வெள்ளி, 15 ஜூன், 2018

எழுத்தறிஞனைக் கொன்ற எதிரிகள்.

சரிதானே    என்றாலும் இல்லைதான்  என்றாலும் என்னவம்மா
நரியாக   இல்லாமல் நல்ல  தெழுதிய ஆய்வெழுத்தன்
குறியாக வைத்திட்டுக் கொல்லுவ தென்பதிங்  கென்னஞாயம்?
மறியினைக் கொன்றுணும் மாந்தரின் கீழ்ப்பட்ட திச்செயலே.

ஒவ்வோர் எழுத்தாளனுக்கும் அவனுடைய சொந்தக் கருத்துகள் இருக்கும்.  அதாவது அதை எழுதும்போது அது அவனுக்குச் சரியாகத் தோன்றுகிறது. ஆனால் பிறருக்கு அது சரியில்லை என்று தோன்றலாம். சரியென்றும் தோன்றக்கூடும். அது சரியில்லை என்றால் அவன் ஆய்வு நல்லதா அல்லது ஏதும் தந்திரம் செய்கிறானா, உள்ளத்தில் பட்டதை உண்மையாகச் சொல்கிறானா என்று பார்க்கவேண்டும்,  அதற்காக அவனைக் கொல்வதென்பது அன்முறை ஆகும்.  அது ஓர் ஆட்டை கொன்று உண்ணும் செயலினும் கீழ்ப்பட்டதே ஆகு.,  அதில் இரக்கம் இன்மையினால். பிடிக்கவில்லையானால் ஆடு ஏதோ கத்துகிறது என்று நீங்கள் போய்க்கொண்டிருப்பதே நன்னெறியாகும். அவன்மேல் குறிவைத்து அவனைக் கொல்லலாகாது.

இது ஓரு நாட்டில் நடைபெற்ற நிகழ்வினைப் பற்றிய பாடல்.

நரியாக -  தந்திரமாக.
ஆய்வெழுத்தன் -  எழுத்தாளன்.
குறியாக -  குறிவைத்து.
மறியினை -  ஆட்டினை.
கொல்வோன் வருகையில் தன்னைக் காத்துக்கொள்ளத் திறனற்றது ஆடு.








கருத்துகள் இல்லை: