வெள்ளி, 15 மார்ச், 2019

துக்கடா எப்படி அமைந்த சொல் தெரியுமா? கச்சேரி?

துளிக்கடை என்பது துக்கடா என்று திரிந்தது,  இதற்குப் பொருள்:  கடைசித் துளி என்பதுதான்,  ( அதாவது:  கடைத்துளி)

துளிக்கடை > துக்கடா.

இத்திரிபில் ளி என்ற எழுத்துக் குறைந்து ( இடைக்குறை )  கடை என்பதில் உள்ள டை டாவாகத் திரிந்தது.

விளக்கம்:

https://sivamaalaa.blogspot.com/2014/03/blog-post_18.html


கதம் என்றால் ஒலி.

கத்து >  கது.  இடைக்குறை.
கது  > காது  ( ஒலிவாங்கி உறுப்பு).  செவி.  முதனிலைத் திரிபு.  நீட்சி.
கது > கதை > கதா.
கது >  கதம் :  எ-டு:  சங்கதம்.
கோபத்தில் ஒலி எழுப்பப்படுவது இயல்பு.  அதனால் கதம் என்பது கோபம் என்றும் பொருள்பெறும்.  இது பின்வரவுப் பொருள்.

ஒலிபெருக்கி இல்லாத பழங்காலத்தில் பாடியவர்கள் கத்திப் பாடவேண்டி இருந்தது.

கதுச்சேரி >  கச்சேரி.

இதுவும் இடைக்குறைச் சொல்லே.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

.
 

கருத்துகள் இல்லை: