புதன், 13 மார்ச், 2024

கோலு-தலும் கோருதலும் திரிபு

 இன்று கோருதல் என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

கோரிக்கை என்ற சொல் இப்போது வழக்கிலுள்ளது.  

வாங்குதல் என்ற சொல்லை ஆய்ந்த அறிஞர்கள்,   அதை வளைதல் என்ற சொல்லுடன் தொடர்பு படுத்தி,  வளைந்து பெற்றுக்கொண்டதனால் வாங்குதல் என்ற சொல் பொருளை ஏற்றுக்கொண்டபோது வளைந்து ஏற்றதனால் இப்பொருள் உண்டாயிற்று என்று அறிந்துகொண்டனர்.

வாங்குவில் தடக்கை வானவர் மருமான் என்ற தொடரில்  வாங்குவில் என்பது வளைந்த வில் என்று பொருள்தருவதை அறியலாம்.  வாங்கறுவாள் என்பது வளைந்த அறுவாள் என்று பொருள்படும்.  அறுவாள் என்பது அறுக்கும் வாள். அரிவாள் என்பது சிறிதாக அரிந்தெடுக்கும் வாள்.  மறக்கலாகாது.

அதைப் போலவே  கோலுதல் என்பதும் சுற்றிநிற்றல் அல்லது சுற்றிவருதல் என்று பொருள்பட்ட சொல்.

மரத்தில் பரண் கட்டி வாழும் காலத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக யாரையும் நேராக அங்கு வரவிடுவதில்லை.  கோலிவர நின்று வரவின் அறிகுறிகளைத் தெரிவித்து அழைக்கப்பட்டவுடன் தான்  எதையும் சென்று பெற்றுக்கொள்ள முடியும்.  இன்று இம்முறை வேண்டிய மாற்றங்களுடன் கடைபிடிக்கப்படுகிறது.

ரகர லகரத் திரிபின்படி அமைந்த சொற்கள் பல இங்கு ஆராயப் பட்டுத் தரப்பட்டுள்ளன.  படித்து அல்லது வாயித்து ( வாசித்து)  அறிந்துகொள்க.  கோலுதல் என்ற சொல்லே திரிந்து கோருதல் ( ஒன்றை வேண்டுதல்)   என்ற பொருளைப்  பெற்றது.  

இது இங்கு விரித்து எழுதப்பட்டுள்ளது: சொடுக்கி அறிந்து மகிழ்க.

https://sivamaalaa.blogspot.com/2023/08/blog-post_27.html

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்



கருத்துகள் இல்லை: