ஞாயிறு, 24 அக்டோபர், 2021

குறுக்கலும் குக்கலும் ( குக்கல்- நாய்)

 ஓநாய்களை பிடித்துப் பழக்கி நாயாக்கினான் மனிதன் என்று விலங்கியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.  நாய்கள் மனிதனின் நண்பன் ஆனபின், வேடன் தன் வேலைகளைப் பலவழிகளில் குறுக்கி நேரத்தை மிச்சமாக்கிக் கொணடான் என்பதை மாந்தவளர்ச்சி நூல் உரைக்கின்றது.  ஒரு பெரிய விலங்கு மனிதனோடு சண்டையிட வரும்போது,  நாய் அவனுக்கு உதவியது.  அது அவ்விலங்குக்கும் அவனுக்கும் இடையில் குறுக்கிட்டு,  அவனுடன் சேர்ந்து அவ்விலங்குடன் போரிட்டு, அதனை மடக்க உதவியது.  இவ்வாறு குறுக்கிட்டுக் காத்ததன் காரணமாக, அது குறுக்கல் எனப்பட்டது.  சிலர் அன் விகுதி கொடுத்துக் குறுக்கன் என்றும் கூறினர். நாளடைவில் இச்சொல் குறுகிற்று.  எவ்வாறு?

குறுக்கல் >  குக்கல். ஆயிற்று.

குக்கல் என்பது நாய் என்று பொருள்படும் சொல்..

அவ்வாறே குக்கன் என்ற சொல்லும் ஆகும்.

வேட்டையாடின விலங்கு கிடக்குமிடத்திற்குச் சென்று, குக்கல் அதனைத் தானுண்ணாமல் பத்திரமாகக் கொணர்ந்து,  வேடனிடம் சமர்ப்பித்தது.  இப்போது வேடனின் வேலையும் நேரமும் குறுகிற்று.  இவ்வாறு நாயினால் வரும் நன்மை அனைத்தும் நோக்க, நாய் வேடனுக்குக் குறுக்கல் மட்டுமன்று, பெருங்குறுக்கலும் விழுகுறுக்கலும் ஆம் என்பது விரிக்கவேண்டாமை உணர்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.






கருத்துகள் இல்லை: