திங்கள், 11 மார்ச், 2024

சிவதுர்க்கா ஆலயம் பூசையின் போது ......


பூசை நடைபெறுகிறது.



ஒளிவிளக்குகளின் அழகிய காட்சி.



பூசைக் காட்சி



சிவராத்திரி பூசை நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. கருவறைக்கு வெளியிலிருந்து எடுத்த படம் அருள்மிகு சிவ துர்க்கா ஆலயம் சிங்கப்பூர்.


 கலிவிருத்தம்

முழுமுதற் கடவுள் சிவதெரி சனமே

கெழுமிய பற்றர்தம்   வழுவறு மனமே

எழுகதிர் ஒளிபோல் விளங்கிடும்  தினமே

 இழுகவர் காந்தமே  பெறுபொற் குணமே.


முழுமுதல் -   ஐந்தொழிலும் புரியும் ( இறைவன்.)

கெழுமிய - நிறைவாகிய.

பற்றர் -  பக்தர்

வழுவறு  -  நெறி மாறிடாத மனம் உடைய(வர்கள்).

எழுகதிர் ஒளி -  காலைக் கதிரவனின் ஒளி.

விளங்கிடும் தினமே  -  நாள் தோறும்  விளங்கிடும்

இழுகவர் காந்தம்  -   இழுத்துக் கவர்ந்துகொள்ளும்  காந்தந்தத்தின்

பெறுபொற்குணம் -  பற்றுடையார்,  இவர்கள் பிறரையும் கவர்ந்து பற்றுநெறிப் படுத்துவர்/.

கருத்துகள் இல்லை: