திங்கள், 11 ஜூன், 2018

வரும் தேர்தலில் தமிழ்நாடு நிலை.

மனிதன் எப்போதும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிக் கவலைப் படுபவனாகவே இன்றுவரை புவியில் வாழ்ந்துவந்துள்ளான்.  இந்த எதிர்காலக் கணிப்பென்பது ஒரு தனிமனிதன் பற்றியதாக இருக்கலாம்.  இதை "ஜாதகம்" என் கிறோம்.  ஜாதகம் என்பது சோதிடத்தின் ஒரு கூறு.  அதேபோல்  ஊருக்கு என்ன நல்லது நடக்குமென்றும் அரசுக்கும் நாட்டுக்கும் என்ன நல்லது நடக்குமென்றும் அறிந்துகொள்வதிலும் பலர் ஈடுபாடு காட்டுவதில் வியப்போன்றுமில்லை.  ஒரு சிறுபான்மையினர் சோதிடம் பொய் என்று கூறிக்கொண்டிருந்தாலும் அவர்களிலும் பலர் இவற்றைப் பார்த்து மகிழ்வதுமுண்டு.

எதிர்காலத்தை முற்றாக அறிந்துகொள்வது இயலாத காரியம் என்றாலும் ஓரளவாவது தெரிந்துகொள்வது நலம் என்போர் பலராவர்.

தேர்தல் முன் கணிப்புகள் இப்போதெல்லாம் இயல்பாகிவிட்டன,  அந்த வகையில் தமிழ் நாட்டு அரசியலில் எத்தகைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று அறிந்துகொள்ளப் பலருக்கும் கொள்ளை ஆசையிருக்கலாம்.

தமிழ்நாட்டில் அரசு மாற்றம் முன்னுரைக்கப்பட்டுள்ளது. இங்கு சென்று அதனைத் தெரிந்துகொள்ளுங்கள்.

https://www.nationalheraldindia.com/india/election-survey-suggests-tamil-nadu-will-favour-dmk-punish-aiadmk

யார் அரசு அமைப்பார்கள் என்று முன்னுரைக்க இயலாது என்றாலும் ஒவ்வொரு கட்சியும் எத்தனை இடங்களில் வெற்றிவாகை சூடக்கூடும் என்பதையாவது இக்கணிப்புகள் நமக்குக் காட்டவல்லவை ஆகும்.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு நிகழ்வு  சில பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம்.

 

கருத்துகள் இல்லை: