரப்பட்டு அமைந்த சொல்லாகும்.   அ என்ற படர்க்கை அல்லது சேய்மைச் சுட்டு, இங்கில்லை என்பதையே தெரிவிக்கிறது.  சென்று சேர்வதற்கு உரியது என்பதைக்  "கு"  என்ற  சிறுசொல் குறிக்கிறது. இது உருபாகவும் வரும் பழங்காலச் சொல்.  அ+கு+அம் என, இறுதியில் அமைவு குறிக்கும் அம் விகுதி வந்துள்ளது.  இதுபோலவே அமைந்த இன்னொரு சொல், மு+கு+அம் > முகம் என்பதாகும். மு  முன்மை குறிக்கும்.

அகமென்பதும் வீடு என்பதும் ஒப்புமையான சூழலில் விளைந்த சொற்கள்.

வீடு சென்று அடைந்துவிட்டால்,  அப்புறம்  அகரச் சுட்டு தேவையில்லை. இகரம் தான் வேண்டும்.  அவ்வாறே,  இ என்ற இங்கு என்ற  சுட்டிலிருந்தும் இல் என்ற சொல் அமைகின்றது. இல்லமே இருப்பிடம்.   லகரம் ரகரமாய்த் திரியும் ஆதலால்,  இல் இரு  ஆகும்.  இல் என்பது உருபாக அமைந்து, இருத்தலைக் குறிக்கும்.  கண்ணில் என்றால் கண்ணாகிய இடத்தினது என்று பொருள். இவ்வாறே விரித்துக்கொள்க.  ஆகவே இல் என்பதில் இருத்தல் கருத்து அமைந்திருத்தலைக் காணலாம்.

இவ்விடுகை நெடிதாவது கருதி இத்துடன் சிலகூறி நிறுத்துவோம். 

கடு  > கட்டு  > கட்டுமரம்

கடு  > கட > க(ட)ப்பல் > கப்பல்

இரண்டுக்கும் அடி ஒன்றுதான்.

பண்டைத் தமிழன் வழவழப்பான வீதிகளும் வளாகங்களும் இருந்த சூழலில் வாழவில்லை. மரத்தில் கட்டிய கூட்டிலும் மலைக்குகையிலும் இருந்தவன்.  எதையும் கடப்பது  கடினம். பள்ளம், படுகுழிகள், ஆறு, மலை, காடு!  ஆகவே கடு என்ற கடுமைச் சொல்லி லி ருந்து சில சொற்களப் படைத்தளிததுச் சென்றிருக்கிறான் என்பதை ஆய்வாளன் மூளைக்குள் முன்னிறுத்தி உண்மை காணவேண்டும்.

அறிக மகிழ்க.

௷ய்ப்பு:  பின்.


குறிப்புகள்:

இவற்றையும் வாசித்தறிக:

இராசி, பாவகம்:  https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_16.html

அகம் - மனம்:  https://sivamaalaa.blogspot.com/2017/07/blog-post_14.html

சங்கடம்:  https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post_20.html

மெய்ப்பு பின்.