ஞாயிறு, 24 ஜூன், 2018

ஊழல் அலுவலர் மாட்டிக் கொண்டார்

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு பெரிய அலுவலர் சில குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். அதிலொன்று ஊழல் பற்றியது.
இன்றை நிலையில் அவர் கதையைப் பாடல்களாய் எழுதினால் அவற்றிலொரு பாடல் இப்படி இருக்கக்கூடும்.

என் கணக்கில் எப்படியோ பணத்தைப் போட்டார்;
எனக்குப்பின் தெரிந்ததையா யான் என் செய்வேன்?

தன்வரவாய் வந்தபணம் கேட்ட தில்லை;
தனக்கென்றே அதிலேதும் எடுத்த தில்லை;

வன் கணமாய் வாய்த்தபணம் இதுவோ இல்லை;
வாழ்வில்நான் திருடியதோ இல்லை இல்லை;

துன் குணத்தார் எனைக்குற்றம் சொல்வ தென்னே
தோன்றியவை சொல்லி எனை வதைக்கின் றாரே.

இப்படி எல்லாம் அவர் அழுது புலம்பினாலும் யாரும் அதைக்
கேட்பதாய் இல்லை.  மக்கள் தீர்ப்பில் அவர் மடங்கி வீழ்ந்தார்.

கருத்துகள் இல்லை: