வெள்ளி, 1 ஜூன், 2018

சளியும் பிடித்துவிட்டால்.......

சளியும் பிடித்தால் அளியேனோ  யானே
தலைகனக்க மூக்கே  தடைக்கும்  ---- பலதுன்பம்!
கோலெழுதப்  பேரசதி  கொக்கொக்  கிருமலுமாம்
வாலயர்ந்த  நாய்போல் வரும்.

அம்மாவும் நோய்மனையில் ; அங்கும்போய்ப் பார்த்திட்டால் 
சும்மா இருக்கச்  சுருதியும்  ------  இம்மியுமே
விம்மாதே;  யாண்டும்தான்  வீழ்ந்துறங்கி வாண்டைப்போல்
கும்மாளம் இல்லாக் குலை.

இதன் பொருள் :

பாட்டு 1

யானே அளியேனோ  சளியும் பிடித்தால்  =   நீர்க்கோவை ஏற்பட்டு
விட்டால் நான் பரிதாபத்துக்கு உரியவள் ;   ஓ  அசை .
தலை கனக்க  மூக்கே  தடைக்கும் -   தலை கனமாகும் ,  மூச்சு
அடைக்கும்;
பல துன்பம் -   இவ்வாறு பல துன்பங்கள் .
கோலெழுதப்  பேரசதி  -  எழுது கோலால்  எழுதவும்  பெரிய 
அயர்வு  ஆகும். 
கொக்கொக்  கிருமாலுமாம் -  இவ் வொலிக்குறிப்புடன்  இருமலும் 
உண்டாகும் .  

வாலயர்ந்த  நாய் போல் வரும் :  வாலை ஆட்ட ஆற்றலற்ற 
நாய் போல என்னுடல்  ஆகும்.

ாட்ட2

அம்மாவும் நோய்மையில் -   என் ாயும் மத்ுவையில்
 உள்ளார்.
ங்கும் போய்ப் பார்த்ிட்டால் -  என் நோய் நிலையில் அங்கும் 
ென்று பார்க்கங்கால்;
ும்மா இருக்க  -  அந்ோய் மையில் ஏும் ெய்யாமல் இரந்தால்;;
ுரியும் இம்மியுமே  விம்ம-  எனுரி கஞ்ும்  
எழாட்டே;    னம் முற்ும் ெயல்பாடும் கந்து 
ேலுறாட்டே என்பு.  யாண்டும் -  எப்பும்;
ும்மாளம் இல்லா -   ஓடியாடல் இல்ல;
ாண்டைப்போல் வழ்ந்துறங்கி  -  ஒரிறுபிள்ளைபோல் விழந்த
ங்கி;
ுலை -  குலந்துபல் ந்தேறும்  என்றாறு.

   இவை முன் வந்தொருட்குறிப்புகள்:  


அளியேனோ -  பரிதாபத்துக்குரியவள் நானோ.
மூக்கு (ஆகுபெயர் ) - மூச்சு
தடைக்கும்  -  (மூச்சைத் )  தடுக்கும்  ( அடைக்கும் )
கோலெழுத  -  கோலால் எழுத;  பேனா எடுத்து எழுத.
(வேற்றுமைத் தொகை ).
பேரசதி :  பெரிய உடல் சுணக்கம்.
கொக்கொக்கு   - இருமல் ஒலிக்குறிப்பு.
வாலயர்ந்த நாய் -  வாலை ஆட்டச் சக்தியில்லா நாய்.
நோய்மனை -  மருத்துவமனை-
சுருதியும் விம்மாதே -  உடல் எழுச்சி குன்றும், இசையில்
சுருதி இன்மை போல. சும்மா - எதுவும் உதவாமல் .
( நோய்வாய்ப்பட்ட அம்மாவைப் பார்க்கப்போனால்
சும்மா இருக்கமுடியாது.  சுருதி இல்லா இசையாய் அங்கு
 இருக்கலாகாது.)
இம்மியும் -  கொஞ்சமும் .  விம்மாதே  == எழாதே
வாண்டு - சிறுபிள்ளை.
கும்மாளம் - ஓடியாடித் திரிவது
குலை =  குலைதல்,  நடுக்கம்.

will review.
We have  used  fonts of only one size.  We do not know why smaller and bigger sized fonts
have appeared in the finished output. We are not able to change or ameliorate this situation.
We are sorry.

கருத்துகள் இல்லை: