சனி, 16 ஜூன், 2018

இலாவகம்


அந்த ஓடைக்குள் கால் போய்விடாமல் வெகு  இலாவகமாகவே குதித்துத் தாண்டிவிட்டான்.

இது வாக்கியம்.  ஓடையருகில் வந்தவுடன் எப்படித் தாண்டுவது, எப்படி அப்பால் செல்வது என்றெல்லாம் சிந்திக்கவுமில்லைஓடை எவ்வளவு அகலம், தாண்டமுடியுமா என்று அளவு எடுத்துக் கணக்குப் பார்க்கவில்லை; அகத்தில் ஒரு சிந்தனையுமின்றி, விழுந்தால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமே என்ற அச்சமும் இன்றிஅணிந்திருப்பதெல்லாம் நனைந்துவிடுமோ என்ற தயக்கமும் இன்றி, ஒரே தாண்டு; தாண்டிவிட்டான்.

இதுதான் இலாவகம்.  இது லாவகம் என்றும் எழுதவும் சொல்லவும் படும்.

இந்தக் கூட்டுச் சொல்லில் இரு சிறு சொற்கள் உள்ளன.

ஒன்று:  இல்லா;   இன்னொன்று அகம்.

ஒருவன் ஒரு காரியத்தைச் சற்றும் தயக்கமில்லாமல் ஆய்ந்து பார்க்காமல் செய்து முடிக்க வல்லனாயின் அது பெருந்திறம் ஆகும்.  "அருந்திறல்" என்றும் சொல்வோம்.

இல்லா  என்பது இலா என்று குறைந்து நிற்கின்றது.

அகம் என்பது சிந்தனை, தயக்கம் முதலியவற்றையும் முன்னேற்பாடு ஆகிய ஆயத்தங்களையும் குறிக்கும்.

ஆக,   " அகம்" செலுத்தாமல் என்று பொருள்.

இலா+ அகம் =  இலாவகம்.

அரங்குபோன்ற ஆற்றிடைக்குறையில் அமர்ந்துள்ள கடவுளின் இடம் -   அவருக்குப் பெருஞ்சீரான இடம்.  அது சீர்+அரங்கம் என்ப்பட்டது.  சீரங்கம் ஆகி, அங்குள்ள சாமி அரங்கசாமி ஆனார்.  பின் "ரங்கசாமி" ஆனது.  அகரம் குறைந்து சொல் தலைக்குறை ஆனது.

அதுவேபோல். இலாவகம் என்பதும் முதற்குறையாகி  லாவகம் ஆயிற்று.

அறிவீர்; மகிழ்வீர்.

(சில வேளைகளில் எங்கோ செப்பனிடும் பணி நடைபெறுகிறது போலும். இணையம் கிட்டுவதில் இடையீடு உள்ளபடியால் இன்றுகாலை இதை மேலேற்ற முடியவில்லை.)


எழுத்துப் பிழைகள் இருப்பின் பின் சரிசெய்யப்படும்.

கருத்துகள் இல்லை: