வியாழன், 21 அக்டோபர், 2021

22102021 covid singapore

 [Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 21]

 

அக்டோபர் 20, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,718 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 337 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 67 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.7%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.0%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.1%

- உயிரிழந்தோர்: 0.2%

  

அக்டோபர் 19 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 84%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%


அக்டோபர் 20 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 3,862 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


go.gov.sg/moh201021


🔹 தற்போது நடப்பில் உள்ள கட்டுப்பாடுகள், சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பைப் பாதுகாக்கவும் நிலைமையைச் சீர்ப்படுத்தவும், நவம்பர் 21 வரை நீட்டிப்பு


🔹 பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும்  நபர்களுக்கும் ஆதரவு நீட்டிப்பு


go.gov.sg/mohpr201021

கருத்துகள் இல்லை: