செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

மனிதன் கடவுளாவது!

 

கடவுள் படைத்தபல காண்பனபின் இல்லை

மனிதன் அமைத்தவையும் மங்கும் அழியும்

மனிதன் புனைந்தது மண்ணாகா தோங்கின்

மனிதன்தான் சாமியென் பான்.


கடவுள் படைத்த  பல  -   இறைவன் உண்டாக்கிய 

பல பொருட்கள்;

காண்பன  -    உலகில் உள்ளன;

பின் இல்லை -   பிற்பாடு அழிந்துவிடுகின்றன;


மனிதன் அமைத்தவை -   மாந்தன் உருவாக்கிய

பொருட்கள்;

மங்கும் அழியும் =  மாற்றம் அடைவதும் இல்லாமல்

ஆவதும் நிகழும்.


மனிதன்  புனைந்தது -  மனிதன் உருவாக்கிய ஒன்று;

மண்ணாகாது ஓங்கின்  -  அழிவில்லாது இவ்வுலகில்

இருந்துவிடின்;

மனிதன் தான் =   மாந்தன் தானே.

சாமி என்பான் -   நான் தான் கடவுள் என்று கூறிவுடுவான்.

கடவுளை விட நான் மிக்க வலியவன் என்ற முடிவிற்கு

வந்துவிடுவான்  என்றவாறு.





கருத்துகள் இல்லை: