சனி, 16 மார்ச், 2019

முயன்றாலும் நல்லிணக்கம் வருமோ?

கொன்றுதான் கொள்கையைக் கூரிதாய்ச் செய்யவேண்டின்
என்றுதான் மாந்தனும் இப்புவி யிற்சிறந்தோன்
என்றுநாம் ஏற்றுக் கணக்கில் கொளலாகும்?
தின்றுநாள் போக்கும் விலங்கினும் கீழ்த்தரத்தோன்
என்றுதான் அன்னவனை இங்கியம்பல் கூடுமே.
இந்நாள் அறிவியலில் ஏற்றம் அடைந்தவராய்
மன்னும் மனிதப் பிறவிகட்கோ இஃதிழுக்கே
ஆகும்; சமயத் தனைவரும் ஒன்றென்று
போகும் மனநிலையில் பொய்யாப் புதுமையுடன்
ஏகும் நலம்காணும் நாளும் எதிர்வருமோ?
ஞாலம் சுழலினும் காலம் அறியாப்புன்
கோலம் பயில்வான் குறைபோக்க நாளும்
முயன்றால் முடிந்திடுமோ தான்.


கருத்துகள் இல்லை: