வியாழன், 21 ஜூன், 2018

அடிமேல் அடியடித்தால்

அடிமேல் அடியடித்தால் அம்மி நகருமென்றார்
கடிமேல் கடிகொடுத்தால் இம்மியே  னும்கிழியும் 
கடிநாய் அறிந்தவற்றைக் கள்வர்  அறிந்தவரே
ஒடிவார் தமையொடிக்க உள்ளுவார் வல்லவரே.

இ-ள்:

நம் மென்பொருள் கள்வர்கள் பற்றிய கவிதை இது.
இங்கு ுு   தரப்பட்டுள்ள பழமொழிகள் படி, அவர்கள் 
எல்லாம் அறிந்தவர்களே ஆவர்.  எத்தனையோ வகையில் 
இடையூறுகளை விளைவித்துக்கொண்டுள்ளனர். 
கடைசியாக அவர்கள் எம் எழுதிகளைச் செயலிழக்கச்
செய்துள்ளனர்.  எனவே முன்வரைவுகளும் சரிபார்த்தலும்
இயலாதவை ஆகின்றன.  

நாய்போல் கடித்துக்கொண்டிருந்தால் ஓர் இம்மியேனும்
கிழிய வேண்டுமே. அப்போது தசையைத் தின்றுவிடலாம்
என்று நாய்கள் நினைப்பதைக் கள்வர்களும்  தெரிந்துதான்
வைத்துள்ளனர்.  ஆனால் ஒடிந்துவிடக் கூடியவர்களை
ஒடித்துவிடுபவர் வல்லவர்தாம் என்று சொல்லவேண்டும்.

கருத்துகள் இல்லை: