வியாழன், 25 ஏப்ரல், 2024

பணம் சேமிக்கும் வழிகளில் ஒன்று.

 கதவைக் கொஞ்சம் திறந்து வைத்தால்

காற்றின் ஓட்டம் மிகுமே!--- நீர்

மிதவை போலும்  வருமோர் இன்பம்

மெத்த மகிழ்வே தருமே--- குளிர்

உதவும் ஊட்டி கொள்ளும்  அளவில்

ஒண்மின் ஆற்றல் குறுகும்---நாளைச்

சிதைவில் திறத்தில் செலவும் குன்றிச்

சேமிப் பாகும் பணமே.



உரை:

கதவைக் கொஞ்சம் திறந்து வைத்தால் காற்றின் ஓட்டம் மிகுமே!--- கதவைக் கொஞ்சம் நீம்பலாக வைத்துவிட்டு எதிரில் உட்கார்ந்துகொண்டால்  காற்றோட்டம் ஏற்படும்;  நீர் மிதவை போலும்  வருமோர் இன்பம் மெத்த மகிழ்வே தருமே--- படகில் செல்வதுபோல் காற்றின் இன்பம் மகிழ்ச்சியைத் தருகிறது; குளிர் உதவும் ஊட்டி கொள்ளும்  அளவில் ஒண்மின் ஆற்றல் குறுகும்--- குளிரூட்டி ( ஏசி) மின்சாரத்தை எடுத்துக்கொள்வது குறைந்துவிடும்; நாளைச் சிதைவில் திறத்தில் செலவும் குன்றி சேமிப் பாகும் பணமே -  மின்சாரக் கட்டணச் செலவு குறைந்து பணம் சேமிப்பு உண்டாகும்

என்றவாறு.

வாயு என்ற சொல்லின் பொருளகற்சி.

 ஆரியன் என்ற சொல் தமிழ்ச்சொல்,  அஃது ஆர்தல்,  பொருள்:  நிறைதல் என்ற சொல்லிலிருந்து வந்தது என்பதை முன்னர் சொல்லியுள்ளோம். ஆனல் வரலாற்று ஆசிரியர் சிலர் இச்சொல் எங்கிருந்து வந்தது என்று அறிந்தர்களில்லை. ஒருவேளை arable என்ற சொல்லோடு தொடர்பு உளதோ என்று அயிர்த்தனர். ( சந்தேகப்பட்டார்கள்). இந்தச் சொல்லும் "ஏர்"  ( ஏர் உழவு) என்ற தமிழ்ச்சொல்லுடன் தொடர்புடையது. சுமேரியா முதலிய இடங்களிலும் தமிழ் வழங்கியுள்ளபடியால்,  அங்கிருந்து தமிழ் பரவுவது எளிது.  ஆனால் ஆரியன் பற்றிய வரலாற்று  ஆய்வுகளில் ஆரியர் என்போர் நாடோடிகள் என்று கூறப்பட்டுள்ளதால்,  அவர்கள் ஏர் உழுதனர் என்று கதை எதுவுமில்லை.  ஆரியன் என்பது ஒரு தமிழ்ச்சொல். இதைத் தமிழ் மூலமாகவே அறியவேண்டும்.

வாயு என்பது தமிழ்ச்சொல் ஆகும். இது சங்கப்பாடல்களில் இடம்பெறவில்லை என்று கூறினாலும், இது வாய் என்பதனடியாக எழுந்த சொல். வாயினால் ஊதுவதுதான் வாயு என்னும் காற்று. பின்னர் நிலத்திலிருந்து எழுந்து வெளிப்படும் காற்றும் வாயு என்று பொருள்விரிவு கண்டது.

உ என்பது முன்வருதல் குறிக்கும் சுட்டடிச்சொல்.

https://sivamaalaa.blogspot.com/2017/06/blog-post_6.html

சொடுக்கி வாசித்து அறிக.

வாய் என்பதற்கு இடம் என்ற பொருளும் உண்டு, எவ்விடத்திலும் வரும் காற்றையும் வாயு என்பதில் பொருள் மாறுபாடு எதுவும் நேர்ந்துவிடாது.

வாயூது என்பதன் இறுதி எழுத்து மறைந்த சொல்லாகக் கருத ஏற்புடைமை உளதாதல் அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


புதன், 24 ஏப்ரல், 2024

வாசுகி - பெயர், மற்றும் பாம்பு என்றால் என்ன?

 வாசுகி என்பது ஒரு பாம்பின் பெயராகவே  நம் நூல்கள் கூறுகின்றன.  இது கிழக்குத் திசையில் இந்தப் பூமியைத் தாங்கிக்கொண்டுள்ளது என்று இந்நூல்களின்படி நாம்  அறிகிறோம்.

இதுபோன்ற சொற்கள், நம் காலத்திற்கும் முன்னரும்,  இவை கூறப்பட்டு  நமக்குக் கிடைத்துள்ள நூல்களின் காலத்திற்கு முன்னும் இருந்த நூல்களிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு நம்மை வந்து எட்டியுள்ளன.  அம் மிக்கப் பழைய நூல்களில் இருந்த சொற்களைப் பெயர்த்தெழுதியவர்கள் அச் சொற்களை அவர்களிடம் அப்போதிருந்த பதங்களைக் கொண்டே சொல்லவேண்டியதைப் புனைந்திருக்க வேண்டும்.  பாம்பு என்ற வுடன் இப்போது பக்கத்திலுள்ள காட்டில் இழைந்து திரியும் பாம்பு வகையைக் குறிப்பதாகக் கொள்ளுதல் பொருந்தாமல்  முடியும்.

எழில்மலை என்ற ஒரு மலைப்பெயரை  எலிமலை என்று மொழிபெயர்த்தனராம்.  அப்புறம் அந்த நாட்டுவேந்தனையும் மூஞ்சூறு இனத்தவன் என்று கூறிவிட்டனர்.  இதுபோன்ற தவறுகள் பெயர்த்தெழுதுவதிலும் அதை வாயித்து உணர்ந்து கொள்வதிலும் ஏற்படாமல் காத்துக்கொள்ளவேண்டும். நாமும் இங்கு முயல்வோம்.

பூமியைத் தாங்கிக்கொண் டிருக்கும் பாம்பு  என்பது புறப்பாகம் என்று பொருள்படவேண்டும்.

பாகம் : இது இடைக்குறைந்து,  பாகம்> பாம்  ஆகும்.

புறம்  என்பது, ஓரெழுத்தால் குறிக்கப்பட்டது,  பு  - புறம் அல்லது வெளி,

ஆகவே புறப்பாகம் என்பது சரியாகவருகிறது.

பாகம் புறம்,  பாம் + பு >  பாம்பு  ஆகிறது,  ஒரு நெடும்பாகம் என்பது பெறப்படுகிறது,

வாய் +  உ + கு + இ என்பவை வாயுகி  ஆகும் வாய் - இருக்கும் இடத்தில் முன் வந்து  சேர்ந்து இருப்பது என்று சரியாக வருகிறது,  இதிலுள்ள யகரம்  சகரம் ஆகும் என்பது திரிபு விதி.   ஆகவே வாயுகி என்பது வாசுகி ஆயிற்று.

வாய் என்ற  பழந்தமிழ்ச் சொல்லுக்கு இருக்கும் இடம் என்று பொருள்.

இதை இப்போது பறந்துபோய் பார்க்க முடியாவிட்டாலும் எதுவும் முரணானது இல்லை என்று அறிக.

அது ஒரு நீண்ட தட்டாக இருக்கலாம். பூமியில் மேலோட்டில் பல தட்டுகள் உள்ளன.

வாசுகி என்றால் ஒரு பாம் பு. நீங்கள் கண்ட பாம்பு  அன்று.  பாம் பு - பாகம் புறத்தது.  புறத்தே உள்ள பாகம்.

பாகம் என்பது பாம் என்று இடைக்குறைந்தது.

பாம் கு> பாங்கு, இதிலும் பாகம் பாம் என்றே ஆகிக் கு விகுதி பெற்றது.

வணக்கம்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

திருத்தம்: 24042024 1248

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

The name Ranjan, Ranjani

 ரஞ்சன், ரஞ்சனி என்ற பெயர்கள் பலருக்கு உள்ளன,

நிறைந்தவன் >  நிறைஞ்சவன்.  இங்கு த என்பது ச என்று மாறிவிட்டது.   இது பேச்சுமொழித் திரிபு.

நிறைஞ்சவன் >  நிறைஞ்சன்.> நிரஞ்சன்.  

2ம் சொல்லில் றை - ர ஆனது  முதலாவது ஐகாரக் குறுக்கம், அடுத்து  த- ச திரிபு.  தனி>சனி போல.

நிரஞ்சன் >  ரஞ்சன்.  நிரஞ்சனி > ரஞ்சனி.   ( இது முதற்குறைப்போலி,  நிகரம் கெட்டது ).  ரகரம் முதலாகாது என்ற தொல்காப்பிய முனிவரின் விதியை மீறிய திரிபு.

உதாரணம்:  நிரம்ப >  ரொம்ப.

நீர் அங்கன் > நீரங்கன் > ரங்கன் ( கடவுட் பெயர்).

நீரின் அமிசம் ( அம்சம்) ஆன தேவன்.)

வேறு எழுத்துக்களிலும் வரும்:

உரு ஒட்டி >  உரொட்டி >  ரொட்டி.  ( ஓர் உருவாகச் செய்து சூடேற்றிய இருப்புத் தட்டில் ஒட்டி ஒட்டிச் சமைத்துச் [ சுட்டு ]எடுப்பது ).

ஒரு குழிவுள்ள இரும்புச் சட்டியில்  பிசைந்த மாவை நிறைத்து,  சூட்டில் ஒட்டி எடுப்பது )

நிறை ஒட்டி > நிரொட்டி > ரொட்டி  எனினுமாம்,

ரொட்டி என்பதை  லொத்தி என்பது சீனர்களின் பேச்சுத் திரிபு.  லோ தீ என்று பொருள்கூற அவர்களுக்கு வசதி ஆகிவிடுகிறது.  ல - ர திரிபும் உள்ளது.

மூலச்சொல் திரிந்தால்  றகர வருக்கம் ரகர வருக்கமாகித் தன் வன்மையை இழந்துவிடும்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்.


சனி, 20 ஏப்ரல், 2024

சாமியைக் கும்பிடுதல் தமிழர் பண்பாடு

 இங்குச் சில ஆய்வுரைகளை நீங்கள் அடைந்தறியும் பொருட்டு கீழே குறிப்பிடுகிறோம்.  சொடுக்கி வாசித்து அறிக. நீங்களே தாங்களாகவே தேடிக் கண்டுபிடிப்பது கடினம்.  ஆகையால் இது இங்கு பதிவுபெறுகிறது.

1. https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post.html

சாமி என்பது எப்படி அமைந்த சொல்.

2. https://sivamaalaa.blogspot.com/2019/12/blog-post_9.html

சாமி  இன்னொரு பொருள்

https://sivamaalaa.blogspot.com/2017/06/go-to-heaven-now.html

சொர்க்கத்தைத் தாக்கிய  அறிவாளிகள் சிலர்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


வெள்ளி, 19 ஏப்ரல், 2024

விதிநிரல் : மிரட்டு - விரட்டு

 மிரட்டிய பின்னும் மிரட்டப்பட்ட மனிதன் அஞ்சி ஒடுங்கிய பின்னுமே அந்த மனிதனைத் துரத்திவிட முடிகிறது  

ஆகவே:

மிரட்டு ( மி )  >  விரட்டு.

இவ்வாறு சொற்கள் அவற்றின் தொடர்பொருள் நிரலுடன் தமிழில் அமைந்திருப்பது கண்டு வியக்கத் தகுந்ததாய் உள்ளது.  இதுபோலும் நிகழ்வு நிரலை யாம் ஏனைச் சொற்களிலும் கண்டுள்ளோம்.  ஆங்காங்கு எழுதியும் உள்ளோம்.

இது மிஞ்சு> விஞ்சு என்ற விதிநிரல் படியான  திரிபுவகையாகும், 


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

வியாழன், 18 ஏப்ரல், 2024

அ/திருஷ்டம் திட்டம் [ கேள்விக்குப் பதில்]

முன் இடுகையில் எழுப்பிய கேள்விக்கான பதிலை இங்குக் காண்க:

 இங்கு தெர் என்ற அடிச்சொல்லிலிருந்து தொடங்குவோம். இதுவே எளிதாகவும் சுருக்கமாகவும் முடிப்பதற்குரிய வழி.

தெர் >  தெரி >  தெரிதல்.

தெர் >  தெர் + உள் > தெருள்.  ( உள் என்பது விகுதி,  எ-டு:  கடவுள் ).

தெருள் > தெருட்டு >  தெருட்டுதல்.   தெளிவாக்குதல்.

பூசைமொழியில் இது மாற்றப்பட்டது:

தெருட்டு > திருட்டம் > திருஷ்டம்.

அதி + திருஷ்டம் >  அதிருஷ்டம்  :  மிகத் தெளிவான நிலை.  நற்பேறு உண்டான நிலை.   உயர்ந்த காட்சி பெற்ற தன்மை.

இது உண்மையில் தாயுமானவர் பெற்றதுபோலும் இறுதிக் காட்சி. சிலரே அடைவது, பிறரால் அடையமுடியாதது.  பணத்தை அடைவது அன்று. பணம் பிணத்துக்கு ஒப்பானது,  நிலையானது அன்று, 

திருஷ்டாந்தம் -  தெளிவுபடுத்துவது. சான்று. விளக்கம், எடுத்துக்காட்டுகள்.

திட்டம்: இது இடுகை இன்னொன்றில் விளக்குவோம்.

இங்குச் சொடுக்கி வாசிக்கவும்:

https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_31.html

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.


புதன், 17 ஏப்ரல், 2024

அதிருஷ்டம் என்பதன் அமைப்பு.[கேள்வி]

 இன்று அதிருஷ்டம் என்ற பதம் கணித்தறிவோம்.

திருஷ்டம் என்பதனோடு  அ என்ற எதிர்மறை முன்னொட்டு சேர்க்கப்பட்டு இச் சொல் புனையப்பட்டுள்ளது. இந்த அகரத்தை விலக்கிவிட்டு, திருஷ்டம் என்பதனைப் பல்கலைக்கழக அகரவரிசையில் தேடினால், கிடைக்கவில்லை. வடவெழுத்தை, தொல்காப்பியமுனி சொன்னதுபோல் விலக்கிவிட்டு, அதற் குரிய எழுத்தைப் போட்டு,  திருட்டம் என்றாக்கினால்  அதுவும் கிடைக்க வில்லை. ஆகவே அது தமிழாகிவிடும் என்று முனிவர் நமக்குச் சொன்னபடி, ஒன்றும் நடக்கவில்லை. இப்படித் தேடியது கிடைக்காவிட்டால்தான் மகிழ்ச்சி மேலிடுகிறது.

இது திருட்டம் என்று வந்துவிட்டாலும், திருட்டினுடன் தொடர்பு உடையசொல் அன்று.  திருட்டு அம் என்று பிரித்து  ஆனந்தம் கொண்டாட முடியவில்லை.

அ என்பது அல்லாமை என்றால்,  திருட்டல்லாமை என்பது மகிழ்ச்சிக் குரியது தான்.  நம் பொருள் திருடப்படாமை ஆனந்தம் தானே?  ஆகவே சொல்லின் பொருள்  வந்துவிட்டது  எனலோமோ?

திருட்டில்லாவிடில் ஆனந்தமே. நம்மை அறியாமல் மனத்தில் பொங்கும் ஆனந்தமே.

என்னை  அறியாமல் மனம் கொப்பளிக்கும் ஆனந்தமே?

எண்ணமெல்லாம் வெல்லும் கனவாலே

விண்ணிலே கண்ணைவைத்த  அதிருஷ்டமே!

இங்குக்  கண்ணுறும் தொடர்பில் அடுத்த இடுகையைச்  சொடுக்கி வாசித்து உண்மை அறிக:-

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர். 

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

அதிசயம் என்று எதைச்சொல்வது, ஓர் ஆய்வு.

அதிசயம், வியப்பு இவற்றின் உள்ளீடுகள்


Wonder என்ற ஆங்கிலச்சொல்லின் மூலம்  செருமானிய மொழியின் அகரவரிசையில் wundran என்று தரவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் வியத்தல்  என்னும்  பொருண்மை பற்றிய உணர்ச்சியை  அது தொடக்கத்தில் குறிக்கவில்லை என்பர். பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னரே அந்த மனவுணர்வையும் குறிக்க அது வழங்கிற்று என்று ஆங்கில வல்லுநர்கள் கூறுகின்றனர். பார்த்து அல்லது அறிந்தவுடன் புன்னகை பூக்கச் செய்வது  என்பது மூல இந்தோ ஐரோப்பியத்தில் காணப்படுகிறது. நகைப்போரும் உண்டென்று சொல்லப்படுகிறது,  இத்தகு நடப்புக்கு ஸ்மர என்ற சமஸ்கிருத்தச் சொல்லே  உதவிய ஆதி மூலச் சொல் என்று கூறப்படுகிறது.

தமிழில் ஆச்சரியம் என்ற சொல்லும் வழங்குகிறது.  இச்சொல்லில் ஆ என்பது ஆ என்னும் வியப்பொலி யெழுப்புதலைக் குறிக்கிறது.  சரியம்< சரிதல் என்பது சழிதல் என்றும் வரும் சொல்  ஆகும். சழிதல் என்பது உண்மையில் சுழிதல் அல்லது சுழலுதல் என்றும் வரும் மூலத்திற் பிறந்தது.  இது உம்மை > அம்மை என்பது போலும் உ - அ திரிபு ஆகும்.  உம்மை என்பது குறுகி உமை என்றும் ஆகும்.  ஒரு வியப்புக்குரிய நிகழ்வை அல்லது பொருளைக் கண்டவுடன் ஒருவகைச் சுழற்சி ஏற்படுகிறது.  கண்டு சுழலுதலே கண்டு மயங்குதலும் ஆகும்.  ஆகவே ஆச்சரியம் என்பது சரிதல் அல்லது சுழல்தல் என்பதே.  விழி என்ற சொல், இமைகளின் விரி என்பதே  ஆகும்.  இதிலிருந்து சழி, சரி என்ற திரிபை உணரலாம்.  வரி என்பது வழி என்று ஆயின் இரு வரிகளுக்கிடையில் இடனிருப்பதை உணர்த்துவதால் இவ்விரு சொற்களின் தொடர்பு அறியலாம்.  குரு என்பவர் ஒரு சீடர் குழுவினிடை பொலிகின்றவர்.  ஆகவே குழு மற்றும் குரு என்பவற்றின்ன் சொல்வளர்ச்சியை அறியலாம். குரு> குரவர் என்பது அவர் என்ற சொல் இணைந்த அமைப்பு  ஆகும். ஒழிதல், ஒருவுதல், ஒவுதல் என்பவற்றறின்  அணுக்கத்தினையும் அறிந்துகொள்க. வழி என்பது ஒரு வரிபோலும் நீர் ஓடுதல்.  இதிலிருந்து வழி வரி என்பவற்றின் அணுக்கத்தினையும் அறிந்துகொள்ளவேண்டும். ஆச்சரியம் என்பது ஒரு ஒப்பொலிக் கலவை ஆகும். ஒலிக்குறிப்புடன் இயற்சொல்லும் கலந்தது.

சுழலுதலும்  மருவுதலும் அசைவுகளே.   இவற்றை இணைத்தால்  சுழமரு என்று வரவேண்டும். ஒலிப்பில் இதனின் சற்று   வேறுபட்டும் வரலாம்.  சுழமரு  என்பதை ஏற்றுக்கொண்டு இதை ஸ்மர என்பதனுடன் ஒப்பீடு செய்வோம்.  மனத்துள் ஒரு எண்ணச்சுழல் உண்டாவதும் அதுபோய் உதடுகளில் மருவிப் புன்னகை யாவதும் எண்ணுவோம்.  இப்போது ஸ்மர என்பதிலிருந்து ஸ்மய்ல் என்றதும் அதன் முன்ன்னோடி வேறுபாடுகளுமான  ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பியச் சொற்கள் உண்டானமையும் இப்போது புரிந்துகொள்ளத் தக்கதாகி விடுகிறது.வியப்பைக் கண்ட மனச்சுழற்சியும் அது உதடுகளில் விரிவதுபோலும் அசைவாகிப் புன்னகை என்று அறியப்பட்டமையும் இவையெல்லாம் இறுதியில் "ஓண்ரன்" wondrun  ஆனமையும் பொழுது புலர்தல் போல் புதுச்சொல்லாய் அங்கு ஆனமையும் தெளிவாகிவிடுகிறது.  சுழமரு என்பதிலிருந்து  சுமர என்றாகி,  அது கிளைத்து :ஸ்மர ஆனது  எப்படி என்று தெளிவாகிறது.  ஸ்மர சார (காமனின் கணைகள்),     ஸ்மர ஜ்வாலா (  காமனின் ஆசைத்தீச்சுழல்கல்), ஸ்மர ருஜம்  ( காமனின்  உணர்வுகள்),  ஸ்மர வியால ( காமனின் எண்ண அலைகள்),  ஸ்மர அர்த  ( காமனின் வருநினைவுகள்), ஸ்மர தனு (காமனின் வில் ),ஸ்மர துர்மதனம்  (காமனின்  ஏற்புடைமை இல்லாத ஆசைகள்), எனப் புனைவுகள் விரிந்தன.சுழல், மருவுதல் என்ற அடிப்படைச் சொற்கள் இவற்றுக்கெல்லாம்  ஊற்றுக்களமாய் இருந்தது. 

வியப்பு என்பதை உணர்த்த,  எது இசைந்தது என்பதே இன்னொரு கேள்வியாகும்.  அது இசையும் என்பதே அதிசையும் > அதிசயம் ஆதலின்,  எதிசைந்தது என்பது அறிவுக்கு உணவாக்கும் கேள்வியாக்கிவிடுகிறது.  வியன் என்பது பெருமை அல்லது பெரிது ஆதலின்,  வியப்பு என்பது,  விய > வியப்பு எனப்  பெருமையே குறிக்கும்,  ஆகவே பெருமையானது ஒன்று இசைந்ததே வியப்பு  ஆகிவிடுகிறது

வி என்பது விரிவு குறிக்கும் எழுத்து/  இது விர் என்ற அடிச்சொல்லின் ரகர ஒற்று மறைந்த மீதம் ஆகுவது.    வி  அ >  விய என்றால் அங்கு விரிவு என்று பொருள். இனி, விர்> விய்> விய  என்று இதனை காட்டுதலும் ஆகும்.  வி அ > விய என்பதறிக. விரிவு அங்கு என்பது. பெரிது  என்பது இரு எல்லைகளும் ஒருபுறமும் இன்னும் இரு எல்லைகள் இன்னொரு புறமும் விரிந்தாலன்றி பெருமை என்பது ஏற்படாது ஒழியும். அதனால் வி அ என்பதும் விய என்பதும் உணரப்படும்.  வியப்பின் உள்ளீடு எல்லை விரிவாகவோ அன்றி உருவம் பெரிதாகவோ இருக்கலாம்.  எல்லாம் ஒருவழியில் வேறுபாடற்றவை.  அதில் எது இசைந்தாலும் அதிசையும் ,  அது அதிசயமே. அஃது இசையும் > அதிசையும் > அதிசயம் எனினுமாம்.

சகசமாக ஒன்று இசைந்திருந்தால்  அது சகசாதியம்.  அதையும் வியக்கலாம். Someone may be able to be surprised by just the common sense displayed. செயலில் ஒன்று இசைந்திருந்தால் அதை வியக்கலாம்.  தெய்விகத் தன்மை உள்ளதென்று ஒன்றை வியக்கலாம். அஃது இசைந்திருந்தலின் அதிசையும், > அதிசயம் ஆகிறது. இதை இசைவினால் வியப்பு என்க.  புத்த சைன நூலகளில் இவற்றைக் கண்டுணர்க.

சயம் என்ற தனிச்சொல் குறைதலையும் குறிக்குமாதலால் அதி சயமென்பது குறைவினிசைதலுமாகும்,

அயக்குதலென்பது அசைத்தல்.  ஒன்று அசைதலும் வியப்பை உண்ண்டாக்கலாம்.  அய என்பது சய ஆகும் பின் அம் விகுதியினால்  சயம் ஆகி,   அதிகுறைவும் அதிசயமே.

இப்போது அதிசயம் என்பதன் தன்மையை உணர்ந்துகொண்டீர்கள்.

அதிசையும் என்ற தொடரை அஃதிசையும் என்று எழுதுவர்.  சொல்லாக்கத்திற்கு அதிசையும் > அதிசயம் என்று திரிந்து சொல்லானது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர் 

குறிப்பு:

அயக்கு-தல் >. அசக்கு-.  அசைத்தல். குன்றுக ளயக்கலின் (கம்பராமாயணம்.)

இந்த ஆங்கிலக் கவிதை கூட ஓர் அதிசயமான எழுத்துத்தான். முழுக்கவிதையையும் இங்குச் சொடுக்கி வாசித்துக்கொள்ளுங்கள். இதைப் பாடிய கவி ஒலிவர் கோல்டுசிமித்.

Beside yon straggling fence that skirts the way
With blossom'd furze unprofitably gay,
There, in his noisy mansion, skill'd to rule,
The village master taught his little school;
A................................

https://allpoetry.com/The-Village-Schoolmaster2

இதை இன்னொரு முறை வாசிப்பதும் எமக்கு மகிழ்வு விளைப்பதே. சொடுக்கிப் படிக்க இனிது, இதைப் 13 அகவையில் யாம் வாசித்தது நினைவுக்கு வருகிறது.


திங்கள், 15 ஏப்ரல், 2024

தேர்தல் முன் கணிப்புகள்

கருத்துகள்  கணிப்புகள்  கொஞ்சமோ---- சொல்லும்

கனிச்சுவை  ஆரூடம் பஞ்சமோ?

பொருத்துறார் உண்மையைப்  பொய்களில்  ----- நம்மைப்

பொய்யறியார் என்றோ புனைகிறார்?


வாக்குகள் எண்ணிட அறிகிறோம் ---- இதற்கு

வரட்டுரை  ஆக்குதல்  என்பயன்?

நாக்குக்குக் கொடுங்கள்  ஓய்வினை----  வரும்

நாள்வரையில் காக்க வாய்மையே.


ஆனை கிடக்குது பானைக்குள் ---- அதை

அறிந்துவிட் டாலென்ன பொல்லாப்பு?

தேனென்னும் தீஞ்சுவை கிட்டுமே ----  இனித்

தேசத்தார் பாங்கினில் தென்றலே.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

புள்ளிவிவரம் கேட்பது

 புள்ளிவிவ   ரங்களை  அள்ளித் தரத்தொடங்கின்

ஒள்ளியரென்  போரும் உறங்கத் தொடங்கிடுவர்!

சாப்பாடோ தேநீரோ சற்றே கிடைக்குமென்று

 ஏற்பா டறியா திறங்கிவந்த  ஊரார்

கடினக் கருத்துகள் ஆரம்பம்  ஆனால்

படுக்கையைத் தேடிப் பறக்காமல் கேட்டுவிடின்

பூமியில் அஃதும் இயல்பன்று  நாமிதிலே

 நேமத்தால் நன்மைகாண் போம்

-----  சிவமாலா

இதன் பொருள்:

புள்ளிவிவ   ரங்களை  அள்ளித் தரத்தொடங்கின் --- ஒரு பொதுக்கூட்டத்தில் எழுதிக் கவனித்தாலே உருப்பெற்றுக் காணத்தக்க, புள்ளி விவரங்களை வாய்மொழியாகக் கூறத்தொடங்கிவிட்டால்,

ஒள்ளியரென்  போரும் உறங்கத் தொடங்கிடுவர்!--- மிக்கச் சிறந்த நினைவாற்றல் நிறைந்த அறிவாளிகள் கூடத் தூக்கத்தில் விழுந்துவிடுவர்;

சாப்பாடோ தேநீரோ சற்றே கிடைக்குமென்ற---- கூட்டத்தில் சாப்பாடோ குடிக்கத் தேநீரோ கொஞ்சம் கொடுப்பார்கள் குடிக்கலாம் என்னும்;

 ஏற்பா டறியா திறங்கிவந்த  ஊரார்--- ஏதாவது கிடைக்கும் பார்க்கலாம் என்று கூட்டத்திற்கு வருகின்ற ஊரின் பொதுமக்கள்;

கடினக் கருத்துகள் ஆரம்பம்  ஆனால்---  கடுமை மிகுந்த பொருளியல் கருத்துகள் சொற்பொழிவில்  வரத்தொடங்கிவிடுமானால்;

படுக்கையைத் தேடிப் ---  மீண்டும் வீட்டுக்குச் சென்று படுத்துத் தூங்கவே மனங்கொள்வர்;  பறக்காமல்---  வீட்டுக்கு ஓடிவிடாமல்,

கேட்டுவிடின்--- ( அவ்வாறின்றி) உட்கார்ந்து எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொள்வார்கள் ஆயின்;

பூமியில் அஃதும் இயல்பன்று ---  அதுவும் எங்கும் எப்போதும் 

நடைபெறுவதன்று;

 நாமிதிலே---  நாம் இதைப் பகுத்துணர்வதானால் இதில்

 நேமத்தால் நன்மைகாண் போம்.--- இயல்பான விதிமுறைகள் கடைப்பிடிப்புகள் எவையோ அவற்றால்,    உண்மையைத் தெரிந்துகொள்வோம்.

யாரையும் குறைகூறுவதைத் தவிர்ப்போம் என்றவாறு.

நேமம் :  எப்போதும் உள்ளபடி .

Note:  The meanings have been made clear; we may need to paraphrase correctly with due 

regard to the poetic wordings. Will attend when time permits.

ஆச்சாரியன்


ஆரியன் என்ற சொல்லும் பலவழிகளில் உருப்பெறும். எடுத்துக்காட்டாக ஆசிரியன் என்பதன் இடைக்குறையாக ஆரியன் என்றாலும் அச்சொல் வந்துவிடுகிறது. ஆ(சி)ரியன் எனக்் காண்க.  வாத்தியார் அறிவாளி என்பதை ஆசிரியன் அறிவாளி என்று மாற்றிச்சொல்லி, ஆசிரியறிவாளி என்றாக்கி, அறிவாளி என்பதற்குப் பதிலாக ஆசிரியாரியன் என்று சொல்லி, ஆசிரிய+ஆரியன் = ஆச்சிரியார்யன் என்றும் பின்னும் திருத்தி ஆச்சாரியன் என்று குறுக்கினால் இச்சொல் வந்துவிடுகிறது. வேறன்று அது.

ஆசிரிய ஆரியன்  
ஆச்சாரியன்.

ஆசிரிய என்பதில் ஆசி என்பதை மட்டும் எடுத்துக்கொள்க.  தமிழில்  ஆச் என்பது ஏற்புடைய சொல்லுரு  அன்று.

ஆ(ச் இ) ஆரியன்.  இவற்றுள் இ என்பதை விடுக.
ஆச்  ஆரியன்
ஆச்சாரியன்,  ஆச்சாரிய  என்றும்   வரும்.  பூசைமொழியில் அன் என்ற ஆண்பால் ஒருமை ஒழிக்கப்பட்டது.   இல்லை.

மேற்கண்டவை ஒலிமுறையில் விளக்கப்பட்டன.  தமிழ்ச் சந்தி முறையிலன்று. இலக்கணத்தின்படியுயன்று, இதுபோலும் சொல்லாக்க இலக்கணம் தமிழ்நூல்களில் சொல்லப்படவில்லை. இதற்கு என்ன காரணம்.  ஏனென்றால்  தமிழ் இலக்கணம் தமிழைத் திருத்தமாகப் பேசவும் எழுதவும் உதவும் இலக்கணம்.  சொல்லாக்கம் சிறிதளவே சொல்லப்பட்டது. சொற்களை ஆக்கிக்கொள்வதற்கு உதவ உங்களுக்குப் போதிக்கப்படும் கலையோ தந்திரமோ அன்று.

தமிழ்ப் புணரியலின்படி,  ஆச்சாரியனாசிரிய  னென்று  வரவேண்டும்.  சொல் மிக் நீண்டுவிட்டது. தமிழ் தமிழ் என்று  அரசியலில் உள்ளவர்கள் பெரும்பாலும் கூவுதலின் மூலமாகத் தங்கள்  அக்கறையை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.  தமிழைப் படிப்பவர்கள் குறைவு. இந்த நிலையில் பத்து எழுத்துக்கள் உள்ள ஒரு சொல், சரியன்று என்று  ஒதுக்கப்படலாம்.   சொற்களைக் குறுக்கிச் சிறு புனைவுகளாக்கினால் எடுத்தாளுவதற்கு எளிமையாக  விருக்கும்.  யாம் எழுதும்போதும் நீண்ட சொற்கள் வந்துவிடுகின்றன.  இத்தகைய நிலைகளைக் கருதித்தான் இடைக்குறை முதலிய வசதிகள் கவிதை எழுதுவோருக்கு உதவ உண்டாக்கப்பட்டன. இவையே கருதித்தான்  பண்டை நாட்களில் சொல்லாக்கத்திலும் இந்நெறி கடைப்பிடிக்கப்பட்டது,  தமிழ்க் கவிதைகளில் இசை முதன்மை வாய்ந்தது ஆதலின் அது முறியாமல் ஒழுக,. சொற்கள் சிறியவாக்கப்பட்டன.   எ-டு:  கற்றதனால்  ஆய பயனென்கொல்?  என்ற தொடரில்  ஆகிய என்று எழுதினால் இசை முறிந்து வெண்பா கெடும். பண்டை நாட்களில் நெடுஞ்சொற்கள் வழக்கிலும் அருகியே வந்தன. பூசைமொழி அன் விகுதியையும் கொள்ளவில்லை யாதலின்,  ஆச்சார்யா என்று மேலும் சுருக்குண்டது.

பூசைமொழியிலும் சொற்கள் அவர்களின் முயற்சியையும் கடந்து,  நீண்டுதான் விட்டன.  இதனால் கரட்டியல்வு மிகுதியாகவே,  குரு நானக் முதலியவர்கள் குருமுகி முதலிய மொழிகளைக் கையாண்டனர்.. இதனால் சில மொழிகள் ஆற்றொழுக்குப் போலும் நடையை அடைந்தன. இவையாவும் நலம் கருதியவையே  ஆகும்.

ஆசிரியன் என்ற சொல்லே சகர வருக்க எழுத்துகள் இரட்டித்து ஆச்சாரியன் என்று வந்தது என்பது இன்னொரு கருத்தாம். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

சனி, 13 ஏப்ரல், 2024

Happiness and Sadness ( by Poet Saran)

 


There are moments of intense sadness, 

Of bawling your eyes out, 

Wet paper below your hands,

Scribbles of hatred and disenchantment, 

Staring into the sky, isolated and ostracised.

Every muscle hurting to move,

Every movement calling out for death,

The quietness all around you but endless voices in your head,

The atmosphere of desperation and despair, 

Of hatefulness and regret,

The singularity of a big xxxk you.


But there are also moments of intense happiness, The sun shining brightly down on you, 

The moon glowing in the darkness, 

The wind grazing by your skin, 

The shadows of movement and progress, 

Platonic loves of gesture and admiration, 

The warmth and contentment behind a laughter, The elation of a kinder mind and blissful quietness.


There will be moments of both, 

Co-existing together, 

Taking turns at times, 

Looping in oppositional forces, 

Of yin and yang, 

Of waves and lulls,

Of stillness and being, 

the totality of you.

வியாழன், 11 ஏப்ரல், 2024

தனுஷ் என்ற சொல்தோன்றுதல்

 இன்று தனுஷ் என்ற சொல் எவ்வாறு தோன்றிற்று என்று அறிந்துகொள்வோம்.

தன்னில்தான் இயங்கும் நிலைதான் தனுஷ் என்று சொல்லப்படுதிறது.  ஒவ்வொரு இராசிக்கும் ஒரு தன்மை,  குண இசைவுகள் முதலியன இருக்கும் என்பது உண்மையாயினும்,  தனுஷுக்கு இது  சற்று நிறைவை ஒட்டி நிற்கிறது என்பர்.உங்கள் இருகைகளாலும் ஒரு பூனையைத் தூக்கி கீழே போட்டுவிட்டாலும்  அது  கண்டபடி போய் விழாமல் ஒரு தந்திரத் தாவல் மன்னன்போல் நாலு காலும் சமநிலைப் படும்படியாக விழுந்து நிற்கும். ஓர் எருமையால் தூக்கி எறியப்பட்ட சிங்கம்  கண்டமாதிரி போய்த் தரையில் விழுகிறது.  அதனிடம் தந்திரத்தாவல் இல்லை. தாக்கும்போது முன்னங் கால்களால் அடித்துக்கொண்டு வாயினால் கடித்துப் பிடித்துக்கொள்கிறது. வீழ்ச்சியில் தந்திரம் இல்லை.

தனுஷ் என்ற சொல் "தன் உய்வு"  என்ற இரு தமிழ்ச் சொற்களிலிருந்து வருகிறது. அல்லது அதற்கான தமிழ்ப் பதத்தின் சமகாலப் புனைவாதலும் கூடும். ஆகவே, தன் உய்வு > த(ன்)னுய்வு> தனுசி/(வு)> தனுஷ்  ஆகும்.  இது தனுர் என்றுமாகும். உர் என்பது உரு என்பதன் சுருக்கம்

தனுஷ்கோடி (ஊர்ப்பெயர்) என்பதில் கோடி என்பது மூலை.  கோடு> கோடி, இது வளைவுப் பொருள்.  ஒரு நேர்கோட்டின் முடிவு  அதன் வளைவுதான்.  தனுஷ்கோடி என்பது தானே நிற்கும்  அல்லது தனியாக நிற்கும் ஒரு நிலப்பகுதி,  திட்டு, தீவு.   தீவு என்பது நிலத்தின் தீர்வு அல்லது முடிவு.  தீவகம் என்பதும் தீவுதான்.  தனிநிலம்,  அல்லது பிற நிலப்பகுதிகளைச் சார்ந்து நில்லாத, ஒரு தனிப்பகுதி.  நாவலந்தீவு என்றால் பேச்சில் வலிமை காட்டிய தன்மை இங்கு வாழும் மக்களுடன் முடிந்தது,  மற்றவர்போல் அதிகம் பேசிக் கொள்கைபரப்புச் செய்யாதவர்கள் என்றுபொருள்.  புத்தமதத்தைச் சீனாவுக்குப் போதித்தவர்கள் இந்தியர்கள். சீனா அதைப் பிறருக்கு எடுத்துரைத்தது குறைவு.  இந்தியர்களே முன்னணியில் இருந்தனர்.  நாவற்பழம் கிட்டிய அழகிய இடம் என்றும் பொருள்.  தீவகம் + அல்+ பு + அம் > தீவகற்பம்  ( தீவுக்குறை.).  தீவகம் அல் =  தீவு அல்லாத. ஒருபக்கம் நிலத்தொடர் உடைய,

உய்>( உயி)> உசி.  இது யகர சகரப் போலி.   ஒ.நோ:  பசு > பை.  (பசுந்தமிழ் > பைந்தமிழ் )

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

செவ்வாய், 9 ஏப்ரல், 2024

அதிசயம் என்பதற்கு இன்னொரு பொருட்பார்வை

 அதிசயம் என்ற சொல்லுக்கு உங்கள் வாத்தியார் பொருள் கூறியிருப்பார். நீங்கள் படித்த நூல்கள் சொல்லாக்கவியல் நூலா யிருந்திருந்தால், அதில் வேறுவிதமான சொற்பகுப்புகளை கூறியுமிருக்கலாம்.  இன்று இதை நாம் வேறொரு கோணத்திலிருந்து காண்போம்.

ஒன்றை ஓர் அதிசயம் என்றால், உங்களை வியக்க வைத்தது என்ன என்ற கேள்வி எழுகிறது.  வியப்புக்குரியது ஒவ்வொரு நிகழ்விலும் மாறுபடுகிறது. இந்த ஒவ்வொரு வியப்புக்கும் என்ன உள்ளடக்கம் என்று பார்த்து ஒரே பெயரைக் கொடுத்து எல்லாவற்றையும் ஒருங்கே முன்னிறுத்திவிட முடியாது. அதனால் இதற்குள் ஒரு கடினநிலை தோன்றியது.

ஒரு பெயரில் அடக்க இயலவில்லை.

அதனால் இந்தப் பெயரை இப்படி அமைத்தனர்.

அது இசையும்   

> அதிசையும்

> அதிசயம்.

எது இசையும் என்பது கேள்வியாக வந்தால்,  அது, வியப்பை உண்டாக்குகிறதே, அது!  அது வேறுபடு பொருளாம்.

நாலு கண்கள் இருக்கும் ஒரு விலங்கைக் கண்டுவிட்டால்,  அதில் வியப்பைத் தருமாறு இசைந்திருப்பது கண்களின் எண்ணிக்கை.

எதிசையுமோ  அதிசையும் -  அதிசயம்.

இந்தச்சொல்லை இப்படி உருவாக்கிய புலவன் மிகுந்த அறிவாளி என்று அறிக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

புத்தன்

 புத்தன்:

புத்தர் உலகிற் புதுநெறியைக் கண்டுபிடித்தவர்.

புது+ அர் > புத்தர். (தகரம் இரட்டிப்பு)

பூ - தோன்றுதல். (மூலச்சொல்.)

 பு>புகு >புது. ( புதியன புகுதல்)

மக்கள் அழைத்தது - சாக்கியமுனி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்





திங்கள், 8 ஏப்ரல், 2024

மோடி செயல்வீரர்

 அடுத்தடுத்த நாடுகளுக்கு அடிவருடி ஆகாமல்

எடுத்தகரு மம்எதுவும்  இனிதாகத் தான்செய்யும்

மோடிஎனும் செயல்வீரர்  முனைந்திட்ட .மூதறிஞர்

தேடித்திரிந் தலைந்தாலும் தேசமிதில்  கிட்டாதார்

நல்லவேலை  செய்பவரை இல்லிற்குள் அனுப்பென்றே

சொல்லுவதும் ஏதுக்கோ சூழ்ந்துவிடை காணோம்நாம்..


தாம்நலமே  செய்வதற்கே தலையெழுத்துச் சரியில்லார்

நாம்நலமே பெறுங்காலை ஏன் அவரைத்   துரத்துகிறார்.

அவரிருந்து பலகாலம் அனைத்துமக்க ளும்உயர

இவர்வழியே விடவேண்டும் தடைசெய்தல் தக்கதன்றே 

மக்கள்நாட்டம் நாட்டினேற்றம் முக்கால மும்சிறக்க

ஒக்க அவர்  இருந்தாலே  உலகுமிகப் பயன்பெறுமே..


தம்நிலையைத்  தாமறிந்து தம்வசதி செல்வநிலை

இம்மண்ணோர் இருப்புநிலை எதிர்காலம் ஆறு பேறு

எல்லாமும்  கணித்தறிந்து  சொல்லாடும் சூழ்திறனே

நல்லாராய் எடுபடுவார் நாடோறும் செல்திசையே

இல்லாதார் சிந்தித்தல் இல்லாமல் இல்லிற்செல்

சொல்விடையோ மட்டமான வல்வழிச்சொல் ஐயமிலை


வாரிசுகள்  யாருமிலார் எண்மலராய் நாடெண்ணி

ஓருயிராய்  ஒடுங்கியவர்  மாமுனிவர் மோடி இவர்.

பிள்ளையில்லை குட்டியில்லை அள்ளுபெருஞ்  செல்வமிலை 

தாயிழந்தும் ஓய்ந்துவிடார்  ஆயும்மக்கள் மேலெனவே

தேசமொன்று குறிக்கோளாய் வாசமலர் வாழ்வார்ந்தார்

ஏசலறியா   மோடி இரும்பொறையை வாழ்த்துகவே.




தக்கதன்றே - தக்கதல்ல.

பெறும்காலை - பெறுகின்ற காலத்தில்

இவர் வழியே விட -  எதிர்ப்பவர்கள் தடுக்காமல் இருக்க

உயர - முன்னேற்றமடைய

மக்கள் நாட்டம் - மக்களுக்கு வேண்டியவை

நாட்டினேற்றம் - நாடு செப்பனிடப்பட்ட முன்னேற்றம்

ஒக்க - நாட்டினருடன்

எண்மலர்:

கொல்லாமை, ஐம்பொறி யடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு.ஆகிய எட்டு மலர்கள்.

தம் நிலை - தம்முடைய சொத்துப்பத்துகள்
இம்மண்ணோர் -  நாட்டுமக்கள் 
இருப்பு நிலை -  மக்களுக்குள்ள வசதிகள்
சொல்லாடும் -  உரை தொடுக்கும், பேச்சு நிகழ்த்தும்
நல்லாராய் எடுபடுவார் - நல்லவர்களாய் சொல்லப்படுவோர்
செல் திசை =  செல்லவேண்டிய வழி
இல்லாதார் -  சிந்தனை இல்லாதவர்கள்
இல்லிற் செல் - வீட்டுக்குப் போ எனப்படும் கூச்சல்
வல்வழிச்சொல் -  வன்மை காட்டும் சொல்
ஐயமில்லை - சந்தேகமில்லை

எண்மலர்  எட்டு நற்குணங்கள் மேலே காண்க
வாரிசு -  வருகின்ற  பின் தலைமுறைகள்.  ( வரு+ சு >வாரிசு,
சு - விகுதி ),
நாடெண்ணி - நாட்டு நலன் கருதி
மாமுனிவர் - மகரிஷி
ஆயுமக்கள், வாக்களிக்கும்  மக்கள்.
தலைவர்களை மக்கள் ஆய்வு செய்கின்றனர்.. முடிவுசெய்து
வாக்கை அளிக்கிறார்கள். அதனால் ஆயும் மக்கள்.
ஒ.நோ அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ? (குறள்).
இரும்பொறை -  மலைபோன்றவர்.  இது சேரமன்னர்
பட்டப்பெயர், பொருள்  உள்ளது. 

வல்வழிச்சொல்: போகிற வழியில் சிந்திக்காமற் பேசுவது.

சமானம் என்னும் பதம்.

 பழைய இடுகை ஒன்றில் பதம் என்ற சொல்லும் எவ்விதம் அமைந்தது என்பதற்கு  விளக்கம் எழுதியுள்ளோம்.  ஒவ்வொரு வழக்கிலுள்ள தமிழ்ச்சொல்லிலும் பொருண்மை பதிவுற்று உள்ளது.  பதிவுற்று நிற்பதுதான் பதம் என்னும் சொல்.  பது, பதி என்பவை பதிந்துள்ளமை என்று பொருள்தரும். சற்றுக் குழம்புபோல் உள்ள பரப்பில் கெட்டியான ஒரு பொருள் நல்லபடி பதிந்துவிடுகிறது.  ஒரு பெண்ணாதிக்கக் குடும்பத்தில்  அப்பெண்ணை மணந்துகொள்ளும் ஆண்மகன் திருமணத்தின்பின் தன்னைப் பதிந்துகொள்ளுகின்றான். பண்டைக் காலத்தில் எழுத்துமுறையிலான பதிவுகள் இல்லை.  மனத்திலே பதிந்துகொள்ளும் முறையே இருந்தது. ஆகையினால் அவன் "பதி" எனப்பட்டான்

இதை மேலும் இங்கு விளக்கியுள்ளோம்.  சொடுக்கி வாயித்து  (வாசித்து)க் கொள்ளுங்கள்.  வாயினால் வெளிப்படுத்துவதுதான் வாயித்தல். யி பின்  சி  ஆகும்.

https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_25.html

சுழுத்தி , சுழுமுனை நாடி என்பனவும் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

https://sivamaalaa.blogspot.com/2021/03/blog-post_15.html

சமானம் என்பது தமிழிலும் சங்கதத்திலும் (= சமஸ்கிருதத்திலும்)  உள்ள தற்சமச் சொல்.

இதைப் பாணினி என்ற பாணப் புலவன் சொன்ன படி பிரிக்காமல்  தமிழ்வழியில் பிரித்தறிவோம்.

சமம் +  ஆன + அம் >  சம +  ஆன + அம் >  சமானம்.  

சமானம் என்பதை  ஸமானம் என்று முன்னர் எழுதினர்.

இதை:

சமம்  +  அன் + அம் >   சம + அன் + அம் >  சமானம் என்றும்  பிரிக்கலாம்.

அன் என்பது அன்ன என்ற உவம உருபு  அன் என்று குறுகி இடைநிலையாக நின்றதாகும்.  " சமமான அதுபோலும் அமைந்தது " என்று இது வாக்கியமாகிப் பொருள் பயக்கும்.

சம என்பதில் இறுதி  அகரமும்   அன் என்பதன் முதலான அகரமும் இணைய:

அ + அ >  ஆ  என்பது ஒலியியல் முறையில்  சரியானதே,

அ அ என்பதைத் தட்டச்சுச் செய்தால்  ஆ ஆகிவிடும்.  அறிக.

விடுதலை விடுதலை என்ற பாரதியார் பாட்டில்  சரிநிகர்  சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே என்ற வரியையும் படித்து அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.



சனி, 6 ஏப்ரல், 2024

மித்திரம் நட்பு - காக்கும் காஉசிக முனிவர்.

 தேவர் தம் நூலில் நட்பினை நன்கு  ஆராய்ந்து விளக்குகிறார். அவர்:


மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. 800


என்று தெளிவாகப் பாடுகிறார்.  ஆனால் இதிலுள்ள தொல்லை என்னவென்றால் ஒருவன் மாசற்றவன் என்று அவனுடன் பழகுமுன் எப்படித் தெரிந்துகொள்வது?  பிறகு பிறகு தானே ஒவ்வொருவன் வண்டவாளமும் தண்டவாளத்தில் ஓடுகிறது?

ஒருவன் ஒவ்வொரு மாலையிலும் போய்ச் சங்கிலி திருடுகிறான் என்று,  நாம் வீட்டிலுருந்துகொண்டு எப்படித் தெரிந்துகொள்வது?  ஒருநாள் பிடிபட்டபின் என்னை வந்து பிணையில் எடு ( bail me out please)  என்று தொலைபேசியில் அழைக்கும்  போதுதான்  தெரிகிறது. 

நட்பு என்பது மிக்கத்திறன் வாய்ந்தது.  அவனுக்காகச் சொத்தை அடைமானம் வைத்து காசு கட்டி அவனை மீட்டு வருகிறோம்.

இது நம் அளவில் நாம் செய்த நன்மை.  நாம்  அவனுக்கு மிக்கத்திறன் வாய்ந்த ஒரு நண்பன். நட்பு என்பதே ஒருவனையாவது காப்பாற்றவேண்டிய ஒன்று. இப்படி உலகில் பலரைக் காப்பாற்றியவர்தாம் கவுசிக முனிவர்.   அவர்: உலகம் என்றால் அதில் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களுக்கு நோய் வந்தாலும் மருத்துவர் மருந்து கொடுக்கத்தான் செய்கிறார்.  அப்போதுதான் ஒருவர் உலக நண்பன் ஆகிறார்.

காவு  உசிக  முனிவர்.

காவு உயிக முனிவர்

காவு உய்வு இக முனிவர்.  காவலின் உயர்வு மிக    வாழ்ந்த முனிவர்.

காவு என்றால் அது காவல். 

அவரல்லரோ  உலக நண்பரான முனிவர்.



நட்பும் மிகத்திறம் உடையது. அதனானாலேதான்  மிக்கத்திறம் >  மிகத்திரம்>  மித்திரம் ஆயிற்று

மித்திர(ம்)  என்றால் சம்ஸ்கிருதத்தில் நட்பு. மிக்கத்திறன் என்பது நட்புத்தான்.

காத்தல் என்பது ஒரு கடவுளியல்பு.  முனிவர் அவரின் பதில்நிலையராக (representative) நின்று உலகுக்கெல்லாம் நண்பராகிறார்.

மிகத்திறம்> மி(க)த்திரம் > மித்திரன்.

கா உய் இக அன் >  காவுயிகன் >  காவுசிகன் > கௌசிகன்.
பொருத்தமான புனைவு ஆகும்.


வெள்ளி, 5 ஏப்ரல், 2024

பாக்கியம் என்பதன் அடிமுடிப்பொருள்.

 இவ்வுலகில் இலாபம் மட்டுமே ஏற்படுவதில்லை.  நட்டமும் ஏற்படத்தான் செய்கிறது. இரண்டுமே இந்த உலகம் என்னும் குட்டையில் ஊறிக்கிடைத்த மட்டைகள்தாம். இரண்டும் ஒரே மட்டை என்று வைத்துக்கொண்டால், மட்டையில் ஒரு பாக்கியம் என்னலாம்; மற்ற பகுதி பாக்கியமின்மை ஆகும். ஒன்று நல்ல பகுதி.  இன்னொன்று கெட்ட பகுதி.

பாக்கியம் என்றால் இயன்ற பகுதி.  அதனால்தான் அதற்கு இயம் என்ற விகுதி கொடுத்துள்ளனர்.  பாக்கியமின்மை நமக்கு இயலாத பகுதி. அதை நாம் இப்போது துருப்பிடித்த பகுதி என்னலாம்.  துருப்பிடித்த இரும்பு போல பயன்படுத்த வியலாத பகுதி. இதை இன்னும் சுருக்கிச் சொல்வதானால் "துருப்பாக்கியம்" -  என்று சொல்லிப்பாருங்கள். இன்னும் சுருக்கித் துர்ப்பாக்கியம் என்று சொல்லியும் பாருங்கள். 

துரு என்பது இரும்பைத் துருவிச் சென்று இறுதியில் ஒரு பொத்தலைப் போட்டுவிடுகிறது.  அதனால்தான் அதைத் துருவென்று சொன்னார்கள். துருவென்பது துருவுதல் என்பதன் அடிச்சொல். இறுதியில் இரும்பைத் தின்றுவுடும் துருவை துரு என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது. துருவென்பது சரியான சொல்.

பாக்கியம் என்றாலே அதை நற்பேறு என்றுதான் வேறு சொல்லால் குறிக்கமுடியம்.  அப்புறம்  துருப்பாக்கியம் என்றால் இப்போது பாக்கியம் என்ற சொல் "கெட்ட நற்பேறு"  என்று சொல்லலாமோ?   அது முரண்பாடாக இல்லையா?  ஆகவே,  பாக்கியம் என்றால் நற்பேறு அன்று,  வெறும் பேறு மட்டுமே,  நற்பாக்கியம் என்றால்தான் நல்ல பாக்கியம், துருப்பாக்கியம் என்றால்தான் கெட்டபாக்கியம் என்னலாமோ.

மனிதனே குறைகள் இல்லாதவன் அல்லன்;  அவனால் ஆக்கப்பட்ட மொழியும் குறைப்பட்டதே ஆகும். ம்

இப்படி ப்ளூம்ஃபீல்ட்டு முதலிய மொழிநூலறிஞர்கள் மொழிகளில் பல முரண்பாடுகள் உள்ளன என்று கூறுகிறார்கள்.  உலகின் எல்லா மொழிகளிலும்!   ஆங்கில மொழியிலிருந்து பல முரண்பாடுகளைக் காட்டுகிறார்கள். தமிழில் இப்படி நாம் காணும்போது,  உரையாசிரியர்களே நமக்கு வந்து வழிகாட்டுகின்றனர். பாக்கியம் என்றால் நல்ல பாக்கியம் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் கூறுவர்.  பள்ளமும் மேடும் அடுத்தடுத்து வருமாயின்  வண்டி கவிழ்ந்துவிடுமன்றோ?   நல்லபடியாக மட்டுறுத்துகின்றனர் என்று அறிக.

எனவே:

பாக்கியம் என்று வந்தால் அது நல்ல பாக்கியம் அல்லது பேறு.

துருப்பாக்கியம் என்றால் கெட்ட நிகழ்வு

அடிப்பொருள்

:  நல்ல பாகம் அல்லது பேறு.

ஏன் பாகம் என் கிறோம்?  பாகம் என்பது பகுதி,

எப்படிப் பகுதி ஆகும், பாருங்கள்:

பகு> பாகு>  பாகு + இயம் > பாக்கியம்.

இறுதி உகரம் வர ககரம் மெய்  இரட்டிக்குமே.

முடிப்பொருள்:

பாக்கியம் துர்ப்பாக்கியம் என்று உலகவழக்கில்  ( அன்றாடப் பயன்பாட்டில்) இருப்பதால்,  பாக்கியம் என்பது இப்போது பொதுப்பொருளில் வழங்குகிறது. 

ஆயினும் பாக்கியம் என்பதன் ஆக்கப்பொருள் நற்பேறு என்பதே.

இயம்:  இ + அம்  :  என்றால் இங்கு அமைவது அல்லது இயன்றது.

இயல் > இயம்,

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்னர்.


வியாழன், 4 ஏப்ரல், 2024

dinosaur தமிழில்.

 dinosaur தமிழில்  வியனூரி.  மொழிபெயர்ப்பு.

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

பாசாங்கு

[இங்கு நீர், உம் என்று வரும் சொற்கள் உம்மை [( வாசிப்பவரை) க்] குறிப்பவை அல்ல)]

பசுமையாக இருப்பவை எல்லாம்  இயற்கைப் பசுமையாய் இருத்தல் அருமையே. பசுமையான இலை, தழை, செடி, கொடி, மரக்கிளைகள், வேறு துண்டுப் பொருள்கள் எல்லாவற்றையும் மேலே போர்த்திக்கொண்டு, அப்போர்வையின் கீழ் உம் எதிரிப்படைஞர்கள் ஒளிந்திருக்கவும் கூடும். அற்றம் பார்த்து உள்ளே அமர்ந்திருப்பர். நீர் வருகிறீர் என்று கண்ட வுடன் அண்மை அறிந்து  மேற்போர்த்தியவற்றை விலக்கிவிட்டு உம்மைக் கொல்வதற்கு முந்துவர். நீர் ஏமாளித்தனத்துடன் நடமாடினீராயின் கொலைப்படவும் கூடும். திடீரென்று வெளிப்பட்டு அணுகுவோரிடம் தப்பிச் செல்வதும் உலகில் அரிதாகவே நடைபெறுவதாகும். 

இதற்கான சுற்றுச்சார்புகள் அமைந்த இடம் ஒரு காடுதான். வீதியில் கொள்ளை யடிப்பவனுக்குப் பசுமைப் போர்வைகள் தேவைப்படாது.  அதுவன்று நாம் இங்கே கருதுவது. பாசாங்கு என்ற சொல்லைத்தான் விளக்க வருகிறோம். வேண்டிய காட்சியமைப்புகளைக் கற்பனை செய்துகொள்ளும்.

பாசாங்கு  என்பதில் பசுமை +  அம் + கு என்ற மூன்று பகவுகள் உள்ளன. பசுமை என்பதை மேலே மீண்டும் படித்துத் தெளிந்துகொள்ளும்.  அம் என்பது அழகு, அமைப்பு என்றெல்லாம் பொருள்படும் அடிச்சொல்.  இங்கு  இடைநிலையாக வந்துள்ளது.  கு என்பது இங்கு விகுதியாக வந்துள்ளது. நாக்கு என்பதில் ஒரு விகுதி  " கு" என்று வந்துள்ளது போலுமே இது. விகுதி என்பது சொல்லை மிகுதிப்படுத்தி வேறு ஒரு புதுச்சொல்லை உண்டாக்கும் முற்றுநிலை.

பாசாங் என்று மலாய் மொழியிலும் ஒரு சொல் உள்ளது.  அது பொருத்துதல் என்ற பொருளுடையது, மலாய் மொழி இயல்பின்படி சொல்லிறுதியில் முழுக் குகரம் வருவதரிது.. பொருளில் சில ஒற்றுமைகள் இருத்தல் கூடும்.  இருப்பினும் ஒன்றிலிருந்து மற்றது வந்தது என்று சொல்வதற்கில்லை. ஆயினும் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழர் தென் கிழக்காசிய நாடுகள் முழுமையும் வேற்று இனங்களுடன் பழகிக் கலந்துள்ளனர். எனவே சொற்கலப்புகள் இயல்பானவையே. குமரிக்கண்ட அழிவின்பின் அங்கிருந்து தப்பி ஓடியவர்கள் கிமர் என்ற அடையாளம் கொண்டவர்களாக இப்போது இருக்கின்றனர் என்று  சிலர் (ஆய்வாளர்கள் ) கூறுகின்றனர்.  பல்லவ எழுத்துக்களுடன் கம்போடியக் கிமர் எழுத்துக்கள் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன. சோழ இளவரசி ஒருத்தியை அனிருத்த என்ற கம்போடிய இளவரசன் மணந்துகொண்டான் என்பர். அங்கோர்வாட் ஆலயங்களும் கருதற்குரியவை. நீல உத்தமன் என்ற சோழத் தளபதி இந்தோனீசிய பாலிம்பாங்க் தீவிலிருந்து வந்து சிங்கபுரத்தில் (சிங்கப்பூரில்) சோழ ஆளுநனாக இருந்து ஒரு மலாய் இளவரசியையோ ( அழகியையோ ) மணந்தான்.  பின் இவன் மலாய்மகனாகவே மாறி  Sang Nila Utama என்ற பெயருடன் ஆண்டான் என்பர். ( மலாயா தேச சரித்திரக் காட்சிகள், ராமகிருஷ்ண மடம் வெளியீடு, ஆசிரியர்: பிரமாச்சாரி கைலாசம் ).  வேறு சீன எழுத்தாளர்கள் எதியவையும் உள்ளன, இந்தியத் தொடர்பு பற்றியவை இவை, இப்போது எம்மிடம் இல. ( கோவிட் காலத்தில் எம் வீடு கைவிடப்பட்டு அழிந்தன ). இவற்றைக் கொண்டு யாம் மேற்கொண்டு ஒன்றும் சொல் ஆய்வில் ஈடுபடவில்லை. (மலாய் மொழிச் சொற்களை ஏன் இங்குக் குறிப்பிட வேண்டும் என்பார்க்கு இது போதுமானது). 

 பசுமை என்பதில் மை விகுதி விலகிற்று.  பசு+ அம் என்பது பாசாம் என்று நீண்டது.  வேறு சொற்பகவுகள் வந்து சேர்கையில் இவ்வாறு சொற்கள் நீள்வது இயல்பு. (பசு + அம் + கு > பாசு+ ஆம் + கு ).வந்தான் என்ற வினைமுற்று வாங்க என்று மாறுகிறதன்றோ.  அது வங்க என்று தோன்றுவதில்லை. வினைமுற்று, வியங்கோள்வினை, பொருட்பெயர்ச் சொல்லாக்கம் என்று எல்லா நிலையிலும் சொற்களில் மாற்றங்கள் நிகழும். ஒவ்வொரு சொல்லையும் ஆராய்ந்தாலே ஒளிவுகளும்  நெளிவுகளும் சுழிவுகளும் புரியும்.

பசு( மை) > பசு> பாசி. ( பசு+ இ ).  பசு என்பது பாசு என்று மாறி இகரம் ஈற்றில் வந்து சொல்லாயிற்று.

இத்துடன் முடிப்போம்.

அறிக மகிழ்க.


திங்கள், 1 ஏப்ரல், 2024

வசூல் உருதுச்சொல்?

 வசூல் என்பது  உருதுச்சொல் அன்று.  அதன் தொடக்கத்தைப் பார்த்தாலே அதில் வருதல் குறிக்கும்  வ என்ற ஒலி உள்ளது.  அது உண்மையில் சொற்பிறப்பால்  உருது அன்று.  ஒரே எழுத்தைக் கொண்டு எப்படித் தமிழ் என்று முடிவு செய்கிறீர் என்னலாம்.  வந்தான் என்ற சொல்லிலும் வ  மட்டுமே வருதலைக் குறிக்கும் நிலையைக் காட்டுகிறது.  அதில் ருகரம்  கூட இல்லையே!

வந்தான் என்ற வினைமுற்றில் வகரத்துக்கு அடுத்து ருகரம் வரவில்லை என்றாலும், வந்தான் என்று அமைந்ததே சரி.  வருந்தான் என்றால் வருந்தமாட்டான் என்று வேறொரு பொருண்மை காட்டுவதாக ஆகிவிடும். அதுபோலவே இச்சொல்லானது "வருசூல்" என்று அமைந்திருப்பின்  வருகின்ற கர்ப்பம் என்று பொருள் மாறிவிடும்.  அதனால் இச்சொல்லை அமைத்த அறிவாளிகள்  இதை வருசூல் என்று அமைக்காமல்  வசூல் என்றே அமைத்தனர். இவ்வாறு செய்ததன் மூலம் தமிழில் வந்தாள், வந்தான் என்று அமைந்த சொற்களின் அமைப்பையே வசூல் என்ற சொல்லும் பின்பற்றி, தமிழ்ச் சொல்லமைபினோடு இயைபு பட்டுள்ளதாக இருக்கிறது. அதனால் இது பொருளமைதியிற் பொலிந்த சொல்லாகும்.

எச்சொல்லும்  பின்வழக்கினால் ஒரு மொழிக்கு உரித்தாகலாம். இவ்வாறு உருதுக்குள் வழக்குப்பெற்றிருந்தால் அது உருதுச்சொல்.

ஆயினும் மஜ்முவா, ஜக்கேர, ரிசால  என்ற சொற்கள்,  பணப்பெறவுக்கு (collection) உருதுமொழியில் வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. வசூல் என்றொரு சொல் வழங்கப்படவில்லை. எனவே தென்னாட்டில்  எழுந்த சொல்லாகவே இது தெரிகிறது. 

ஜமா கர்னா, அய்க்ஹத கர்னா, ஏக்சத் லானா, ஹாசில் கர்னா இருசொல் தொடர்களும் வசூல் என்பதனோடு பொருந்தவில்லை. The word hasil is used also in Malaysia and Indonesia. It means( yeild of) property (to collect).

அந்தக் 

காலத்தில் பணத்தைப் புதைத்து வைத்துத்தான் காத்தனர்.  வங்கி என்னும் பணப்பொதிவகங்கள் ஏதும் இல்லை. அரசனின் ஆணைச் சேவகர்கள் வந்து தோண்டி எடுத்துத்தான் ஆய்தல் செய்தனர்.  சூலுதல் என்றால் தோண்டுதல்.

வந்து தோண்டி எடுத்துச் சென்றனர் என்பதை வசூல் என்ற சொல் காட்டுகிறது.

வருசூல் > வசூல்.  வருசூல் என்பது வினைத்தொகை.  வசூல் என்பது அதில் திரிந்த சொல். (திரிசொல்).

முன் செய்த ஆய்வுகளையும் படித்தறிக:  [ சொடுக்கி இவ்விடுகைகளுக்குச் செல்லவும் ]

1 https://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_53.html

https://sivamaalaa.blogspot.com/2017/03/vasool.html

https://sivamaalaa.blogspot.com/2021/05/blog-post_31.html

வேற்றுமொழிச் சொற்கள் தமிழிற் கலந்து தமிழ்மொழி கெட்டுவிடும் என்ற அச்சத்தால் பீடிக்கப்பட்டு,  தமிழ்ச் சொற்களையும் தமிழல்ல என்று ஒதுக்கிவிடுதல் ஏற்பட்டுவிட்ட நிலையையே இது காட்டுகிறது.  இவ்விடுகை இதைத் தெளிவு படுத்துகிறது.  உங்கள் கருத்தையும் கருத்துப் பதிவுப் பகுதியில் இடுவதை வரவேற்கிறோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


ஞாயிறு, 31 மார்ச், 2024

முக்குவர்கள் சொல்

 செம்படவருள் ஒரு  பிரிவினர் கடலில் மூழ்கி  முத்தெடுப்பார்கள். இவர்களுக்கு முக்குவர்கள் என்று பெயர். 

பண்டொரு முக்குவன் முத்தினு போயி

படிஞாறன் கடலத்து  முங்ஙிப்  போயி

என்ற கவி வயலார் மலையாளப் பாட்டிலிருந்து இதைத் தெரிந்துகொள்ளலாம்.

முழுகுதல் என்பதுபோலவே  முழுக்குதல் என்பதும் ஒரு வினைச்சொல்.  இந்த இரண்டாவது வினைச்சொல் இடைக்குறைந்து  முக்குதல் என்ற வினை அமையும்.  மூழ்கி  முத்து  எடுத்தலை முக்குவர் செய்வர்.

முழுக்குதல் என்பதில் ழு மறைந்தது போலுமே  வாழ்த்தியம் என்பதில் ழ் குன்றி வாத்தியம் என்றாகும். யகர ஒற்றும் இவ்வாறு குறையும்.  சாய்த்தல் என்றால் வெற்றியுடன் ஒன்றைச் செய்தல்.  சாய்த்தியம் என்பதில் யகர ஒற்று மறைந்து சாத்தியம் என்று ஆகும்,  சாய்தல்:> சாய்தித்தல் >  சாதித்தல் என்று ஆகும்.  சாதித்தல் முதலியவை தமிழ்வினைகளே.  ஆய்> ஆய்  +  தாய்  >  ஆத்தா என்றாவதில்  இரண்டு யகர ஒற்றுக்களும் கெட்டன.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்  

சனி, 30 மார்ச், 2024

மாலுமி

 மாலுமி என்று சொல் அறிவோம்.

மால் என்பது பல்பொருட் சொல்.  காற்று என்றும் எல்லை என்றும் பொருண்மைகள் உள்ளன,  இவற்றுடன் பிறவும்.

மால் உ   இம் இ.

மாலு + இமி.>   மாலுமி   இதில் இ மறைந்தது.

இங்குக் காற்று என்பது கடல் காற்று.

பகவுகள்:

மால். கடற்காற்று.

உ -  முன்.

ம்  இது இடைநிலை.  இம்>  இமி  என்பது கற்று ஊதுவதும் ஆகும்.  இமிர்  என்பதில் ர் கெட்ட கடைக்குறை.  ( இமிர்தல்),  

இ - இங்கு வந்தோன்..என்பது குறிப்பும்  ஆகும்.

இது பாய்மரங்கள் பொருத்திவந்த காலத்துச் சொல்.

வேறு பொருளும் உள்ளது.. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

வெள்ளி, 29 மார்ச், 2024

பிறந்த நாள்


 பிறந்த நாள்  இன்பஞ்சை 

படத்தில் சோனி

Sony with birthday cake





சந்திப்பு சொல்

 சந்திப்பு  என்ற சொல்லை சிற்றூர் மக்களே முதன்முதல் உருவாக்கிப் பயன்படுத்தியவர்கள். இதன்பின் அது தமிழ் இல்லமொழியிலும் தொழுகை மொழியிலும் இடம் பிடித்தது. இதற்கு நேரான தமிழ்ச்சொல்: எதிர்கொள்தல்.

கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின்

எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர்

------என்பது ஒளவையின் பாடல் வரிகள்

தண்டுதல் என்ற சொல்லின் பொருளின்படி இருவர் சந்தித்தாலும், ஒருவர் மற்றவரிடம் பணம் கொடுத்தார். பணம் கைமாறாத  வேளையில் அது தண்டுதலாகாது என்று நினைத்தனர். தண்டுதல் என்பது கைதொடுதல் என்று பொருள்பட்டாலும்,  எதிர்மறையில் மட்டுமே  "தொடாமல்" என்ற பொருளில் "தண்டாமல்" என்று வரும் என்றனர். இது ஒரு வகையில் வியப்புக்குரிய விளக்கமே.

மரங்கள் செடிகள் முதலியவை அடர்ந்திருந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்த சிறுவர்கள் விளையடச் செல்கையில் வேர் குச்சி முதலிய தடைகள் தண்டாமல் செல்க என்று தாய்மார்கள் சொல்லியனுப்புவது வழக்கம்.  தண்டுதலின் எதிர்மறைதான் அவர்களின் கவனத்துக்குரியதாயிற்று. நான்போய் ஊர்த் தலையாரியைத் தண்டிக்கொண்டு வருகிறேன் என்றும் சொல்லியிருக்கக் கூடும். சந்திப்பு என்ற சொல்லுண்மையின் காரணமாக, தண்டிவருதல் என்பது நாளடையில் வழக்கிறந்தது.  


தட்டுதல் என்பது தொடுதல் கருத்துடைய  சொல்லாதலின், அதன் மெல்வடிவமாகிய தண்டுதல் என்பதும் சந்தித்தல் பொருளைத் தரவேண்டும்.  ஆனால் அது "வசூலித்தல்" என்று பொருள்படுகிறது. காலக்கழிவில் பொருண்மையில் வழுத் தோன்றிற்று என்று தெரிகிறது.

இனிச் சந்திப்பு என்ற சொல்லுக்கு வருவோம். 

ஒருவன் இன்னொருவனை எதிர்கொள்வதே சந்திப்பு. எனினும் இச்சொல்லின் பொருள்  முன் அறிந்தோனை எதிர்கொள்வதையே குறித்தது.  அறியாதவர்களைத் தெருவில் காண்பதும் சந்திப்பு எனப்பட்டாலும் இவை பெரும்பாலும் காண்பதே அன்றி ஒரு சந்திப்பு ஆகாது. தெருவில் ஒருவனைத் தாண்டிப் போவது சந்திப்பு ஆகாது.

தன் - சன்.  ( தகர சகர மாற்றீடு )

திரும்பு > திருப்பு > திப்பு.  இடைக்குறை.

சன் + திப்பு >  சந்திப்பு  ஆயிற்று.

தான் திரும்பக் காண்தல் என்பது பொருள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

 


வியாழன், 28 மார்ச், 2024

வாச்சியம் திரிபு

"பொண்ணு மாப்பிளையை வாத்துங்க"  என்பது பண்டை நாட்களில் பாட்டிமார் வாய்மொழியில் வருவது.  வாழ்த்தியம் என்ற சொல்லே வாத்தியம் ஆனது.  இயம் என்பது இசைக்கருவிகள் வாசிக்கும் குழுவினரைக் குறிக்கும் சொல்.

வாழ்த்து >  வாத்து  இது பேச்சுத்தமிழ் வினைச்சொல்.  இஃது ஓர் இடைக்குறை.

வாழ்த்தியம் >  வாத்தியம்.  இது இடைக்குறை.

தகரம் சகரமாய்த் திரியும். இடுகைகளில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. காண்க.

 வாத்தியம் > வாச்சியம்

இது தனி > சனி என்பதுபோலும் திரிபுதான்.  

வாசிச்ச இயம்  என்பது பேச்சுமொழித் தொடர்.

இது மருவி வாச்சியம் ஆயிற்று எனினும் ஏற்கலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

புதன், 27 மார்ச், 2024

கூட்டம், கோத்திரம். கொத்து சொல்லமைப்புகள்

 இந்தச் சொற்களின் பிறப்பு  பற்று இப்போது உங்களுடன் ஆய்வுசெய்வோம்.

இவற்றுள் மிக்க எளிதான வழியில் அறியத்தக்க சொல் கோத்திரம் என்பதுவே.

கோத்தல் என்ற தொழிற்பெயரின் தொடர்பு காட்டும் கோ என்பது  ஓர் ஏவல் வினை.

ஓரு வினை எச்சத்திலிருந்து முழுச்சொல்லை அமைத்துக்காட்டும் மரபு தமிழ் இலக்கணியரிடம் அருகியே உள்ளது எனினும்,  மற்ற மொழியாளரிடம் பெருவழக்கு  ஆகும்..  எடுத்துக்காட்டு: பாலிமொழி,  சங்கதம் முதலியவை.

கோத்து  என்பது வினை எச்சம்.

கோத்து + இரு+ அம் >  கோத்திரம்   ஆகிவிடும்.

இவ்வாறின்றி, தமிழ் முறைப்படி,  

கோத்தல் வினை:

கோ + திரம் >  கோத்திரம்.

திரம் என்பது திறம் என்ற முழுச்சொல்லின் இடையினப்பட்ட திரிபாகவோ, இரு+ அம்     என்பனவுடன்  துகரம் முன்னின்ற இணைப்பாகவோ கருதலாம். இப்படிக் கருதுவதால் அடிப்படை வேறுபாடு எதுவும் எழுவதில்லை. தமிழ்மொழியின் நெடிய வரலாற்றில் ரகர றகர வேறுபாடுகள் பின் முளைத்தவை என்பதே மொழிநூற் கருத்து ஆகும்,  எவ்வாறாயினும் திரம் திறம் என்பவை விகுதிகளே.

சமஸ்கிருதம் என்பது உள்ளூர்ப் பூசை மொழியே என்பதால்  கோத்திரம் என்பது தமிழென்றாலும் அன்றென்றாலும் ஒன்றே  ஆகும்.  சொல் வேறுபடுதல் இல்லை.  ஆய்வும் திசை பிறழ்வதில்லை. திரு அம்> திரம்  எனினும் அதுவே.

கொத்து என்பது பெரும்பாலும் மலர் போலும் அஃறிணைப் பொருட்களுக்கும் பயன்பெறவு உள்ள சொல்லாதலின்,  அதனைக் கோத்திரத்திற்கும் பயன்படுத்துவதில் தடை  எதுவும் இல்லை.  கொத்து என்பதும் கோத்திரம் என்றாகும்.

கொத்து + இரு + அம் >  கொத்திரம் >  கோத்திரம்.

இது வெறும் நீட்டலே.  கொ> கோ:    முதனிலை நீண்டு திரிதல்.

வா என்ற பொருள் அடிப்படையிலெழும் சொல்லில் கூட  வந்தான், வாருங்கள் என்று நெடிலும் குறிலுமாகிய நீட்டக் குறுக்கங்கள் வருகின்றன.   கோத்திரம் என்பது முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகிவிடுகிறது.

கூடு என்ற வினைச்சொல்லுக்கு நிகராக  துகர இறுதியை உடையதாய் கூகாரத்தில் தொடங்கு  சொல் ஒன்று இல்லை.  ஆனால்  கூதல் என்ற சொல் கூது என்ற அடியில் தோன்றியதே  ஆகும்.   அடிச்சொல் என்ற முறையில் கூடு> கூது என்பன இணையானவை ஆதலினாலே இவை பொருளொற்றுமை உடையவை..  இதன் பொருள் சேர்தல் என்பதே. கடுங்குளிரில் குழந்தையைத் தாய் இறுக அணைத்துக்கொள்வது ஒருவகைக் கூடுதலே.  ஈருயிர்கள் மிக்க நெருக்கமாகி ஒன்றன் வெப்பத்தை மற்றொன்று  மேற்கொள்ளுதல். குளிர் என்பது கூடுவதை விளைவிக்கிறது/ இதை உருவாக்குவது கூதல் அதாவது குளிர். இவ்வகையில் கூடுதலை வெகுவாகப் புரிவிப்பது கூதலே  ஆகும். கூத்திலும் கூடுதல் உள்ளது ஆதலின்,  கூத்து என்ற சொல் கூடுதல் அல்லது சேர்தல் குறிக்கும் சொல்லே.  பனிக்குளிர் காய்ச்சற் குளிர் இரண்டும் வேறுபடுத்தி அறியப்படுவது. ஊறு எனற்பாலவற்றுள் வேறானவை.

கூட்டம் என்பது ஒன்றாதல் ஆதலின்  கோத்திரம்  கொத்து என்பவற்றுக்குச் சமமாமவை ஆகும்.

குளிர் என்ற  சொல்லும் குள்> குட்டை என்று பிறப்பிப்பதே.  குளிர் உயிரினங்களை உடலைக் குறுக்கிக்கொள்ளச் செய்வதாகும்.  இவற்றில் தமிழ்ச் சொற்கள் தங்கள் பொருள் வளத்தையும் சொல்லாக்க உயர்வையும் காட்டுவனவாம்,

கோத்திரம் என்பது Gகோத்திரம் என்ற ஒலியால் வேறுபடுத்தல்  வெறும் மேற்பூச்சுத்தான்.  கொத்து இரு அம் என்பதன் நீட்சிதான். காட்சிப் படுத்தத் தக்க வேறுபாடு ஒன்றுமில்லை. வேறுவகையில் விளம்புதல் வேண்டின் மனிதக்கொத்து என்னலாம். 

கூட்டு>  கூத்து> கோத்து > கோத்திரம் எனினுமது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

திருத்தம்: 28032024  2226


செவ்வாய், 26 மார்ச், 2024

வனஜா படம்


 நம் வலைப்பூவின் பேராதரவாளர் திருமதி பாக்கியவதி வனஜா

மனமெங்கும் நிறைந்தது துர்க்க்கையம்மன் தான்.

சேவை அனைத்தும் சிறந்தது.
பார்வை எங்கும் கருணை.

குலதெய்வம்:  பகவதியம்மன்.
தந்தையின் இட்டதெய்வம்; ஸ்ரீ கிருஷ்ணன்
வணக்க தெய்வம்: அருள்மிகு துர்க்கை அம்மன்
ஐயப்ப சாமி

சகரமெய் இரண்டாமெழுத்துத் திரிதலும் பிறவும் : (ஆச், நாச், என)

சொற்படைப்பு:- சோ என்னும் சொல்.

 மொழிகள்,  எழுத்துத் திரிபுகளால் புதிய சொற்களைப் படைத்துக்கொள்கின்றன.  இந்தத் திரிபுகளை மொழியினுள் உள்ளிருத்திய மனித உறுப்பு வாய்,  வாயினுள் நாக்கு,  பல், உதடு, வெளிப்படும் காற்று, ஒலி எனப்பல உள்ளன. மூக்கும் உதவுகிறது.   தொண்டையும் உதவுகிறது. நெஞ்சுப் பாகமும் உதவுவதாகச் சொல்வர்.  முயற்சியும் முயற்சியின்மையுமே உருவேதும் அற்றவை.  ஒரு சொல்லைப் பிறப்பிப்பதற்கு இத்துணை உறுப்புகளா என்று வியப்பாக இருப்பதில்லை.

சோம்பல் இல்லாமல்  எப்போதும் செயல் பட்டுக்கொண்டிருக்கும் மனிதன் உலகிலே இல்லை என்னலாம்.  சோ என்ற தொடக்க எழுத்தைப் பயன்படுத்திய முதல் மனிதன் யாரென்று தெரியவில்லை.  அவனைப் பாராட்டலாம்.  சோ என்ற ஒலியை அவன் முயற்சிக் குறைவுக்குப் பயன்படுத்தினான்.  அதைக் கேட்ட பான்மையினரும்  ( பகு> பாகு > பாக்கு>  பாக்கு + இயம் > பாக்கியம் > பாக்கியம் உடையாரும்) அதை முயற்சிக்குறைவினைக் குறிப்பதாக உணர்ந்துகொண்டனர்.

பொருளுணர்தல்:  அடிச்சொல்லும் அதன் வளர்ச்சியும்

  ஒருவனே  சோ என்று பலுக்க, இன்னொருவன் ஒன்றும் உணர்ந்துகொள்ளவில்லை என்றால்,  அவ்வொலியினால் ஒன்றும் பயனில்லை ஆகிறது. உணரும்போதுதான்  சொல்லுக்குப் பொருள் உண்டாகிறது.   மொழி என்பது இத்தகு பல்லாயிரம் ஒலிகளின் கூட்டமைப்பு. அது எந்த வட்டாரத்தில் பெரிதும் ஒலிப்புறுகிறது என்பதை வைத்து,  ஒரு மொழி ஏற்பட்டுவிட்டதாக உணர்கிறோம். வட்டார எல்லைகளில் உள்ளவர்கள் சொற்களைப் பலுக்கும் நெறிகளை ஆய்ந்தால்  இரு நிலப்பகுதிகளில் நிலவும் ஒலியமைப்புகளின் கலவையைக் காண்கிறோம்.  வடக்கு, தெற்கு, கிழக்கு மேற்கு என்னும் திசைகளைக் கொண்டு  சொல் வடக்கத்திப் பாசையா,  தெற்கத்திப் பாசையா என்றெல்லாம் அடையாளம் செய்துகொள்கிறோம். இவைதவிர  இன்னும் மொழிச்சொற்களுக்குப் பல அடையாளங்கள் உள்ளன.

இத்தகைய கலவைகளை யாரும் திணிப்பதென்பது  ஒரு மிகக் குறைந்த நிகழ்வே. மக்கள் இயல்பாகவே திணிப்பின்றிச் சொற்களை வேண்டியபடி கையாண்டு பேசக் கூடியவர்கள்.  ஒன்றை முயற்சி அதிகமின்றி முடிக்கவேண்டும் என்பதே அவர்கள் சிந்திக்காமல் மேற்கொள்வதாகும். 

சோம்பல் என்பது  சோ என்ற அடியின் தொடக்கத்தைக் கொண்டு எழுந்தது.  சோ என்பதற்குத் தொடக்கத்தில் பொரு ளிருந்திருந்தாலும்,  இப்போது அதன் பொருள் தெளிவாக இல்லை.  அதாவது சோவென்பது செவிப்பட்டவுடன் என்ன சொல்லப்படுகிறது என்று தெரியவில்லை. வேறு பல மொழிகளில் பொருள் இருக்கலாம்,  எடுத்துக்காட்டாக,  ஆங்கிலத்தில் சோ என்றால்  அப்படி என்று பொருள்.  தமிழில் அது ஓர் அடிச்சொல், ஓர் எழுத்து என்ற அளவிலேதான் வருகிறது. சோர் என்று இன்னும் ஓர் ஒலியை இணைத்தால், பொருள் வந்துவிடுகிறது. சோர்தல் என்று பெயராக்கம் செய்து,  ஒரு முயற்சிக்குறைவினைக் குறித்தமையை உணர்ந்துகொள்கிறோம். சோம்பு என்பது ஒரு விதை குறிப்பதாகவும்,  ஓர் ஏவல்வினையாகவும் அறிந்துகொள்கிறோம். அல் என்று இன்னொரு விகுதியைச் சேர்த்து,  ஒரு முயற்சிக்குறையைக் குறிப்பதாக அறிகிறோம்.  இதையே ஒரு மலாய்க்காரனிடம் சொன்னால் அவன் என்ன என்று கேட்கிறான்.  இச்சொல் அவன் பேச்சில் இல்லை.  பேசு> பாசு> பாசை என்று,  அவன் "பாசை"யில் இல்லையாகின்றது.மொழியின்றி இயங்க முடிவதில்லை.

சோ என்ற அடிச்சொல்லின் பொருட்கள்: 

1  உடற்சோர்வைத் தருவது:  ( இரத்த நோய்.)

2  மாறுபடுவது.  இயல்பாய் இல்லாமை  (சோங்கண்)

3 நினைவைப் பாதிப்பது    (மறதி ) ( சோங்கு    )

4 மனிதரை நீங்கியவை : (  மரங்கள்  மற்ற நிலைத்திண)

5 மாறுதலான வெட்டுகள்

6 இயற்கையான வடிவில்  இல்லாமை  (சோறு)

7 நீர் இல்லாமை

8 சரிவு   அல்லது சாய்வு

9 தொழிலால் மதிப்பு இல்லாதவன்

10 மாயமந்திரங்களில் ஈடுபடுதல்

இவ்வாறு நிலையில் மாறுபாடு குறிக்கும் சொற்களை  அடிச்சொல்லிலிருந்து உண்டாக்கிக்கொள்ள இந்த  அடிச்சொல் ( சோ) பயன்படுகிறது.

சோம்பல் என்ற புதுச்சொல் உண்டாதல்

சோ என்ற ஓரெழுத்துச் சொல்லிலிருந்து  சோம்பல் என்று இன்னொரு சொல் அமைந்தது நம் நற்பேறு என்றே   கருதவேண்டும். இப்போது மொழி உள்ள நிலையில்  சோம் என்று ஒரு பகுதியையும் பல் என்றோரு பகுதியையும் கண்டு இது ஒரு கூட்டுச்சொல் என்னலாம்.  இதில் சோம் என்பது  சோரும் என்பதன் இடைக்குறையாகவும்  பல் என்பது வாயிலுள்ள பல் என்றும் விளக்கி  ஆடிக்கொண்டிருக்கும் ஒரு பல் என்றும் கூறலாம். ஒரு சொல்லில் என்ன பொருள் காண்பது என்பது தனிக்கலையாக இருக்கிறது.  சோரும் என்பதை சோர்ம் என்று குறுக்கிக் கவிதைக்குள் ஒரு சீராக்கிக்கொள்ளலாம்.  அப்போதும் பொருளறியத் தக்கதாக இருக்கவேண்டும்.  தமிழ் பயன்படுத்துவோர் யாருமே அறியமுடியாத பொருளாயின்  கருத்தறிவிப்பாகிய மொழியின் பயன் இலதாயிற்று என்று கொள்ளப்பட்டு அது வழுவாகிவிடும்.

திரிபுகள்

பல சொற்கள் ஆக்கப்பட்ட நிலையினின்று மாறிவிடுகின்றன.  அவற்றைத் திரிபு என்கிறோம்.   திரியாத சொல் இயற்சொல். திரிந்துவிட்டது  திரிசொல்.  சொல் விகாரப்பட்டது என்றும் சொல்வர்.  மிகுந்துவிட்டால் மிகாரம்>  விகாரம் என்று இதுவும் ஒரு திரிசொல்லே ஆனது. மிஞ்சு > விஞ்சு என்ற  திரிபுவிதியின்படி இது மெய்ப்பிக்கப்படுகிறது. முன் இல்லாத எழுத்தொன்று தோன்றியிருந்தால் அது "தோன்றல்"   எனப்படும்.  இங்கு மி என்பது வி  ஆகிவிட்டதால்  இது திரிதல் எனப்படும்,  ஒன்றோ பலவோ ஆன எழுத்துக்கள் இல்லாமற் போய்விட்டால் அது "கெடுதல்"  என்பர்.  

நாற்சேர் என்ற சொல்  நால் + சேர் என்ற இருசொற்கள் அமைந்த   ஆக்கம்.  இது நாச்சேர் என்று மாறிவிடுகிறது.  ஆசு   என்பது  ஆசு+ ஆர் + இ என்று இன்னும் இரு பகவுகளுடன் இணைந்து  ஆச்சாரி என்று வருங்கால்,  ஆசாரி என்றும் வரும்;  ஆச்சாரி என்றும் வரும்,  ஆசு என்பது புணர்ச்சியில் ஆச்சு என்று வந்தால் இது இரட்டிப்பு. இங்கு, சகர ஒற்றுக்கள் இரட்டித்தன.  ஆ+ ச் + ச்+ ஆர் + இ  என்று பிரித்தால்  இரண்டு ச் என்ற மெய்யொலிகள் சொல்லில் வந்துவிட்டன. ஒன்று முன்னரே சொல்லில் இருந்தது.  இன்னொன்று பின்னர் ஏற்பட்டது.  ஆதலின் மெய்யெழுத்து இரட்டித்தது. இது சொல் எவ்வாறு நம் காதைச் சென்று சேர்கையில் ஒலித்தது என்பது பற்றிய வரணனை. வீட்டின் முற்றத்தை நாற்புறமும் வீடுகள் இணைந்திருப்பது நாச்சேர் என்று சொல்லப்படுகிறது. 

மால் சரி  அம் என்ற மூன்று பகவுகள் இணைந்து  மாற்சரியம் என்று அமைந்து பின் மாச்சரியம் என்று ஆகின்றது.  மாலுதல் என்றால் மயங்குதல். எவ்வாறு ஒன்றை எதிர்கொள்வது என்ற தெளிவு இல்லாமல் நிலையின் வீழ்ச்சியை அடைதல் என்பது பொருள். இது பொறாமை என்றும் பொருள்படும்.  சொல்லின் இரண்டாமெழுத்துத்  திரிந்தது.

தச்சன் என்ற சொல்.

தைத்தல் என்பது இணைத்தல். நூலினால் தைத்தல் என்பது பின்னாளில் உண்டான பொருள்.  தைத்தல் :  தைத்து > தச்சு > தச்சன் என்று சொல் அமைந்தது.  தை> தச்சு> தச்சன் எனினுமாம்.  சு என்பதும் ஒரு விகுதி.  இது மாசு என்பதிலும் காசு என்பதிலும் உள்ளது.  இவ்விகுதி பெயரிலும் வினையிலும் வரும்.  வினையில்:  பேசு,  கூசு என்பவற்றில் அறிக. தை என்ற வினையில் சு சேர்ந்தது எனின் தைச்சு என்பது  தச்சு என்று ஐகாரம் குறுக்குற்று , சொல் அமைந்தது எனினும் இழுக்காது. தை என்ற அடியினின்று சொல் அமைந்தது என்ற அறிவைத் தெளிவித்தலே நோக்கமாதலின் எவ்வாறு இங்கு அறியினும் அதில் ஒப்புதல் ஏற்படும்.  எனவே தை என்பது த் என்பதனோடு இணைந்த  ஐகாரம் கெட்ட திரிபு ஆகும். ( த் +   )

மாடிவீடும் மச்சு வீடும்

மச்சு வீடு என்பது மாடியுள்ள வீடு.  இங்கு ஒவ்வொரு மாடியும் ஒரு மடிப்பாகிறது. மடி> மாடி. இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.  மடிச்சு வீடு கட்டியதனால் இச்சொல்லால் அமைந்து பின்னர் டிகரமாகிய கடின ஒலி கெட்டு, மச்சு  என்று ஆனது.  கடின ஒலிகள் விலகி அமைதலை,  கடைஞ்சி என்பது கஞ்சி என்றானதிலிருந்து அறியலாம்.  கடைந்தது அல்லது "கடைஞ்சது" கஞ்சி. [ க(டை)ஞ்சி ]  டை என்னும் கடின ஒலி (வல்லொலி) ஒழிந்தது. கரைஞ்சி என்பதும் இடைக்குறைந்து கஞ்சி என்றே  முடிதலால்  இச்சொல் இருபிறப்பி ஆகும்.  கடை, கரை என்பன வினைச்சொற்கள்.  சி என்பது விகுதி.

இஞ்சி என்ற சொல்:

இஞ்சி என்ற சொல்,  இன்+ சி என்பது தவறு,  அதில் இனிமை எதுவுமில்லை. இடை இடையே சிறிதாகி அதன் உடற்பகுதி அமைவதால், இடை+சி > இடைஞ்சி என்றாகி பின் கடின ஒலியாகிய டை குறைந்து அல்லது கெட்டு, இஞ்சி என்னும் சொல் அமைந்தது. சி என்பது ஒரு விகுதியும் சிறுத்தல் என்ற குறிப்பும் ஆகும். இது நன்கு அமைக்கப்பட்ட சொல். காரணம் சி என்ற சிறுத்தல் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதுடன் ஒரு விகுதியுமாய் ஆனது.

மீண்டும் சந்திப்போம்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர் 

சில திருத்தங்கள் செய்யப்பட்டன }

( தட்டச்சுப்பிறழ்வுகள்) 27032024        }

குறிப்பு: எழுத்துக்கள் தாமே மாறிக்கொள்கின்றன.

கவனம்.  மாற்றங்கள் போல் தோன்றினால் பின்னூட்டம்

இட்டுத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 27032024 1613

Please do not enter compose mode  esp  with your mouse.




திங்கள், 25 மார்ச், 2024

Outperforming : the Singapore Dollar

 https://theindependent.sg/singdollars-outperformance-of-asian-currencies-may-end-soon-bloomberg-report/?utm_source=izooto&utm_medium=news_hub&utm_campaign=Singdollar%E2%80%99s%20outperformance%20of%20Asian%20currencies%20may%20end%20soon%E2%80%94Bloomberg%20report%20-%20Singapore%20News&utm_content=article_click#google_vignette


Singdollar’s outperformance of Asian currencies may end soon—Bloomberg report

ஞாயிறு, 24 மார்ச், 2024

கச்சேரி.

 கச்சேரி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களின் இடைக்குறைச் சொல் ஆகும். இவற்றில் ஒன்றினை முன்னரே இங்கு விளக்கியுள்ளோம்.  நாலாயிரத்துக்கும் மேற்பட்ட இடுகைகள் இங்கு இருப்பதால் இவற்றைக் கண்டுபிடிப்பதில் தடைகள் சில இருக்கலாம்.  உதவிக்கு இங்கு இதனை எளிதில் அடையக் குறிப்பினைத் தருவோம்.

கச்சேரி என்ற சொல்லுக்குரிய முழுச்சொற்களை இங்குப் பட்டியலிடுவோம்:

கலைச்சேரி:

வேலை முடிந்தவுடன் ஊழியர்கள்  ஒன்றாகக் கலைந்து செல்வது எங்கும் நடைபெறுவதொன்று.  இவர்கள் செல்லும் வண்டிகளில் ஒன்றாக உடன்பயணம் செய்வதும் அடிக்கடி நிகழ்வதே.  கலையும்போது ஒன்றாகச் சேர்ந்து வெளிப்படுதல் என்ற பொருளில் "கச்சேரி" என்ற குறைச்சொல்லின் நிறைவடிவம் அமைந்தது.


கலச்சேரி:-   >  கச்சேரி.

கலைதல் -  கலைந்து தம்தம் இடம் அல்லது இல் நோக்கிச் செல்லுதல். அப்போது கலந்து = வெவ்வேறு இருக்கைகளிலிருந்து வந்து,   சேர் இ >  சேர்ந்தவாறு செல்லுதல். 

வினைச்சொல்: கலைதல் மற்றும் கலத்தல்.

கலைசேரி>  க+ சேரி >  கச்சேரி  ( லை  குறைந்தது)

கல சேரி >  கலச்சேரி >  கச்சேரி  ( ல குறைந்தது )

கலசேரி  >  க(ல)ச்சேரி மற்றும் க(தை)ச்சேரி

பல வித இசைப்பாடல்களும் கலந்து வரிசையாகப் பாடப்பெறும் இடம்.

வினைச்சொல்:  கலத்தல்.

கதைச்சேரி >  கச்சேரி  எனினுமாம்.  பல கதைகளும் சொல்லும் மேடை.

இரு பெயர்ச்சொற்கள்  ஒட்டு.


கருமச்சேரி

கருமச்சேரி > ( கருச்சேரி) >  கச்சேரி.   அலுவலகம்,  வழக்குமன்றம்.

மேலும் காண்க:  https://sivamaalaa.blogspot.com/2019/03/blog-post_43.html

பல முதன்மைக் கருமங்கள் நிறைவேறும் இடம் என்ற கருத்திலோ,  அல்லது தம் முன் கருமவினையின் காரணமாகவோ இங்கு போக நேர்ந்தது என்ற நினைப்பின் காரணமாகவோ இவ் விடைக்குறை ஏற்பட்டிருக்கலாம்.  தமிழ்மக்கள் முன்னாட்களில் காவல்நிலையத்திற்குச் செல்ல விருப்பம் இல்லாதவர்கள்.

கதம் என்பது ஒலி.  இவ்வொலிகள் எழுப்பப்படும் இடமும் கச்சேரி ஆகலாம்.

கத்து >  கது > கதம்.  சேரி என்பதிணைந்து கதச்சேரி >  கச்சேரி ஆகும்.


மேலும் வாசிக்க:  சொடுக்குக

https://sivamaalaa.blogspot.com/2019/03/blog-post_43.html

https://sivamaalaa.blogspot.com/2020/08/thii-and-day.html


மெய்ப்பு:  பின்னர்






வெள்ளி, 22 மார்ச், 2024

இந்து என்ற சொல்.

 வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வந்த போது அவனுக்கு இந்திய மொழிகளைப் பற்றி ஏதும் தெரிந்திருந்தது என்று நினைக்கக் காரணம் எதுவுமில்லை. நீங்கள் புதியவராக ஒரு புதுநாட்டுக்குப் போய்ச் சேர்ந்தவுடன் அங்குள்ள மொழியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்துவிடுமா? தெரியாத நிலையில் கற்பனையின் மூலம் கதையைக் கட்டிக்கொண்டு தெரிந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறான். மொழிகளை அறிந்துவிட்டதாக அவன் எழுதிவைத்தவை,  கற்பனை பலவற்றை உள்ளடக்கியவையே ஆகும்,  தமிழ்நாட்டு மக்கள்  கெட்டிக்காரர்கள். " எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்,  பாடியவன் பாட்டைக் கெடுத்தான்" என்ற அவர்களின் அறிவுரை,  உண்மையில் முதலில் வெள்ளைக் காரனுக்கே பொருந்துவதாகும்.

ஆயினும்  இது அவன் சொல்லிய அனைத்துக்கும் பொருந்துவதாகாது.  சில கருத்துகளிலே அவன் பிழைபட்டான்.

ஆரியன் என்ற இனத்தவன் உள்ளே வந்தான் என்பதும்,  படை எடுத்து வந்து வெற்றிகொண்டான் என்பதும் இத்தகைய ஆதாரமற்ற கருத்துகளே  ஆகும். இதை அவன் கூறக் காரணம் அவன் செய்த பொருந்தாத சொல்லாய்வு. நாட்டுக்குள் பலர் வந்திருக்கக் கூடும்.  ஆனால் அவர்கள் ஆரியர் என்போர் அல்லர்.   ஆரியர் என்பது ஆர் விகுதி பெறுவதற்குரிய கற்றோர் என்று கருதினால் அது சரி.  படித்தவர்கள்  அறிஞர்கள் பலர் அப்போதும் இருந்தனர்.  ஆரியர்கள்  - இது இனப்பெயரன்று. இயம் என்பது தமிழில் வாத்தியத்தையும்,  ஆரியம் என்பது நிறைவான வாத்தியத்தையும் குறித்த தமிழ்ச்சொற்கள். .ஆர்தல் - நிறைதல். ஆர் என்ற சொல் தமிழில் இருந்ததையும் அவன் அறிந்திருக்கவில்லை. பார்ப்பான் என்பது பூசாரிகள், சோதிடம் பார்ப்போர் என்ற தொழிலரைக் குறிக்கும் சொல்.  அஃது ஒரு மக்கள் தொகுதியைக் குறிக்கும் சொல்லாகப் பின்னர் பொருண்மை பெற்றிருக்கக் கூடும்.  சொல்லுக்கு இயற்கையில் பொருள் ஒன்றுமில்லை.  சொல் என்பது ஒலிகளின் கூட்டு என்பதே உண்மை.  அதற்குப் பொருள் பயன்பாட்டின் காரணமாக ஏற்படுகிறது. ஒரே ஒலியுள்ள சொற்கள் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பொருளைத் தரும்.  மா என்ற சொல் பல்பொருளொருசொல்.  அதற்குத் தமிழில் விலங்கு என்ற பொருளும் உள்ளது.  சீனமொழியில் குதிரை என்ற பொருளும் உள்ளது.  வேறு மொழிகளில் அவ்வொலிக்கு வேறு பொருண்மைகள் இருக்கலாம்,

மா மா என்று இரண்டு முறை சொன்னால் மாமனைக் குறிக்கலாம். எழுதுகையில் இது மாமா என்று எழுதப்படும்.

" இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை" -  இந்து  என்பது சைவநூலில் வரும் பாட்டில் வரும் சொல் =  .  இதற்கு நிலா என்று பொருள். இளம்பிறை என்பது அதன் வளராத பகுதி.  இதற்குத் திருடன் என்று பொருளில்லை.  ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு பொருளிருக்கும். 

இந்து என்பதற்குத் தமிழில் உள்ள பொருள்:

1  சந்திரன்

2 கற்பூர மரம்

3 சிந்துநதி

4 இந்து மதத்தான்

5 ஒரு விடம்  ( விஷம்)  கவுரிபாசாணம்

6  எட்டிமரம்   

7 தாமரைப் பூ  ( இந்து கமலம் எனப்படும்)

8 ஒரு காந்தக் கல்.  ( இந்து காந்தம்)

9 சிவன் ( இந்துசிகாமணி).  இந்துவாகிய சிகையின் அணிகலன் உடையோன்


10 இன் து அல்லது தூ.    இனிய துய்யதானது அல்லது தூயது.

11  இம் து  - இம்சையைத்  துறந்தவன். முனைவர் சிவப்பிருந்தா தேவி   எம்மிடம் தெரிவித்தது.


இவ்வாறு பல் பொருள் தமிழில் உள்ளன. இவற்றை உணர்த்துவது இச்சொல்.

இக் கூட்டுச்சொற்களில் சிலவற்றில் வல்லெழுத்து  மிக்குவரவேண்டும் என்பார் உளர்.  எ-டு: இந்துக்கமலம். 



அறிக மகிழ்க

மெய்ப்பு பின்பு

புதன், 20 மார்ச், 2024

சக்கரம், சக்கரதாரி, சக்கராயுதம், சக்கரவர்த்தி.

 வண்டியே இல்லாத காலம் ஒன்று இருந்தது.  அந்தக் காலத்திலும் தமிழும் தமிழனும் இருந்தமை  வரலாறு  ஆகும்.  "கல்தோன்றி  மண்தோன்றா"  என்ற தொடரை,  கல்லையும் மண்ணையும் கடந்து   வீடு மாடு வண்டி எல்லாவற்றையும் மேற்கொண்டு வாழ்வு முன்னேற்ற மடைந்த கால ஓட்டத்தையும் உள்ளடக்கிய மொத்த வளர்ச்சியையும் குறித்ததாகவே   கொள்ளவேண்டும்.    கற்பனை செய்தாலே கண்டுணர முடிந்த,  எல்லாம் எழுத்துக்களிலே அடங்கிவிடாத நீண்ட வரலாறு உடையோர் தமிழர் என்பதைச் சிந்தித்தே உணர்தல் கூடும்.  சொற்களை ஆய்வு செய்கையில்  இதனை மறந்து ஆய்வில் தொய்வுற்றுவிடாத திண்மை ஆய்வாளனின் பான்மையில் நிற்றல் வேண்டும்.  தமிழரின் வரலாறு பற்றிச் சொற்களின் மூலம் சில தரவுகளை நாம் உணர முற்படுகையில், ஏனை மொழிகளையும் மொழியினரையும் நாம் குறைத்து மதிப்பிடுவதாகப் பொருள்படாது என்பதை முன்பதிவு செய்துகொள்ளவேண்டும்.

சக்கரம் இல்லாதது வண்டி என்று நாம் சொல்வதில்லை.  சக்கரம் இல்லாத காலத்தில் ஒரு பொதிபெட்டி  இழுத்துச்சொல்லப்படவேண்டும்.  அல்லாது உள்ளிருக்கும் பொருளோடு தூக்கிச்செல்லப்படவேண்டும். அல்லது இறக்கை கட்டிப் பறந்து செல்லுமிடத்தைக் குறுகவேண்டும்.  பண்டையர் இவை எல்லா முறைகளையும் ஏற்புழிப் பயன்படுத்தியிருப்பர்.  கயிறு கட்டி இழுத்தும் சென்றிருப்பர்.  இழுக்குங்கால் பெட்டியின் கீழ் மரச்சட்டம் சறுக்கிச் செல்லும். இவ்வாறு சறுக்குங்கால்  அச்சட்டம் தேய்ந்து அதிக நாள் நிலைக்காது இதை மாற்றவே உருளைகள் கண்டுபிடிக்கப் பட்டன. சறுக்கும்போது தேய்மானத்தைக் குறைக்க,  சக்கரம் கண்டுபிடித்தனர்.  இதைத் தமிழ்மொழியே நன்கு  தெரிவிக்கிறது.

சறுக்கு + அரு+ அம். 

சக்கரம் சரிவளைவாக இருந்தாலன்றி உருளாது. எவ்வளவு காலத்துக்குப் பின் உருட்சி கைவரப் பெற்றனர் என்பது தெரியவில்லை. சக்கரம் சுற்றவும் கழன்று விடாமல் இருக்கவும் இரும்புப் பாகங்கள்  தேவை.   உருளாத சக்கரங்களெப்போது உருண்டன?

உருளைக்கு முந்தியது சறுக்கரம்.

திணறுதல் வேண்டாம்.

அருகு -  இது அண்மை குறிக்கிறது.   அருகில் :  இட அண்மை தெரிவிக்கிறது. அருகு என்பதில் கு என்பது வினையாக்க விகுதி.

அருகுதல்: குறைதல்.  இங்கு தொலைவு குறைதல். 

அருகுதல் என்பது கூடுதலையும் குறிக்குமாதலால்,  இடன் நோக்கிப் பொருள்கொள்ளவேண்டும் என்பதை உணர்க.

எடுத்துக்காட்டு: இறைவன் பற்றனை நோக்கி அருகில் வருகிறான்.  அப்போது அவனுக்கும் பற்றனுக்கும் உள்ள தொலைவு குறைகிறது.  அவனுக்கு அவன் வழங்கும் அருள் கூடுகிறது. உங்கள் சம்பளத்தைக் குறைத்துவிட்டால், உங்கள் பொருளியல் நெருக்கடி கூடிவிடுகிறது.  இதைப்போல்தான் சொற்களும் பொருண்மையில் கூடுதல் குறைவு காட்டுகின்றன. உலகம் இது. 

சறுக்குத் தேய்மானத்தைக் குறைத்து  போமிடத்துக்கு அருகில் செல்லும்  அமைப்பு  என்று இந்த மூன்று துண்டுக்  கிளவிகளையும் வாக்கியமாக்கி இந்த வரலாற்றை உணர்ந்துகொள்ளலாம்.

சறுக்கரம் என்பது  று என்பது குன்றி அல்லது தொக்கி நிற்க,  சக்கரம் என்றானது.

சகடு என்றால் வண்டி,  சறுகி  ( சறுக்கி)  அடுத்துச் சென்று சேர்வது சறுகு+ அடு> சறுகடு >  சகடு  ஆகி,  வண்டி என்ற பொருளில் வழங்கிற்று.

சக்கரம், சகடு இன்னும் சில  சகரத்தில் தொடங்கும் சொற்கள்.  று என்பது குன்றிற்று,  இது தமிழாக்க உத்தி. இடைக்குறை ஆகும்.  கவிதையில் எதுகை மோனைக்காகக் குறைத்து இசையொடும் புணர்ப்பது கவிஞனின் உரிமை. poetical license.  பலமொழிகளிலும் உண்டு.  உங்கள் அப்பன் என்பதை ங்கொப்பன் என்பதும் குறுக்கம். ஆனால் பேச்சுக் குறுக்கம்.  எங்க ஆயி என்பதை     ஙாயி என்பதும் காண்க.

வண்டி என்ற சொல் வள் என்ற அடிச்சொல்லிலிருந்து வருகிறது.   வள்> வண். ஒப்பிட இன்னொரு சொல்: பள்> பள்ளு   ( பாட்டு).  பள் > பண்  ( பொருள் பாட்டு).

வள்> வண்> வண்+ தி>  வண்டி.    

வள் என்ற வளைவு குறிக்கும் அடிச்சொல்  வண் என்று திரியும்.  வள் என்பதற்கு வேறு பொருண்மைகளும் உள.  அவை ஈண்டு பொருட்டொடர்பு இல்லாதவை.

இந்தச் சொல்.  வளைவான உருளைகள் பொருத்தப்பட்ட செல்திறப் பளுவேந்திப் பெட்டியைக் குறிக்கிறது.  ஆகவே இது சக்கரம் கண்டுபிடித்த காலத்துக்குரிய சொல்.  இந்தப் பளு என்பது பொருட்பளு, மனிதப்பளு இரண்டினையும்  அடக்குவதாகும்.  வண்டி சுமக்கும் எதுவும் பளுவாகும்.

சக்கரம் உடைய வண்டி,  நடப்பதினும்   விரைவு உடையது..  இறைவனும் பற்றனுக்கு ( பக்தனுக்கு)த்  துன்பம் நேர்கையில் விரைந்து வருவான்.  இந்த நம்பிக்கையையும் துணிவையும் படிபலிக்கும் வண்ணமாக இறைவனுக்குச் சக்கரம் நாட்டி  அவனைச் சக்கரதாரி என்றனர்.  அவன் விழைந்த காலை அச்சக்கரம் வந்துவிடும்.  அதைத் தரித்துக்கொண்டு,  அவன் பற்றனுக்கு உதவுவான், உதவினான், உதவிக்கொண்டிருக்கிறான்.  ஆகவே அவன் சக்கரதாரி  அல்லது சக்கரபாணி  ஆயினான்.   அவனின் கருவிகளில் சக்கரம் ஒன்றானது.  இது  சக்கரமும் ஓர் மனித நாகரிகத்தில் ஒரு முக்கிய ஆயுதம் ஆனதைத் தெரியக் காட்டுகிறது.  இது மனிதப் பரிணாமவளர்ச்சியைக் காட்டுகிறது.

தமிழில் இறைவன் என்ற சொல் மன்னனையும் குறித்தது.  மன்னனும் தெய்வத்திற்கு அடுத்து மதிக்கப்பட்டான். இறைவன் கொல்லும் அதிகாரம் உடையான் அதுபோல் மன்னனும் ஒருப்படாமல் நின்றோரை ஒறுத்தான்.  சக்கரத்தை அவனும் வருவித்துக்கொண்டதால், சக்கரவருத்தி  ஆனான்.  எடுத்துக்காட்டு:  அசோக சக்கரவர்த்தி.   வருத்தி > வர்த்தி.   வருகிறான், வர்றான் என்பதுபோலும் குறுக்கமே. வரு> வர். மன்னனே மற்றோரினும் வலியோன் என்பதை இது காட்டுகிறது.

இச்சொற்கள் வீட்டுமொழியிலும் பூசைமொழியிலும் வழங்கி மொழிவளம் பெருக வகைசெய்தன.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்.

செவ்வாய், 19 மார்ச், 2024

இலம்போதரசுந்தர வினாயகன்

 விநாயகன் என்று தான் இத் தெய்வப்பெயரை எழுதுவர்.  ஆனால் இன்னொரு இனிய பொருளையும் யாம் கூறுவதுண்டு:

வினை+ ஆயகன் >  

இந்தச் சொற்புணர்வில் வினை என்ற சொல்லிறுதி  ஐகாரம் கெடும்.   ஆகவே:

வின் + ஆய் + அகன்,

>  வினாயகன்.   ( பொருள்:  வினைகளை ஆய்பவன் ).

அகன் -  அகத்திலிருப்போன்.

வினை என்பதில் ஐ விகுதி விலக்குதல் பாணனாகிய. பாணினி கண்ட குறுக்க முறைதான்.

இலம் -  வறுமை.   ( இலம்பாடு -  வறுமைத்துன்பம்).

போது -  காலம்,

அற என்பது அர என்று திரிந்தது.

இலம்போதர என்பதற்கு இன்னொரு நற்பொருள் பெற்றோம்.


சுந்தரம் என்பது பலவாறு அறியத்தக்கது,

உந்து + அரு + அம் > உந்தரம்>  சுந்தரம்.

அகர வருக்கம்  சகர வருக்கமாகும்.  உகரம் சுகரமாகும்.

ஆகவே உந்து என்பது சுந்து என்று ஆயிற்று.

இச்சொல்லுக்கு எப்போதும் கூறப்படும் பொருள் அழகு என்பது.

சிந்தூரம் என்பதும் சிந்துரம்> சுந்தரம் என்றாகும் என்பர்.

சுவம் என்பது சொந்தம்.  சொ(ந்தம்)  + அம் >  சொவம்>  சுவம்.

சுவம் தரம் >  சுவந்தரம்,  இது இடைக்குறைந்து சுந்தரம் ஆகும்.

சொந்தம் தந்தது,  பிறன்பொருள் அல்லாதது என்று பொருள்.

அம் என்றாலே  அழகு என்பதுதான் பொருள்.  அமைப்பு என்பதன் அடிச்சொல்.

அம் - அழகு

(அம் -  சீனமொழியில் பாட்டி!)  மிகப்பணிவான சொல்.  தைவானுக்குப் போய் ஒரு பாட்டியம்மாவை பார்த்து அம் என்று அழையுங்கள்.  

உலக மொழிகளில் நாம் செல்லவேண்டாம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.

ஞாயிறு, 17 மார்ச், 2024

இரேகை ரேகை தமிழ்

 ரேகை என்ற சொல் தமிழென்பதை வெளியிட்டோம்.  இந்த வலைப்பூவைத் தொடங்குமுன்பிருந்தே இது எம்மால் சொல்லப்பட்டதுதான்.

இச்சொல்லின்  இரு,  ஏகு  ஐ என்ற மூன்று பகவுகள் உள்ளன. ஒரு ரேகை என்பது ஓரிடத்திலிருந்து இன்னும் ஓர் இடத்திற்குச் செல்லும் கோடுதான்.  வேறு எதுவும் இந்தச் சொல்லில் மந்திர தந்திரங்கள் இல்லை.

ஏகுதல் என்பது எப்போதாவது நாம் நூலில்  காணும் சொல்தான். இதைப் பிரித்தாலே இதன் பொருள் தெளிவாகிவிடும்.  ஏ  -  எங்காவது,  கு - சென்று  அவ்விடத்தை அடைவது  :  என்பதே பொருள்.  எளியதான ஓரெழுத்து மொழியில் தொடங்கிப் பின்னர் பல எழுத்துக்களும் அசைகளும் உள்ள சொற்களைத் தானே உருவாக்கிக்கொண்டு  அமைவுற்ற மொழியே  தமிழ்.  சீனம்போன்ற உலகின் மொழிகள் இன்னும் ஓரசை மொழிகளாகவே  ( monosyllabic ) உள்ளன.  கா என்பது சீன மொழியில் ஓர் ஓரசைச் சொல்.  இன்னும் நேரசைச் சொல்லாகவே உள்ளது. இதன்பொருள் "கடி(த்தல்)"  என்பது.  ஆனால் தமிழில் கடி என்ற சொல் உண்டாகி,  நிரையசைச் சொல்லாக வழங்கிவருகிறது.  தொடக்க காலத்தில் தமிழிலும் கா என்றே இருந்திருக்கும்.  ஆனால் இது தமிழில் கடி என்ற ஈரெழுத்துச் சொல்லாகிவிட்டது.  இது மொழி அடைந்த முன்னேற்றமாகும்.  ஏகுதல் என்றால் செல்லுதல் என்று பொருள் என்பதைச் சுவையுடன் உணர்ந்திருப்பீர்கள். இது மொழிநூல் சார் கருத்து ஆதலின்,  இதை விரிக்காமல் விடுப்போம்.

எழுதுகோலை வைத்த இடத்திலே இருந்து மேலும் இழுக்காவிட்டால், கோடு என்பது உண்டாக மாட்டாது.  அப்போது வெறும் ஒற்றைப்  புள்ளியையே வைத்துள்ளோம்.  இழுத்தாலே அது கோடு ஆகிறது.  இழுப்பது கோடு. இழு - இலு > இல்.  இல் என்பதும் கோடு அல்லது பலபுள்ளிகளின் இணைப்பு ஆகும், அப்போது அது எல்லை குறிப்பதாக ஆகிவிடவும் கூடும்.  மிக்கச் சரியான முறையில் இல் என்பது இடம், வீடு, ஓர் உருபு என்று பல பொருள் உணர்த்தும்.  ஆகவே இழு என்பதும் இல் என்பதும் தொடர்புடைய சொற்கள் என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.  எது முதல் என்பதைக் கருதினால்,  இது இல்> இலு> இழு என்றாகும்,

கோடிழுக்கும் போது,  எழுதுகோலின் முள்முனையும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்தில் போய் முடிவதால்,  ஏ- கு என்பது சரியாக அமைந்த தமிழ்ச்சொல் ஆகும்.  தொடக்கம், கோடிழுப்புச் செல்லுகை, முடிவு என்பவையே இரேகை என்பதன் உள்ளடக்கம் ஆகும்.

இரேகை என்று அமைந்தபின்  இச்சொல் தன் இகரத்தை இழந்து,  ரேகை என்று தலைவெட்டுண்ட சொல்லாகி வழங்கி வருவதலால், இதனைப் பலரால் தமிழ்ச்சொல் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இங்கு கூறினவை மூலமாக இதை உணர்ந்து போதிப்பீராக.

இச்சொல் வேறு மொழிகளுக்கும் சென்று வழங்குகிறது.  ரேகா என்ற பெண்ணின் பெயரும் இதிலிருந்து பிறந்த சொல்தான். இந்தியாவிலும் பிறவிடங்களிலும் இச்சொல் பரவிச் சேவை செய்துவருகிறது. அடிப்படைப் பொருள் கோடுதான்.

தமிழில் இருந்தால் தமிழன் தொழுகையில் வழங்கிய பூசுர மொழியிலும் அது இருக்கவே செய்யும்.  தமிழனின் அரசுகள் இமயம் வரை விரிந்து ஆசியாவில் பல நாடுகட்கும் பரவியதால் இது போலும் சொற்கள் எங்கும் காணப்படாமல் இருக்கவியலாது.

சொற்கள் ஆகார விகுதி பெற்று முடிவதும் தமிழ் மரபுதான்.  நிலா, பலா (பல சுளைகள் உள்ளது),  உலா,  சுறா எனப்பல சொற்கள் உண்டு.  கூசா என்பது தமிழ்,  கூம்பிய வாய்ப்பகுதி உடையது என்று பொருள், ஆனால் பின்னர்  சா  என்பது ஜா ஆகிக் கூஜா ஆனது.  வடசொற் கிளவி  வடவெழுத்து ஒரீஇ,  எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும் என்று தொல்காப்பியம் கூறும்.

எவனொருவன் சாவு தொடர்பான தொழிலை மேற்கொள்ளுகிறானோ அவனுக்கே யாக்கை நிலையாமை, இறைவன் செயல் பற்றிய எண்ணங்கள் உருவாகி,  தெய்வநெறிகள் பற்றிய கருத்துருவாக்கம் ஏற்படும். அவ்வாய்ப்பு அவனுக்கே அதிகம். பிறருக்கு ஒரோவழி ஏற்படலாம்  இக்கருத்துகளின் கோவையே சா+ திறம்>  சாத்திரம்>  சாஸ்திரம் ஆயிற்று. சா= சாவு பற்றியது. திறம் =  திறத்தை விளக்குவது.  சாத்திரம் என்பது தொடக்கத்தில் சாவு அல்லது இறைவன் பற்றி விளக்கி,  பின்னர் பிற பொருளும் கூறித் தெளிவாக்கிய நூல் அல்லது அறிவுநூல்.

சமஸ்கிருதம் என்ற சொல் சமம், கதம் என்ற இருசொற்களின் கோவையே. இதைப் பல்வேறு வகைகளில் அறிஞர்கள் ஆய்வு செய்து,  வேறுபட்ட பொருண்மைகளைத் தெரிவித்துள்ளனர்.  சமம் என்றால் ஒப்புமை. கதம் என்றால் ஒலி. கத்து> கது > கதம்.  கத்து கதறு என்று கத் என்ற அடியில் வந்த சொற்கள் பலவும் தமிழிலுள்ளவை.  சமமான் ஒலிகளால் - அதாவது தமிழுக்குச் சமதையான ஒலிகளால் ஆனதே சமஸ்கிருதம் ஆகும்.  கதம் என்பது கிருதம் என்று திரியும்.  சம கதம் > சமக் கிருதம் > சமஸ்கிருதம்,  மற்றும் சங்கதம் என்றும் இந்தத் தொழுகை மொழி குறிப்புறும்.  ரேகை என்ற தலைக்குறைச் சொல் சமஸ்கிருதம் என்ற தொழுகை மொழியிலும் உள்ளது கண்டுகொள்க.

சமஸ்கிருதம் என்பதற்கு வேறு பொருள் கூறினோரும் பலர்.

கமில் சுவலெபெல் ஒப்புக்கொண்டதுபோல் தமிழ் என்பது  தம் இல் மொழி> தமிழ் மொழி என்பது சரியானால்,  அதற்குச் சமமான ஒலிகளைக் கொண்டு இயங்குவது  சம கதம்>  சமஸ்கிருதம் என்றாகும்.  சமஸ்கிருதம் என்ற சொல்லின் பொருள் இங்கு சிறந்து ஏற்புடையதாகிறது. ஒலித் திருத்தத்தின் மூலமே தமிழ் வேறுபடுகிறது.  தொல்காப்பியர் ஏற்காத ஒலிகள் வடவெழுத்தொலிகள்.  வடம்  என்றால்: பலகை என்று பொருள்.  வீடுகளுக்கு  வெளியே  மரப்பலகையில் அமர்ந்துகொண்டு ஓதினமையால்  அது வடமொழி என்று பெயர்பெற்றது என்றும் சொல்லலாம்.  சொற்கள் கயிறுபோல் நீண்டுசென்றதால் அது பெயராயிற்று என்றும் சொல்லலாம்.  வட என்றால் வடக்குத் திசை என்பது மட்டும் பொருளன்று.  இம்மொழி தென்னாட்டில் உருவாக்கப் பட்டு வடதிசையில் தமிழர்களால் பரப்பப்பட்டதென்றும் கூறுவதுண்டு. பழங்காலப் பூசாரிமார் தொழுகை மொழியாகப் பயன்படுத்தினர் இதனை.

வீட்டுக்கு வெளியில் மரப்பலகைகளில் இருந்தபடி பாடியவர்கள் பாணர்களே. அவர்களும் இம்மொழியில் அறிஞர்கள்.  அவர்களின் ஒருவரான பாணினியே இம்மொழிக்கு இலக்கணம் வகுத்தான்.  பாண் என்ற அடிச்சொல்லைக் காண்க. இம்மொழியில் முதற்கவியாகிய வால்மிகி இத்தகைமையரே.

இதை இந்தோ ஐரோப்பியம் என்று கூறியதானது, பாணர், வேடர் முதலானவர்களுக்குச் சேரவேண்டிய பெருமையை மறுத்துரைத்த களவு ஆகும். 

இது சந்தாசா என்றும் பெயர் பெற்றது.  சந்த அசைகள் உள்ள மொழி என்பது பொருள். பாட்டுக்கு உரிய மொழி.  பாட்டுப் பாடியவர்கள் பெரும்பாலும் பாணர்.  பிறரும் இருந்தனர். இவை முன்னர் யாம் விளக்கியதுதான்.  தம் தம்> சந்தம்,  தகர சகரப் போலி. பூசையில் பாடும் மொழி. 

எழுத்து ஒவ்வொன்றுக்கும் பொருள் சொல்லக்கூடிய திறன் தமிழுக்கு உள்ளது. பிறமொழிகட்கு இல்லை என்பதன்று வாதம், உணர்க. அவ்வம்மொழியையும் ஆராய்ந்து சொல்லவேண்டும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


சனி, 16 மார்ச், 2024

பூர்தல், பூருதல் வினையாக்கம் , விக்கிரகம்.

 பூர்த்தி என்ற சொல் வழக்கில் உள்ளது.  ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து அலுவலகத்தில் கொடு  என்று பேச்சு வாக்கியங்களில் வரும்,   பூர்(-தல்) என்ற ஏவல் வினையுடன் தி என்ற தொழிற்பெயர் விகுதி வருவதே  பூர்த்தி என்ற சொல். வினையில் மிகுந்து அதை நீட்டமாக்கிப் பெயராக்குவதே விகுதி   .  மிகுதி> விகுதி,  இதுபோல் திரிந்த இன்னொரு சொல்:  மிஞ்சு> விஞ்சு என்பதாகும்,  விகுதி என்பது  சொல் மிகுதலே.. விகுதி என்பது காரண இடுகுறிபோன்றது,  இதற்குக் காரணம் முன்னில் மிகுதலா பின்னில் மிகுதலா என்பது பின்னில்தான் என்று வருவிக்கவேண்டியுள்ளது.  விகுதி என்பது  பூசை மொழியில் விக்குருதி என்று வரும். (  விக்ருதி).  இதை மிக்கு + உரு + தி என்று உணர்ந்தால்,   மிக்குருதி, விக்குருதி என்று சிந்தனை பெறலாகும்.  உருவானது மிகுந்து வருவது.

அடிப்படைக் கல்லின் மிக்கு  ( மிகுந்து)   அழகுடன் செதுக்குற்று பீடத்தில் அமர்த்தப்பட்டிருப்பதே  மிக்கு+ இரு + அகம்   >  மிக்கிரகம் >  விக்கிரகம். இங்கும் அடிச்சொல் மிகுதல் என்பதே. கல்லின் மிக்கது விக்கிரகம், அது மிக்கு இரு அகம்.  அகம் என்பது  அ+  கு + அம்  :  அங்கு சேர்ந்து அழகாயிருப்பது என்று பொருள். அம் அமைதல், அழகு,  அம்மை, ( அம்மா) இவற்றுக்கெல்லாம் அடிச்சொல்லும் ஒரு விகுதி அல்லது இறுதிநிலையும்  ஆகும். 

இனிப் பூர்தல் என்ற வினையை ஆய்க:

புகு > புகவு >  புகர்வு

புகர் >  பூர்.

பகுதி என்பது பாதி என்று நீண்டு திரிதலை உணர்க.  அதுபோலவே புகு என்ற ஈரெழுத்துக்களும் பூ என்று நீண்டு திரிந்தது.

பூ -  பூத்தல்  என்ற வினை வேறு.

பூர் >  பூர்ந்தது பூர்ந்தான் என்று வினைகளாகி ரகர மெய் இழந்தது பூந்தது மற்றும் பிறவாக வழங்கும்,

தொழுகை மொழியில் சொற்கள் வேகமாக வெளிப்படுத்தப் படுவதாலும்  நாவின் சுழற் சி பிறழ்சிகளாலும் திரிபுகள் பல்கி அது தனிமொழியானது.  திரிபுகள் மொழிக்கு வளம் சேர்ப்பனவே.

அர் என்பது அருகு,  அருகில் என்ற சொற்களில் உள்ள் அர் என்ற அடிச்சொல்.  அருகு என்பதில் கு என்பது வினையாக்க விகுதி. இது வேற்றுமை உருபாகவும் தமிழில் வருவது.  புகு +  அர் > புகர்.  இங்கு அர் என்பது  நீட்சி.  இதனால் புதுப்பொருள் யாதும் ஏற்படாமையின் சாரியை என்னலாம்,  பூத்தல்  (  தோன்றுதல் )  என்ற வினையினின்றும் பூர்தல் என்பதை அர் வேறுபடுத்திற்று என்னலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

வியாழன், 14 மார்ச், 2024

பேயைப் பார்த்த கதை

 


அம்மையார் வனஜா  முன்னிரவில் தங்கி இருந்த இடத்தில் பேயைக் கண்டதாகக் கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது பேத்தி உரோசினி எடுத்த படம்.

Madam Wanaja saw a ghost in a room where she stayed for the night. A hospital.

Frightening experience. Others came to see her. They were listening.

Then thaththa told them: In 1961 I was sleeping    in the vicinity of KK Hosp mortuary and a  a fellow worker was also sleeping nearby. Each of us lay on a big lace containing wooden  carton.  After midnight.(2 am) my colleague was forcefully pushed into the drain. I had to drag him out of it. He had bruises and lacerations . He had to be brought to GH A&E.

Roshini commented:

Thatha hope you will feel better with this video of amumma's encounter of a ghost in the hospital hehe

Shamini commented,:

OMGGGG I miss her! She’s so cute the way she talks 😂😍

Commented by APM:

[14/03, 22:02]: They said he was sleeping in the ghosts' path .( referring to the fellow worker pushed into the drain)

[14/03, 22:05]  Don't put your bed in a place the room door opens to . Be inside.. Not directly facing doorway. ( But you won't be allowed to change bed location in hospitals )

Roshini  commented:

So scary!

புதன், 13 மார்ச், 2024

கோலு-தலும் கோருதலும் திரிபு

 இன்று கோருதல் என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

கோரிக்கை என்ற சொல் இப்போது வழக்கிலுள்ளது.  

வாங்குதல் என்ற சொல்லை ஆய்ந்த அறிஞர்கள்,   அதை வளைதல் என்ற சொல்லுடன் தொடர்பு படுத்தி,  வளைந்து பெற்றுக்கொண்டதனால் வாங்குதல் என்ற சொல் பொருளை ஏற்றுக்கொண்டபோது வளைந்து ஏற்றதனால் இப்பொருள் உண்டாயிற்று என்று அறிந்துகொண்டனர்.

வாங்குவில் தடக்கை வானவர் மருமான் என்ற தொடரில்  வாங்குவில் என்பது வளைந்த வில் என்று பொருள்தருவதை அறியலாம்.  வாங்கறுவாள் என்பது வளைந்த அறுவாள் என்று பொருள்படும்.  அறுவாள் என்பது அறுக்கும் வாள். அரிவாள் என்பது சிறிதாக அரிந்தெடுக்கும் வாள்.  மறக்கலாகாது.

அதைப் போலவே  கோலுதல் என்பதும் சுற்றிநிற்றல் அல்லது சுற்றிவருதல் என்று பொருள்பட்ட சொல்.

மரத்தில் பரண் கட்டி வாழும் காலத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக யாரையும் நேராக அங்கு வரவிடுவதில்லை.  கோலிவர நின்று வரவின் அறிகுறிகளைத் தெரிவித்து அழைக்கப்பட்டவுடன் தான்  எதையும் சென்று பெற்றுக்கொள்ள முடியும்.  இன்று இம்முறை வேண்டிய மாற்றங்களுடன் கடைபிடிக்கப்படுகிறது.

ரகர லகரத் திரிபின்படி அமைந்த சொற்கள் பல இங்கு ஆராயப் பட்டுத் தரப்பட்டுள்ளன.  படித்து அல்லது வாயித்து ( வாசித்து)  அறிந்துகொள்க.  கோலுதல் என்ற சொல்லே திரிந்து கோருதல் ( ஒன்றை வேண்டுதல்)   என்ற பொருளைப்  பெற்றது.  

இது இங்கு விரித்து எழுதப்பட்டுள்ளது: சொடுக்கி அறிந்து மகிழ்க.

https://sivamaalaa.blogspot.com/2023/08/blog-post_27.html

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்