சனி, 16 ஜூன், 2018

பூத்த மலர்கட்குள்

பூத்த மலர்கட்குள் பொங்கி வழிவண்னம்
ஊற்று மழைநீர்  ஒலிபோலும் செய்கின்ற
எந்திரம்நீ இங்குப் பளுவுந்தே ஏற்றினைநீ
செந்தண் மழையொலி என்றுயான் மாலாய்
விழித்தேன் உணர்ந்து படுத்தேன் விரைந்தே
கழிப்பேனோ அல்லை இனி.

அதிகாலை சாமான்கள் இறக்குவதற்காக வந்த பளுவுந்து
செய்த ஒலி மழைநீர் ஊற்றுதல் போல் ஒலி செய்தது
கேட்டுப் பாடினது. 
ஊற்று = ஊற்றுகின்ற;  பளுவுந்து =  லாரி
ஏற்றினை =  செவிக்குள் ஏற்றினாய்;
செந்தண் = நன் கு குளிர்ந்த;
மாலாய்  =  மயங்கி; 
அல்லை =  இரவினை.

கருத்துகள் இல்லை: