சனி, 30 ஜூன், 2018

சால சாலி சாலினி சாலமோன் சாலை பிற

சாலமோன் என்ற சொல்லை முன்னர்ச் சிலமுறை யாம் விளக்கியதுண்டு.

சால -  மிகுந்த. நிறைவான.

இதன் அடிச்சொல் சாலுதல் என்பது.  இச்சொல் ஒரு வினைச்சொல்.

சால என்பதை ஓர் உரிச்சொல் என்பதுண்டு.   சாலச் சிறந்த என்ற தொடரில் சிறந்த என்ற எச்சச் சொல்லை சால என்பது தழுவி நிற்றல் காணலாம்.  இது உரிச்சொல் எனப்படினும் இது "சாலுதல்" என்னும்போது வினைவடிவெடுப்பதை அறியலாம்.

இது எவ்வாறாயினும், சால என்பது பிறமொழிகளிலும் பரவிச் சொற்களைப் பிறப்பித்துள்ளது.

சாலை என்பது   சால்+ஐ என்றமைந்த சொல்.   இப்போது வாகனங்கள் செல்லும் பெரும்பாதையை நாம் சாலை என்`கிறோம்.  எடுத்துக்காட்டு:  விரைவுச்சாலை.


பாடம் என்பது தமிழ்ச்சொல்.  படி+ அம் =  பாடம் எனவரும்.  படி என்பதில் உள்ள பகரம் நீண்டு பாகாரம் ஆனது.  டி என்பதில் உள்ள இகரம் கெட்டு ட் என்று நின்று வரும்  அம் என்னும் விகுதியுடன் இணையப் பாடம் என்ற சொல் அமைகிறது.

பாடம் + சாலை என்பனவற்றைச் சேர்க்கப் பாடசாலை ஆகிறது,  இதன்பொருள் பாடம் படிக்கப்  பிள்ளைகள் கூடியுள்ள இடமென்பது. இப்போது பள்ளி என்ற சொல்லே இதற்குப் பயன்படுகிறது.  பாடசாலை என்பது பிறமொழிக்குச் சென்று பயன்பட்டதால் அதன்பால் ஏற்பட்ட ஐயப்பாட்டில்  அது இப்போது விலக்கப்படும்.

அறியாது அகராதி வெளியிடும் சிலர்கூட பாடம்  சாலை என்பன தமிழல்ல என்று கூறிக்கொண்டிருப்பதுண்டு.  இக்கூற்று  உண்மையன்று என்பதை மேலே விளக்கியுள்ளோம்.

சால என்ற சொல் எபிரேய மொழிக்குள்ளும் சென்றது.  சாலமோன் என்ற மன்னன் பெயரில் சால என்பது இருக்கிறது.  பெயருக்கேற்ப அவன் சாலச் சிறந்தவனாகத் திகழ்ந்திருந்திருந்தான்.  மன் என்பது மன்னன் என்பதன் அடிச்சொல்.   சாலமன் என்பது சாலச் சிறந்த மன்னன் என்று பொருள்படும்.
மன் என்பதன்றி அதை சாலமோன் என்று பலுக்கிடில் மோன் எனற்பாலது மகன் என்பதன் திரிபாகவும் கொள்ளுதற்கிடனுண்டு என்பதறிக.  மகன் என்பது மோன் எனவருதல் பேச்சுத் திரிபு.  தமிழ் நாட்டின் சில வட்டாரங்களிலும் சேரலத்திலும் இது இவ்வாறு உருக்கொண்டு வழங்கும்.  இதைப் பற்றி மேலும் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2016/05/solomon-tamil.html

ஆனால் சாலமோன் சாலமன் என்று ஓர் அரசன் இல்லை என்று சிலர் கூறியுள்ளனர்.  பண்டைக்காலத்தில் பல கதைகளைக் கற்பனைக் கேற்ப எழுதிப் பரப்பியோர் பலர்.  சில செய்திகளை ஈண்டு அறியலாம்,

https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0ahUKEwiikfatk_vbAhUEQH0KHbn7CXgQFggoMAA&url=http%3A%2F%2Fwww.jesusneverexisted.com%2F&usg=AOvVaw3KzUp6-ujV7qhhPUpzPcOp

சாலமன் பற்றிப் பல வியத்தகு கதைகள் உள; அவர் இருந்திருந்தாலும் இல்லாதிருந்தாலும் செய்யத்தகுந்தது ஒன்றுமில்லை.  கதைகளை அறிந்து மகிழ்வேண்டியதுதான் நம் வேலை.


சாலிவாகனன்,  சாலியவாகனன் என்பன சிறந்த வாகன வசதிகள் உடையோன் என்று பொருள்படுதல் கண்டும் ஆனந்த மடைக.  வேறுபொருள் கூறிய வரலாற்றாசிரியர்  உளர்.  பண்டைக்காலத்தில் வாகனவசதியுடையோன் பெரிதும் மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டான்.  பத்து இரதங்களுடைய மன்னன் தசரதன் பெரிதும் மதிக்கப்பட்டு அவனியற்பெயர் மறக்கப்படுமாறு தசரதன் என்ற பெயரே வழக்குப்பெற்றுள்ளது.

இரதம் என்பது எப்படி அமைந்த சொல்? ( இரு+அது+ அம் :  இருந்து செல்வதற்கு அது அமைப்பு )

நடந்து திரிபவனுக்கு அத்துணை மதிப்பு இல்லை.

சிறந்த நெற்பெயர் சாலி   என்ற பெயர் பெற்றதும்  தமிழ்மொழியின் சிறப்பை உணர்த்தும்.

தேவிக்குச் சாலினி என்ற பெயருண்மை முன்னர் நம் இடுகையில் சொல்லப்பட்டதே.  இப்போது இது ஷாலினி என்று மெருகேறி  ஒப்பனை நிலையில் வழங்கிவரும் சொல் ஆகும்.

பிழைத்திருத்தம் பின்.
மெய்ப்பு: 16122022

வெள்ளி, 29 ஜூன், 2018

விற்றலும் வாங்குதலும்

விற்றலும் வாங்குதலும் பண்டைக்காலத்திலே தொடங்கிவிட்டன. வில் என்ற சொல்லும் தமிழிலே உண்டானது,   அது தல் விகுதி பெற்று,  வில்+தல் =  விற்றல் ஆனது. தமிழில் விற்றல் என்பதற்கு விலைக்குக் கொடுத்தல் என்பது அர்த்தமாக அல்லது  பொருளாகக் கொடுக்கப்படுகிறது.

வாங்குதல் என்பதற்கோ இப்படியமையாமல்  வளைதல் என்றே பொருள்பட்டது,  இன்றும் எதையாவது இன்னொருவரிடம் பெற்றுக்கொள்பவர், சற்றுக் கையை நீட்டி, உடல் வளைந்து நின்று பெற்றுக்கொள்கிறார்.  வாங்கு  என்பது வளைதல் குறிக்கும் பெயர். பழங்காலத்தில் வளைந்து நின்றுதான் பொருளைப் பெற்றுக்கொண்டனர். ஆனால் இற்றை நிலையில் வாங்குதல் என்பது விலைக்கு வாங்குதலையும் அல்லாது வாங்குதலையும் குறிக்கும். இடம் நோக்கிப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

வில் என்பதோர் அடிச்சொல். அது விர்>விய் என்றும் திரியும்.

விர் என்பது விரி > விரிதல் என்றும் திரியும்.  

விர்> விய் என்று திரிந்தபின் பல சொற்களை அவ்வடிச்சொல் பிறப்பித்துள்ளது.

வி> விய்> வியன் = விரிவு என்பது பொருள்>

விரிநீர் வியனுலகு என்று குறளில் வருவது காண்க.

விர்> விய் > விய >வியன்.

விய > வியா.

வியா > வியாபித்தல் =  விரிந்து பரவுதல்.

வியா என்பது வியாபாரம் என்ற சொல்லின் முதலாக நின்றது.

பாரம் என்பது உண்மையில் பரத்தல் என்ற அடியிலிருந்து வரும்.

பர > பரத்தல்.   எங்கும் பரவுதல்.

பர> பரவு.   பர> பார்.  

பார் என்பது பரவுதல் என்பதே.  அது முதனிலை நீண்டு பெயரானது,

பர+அம்,= பாரம்.  இதன் பொருள் பரவுதலைச் செய்தல் என்பது.

வியாபாரம் என்ற சொல்லில் பொருளுக்கு விற்றல் அல்லது வாங்குதல்  என்ற பொருளில்லை ஆயினும் அது சொல்லின் வழக்கில் ஏற்பட்டது,

பண்டைக்காலத்தில் பண்டமாற்று வணிகமிருந்தது.  விலை என்பது தெளிவாக ஏற்பட்டிருக்கவில்லை. பல இடங்களுக்கும் பொருளைச் சுமந்து சென்று பரவச் செய்தல் என்பதே வியாபாரம் என்பதன் பொருளாம்.

இன்று அதன் பொருள் வேறுபட்டுள்ளது.  இன்று வாங்குதல் விற்றல் என்று பொருள்.

வருத்தகம் என்பது இப்போது வர்த்தகம் என்று எழுதப்படுகிறது,  ஆனால் சொல் அமைந்தது:  வருத்து + அகம் என்றபடியே ஆகும்  பொருளை வெளியிலிருந்து வருத்தி விற்பதே வருத்தகம் ஆகும்.  அது பின் வர்த்தகம் என்று மெருகுபெற்றது.

வருத்துதல் என்றால் வருந்தச் செய்தல் என்றும் பொருள்.  அதனால் குழப்பம் தவிர்ப்பான் வேண்டி,  வருத்தகம் என்பது உண்மை வடிவமெனினும் அதை வர்த்தகம் என்று எழுதுவதே நன்று என்று தோன்றுகிறது.

சில வேளைகளில் முன்னமைப்புச் சொல் பொருந்தாவிடில் திரிபையே ஆளுதல் நன்றாகும்.

தமிழ்ச்சொற்களே திரிந்து   வழங்குகின்றன.  அது தமிழனுக்கு ஒருவகையில் பெருமையே ஆகும்.

பிழைத்திருத்தம் பின்பு.
மூலத்திலிருந்து வேறுபட்டுப் பிழையாகத்
தோன்றியவை: 11.7.2018 ல் திருத்தம்பெற்றன


புதன், 27 ஜூன், 2018

சமஸ்கிருதமும் இந்தியாவும்.

இதுபோது சமஸ்கிருத மொழி பற்றித் தெரிந்துகொள்வோம்.

முதலில் நாம் அறியவேண்டியது, இந்தியத் துணைக்கண்டத்து மொழிகளில் எல்லா மொழிகளும் ஒன்றின்சொல் இன்னொன்றில் வழங்கத் தக்க அளவுக்கு பெரிதும் உறவுடையவை.  இதற்குக் காரணம் மக்கள் யாவரும்  அடுத்தடுத்து வாழ்ந்ததும் தங்களுக்குள் உறவுடையவர்களாய் இருந்தமையும் சண்டையும் தங்களுக்குள் போட்டுக்கொண்டதும் ஆகும்.   பழக்கவழக்கங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் பல ஒற்றுமைகளும் இருக்கின்றன.

வெளிநாடுகளிலிருந்து வந்து தங்கியவர்களும் வாழ்ந்தனர்.  இந்தியாவிலே மறைந்தனர்.  பிள்ளைகுட்டிகள் மூலம் முன்னர் இவண் வாழ்ந்தோருடன் கலந்தனர்.   யவனரும் ஊனரும் வந்து பணிபுரிந்ததும் உண்டு,  கலந்ததும் உண்டு.

ஆரியப் புலம்பெயர்வு, ஆரியப் படையெடுப்பு முதலியவை நடைபெற்றதற்கான சான்றுகள் இல்லை.  சமஸ்கிருத மொழியில் வழங்கும் சொற்கள் ஏனை நண்ணிலக் கோட்டு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் முதலியவற்றிலும் திரிந்து வழங்குவதால்,  மக்களிடை நீண்டகாலத் தொடர்பிருந்தமை அறியலாம்.

சமஸ்கிருதம் நன்றாகத் திருத்தியமைக்கப்பட்டு, வெளிநாட்டிலிருந்து வந்து வழங்கும் சொற்களும் உள்நாட்டுத் திரிபுச் சொற்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இப்படி அமைக்கக்காரணம்  அது பல்வேறு மக்களிடைப் பொதுமொழியாய் வழங்குவது நன்மைதரும் என்பதாலே ஆகும்.

டாக்டர் லகோவரி மற்றும் அவர்தம் ஆய்வுக்குழுவினர் கண்டறிந்தபடி மூன்றில் ஒருபங்கு திராவிடச் சொற்களும் ஒரு பங்கு அடிப்படை அறியப்படாத சொற்களும் இன்னும் ஒருபங்கு மேலைமொழிகளுடன் தொடர்புடைய சொற்களும் இருந்தன.  மொத்தம் உள்ளவை 166434 சொற்களுக்கு மேலாகும்.

டாக்டர் சுனில்குமார் சட்டர்ஜி கண்டறிந்தபடி  சமஸ்கிருதத்தில் ஒலியமைப்பு திராவிட மொழிகளைத் தழுவியவை.  தமிழில் உள்ள சில எழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் இல்லை; சமஸ்கிருதத்தில் உள்ள சில எழுத்துக்கள் சில தமிழில் இல்லை.

மொழிநூற் பெரும்புலவர் தேவநேயப் பாவாணரின் ஆய்வுப்படி சமஸ்கிருதமென்பது  தென்மொழியின் வழிப்பட்ட மொழி ஆகும். ஆரியர் வரவுக் கோட்பாடுகள் காரணமாக,  அவர் சமஸ்கிருதம் வெளிநாட்டிலிருந்து வந்தமொழி இங்கு வளம்பெற்றதென்று நம்பினார்.  இது ஒரு தெரிவியல்தான். (theory.  ) 

வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பாரின் ஆய்வுப்படி,  சமஸ்கிருதத்தில் காணப்படும் வெளிநாட்டுச் சொற்கள் மக்களிடையே ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக வந்தேறியவை.  அவை "பெறப்பட்ட" சொற்கள்.  இவ்வமைப்பினால் அதை வெளிநாட்டு மொழியெனல் பொருந்தாது.

சமஸ்கிருதம் என்பது உள்நாட்டுப் புனைவுமொழியாகும். மொழியில் சில இயல்புகள் உள்நாட்டில் அமைக்கப்பட்டவை அல்லது வெளியிலிருந்து வந்தவை. பல சொற்கள்  மக்களால் பேசப்பட்டவைதாம்.  பாகதச் சொற்கள் இவையாம்.

சமஸ்கிருதம் என்ற வழக்குச்சொல் முதன்முதல் இராமாயணத்தில் உள்ளது. அதற்குமுன்  அது வேறுபெயர்களால் அறியப்பட்டது.   அதன்பெயர்களில் சந்தாசா என்பது ஒன்று.  சந்த அசைகளால் ஆன மொழி என்ற பொருளில் அப்பெயர் அமைந்தது.    சம என்பது சமை என்ற தமிழ்ச்சொல்லுக்கு நேரானது. கிருதம் என்பது  கத்துதல்,  கதறுதல்,  கழறுதல்  என்ற சொற்களின்  வேருடன் தொடர்புள்ளது.   கத்து > கது ( இடைக்குறை) >  கது+அம் = கதம் > கிருதம்.
கத்து> கது > கதை> காதை. கத்து >கது > கீது > கீதம்.  வேறு இத்தகு திரிபுகளும் நேரமிருக்கும்போது ஒப்பாய்வு செய்து காட்டுவோம். முன்னரும் காட்டியுள்ளோம்.  (கத்து > கது > கதறு > கதறுதல்.)   கத்து என்பதன் கத்  அரபு மொழியிலும் உள்ளது ஆகும்.  அது குமரிக்கண்டக்காலத்துச்  செலவாயிருத்தல் கண்கூடு.

ஆரியர் வந்த ஆதாரம் இல்லை; ஆரியர் என்ற இனமும் இல்லை. ஆரியர் என்றால் மேலோர்.  ஆர் என்பது உயர்வு குறிக்கும் பலர் பால் விகுதியாகும்.  ஆர்தல் நிறைவு குறிப்பதும் ஆகும்.

ஆரியர் வெளி நாட்டிலிருந்த வந்த ஓர் இனத்தினரென்பது பிரிட்டீஷ் ஆய்வாளர்களால் புனையப்பட்ட செய்தி. இஃது   ஒரு தெரிவியல்(theory). ஆகும்.  அவர்கள் நாடோடிகள்(nomads)  எனப்பட்டதால், அவர்கள் பல்லாயிரம் சொற்களைத் தம்முடன் பேச்சில் கொண்டுவந்தனரென்பது  நம்ப இயலாது.  மாடோட்டி வந்திருந்தால் அவர்களுக்கு  நாடோறும் வழங்கும் சில சொற்களைத்  தவிர பிற அறிந்திருக்க இயலாது. அவர்களிடை குறுகிய சொற்றோகுதியே இருந்திருத்தல் கூடும். மயில் என்ற பறவைக்கு அவர்களிடம் சொல் இல்லை என்று கண்டு,  மாயூரம் என்பதை மயில் என்பதினின்றே படைத்துள்ளமையால் அவர்கள் வெளி நாட்டினர் என்றனர். இது ஒரு பொருத்தமான காரணம் ஆகாது. இதே காரணத்திற்காக அவர்கள் உள் நாட்டினராகவும் இருக்கலாமே.  கடைதல்  அம் என்ற இரண்டையும் சேர்த்துத் திரித்துக் கஜம் (கடை + அம் =  கடம் >  கஜம் ) என்ற சொல்லைப்  படைத்துக்கொண்டமையால் அவர்கள் யானைகள் இல்லாத உருசியப் பகுதிகளிலிருந்து வந்தனர் என்பதும் பொருத்தமற்றது .  புதிய சொற்களை மொழிக்குப் படைக்கும் ஆர்வத்தால் உள்நாட்டினரும் இதைச் செய்திருக்கலாமே.

பிராமணருக்கு எந்த மாநிலத்திலிருந்தனரோ அந்த மாநிலத்து மொழியே தாய்மொழியாகும்.   சமஸ்கிருதம் ஒரு  தொழிலுக்குரிய மொழியே ஆகும்.   பிராமணருக்குள்ளே 2000 சாதிகள் உள்ளன என்பதால் அவர்கள் பல்வேறு வகைகளில் தொழிலால் ஒன்று  சேர்ந்தவர்கள். ஓர் இனத்தவர் அல்லர்.  வெளிவரவினர் அல்லர். எல்லாச் சாதிகளிலும் கலந்துள்ளமை போல வெளிவரவினர் அவர்களுள்ளும் கலந்திருப்பர்.

பின்னொருகால் இதைத் தொடர்வோம்.

பிழைத்திருத்தம் பின்.


செவ்வாய், 26 ஜூன், 2018

தகராறு தகரால் தகரார் வேறுபாடு.

இன்று தகராறு என்ற சொல்லைப் பற்றி அறிவோம்.

தகர்த்தலாவது ஒன்று இடித்தெறிதல்.  ஓர் கட்டிடத்தைத் தகர்த்தல். ஒரு திட்டத்தைத் தகர்த்தல் .   என்றிப்படிப் பயன்படும் சொல்.

ஆறு என்பது வழி.

தகராறு பண்ணுவது என்பர்.  அதாவது ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது அதற்கு இடையூறு செய்தலாகும்.

இது இன்னும் வேறு விதமாகவும் எழுதப்படும்.  

 meaning: dispute or squabble in Urdu.

தகரார்.

தகரால்.

தகரார் தகரால் என்பன வேற்றுமொழித் திரிபுகள். அல்லது சொற்கள்.
 

தகராறு என்பதும் தகரால் என்பதும் நுண்பொருள் வேறுபாடுடையன,  தகராறு என்பதே சரி.

திங்கள், 25 ஜூன், 2018

கள்ள மென்பொருள்கட்கு ஒரு கட்டு! Andriod security

கள்ள மென்பொருள்களையும் மறைபொருள்களைத் திருடுவதையும் இது தடுத்துவிடுமா?  பொறுத்திருந்து பார்ப்போம்.

MOUNTAIN VIEW, Calif.—Google is prepping the Android world for its next upgrade, code-named Android P, with an array of security and privacy enhancements. But even locking down a long-criticized Android privacy flaw won’t help the operating system beat its biggest security flaw: its own success.
Android P, expected to be released this fall, locks down privacy in a way no other Android version has. Until now, Android has allowed apps running in the background to access the camera and microphone without user permission. Android P will force background apps to ask for user permission before tapping into those sensors. It will also force apps to include an icon on the taskbar indicating that they are using the camera or microphone.
“That gives users a lot more control and more transparency into which apps have access to their sensors,” Xiaowen Xin, Android security product manager, said at Google’s annual I/O developer conference on May 10.
 https://www.the-parallax.com/2018/05/18/fragmentation-hinder-android-p-security/

நீர்த் தகராறுகள்: இந்தியா சிங்கை மலேசியா..

ஓங்குமிவ் வுலகமும் தாங்கிநிற் கின்றது  நீரை;
ஏங்குதல் இலாமல் எடுத்தது குடிப்பதற் கூறும்;
வீங்கிள வேனிலில் வெம்மை தணித்திட வாரி
யாங்கிருப் பாரையும்  ஈங்கென விளித்திடும் பாரும்.

செடிகொடி மரம்பிற எல்லா உயிர்களும் விடாயில்
மடிவதைத் தடுத்திடக் கிடைத்திட   வேண்டுமிந்  நீராம்;
ஒடிவதும் இலாத இகநா கரிகமும் நிலையாய்
நடைபெறத் தருவதும் பிறவல அதுதனி   நீரே.

தமிழ்தரு மாநிலம் கருநடம் இவற்றிடை  மாறாய்க்
குமிழ்தரு துயரமும்  பிறவல  அதுவுயிர்  நீராம்;
இமிழ்தரு கடல்கடந்  துளமலை நாட்டொடு சிங்கை
நிமிர்பெறு தனித்துயர் எதுவெனின் அதுவிலை  நீரே.
 

ஞாயிறு, 24 ஜூன், 2018

சாரளம்> சாளரம்.

சாளரம் என்ற சொல்லை நாம் ஆய்வு செய்வோம்.

புரட்சிக் கவி என்று பாராட்டப்பட்ட பெரும்பாவலரும் பாரதியாரின் சீடருமான பாரதிதாசன் :

"கதவைச் சாத்தடி --- கையில்
காசில்லாதவன் கடவுள் ஆனாலும்
கதவைச் சாத்தடி"

என்று தொடங்கும் பாடலை கதைக்கேற்பப் பாடிக்கொடுத்திருந்தார்.

சாத்து என்ற சொல் இலக்கியத்திலும் இடம்பெற்ற சொல்.  தீமைகளைத் தடுக்க அவை வரும்வழிகளைச் சாத்தும் ஒரு தெய்வம் "சாத்தன்"  எனப்பட்டது.  சாத்தன் என்ற இப்பழைய தெய்வம்தான் ஐயப்பன், ஐயனார் என்பர்.  சாத்தன் என்ற சொல் மெருகூட்டப்பெற்று :  சாத்தா > சாஸ்தா என்றுமாகியது.  சாத்தன் என்ற தமிழின் எழுவாய்ச் சொல்லுருவிற்கு சாத்தா என்பது விளிவடிவமாகும்.

"காதலுக்கு வழிவைத்துக் கதவைச் சாத்த,
கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்"  என்று

சாத்துதல் என்பதைப் பயன்படுத்தியுமிருந்தார் பாரதிதாசன்.    சாத்துதல் என்ற சொல் இன்றும் வழக்கிலுள்ள தமிழ்ச்சொல் ஆகும்.

இது "சார்> சார்த்து > சாத்து"  என்று பண்டைக்காலத்திலே திரிந்துவிட்டது.  இடைநின்ற ரகர ஒற்று பல சொற்களில் மறைந்துள்ளமையைப் பல இடுகைகளில் எடுத்துக்காட்டியுள்ளோம்.  அவற்றை மறுவாசிப்புச் செய்து மகிழவும்.  வாய்விட்டு ஒன்றைப் படிப்பதுதான் வாய் > வாயிப்பு> வாசிப்பு ஆகும்.
இனி வாசி+அகம் =  வாசகம். உண்மையில் இங்கு அகம் என்று வருவது:  கு+அம் என்ற விகுதிகளுடன் அகரம் புணர்ச்சியில் தோன்றி நின்றதாகும்.  இங்கு அகம் என்றது மனம் அன்று.

வாசி +கு+அம் = வாசி+அ+கு+அம் =  வாசகம்.  இந்த அகரம் இணைப்பில் தோன்றியது.  ஆனால் அகத்துக்குள்ளேயே வாசித்துக்கொள்வது வாசகம் என்று சிலர் சொல்லக்கூடும்.  வாசித்தல் என்பது சில திராவிட மொழிகளில் வாயித்தல் என்றே வழங்கும்.

சாத்து என்ற சொல்லை ஆய்வு செய்யப்புகுந்து பிறவும் கூறினோம். எழுதுவனவற்றை அழிப்போர் நடமாடுவதால் அவ்வப்போது வாய்ப்பு நேர்கையில் பலவும் சொல்வது அவர்களை முறியடிக்க ஓர் உத்தியாகும். அது இனிமேல் வேண்டியாங்கு கடைப்பிடிக்கப்படும்.

இனி சாத்து, சாளரம் என்பவற்றின் தொடர்பு விளக்குவோம்.

சார் > சார்த்து > சாத்து.
சார்> சார்+அள+அம் = சாரளம்  (சாத்தவும் திறக்கவும் பயன்படும் ஒரு சிறு சுவர்க்கதவுடன் கூடிய காற்றதர்.)

இதில் :  சாரளம் என்பது பின் எழுத்து முறைமாற்றத்தால்:  சாளரம் ஆனது.

இப்படி அமைந்த பிற சொற்கள் எடுத்துக்காட்டு:  மருதை> மதுரை; விசிறி>சிவிறி.

பதநிரல்மாற்றுச் சொற்கள்:   வாய்க்கால் > கால்வாய். இங்கு முழுப்பதங்கள் முறைமாறின.

சாளரமென்பது ஓர் அளவுடன் இருக்கவேண்டியது முதன்மையாகும். பண்டைக்காலத்தில் வெளியாட்கள் கதவு சாத்தியிருக்கும்போது சாளரத்தின் வழியாய் உள்ளே குதித்து வருவதைக் கட்டுப்படுத்த ஓர் அளவைக் கடைப்பிடித்தனர் என்பதைச் சொல் நமக்குத் தெரிவிக்கிறது, அளத்தல் - எட்டுதலும் ஆகும்.  அதரடைப்பு எட்டிச் சுவரைத் தொடவேண்டுமே. அதுவும் நன்று.   வெளியாரைத் தடுக்கக் கதவு சாத்திக் காற்றுக்காக பலகணியைத் திறத்தல் இதன் உத்தியாகும்.பலகணி என்ற சொல்லுக்குத் தனி இடுகை உள்ளது. அங்குக் காணலாம்.  பலகண்கள் அல்லது பல துவாரங்கள் உள்ள சாளரம் :  பலகணி.   துவை+ஆர்(தல்)+அம் = துவாரம்.   அம்மி துவைத்தல், அம்மி பொழிதல் எல்லாம் கேள்விப்பட்டதுண்டா? இடித்து உண்டாக்குவது துவாரம். இப்போது இடிக்காமல் குடைந்து உண்டாக்கிய துளையையும் குறிக்கும்.

சாரளம் > சாலகம் > சாலம் என்பன திரிபுகள்.  சார்<> சால்.

சாலேகம் என்பது மற்றோர் சொல்லுரு.   சாலகம் > சாலேகம் (பலகணி).

சாலுதல் என்பது அமைத்தலையும் குறிக்கும்.வீடு என்பதை முதல்முதலாக அமைத்த மனிதன் அதை மரங்களில் மேல் அமைத்தான்.  அப்போது அவனுக்கு வாசல் கதவு எல்லாம் தேவையற்றவை.  ஒரு பரண்போல  அமைத்து அதன்மேல் இருந்துகொண்டான்.  விலங்குகளிடம் இருந்து தப்பவும்  மழை காற்று வெயில் முதலிய இயற்கைத் துன்பங்களிலிருந்து விடுபடவும் அவன் வழி தேடினான்.  பின்னர் காடுகளிலிருந்து விலகி, நிலங்களைச் சமன் செய்து குச்சிகளின்மேல் பரண்போல் மேடையமைத்து அதில் வாழ்ந்தான்,  அப்போது கதவு செய்வது கூரை வேய்வது முதலியவற்றில் பட்டறிவு உடையவனானான். ஆகவே சுவர், கூரை முதலியவை அமைக்க அறிந்துகொண்டான்.  சுவர் என்பது சுற்றி வரும் தடுப்பு.   கூராக மேல் அமைக்கப்பட்டது கூரை.  சு+வர். (சுற்றி வருவது).  கூர்+ஐ = கூரை.  சுற்று, சுழல், சூழ் முதலிய சொற்களின் தொடக்கத்தை நல்லபடியாக சிந்திக்கவும்.  சுற்றுவரு > சுவரு > சுவர்.  அல்லது சுத்துவரு என்று பேச்சுப்படி நோக்கலாம்.  சுவரில் காற்றுக்காக பல கண்களை அமைத்தான்.  வீட்டுக்கு அவை கண்கள். கண்  என்றால் துவாரம்.  பூச்சி கடித்துச் சேலை கண்ணு கண்ணாகப் போய்விட்டது என்பாள் கிழவி.  கண் - சிறு பொத்தல்.  பல கண் உள்ள திறப்பு, பலகண்+இ.= பலகணி.  சுவர் எனபதன் மூல அடிச்சொல் சுல் என்பது ஆகும்.  சுட்டடிச் சொல்.  பலகணிக்கு முந்தியது வாயிலும் கதவும்.  சால்>சார் ( ரகர லகரப் போலி).

இதைச் சார் என்பதிலிருந்து தொடங்கினால் புரிந்துகொள்வது எளிது.  சால் என்பதிலிருந்த்ம் தொடங்கியும் சொல்லலாம்.  பின் பேசி மகிழ்வோம்.

இருக்கும் எழுத்துப்பிழைகளும் பின் எழுதியினால் தோற்றுவிக்கப்படும் auto correct பிழைகளும் சரிசெய்யப்படும். எக்கச்சக்கமான கள்ள மென்பொருள் கலாய்த்துக்கொண்டிருப்பதால் விரைந்து செய்தாலும் பயனில்லை. பொறுமையுடன் வாயிக்கவும்.  வாசிக்கவும்.  யி-சி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

ஊழல் அலுவலர் மாட்டிக் கொண்டார்

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு பெரிய அலுவலர் சில குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். அதிலொன்று ஊழல் பற்றியது.
இன்றை நிலையில் அவர் கதையைப் பாடல்களாய் எழுதினால் அவற்றிலொரு பாடல் இப்படி இருக்கக்கூடும்.

என் கணக்கில் எப்படியோ பணத்தைப் போட்டார்;
எனக்குப்பின் தெரிந்ததையா யான் என் செய்வேன்?

தன்வரவாய் வந்தபணம் கேட்ட தில்லை;
தனக்கென்றே அதிலேதும் எடுத்த தில்லை;

வன் கணமாய் வாய்த்தபணம் இதுவோ இல்லை;
வாழ்வில்நான் திருடியதோ இல்லை இல்லை;

துன் குணத்தார் எனைக்குற்றம் சொல்வ தென்னே
தோன்றியவை சொல்லி எனை வதைக்கின் றாரே.

இப்படி எல்லாம் அவர் அழுது புலம்பினாலும் யாரும் அதைக்
கேட்பதாய் இல்லை.  மக்கள் தீர்ப்பில் அவர் மடங்கி வீழ்ந்தார்.

சனி, 23 ஜூன், 2018

மரியாதை என்னும் பதம்.

 வடகொரிய  அதிபர் கிம்மும் அமெரிக்க அதிபர் திரம்பும் சிங்கப்பூரில் எதிர்கொண்டு தழுவிக்கொண்டனர் என்று செய்திகள் கூறுகின்றன. கிம் தாம் அணுவாயுதத் தயாரிப்பிலும் வெடியாய்வுகளிலும் ஈடுபடப்போவதில்லை என்ற  உறுதியை அமெரிக்க அதிபருக்கு வழங்கினார் என்றனர்.  உலகம் மகிழ்வடைந்தது என்று சொல்லத்தேவையில்லை.

இத்தகைய தழுவுதல்கள் பணிவன்பு காரணமான நல்லெண்ணப் பரிமாற்றம் என்னலாமா?

இன்னும் பல உலகத் தலைவர்கள் எதிர்கொள்ளுதலின் போது தழுவிக்கொள்வது இப்போது வெகு இயல்பானதாகிறது.

கைகுலுக்குதலும் வேண்டியாங்கு நடைபெறுகிறது.

தழுவிக்கொள்ளுதலுக்கு மருவுதல் என்றும் தமிழில் இன்னொரு சொல் உள்ளது.

இருகைகளாலும் எதிர்நிற்பவரை மருவிக்கொள்ளுதல்.

மருவியபடி இறுக்கிப் பிடித்துப் பணிவு தெரிவித்துக்கொள்வது "யாத்துக்கொள்ளுதல்"  ஆகும்.  யாத்தல் - கட்டுதல்.

கைகளால் சுற்றிக் கட்டுதல்.

மருவு+ யா+தை.  

மரு+ யா + தை.

இங்கு தை என்பது விகுதி.  நட > நடத்தை என்பதில்போல.

ருகரமும் யகர வருக்கமும் எதிர்கொள்ளும் புணர்ச்சியில் ரு என்பது ரி என்று திரியும்.

மரு+யா+தை > மரியாதை.     பெரு+யாழ்=  பேரியாழ் என்பதில்போல.

மருவு என்பதன் அடிச்சொல் மரு.   வு என்பது வினைச்சொல்லாக்க விகுதி.

யாத்தல் என்பதில் யா என்பது அடிச்சொல்.

மரியாதை என்பதில் இரு அடிச்சொற்களும் ஒரு விகுதியும் உள.

மரியாதை என்பது சிற்றூர்களிலும் வழங்கும் சொல்.

முன்னர் இதை விரித்ததுண்டு.  இங்கு மாற்றம் எதுவும் இல்லை.

அறிந்து மகிழ்க. 

குறிப்பு:

பொருள் பதிந்துள்ள சொல் பதி+அம் =  பதம் ஆகும். பதி (பதிதல்) என்பதன் ஈற்று இகரம் கெட்டு பத் + அம் என்று நின்று  தகரத்தில் அகரமேற பதம் என்றானது. இதில் வியப்பும் இல்லை, விளக்கெண்ணெயும் இல்லை. அறியாருக்கு இரங்குவதன்றி யாது செய்வோம்?


கொடுவா மீன்

https://bishyamala.wordpress.com/2018/06/23/கொடுவா-மீன்/

https://bishyamala.wordpress.com/2018/06/23/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d/

கொடுவா மீனைப் பற்றிய ஒரு சொல்லாய்வு இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

வியாழன், 21 ஜூன், 2018

அடிமேல் அடியடித்தால்

அடிமேல் அடியடித்தால் அம்மி நகருமென்றார்
கடிமேல் கடிகொடுத்தால் இம்மியே  னும்கிழியும் 
கடிநாய் அறிந்தவற்றைக் கள்வர்  அறிந்தவரே
ஒடிவார் தமையொடிக்க உள்ளுவார் வல்லவரே.

இ-ள்:

நம் மென்பொருள் கள்வர்கள் பற்றிய கவிதை இது.
இங்கு ுு   தரப்பட்டுள்ள பழமொழிகள் படி, அவர்கள் 
எல்லாம் அறிந்தவர்களே ஆவர்.  எத்தனையோ வகையில் 
இடையூறுகளை விளைவித்துக்கொண்டுள்ளனர். 
கடைசியாக அவர்கள் எம் எழுதிகளைச் செயலிழக்கச்
செய்துள்ளனர்.  எனவே முன்வரைவுகளும் சரிபார்த்தலும்
இயலாதவை ஆகின்றன.  

நாய்போல் கடித்துக்கொண்டிருந்தால் ஓர் இம்மியேனும்
கிழிய வேண்டுமே. அப்போது தசையைத் தின்றுவிடலாம்
என்று நாய்கள் நினைப்பதைக் கள்வர்களும்  தெரிந்துதான்
வைத்துள்ளனர்.  ஆனால் ஒடிந்துவிடக் கூடியவர்களை
ஒடித்துவிடுபவர் வல்லவர்தாம் என்று சொல்லவேண்டும்.

புதன், 20 ஜூன், 2018

எழுதி மென்பொருள் படுத்துக்கொண்டது.......

எம்  "சொல்"  எழுதி  எதையும் சேமிக்கமுடியாது  என்று போராடிக்கொண்டிருக்கிறது. தமியேம் யாது செய்வேம் இப்போது?

கணினியை நிறுத்தி வைக்குமுன் உங்களுக்குத் தெரிவிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.  அது கட்டுரையாக வராமல் ஒரு கவிதையாக வந்துவிட்டது. கண்டமாதிரி வரைந்துள்ளேம்,  கண்டுமகிழவும்.

சொல்லென்னும் எழுதிக்குச் சோர்வு தோன்றி

சூழ்ந்தெழுதும் அனைத்தையும் சேமிக் காமல்

ஒல்லேதான் குவித்திட்ட குப்பை மேட்டில்

ஒதுக்கியவை அழித்தற்கு முன்னிற் கின்ற

நல்லதலா நடப்பைத்தான் மேற்கொண் டாடி

நலிவிலெமைஅழுத்திற்றே என்செய்கோ யாம்?

வல்லவொரு கணினிசார் மேதை தன்னை

வரவழைக்கக் கலிதானும் வந்த தாமோ?


எழுதி :  எழுதும் மென்பொருள்
சொல்லென்னும் எழுதி:
The word processor known as  MS  WORD
 சோர்வு:  failing to function; giving error messages.
சூழ்ந்து : யோசித்து
ஒல்லே = விரைந்து
நலிவு :  துன்பம்
செய்கோ : செய்வேம்
கலி :  பேரிடர்

கடல் தீங்கும் மாலுமியும்.


உமி என்பது யாது:

மாலுமி என்ற சொல்லை அறிவதற்குமுன் உமி என்றால் என்ன என்பதை  யறிந்துகொள்வோம்.

குத்துமி என்ற சொல்லில் உமி என்பது செங்கல் வேலை குறிக்கும்,
அதுவே  சலிக்கப்பெறாத உமியையும் குறிக்கும்.

குற்றுமி என்று வந்துஒரு வரியையும் ஒரு நெல்லின் நீங்கிய உமியையும் மற்றும் குற்றுயிரையும் குறிக்கும்.

குற்றுயிர் என்றால் இனிக் குறுகிய காலமே இருக்குமென்று அறியப்பட்ட உயிர்.
"குற்றுயிரும் கொலையுயிரும் என்பது வழக்கு.

கூருமி என்பது சிறுநீரினினின்று வெளிப்படும் உப்பு.

உமிதல் -  துமிதல். (ஆக்கத்தொடர்புடைய சொற்கள்.) 
உமிதல் =  உமிழ்தல் என்பதுமாம்.  உமிழ்நீர் என்பது உமிநீர் என்றும் குறிக்கப்பெறுவதுண்டு.  உமிழ் என்பதை உமி என்பது பேச்சு வழக்கு.

மெல்லிய நகம் உமிநகம் எனப்படும்.

உமி நீக்கிய அரிசிக்குத் தொலியல் என்றும் பெயர்.

உமியல் என்பது வசம்பு.

உமாவின் கணவன் சிவனாதலின் அவற்கு உமி என்றும் பெயர்.  உமாவை உடையோன்.   உமா+ இ =  உமிஆ என்ற எழுத்து மறைந்ததுஉம்+ஆ என்பதில் இறுதியில் நிற்பது ஆஅதாவது: உமாஉம்+ஆ > உமா+இ > உமி.   இது சொல்லமைப்புப் புணர்ச்சிஇதில் முழுச்சொற்கள் புணர்ச்சி இல்லை.

உமாவிலிருந்து வெளிப்படுவோன் சிவன்; உமாவே ஆதிப்பரம்  ஆகும். (ஆதிபராசக்தி)

இவற்றை மனத்தில் இருத்திக்கொள்க.  உமி என்பது பெரிதும் வெளிப்பாடு குறிக்கும்  சொல்.  கலஞ்செல்வோனும் நிலத்தினின்று வெளிப்படுவோனே ஆவான்,

மையக்கருத்து:   வெளிப்பாடு அல்லது வெளிப்படுதல்.

உமி என்பது ஒரு சுட்டடிச் சொல்.  உ = முன்னிருப்பதுஇ-  இங்கிருப்பதுஆக உமி என்பதன் பொருள் இங்கிருந்து அங்கு வெளிப்படுவது  என்பதுதான்.  இங்கு என்பது நெல்லைக் குறித்தது.    உ என்பது  முன் வெளிப்படுவதாகிய தோல்.

இடச்சுட்டுக்களைக் கொண்டே பல்லாயிரம் சொற்களை அமைத்துத் திகழ்வது
தமிழ்மொழி.

இது முன்பின்னாக அமைந்து தோலைக் குறித்துள்ளது.  இதையறிந்த பிற்காலத்தில்  பிதா என்ற சொல்லையும் இதே முறையில் தோற்றுவித்தனர்.

பி = பின்தாய் = தாய்க்கு.  ஆக பிதா.
ஒப்பு:  உ= முன் வெளியாகுவது; இ= இங்குள்ள நெல்லினின்று.  ம் என்பது இரு சொற்களுக்கும் இணைக்கும் ஒலியாக வந்தது.   உ+ம்+இ.

மகர ஒற்று ஓர் இணைப்பொலியாக வருவதை கருமி என்ற சொல்லில் கண்டுகொள்ளுங்கள்.  கரு+ம்+இ = கருமி.  வெறுக்கத்தக்கதாகிய கஞ்சத்தன்மை. கருநிறம் என்ற வெறுத்தகு எண்ண நிலையில் எழுந்த சொல்.

நெல்லிலிருந்து வெளிப்பட்ட உமி, பயனற்றுப் போகிறது.  எரித்துக் கரியாக்கலாம்.  பல் துலக்கினால் பல் வெள்ளையாகும் என்பர்.

உமி என்பது பயனற்றதாகையினால் உமிதல் என்ற வினைச்சொல் அழிதல் கருத்தை எட்டிப்பிடித்தல் கண்டுணர்க.

உமிதல் (தன்வினை)  -  உமித்தல் (பிறவினை).

கடலுக்குப் போவதைப் பண்டை நாட்களில் சிலர் வெறுத்தனர்.

கடலிலிருந்து ஆலகால விடம் வருமென்றனர்.  ஆனால் கடலுக்குப் போனாலும்  நீண்டநேரம் இருக்கலாகாது என்று நினைத்தனர்.  கடைதல் என்பது நெடிதுநிற்றல் பற்றிய அச்சம் குறிக்கிறது.

கடலுக்குச் செல்வோரை மால் அழித்துவிடுவார்!.

இதிலிருந்து மாலுமி என்ற சொல் உருவெடுத்தது,

மால் -  இருள்கடல். கடலோனாகிய விண்ணவன், (விஷ்ணு).
உமி = அழிதல்.

மாலென்பது:  காற்று, முகில், எல்லை, செல்வம், குழப்பம் என்றும் இன்னும் பலபொருளுமுடைய சொல்.

இவற்றுள் ஒன்றோ பிறவோ பொருந்தும் காரணத்தால் அழிவை எட்டுவோன் மாலுமி எனினுமாம்.

எல்லை கடந்து காற்றிலும் மழையிலும் துன்புற்று மனங்குழம்பி  செல்வமிழந்து அழிவோன் எனினும்  அமையும்.


எனவே கடலில்செல்லும் கலஞ்செலிமாலுமியாகினான்.

சிற்பன் எழுத்    தோவியத்தில்  செவ்வரசு  நாவாயின்
அற்புதம் சூழ்  மாலுமிஎன் றாடு.

--  திரு வி.க

பிற்காலக் கருத்தில் மாலுமி உயர்ந்தவனே.





செவ்வாய், 19 ஜூன், 2018

நம் செந்தமிழ் வேலன் ஒரு வஜ்ஜிரவேலன்.

நம் வேலன் போர்முடித்து வாகை சூடியவன். அந்நிலையில் அவன் மிகுந்த வலிமையை வெளிப்படுத்தியவன். முள் என்றாலும் வேல் என்றாலும் உடற்பகுதியில் பதிந்த நிலையில் தம் வீரமிக்க அடியார்களை ஏற்று மகிழ்பவன்.  வீரத்தை விளையாட்டாகக் கொண்ட வேலன் வேறு எதைத்தான் விரும்புவான்?

குமரன் ஏந்திய வேல் வலிமையில் சிறந்த வேல்.  குமரனின் வலிமை அவன் ஏந்தி நிற்கும் வேலில் ஏற்றிக் கூறப்படும். அவன்முன் சூரபத்துமனும் இரு கூறுபட்டு ஒழிந்தான்,  முருகப்பிரானின் வேல்வலிமையால்.

அவன் வேலை வஜ்ஜிரவேலென்`கின்றோம்.

வஜ்ஜிரவேல் எப்படி அமைந்த சொல்?

வல் =  வலிமை.

சிற =  சிறந்த.

வல்சிற  வேல் >  வற்சிறவேல் >  வஜ்ஜிர வேல்.

ஒரு தமிழ்ப்புலவர் வஜ்ஜிரவேலென்பதை  வச்சிரவேலென்றெழுதினார்.

வடவெழுத்து எனப்படும் வட ஒலிக்குரிய எழுத்துக்களை நீக்கியது தொல்காப்பியம் வகுத்த வழிதான்.

ஆனால் அதை வல் சிற வேல் என்றறிவது நுண்மாண் நுழைபுலமன்றோ?

ஞாயிறு, 17 ஜூன், 2018

பயிற்சியமா அல்லது பரிச்சயமா?


பயிற்சி என்பதனோடு அம் என்ற விகுதியைச் சேர்த்தால் அது பயிற்சியம் என்றாகிவிடுமென்பது உங்களுக்கு எந்தப்  பேராசிரியனும் சொல்லிக்கொடுக்காமலே நன்றாகத் தெரியும்.  அம் விகுதிபெற்ற சொல் அப்படி உருக்கொள்ளுமென்பது சொல்லித் தெரிவதில்லை.  உங்கள் செவிகளே உங்கள் எசமானன் ஆகிவிடும். பேராசிரியனோ என்றால் அவன் அரிதின் முயன்று அறிந்தவற்றை எல்லாம்  அள்ளித்  தந்துவிடமாட்டான்.  வியக்கச் சிறிது சொல்வான்.

ஒரு குரு எல்லாவற்றையும் சீடனுக்கு அள்ளித்தருவதில்லை.

எசமான் என்பதையும் சீடன் என்பதையும் யாம் விளக்கியதுண்டு.  இப்போது அவை ஈண்டில்லை என்பதால் விரைவில் அவற்றையும் இடுகை செய்வோம்.

இனிச் சொல்லாய்வுக்கு வருவோம்.

சொல்லமைப்புகளில் எழுத்து நிரல்மாற்று அமைப்பும் ஒன்று உண்டு.  இதை எழுத்து முறைமாற்று என்றும் கூறுவதுண்டு.  இது எப்படி வருமென்றால் காட்டுதும்.  ு.

விசிறி  >  சிவிறி என்று வரும்.

இச்சொல்லில் விசி என்பது சிவி என்று வந்தது.

சில குழுவினர் நாத்தடுமாற்றத்தில் இப்படிப் பேசி நாளடைவில் நிரல்மாற்றுச் சொற்களும் மொழியி லிடம்பெற்றன என்பதே சரியானதாகும்.

மதுரை என்ற சொல்லும் இப்படி அமைந்ததே என்பதை இப்போது பலர் உணர்ந்துள்ளனர்.

பல மருத நிலத்தூர்கள் சூழ அமைந்த பெருநகரமே மதுரை.

அது மருதை ( மருத நிலம் சூழ் நகர்) என்று அமைந்து பின் மதுரை என்று திரிந்தது என்பதே சரி.  ~ ருதை என்பது ~துரை என்று எழுத்து முறைமாறி அமைந்தது.

விகடகவி என்ற சொல் மட்டும் இருபக்கமும் இருந்து படிக்க நன்றாகவே வரும். இதுபோலும் வேறு சொற்களைக் கண்டுபிடித்துப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.

இனிப் பயிற்சி என்பதோ பயில் என்பதினின்று சி விகுதி பெற்று அமைந்தது.

பயில்+சி =  பயிற்சி.
அம் சேர்க்க:  பயிற்சியம்.
நிரல் மாற்றில்:

பயிற்சி  >  பறிய்ச்சி  ஆகும்.   ற்  என்பது றி ஆனது.  யி என்பது ஒற்று  (ய்)  ஆனது.
சற்று வெளிப்படையாய் அமையாத நிரல்மாற்று.

பறிய்ச்சி என்பதில்  ய் - ச்  என்ற இரண்டு ஒற்றுக்களும் தேவைக்கு அதிகம்.  அவற்றை வெட்டுக.

இப்போது பறிய்ச்சி என்பது பறிச்சி ஆகிறது.

இப்போது பறிச்சி என்பது எதையோ பறிகொடுத்ததுபோல் அமைந்து தொல்லை தருவதால்பறி என்பதை பரி ஆக்கிக்கொள்க.

பரிச்சி என்பதனோடு அம் சேர்க்கப் பரிச்சயம் ஆகிறது.  சி என்பதை ச என்று மாற்றின் இனிதாகும்.  (  இனிதாக்கம் )

இதன் அடிச்சுவடுகளை மறைக்க:

பரி என்பதை முன்னொட்டாக ஆக்கி, சயம் என்பதை நிலைச்சொல் ஆக்கிடுக.

சொற்களை அமைப்பது என்றால் எவனும் உணராவண்ணம் பயன்படுத்தமட்டும் செய்தளிக்கவேண்டும்.

ஒரு சொல்லைப் பயன்படுத்தும் சின்னவனுக்கு அது எப்படி அமைந்தது என்று ஏன் தெரியவேண்டும்!வேண்டாமே.

ஆனால் இவ்வளவு மறைமாற்றுக்கும்  பொருள் மாறவில்லை.  ஒருவன் எதில் பயிற்சி பெறுகிறானோ அதில் அவனுக்குப் பயிற்சியம் > பரிச்சயம் ஏற்படும்.


சனி, 16 ஜூன், 2018

இலாவகம்


அந்த ஓடைக்குள் கால் போய்விடாமல் வெகு  இலாவகமாகவே குதித்துத் தாண்டிவிட்டான்.

இது வாக்கியம்.  ஓடையருகில் வந்தவுடன் எப்படித் தாண்டுவது, எப்படி அப்பால் செல்வது என்றெல்லாம் சிந்திக்கவுமில்லைஓடை எவ்வளவு அகலம், தாண்டமுடியுமா என்று அளவு எடுத்துக் கணக்குப் பார்க்கவில்லை; அகத்தில் ஒரு சிந்தனையுமின்றி, விழுந்தால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமே என்ற அச்சமும் இன்றிஅணிந்திருப்பதெல்லாம் நனைந்துவிடுமோ என்ற தயக்கமும் இன்றி, ஒரே தாண்டு; தாண்டிவிட்டான்.

இதுதான் இலாவகம்.  இது லாவகம் என்றும் எழுதவும் சொல்லவும் படும்.

இந்தக் கூட்டுச் சொல்லில் இரு சிறு சொற்கள் உள்ளன.

ஒன்று:  இல்லா;   இன்னொன்று அகம்.

ஒருவன் ஒரு காரியத்தைச் சற்றும் தயக்கமில்லாமல் ஆய்ந்து பார்க்காமல் செய்து முடிக்க வல்லனாயின் அது பெருந்திறம் ஆகும்.  "அருந்திறல்" என்றும் சொல்வோம்.

இல்லா  என்பது இலா என்று குறைந்து நிற்கின்றது.

அகம் என்பது சிந்தனை, தயக்கம் முதலியவற்றையும் முன்னேற்பாடு ஆகிய ஆயத்தங்களையும் குறிக்கும்.

ஆக,   " அகம்" செலுத்தாமல் என்று பொருள்.

இலா+ அகம் =  இலாவகம்.

அரங்குபோன்ற ஆற்றிடைக்குறையில் அமர்ந்துள்ள கடவுளின் இடம் -   அவருக்குப் பெருஞ்சீரான இடம்.  அது சீர்+அரங்கம் என்ப்பட்டது.  சீரங்கம் ஆகி, அங்குள்ள சாமி அரங்கசாமி ஆனார்.  பின் "ரங்கசாமி" ஆனது.  அகரம் குறைந்து சொல் தலைக்குறை ஆனது.

அதுவேபோல். இலாவகம் என்பதும் முதற்குறையாகி  லாவகம் ஆயிற்று.

அறிவீர்; மகிழ்வீர்.

(சில வேளைகளில் எங்கோ செப்பனிடும் பணி நடைபெறுகிறது போலும். இணையம் கிட்டுவதில் இடையீடு உள்ளபடியால் இன்றுகாலை இதை மேலேற்ற முடியவில்லை.)


எழுத்துப் பிழைகள் இருப்பின் பின் சரிசெய்யப்படும்.