சனி, 16 மார்ச், 2019

பன்றி வருடமே வருக பாடல் சிலவரிகட்குப் பொருள்

பன்றி வருடமே வருக என்ற கவிதையில் சில அடிகளுக்குப் பொருள்:

"வானை முத்தமே இடும்
வரையாய் வளரரத் தினம்"

இதன் பொருள்:  ( இ-ள்). 

வளர் -    வளருகின்ற;   அரத்தினம்  -  இரத்தினமாகிய செல்வம்;
 வரையாய்  -   மலையாக அல்லது மலைபோல;
வானை முத்தமே இடும் -   வானுயர  வளர்ந்து  நிறைவு தரும்.

பொழிப்பு:   செல்வம் பன்றிவருடத்தில் வானுயர வளரும் .


"வெல்வ தெலாம் உடன் ஒன்றி
பன்றி தருவதும் நன்றி."

இ-ள்:  வெல்வ தெலாம் -   நாம் உழைத்து நமக்குக் கிடைப்பதெல்லாம் ,
உடன் ஒன்றி -  காலம் கழியாமல் ஒன்றாகச் சேர்ந்து;
பன்றி  -  சீனர்களின் இந்தப் பன்றி ஆண்டு;
தருவதும் =  நமக்குக் கொடுப்பதுவும்;
நன்றி =  நன்மையே  ஆகும். தீமை இராது என்றபடி.


"பின் நிறை உழைப்பதில் விம்மி,
பெற்றவை இல்லையே கம்மி."

இ-ள்:  பின் நிறை -  பிற்காலத்தில் முழுமையாக;
உழைப்பதில் விம்மி -    கடின உழைப்பு தன் எல்லையை எட்டி;
பெற்றவை -  அதனால் நாம் அடைந்த நன்மை;'இல்லையே
கம்மி -   குறைவே இல்லை.

இல்லையே கம்மி  என்பதைக் கம்மி இல்லையே என்று
மாற்றிப் போடுக.

இதில் குறிக்கப்பெற்ற பாடல் பிப்ரவரி 5ல் வெளியிடப்பட்டது.

நன்றி என்பதற்கு நன்மை என்பதும் பொருள்.

பிழைத்திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை: