வியாழன், 7 அக்டோபர், 2021

கோவிட்டைப் பரப்பியவன்

 கோவிட்டைப் பரப்பியவன்  யாரோ  யாரோ

கோலத்தால் கலத்தினிலே மிதக்கின்  றானோ?

ஆவட்டில் கறந்தபாலைக் குடிக்கின்  றானோ!

ஆலகாலம் தந்துவிட்டான் யார்க்கும் பாரில்.

மேவிற்றே அறிந்தாலும்  என்செய் வோம்நாம்

மேல்பற்றும்  தொற்றதனால் வீழ்தல் அன்றி?

நாவிற்றும் பிழைக்கின்ற நாயன் தன்னால்

நானிலமே நாவறியா நலிவிற் போச்சே!


கலத்தில் -  கப்பலில்

கோலத்தால்  -  அழகினால் ( /அலங்கோலத்தால்)

அலங்கோலத்தால் என்ற பொருள் கொள்ள.  அலங்கோலம் என்பதை

 கோலம்  என்ற " முதற்குறைக் கோலம் " ஆக்கிப் பொருள்

கொள்ளவேண்டும்.

ஆ = பசு.

வட்டில் கறந்த  - வட்டிலில் கறந்த.

ஆ வட்டில் -  அந்த வட்டில் என்றும் பொருள்.

ஆவு அட்டில் :  ஆவட்டில்:  விரும்பிய அடுக்களையில்  .ஆவு

என்பதிலிருந்து ஆவல்  என்ற சொல் வருகிறது.

ஆவு அட்டில் - விரும்பிச் செல்கின்ற அட்டில்.  வினைத்தொகை

கறந்த பாலை என்று இணைக்க. இது இன்னொரு பொருள்.

ஆலகாலம் -  விடம்

மேவிற்றே =  எங்கும்  தொற்றிவிட்டதே

மேல் - நம் மேல்

நா விற்றும் -  வார்த்தைகளால் தன்னைக் காத்துக்கொண்டு

நாவால் விற்றும் -  ஆல் உருபு தொக்கது.

நாயன் -  மேலானவன்

நாவறியா -  சொல்லி அறியாத 

நலிவு - அழிநிலை 


மெய்ப்பு செய்த நாள்:  08102021  1411

சில சரிசெய்யப்பட்டன.


கருத்துகள் இல்லை: