வெள்ளி, 1 அக்டோபர், 2021

மார்த்தாண்ட(ன்) பூபதி என்ற சொல்.

 இதுபோழ்து மார்த்தாண்டன் என்பதைப் பார்த்து,   பின்னர்  பூபதி என்பதையும் மற்றோர் இடுகையிற் காண்போம்.

மருவுதல் வினைச்சொல்.

மரு என்பது பகுதி.  வு என்பது வினையாக்க விகுதி.   ~தல் என்பது தொழிற் பெயர்  விகுதி என்பது நீங்கள் அறிந்ததே.

மரு >  மார்.     

இதுபோல் திரிந்த வேறு சொற்கள்:

கரு > கார் >  ..     (கார்காலம்,  கார்மழை,  கார்த்திகை.)

ஓரு >  ஓர்        ..     (  எண்ணுப்பெயரும் இவ்வாறே  திரியும்.

இரு >  ஈர்.        ..    (  இரண்டு என்ற எண்ணுப்பெயர்  )

பெரு >  பேர்    ..   (  உயிர்வரத்  திரிதல்,   பெரு ஆசான் -   பேராசான்)

துரு >  தூர்  ...       ( எதையும் துருவிச் செல்ல, இறுதியில் அல்லது அடியில்              `                                    இருப்பது தூர்

பரு  >  பார்            (பருவதத்தின் அரசி பார்வதி )


மார்த்து   -   மருவுதல் உடையது  என்று பொருள்.

பிற அரசர்கள் வந்து ஒரு பெரிய அரசனைத் தழுவிச் செல்வர்.  அது அடிபணிதலோ,  கப்பம் கட்டுதலோ என, ஏற்புடையவழி நடைபெறும்.

ஆகவே,  மரு > மார் > மார்த்து..  ( மருவுதல் , மருவித்தல் என்று தன்வினை பிறவினைகளை அறிந்துகொண்டால்,   மருவித்து என்பதன் திரிபே "மார்த்து" என்பதறிக.  மற்றவர்கள் தன்னைத் தழுவி அரசு நடாத்துமாறு  இயங்கிப் புகழடைந்தவன் )

ஆண்டன்,  ஆண்டவன், ஆண்டான், ஆண்டி என்பன ஆள்தல் அடிபடையில் எழுந்த சொற்கள்.  ஏற்புடையவாறு  அரசனையும் கடவுளையும் குறிப்பன

மார்த்து  ஆண்டன் >  மார்த்தாண்டன்.

பிற பின்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


கருத்துகள் இல்லை: