திங்கள், 4 அக்டோபர், 2021

மனம் கசியும் இறைப்பற்று






 தூணில் அழகியதாய்ப் ---பார்த்துத் .

துய்ய  மனத்துடனே

காணின் மனமயங்கும் ---  கவினில்

கைகள் குவிந்திடவே,

ஊண்நீர்  விபூதிமலர் ----  சந்தனம்

உள்ளவை முன்வைக்கிறோம்,

மாண்புற வாழ்வுயரக் -----கண்ணீர்

மல்கக் கசிந்துருகி.

துய்ய  =  தூய.

குவிந்திட - கும்பிட.

ஊண்  - பிரசாதம்

கவினில் ---  கவரும் அழகில்

மாண - சிறப்படைய

மல்க -   சொரிய, 

கசிந்து --  கரைந்து நீர்வழிய

படங்கள் தந்துதவியவர்:  சிவக்குமார்.  லீலா

மற்றும் திருமதி சி  லீலாவின் ஆலய உபயப் படங்கள்:  கோவிட் காலத்தில், அது நீங்கும்படி வேண்டிக்கொண்டு நடாத்திய அவர்தம் ஆலயப் பூசைகள்:









கோவிட்டினால் அவர் குடும்பத்தில் இருவர் தவிர யாரையும்

இப்பூசைகளில் அனுமதிக்கவில்லை. என்று கூறுகிறார்.


முடிமுகி வீழ்த்திடுவாய் ----  அம்மையே

முன்னிகர் வாழ்வுபெற.

அடிமுடி யாருனையே ----  அறிந்தார்

அகிலத்து  நாயகியே!

குடிகளைக் காத்திடுதல் ---- துர்க்கா

கோதிலை  உன்கடனே!

படிமுன்  பயப்பற்றுடன் ---  நாங்கள்

பதம்பணிந்    --தோம் உண்மையாய்.


முடிமுகி    ---  கோவிட் நோய்

முன் நிகர் --  முன் போல நோயின்றி

அடிமுடி  --   ஆதியந்தம்

கோதில்  -  குற்றமற்ற

படிமுன் -  உன் வாயிற்படி முன்னே

பதம் = பாதம்.


சிவமாலையின் கவிதை.









கருத்துகள் இல்லை: