செவ்வாய், 5 மார்ச், 2019

பூக்களில் ஈக்கள்போல்...

இந்த நாலுவரிக் கவியை ஒரு புகைப்படவிளக்கமாக எழுதினேம்.  அந்தப்  புகைப்படம் எங்கிருக்கிறதென்று தெரியவில்லை.  கண்டுபிடிக்க முடிய வில்லை.  அதைக் கண்டெடுத்தால் பதிவேற்றம் செய்வேம்.  இப்போது கவிதையை மட்டும் வெளியிடுவேம்.

பூசைஒவ் வொன்றிலும் மாசறு மக்கள்
பூக்களில் ஈக்கள்போல் ஏக்கறு தக்கோர்
ஆசைகள் யாவையும் ஓசுறு தெய்வம்
அகம்கனிந்  துண்மையில் நிறைவுறச் செய்யும்.


மாசறு - குற்றமற்ற
தக்கோர் - நல்லோர்
ஏக்கறு  -  தாழ்மையுடன்
ஓசுறு -  கீர்த்தி மிகுந்த.
அகம் - மனம்

ஈக்கள்  என்றது: தேனீக்களை.   தேன் என்ற சொல் தொக்கது.
ஆசை :  ஒன்றன் பால்  மனம் அசைவது.  அசை -  ஆசை ,   முதனிலை
நீண்டு  திரிந்த தொழிற் பெயர் .  சுடு >  சூடு என்பது போல.

உரை:

ஒவ்வொரு பூசையின் போதும்  மிகுந்த பணிவுடன் மாசில்லாத மக்கள் பூக்களில் ஈக்களைப்போல தக்க வாறு கூடி விடுகின்றனர்.   அவர்கள் தெரிவிக்கின்ற  எல்லா ஆசைகளையும்  கீர்த்தி வாய்ந்த தெய்வமானது  மனம் கனிந்து  நிறைவு  ஏற்படச் செய்கின்றது.

கருத்துகள் இல்லை: