செவ்வாய், 3 செப்டம்பர், 2019

கடினத்தில் எளிமை

கடுமையை. உடையதாய் இருந்த மரத்திலிருந்து உருவான தாள்  சிறப்பாய் அமைந்துவிட்டது.

அதுதான் கடுதாசி.

கடுமையைக் குறிப்பது  கடு என்னும் முதனிலை..

தா என்பது உண்மையில் தாள் என்ற சொல்லின் கடைக்குறை.

தாள்  என்பது நெற்பயிர்களில் உள்ள தாள்.. அதுபோலும் பிற தாள்களையும் குறிக்கும்.  எடுத்துக்காட்டு:   வெங்காயத் தாள்.  பூண்டுத் தாள். பிற்காலத்தில்
காகிதத் தாளையும் குறித்தது.  "பேபிரஸ்"  என்னும்  இலை குறித்த சொல்லே பின் பேப்பர் என்ற ஆங்க்கிலச்சொல்லுக்கும் அடியாய் அமைந்தது,

எனவே  கடுதாசிக்குள்  தாவரத் தாள் புகுந்ததில் வியத்தற்கு ஒன்றுமில்லை.

கடு + தாள் + சி.>  கடு + தா(ள்) + சி.

ளகர ஒற்று மறைந்து சொல் தடை ஒலி ஏதுமின்றி ஒழுகுவதுபோல் அமைந்தது  ஒரு திரிந்துசிறத்தலே  ஆகும்.

சி என்பது விகுதி.   இதைச் சிறப்புக்கு அடையாளமாகக் கொள்ளுதலில் தவறில்லை.  சொல் அமைத்த ஒருவரோ  புழங்கிய   ஊர்மக்களோ  இவ்வாறு
ஒலித்தடையை விலக்கிக் குறித்த பொருளின் உயர்வை உணர்த்தி  யிருக்கலாம்..  கடுதாளி என்பதே கடுதாசி எனல் ஒருபுறம் இருக்க.


 திருத்தம் பின்,  (தட்டச்சு)

கருத்துகள் இல்லை: