வியாழன், 21 மார்ச், 2019

கர்நாடகத்தில் லஞ்ச லாவண்யம் கட்டிட வீழ்ச்சி

எவனெங்கு போனாலும் என்ன காசை
என்பைக்குள் போடென்று வாங்கும் கட்சி,
கவைக்காகாக்  குற்றங்கள் பிறர்மேல் சாட்டிக்
காலத்தை வீணாக்கும் காங்கி   ஆளும்
நவைகூடும் கர்நடமே அன்றோ அங்கே
நாட்டியெழும் கட்டிடமும் வீழ்ந்த தன்றே
சுவைதேடி வாழ்கின்றார் ஆளும் மட்டும்
சொல்வதற்கும் இல்லாத துன்பம் உண்டே.

Building collapses are frequent in India. Many firms use cheap materials and bribe officials to evade regulations, while on-site safety is lax.
Read more at https://www.channelnewsasia.com/news/asia/11-dead--50-rescued-after-india-building-collapse-11366616

பொருள்:

கவைக்கு ஆகாக் குற்றங்கள் -  பயனற்ற குற்றச்சாட்டுகள்
நவை  -  தீமைகள்
கர்நடம் :  கருநாடக மாநிலம்
நாட்டி -  அடிக்கல் நாட்டியபின்
எழும் கட்டிடம் -  கட்டப்படும் கட்டிடம்
அன்றே -  அல்லவோ
சுவைதேடி -  இன்ப வாழ்க்கைக்காக 
வாழ்கின்றார் -  வாழ்கின்றவர்.

கருத்துகள் இல்லை: