திங்கள், 4 ஜூன், 2018

பொறாமை வண்டு,

அடுத்தகத்துக்  குடியிருக்கும் மாந்த குமாரி
அழகியஎம் மலர்களையே தொட்டாய் கேட்டுக்
கொடுத்ததுபோல் தடவிவிடும் பாங்கு கண்டு
குமுறுதெங்கள் மென்மனங்கள்  கொத்து வேன்நான்!

என்றபடி என்னருகில வந்த வண்டே
என் கையில் கொட்டியதே!  புண்ணு மாச்சே.
இன்றதுவும் பெரியபுண்ணாய் என் தே கத்தில்
இருக்கிறதெ...வலிகொஞ்சம் இ ருக்கு தம்மா.

மலருக்கு மலர்தாவும் சிறிய வண்டே
மனிதர்வந்து மலர்தொடவும்  மறுப்ப தென்னே?
சிலமனிதர்க் கிருக்குமொரு குறுக்குப் புத்தி
சேராத உனக்கிருத்தல் தேரச் செல்வாய்.


அடிக்குறிப்புகள்:

மாந்த குமாரி   =  மனித குமாரி.
சேராத =  மனித இனத்திற் சேராத.

சொல்லாய்வுக் குறிப்புகள்:

தேகம் :  தேய் >  தேய் + கு+ அம் = தேய்கம்
தேய்கம் > தேகம்.    தேய்தல் அல்லது அழிதலை
உடையதாகிய உடல். இது காரணப் பெயர்.

மன் > மன்+தன் = மாந்தன்:  இங்கு முதனிலை
நீண்டு சொல் அமைந்தது.  தன்: து+அன்.
மன்+ இது+ அன் = மனிதன்.
இதில் முதனிலை நீளவில்லை.  இது என்ற
முழுச் சுட்டுச் சொல்லும் இடைநிலையாகப்
பயன்பட்டுள்ளது.   மன் என்பது அடிச்சொல்.

கருத்துகள் இல்லை: