திங்கள், 25 ஜூன், 2018

நீர்த் தகராறுகள்: இந்தியா சிங்கை மலேசியா..

ஓங்குமிவ் வுலகமும் தாங்கிநிற் கின்றது  நீரை;
ஏங்குதல் இலாமல் எடுத்தது குடிப்பதற் கூறும்;
வீங்கிள வேனிலில் வெம்மை தணித்திட வாரி
யாங்கிருப் பாரையும்  ஈங்கென விளித்திடும் பாரும்.

செடிகொடி மரம்பிற எல்லா உயிர்களும் விடாயில்
மடிவதைத் தடுத்திடக் கிடைத்திட   வேண்டுமிந்  நீராம்;
ஒடிவதும் இலாத இகநா கரிகமும் நிலையாய்
நடைபெறத் தருவதும் பிறவல அதுதனி   நீரே.

தமிழ்தரு மாநிலம் கருநடம் இவற்றிடை  மாறாய்க்
குமிழ்தரு துயரமும்  பிறவல  அதுவுயிர்  நீராம்;
இமிழ்தரு கடல்கடந்  துளமலை நாட்டொடு சிங்கை
நிமிர்பெறு தனித்துயர் எதுவெனின் அதுவிலை  நீரே.
 

கருத்துகள் இல்லை: