ஞாயிறு, 8 டிசம்பர், 2019

சொல்லியல் நெறிமுறைகள்: கழுதைச் சொல்

கழுதை என்ற சொல் ஓர் ஒலிக்குறிப்புச் சொல் ஆகும்.

கழுதை காழ் காழ் என்றுதான் கத்துவதாகச் சொல்வர்.  ஆனால் கழுதைஎன்றசொல்லில் கழு என்பது பகுதியாகவும் தை என்பது விகுதியாகவும் உள்ளன. ஆகவே அது "கழு கழு" என்று கத்துவதாகச் சொல்லலாம் என்றால் பொருத்தமாகத் தோன்றவில்லை.

கத்துமொலி  காழ் என்பதுதான். சொல்லமைப்பில் காழ் என்பது குறுக்கப்பட்டு, கழு என்று அமைத்துள்ளனர். அதுவே சரியென்றும் சொல்லவேண்டும்.

இனி, கழு+ தை என்று பகுதியையும் விகுதியையும் புணர்க்கும் போது, கழுத்தை என்று வலிமிக்கு வராமல் கழுதை என்று மெலிந்தே (அதாவது தகர ஒற்று இரட்டிக்காமல்)   சொல்லில் வருகிறது.  இதே வலிமிகாமையை விழுது, பழுது,  முதலிய வேறு சொற்களின் அமைப்பிலும் காணமுடிகின்றது.

சொல்லமைப்பில் புணரியல் ( சந்தி) இலக்கண விதிகள் பின்பற்றப்படுவதில்லை. நிலைமொழியும் வருமொழியும் புணர்வது வேறு.  அடிச்சொல்லும் விகுதியும் இணைவது வேறு.  விகுதி  வருமொழி அன்று.

மேலும் ஒரே பகுதி விகுதி, இருவேறு விதமாக இணைந்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைப் பிறப்பிக்கலாம். எடுத்துக்காட்டு:

அறு + அம் = அறம்.
அறு + அம் =  அற்றம்.

குறு + அம் =  குறம்.  ( குறி சொல்லுதல்)
குறு + அம் = குற்றம் (  குற்றச்செயல்.)  (  சிறுமைசேர் செயல்).

குறு = குன்று.  சிறிய மலை.
குறு = சிறு(  மை )

அறிவீர் மகிழ்வீர்

தட்டச்சுப் பிழைகள் -   திருத்தம் பின்.


கருத்துகள் இல்லை: