செவ்வாய், 16 ஜனவரி, 2024

அனுகூலம் சொல்.

 இன்று "அனுகூலம்" என்ற சொல்லை நோக்குவோம்.

கூலம் என்பது உணவுப் பொருள்களில் தானியங்களைக் குறிக்கும்.  தானியம் என்பது, அரசனுக்குத் திறையாகச் செலுத்தினது போகத் தனக்குரியவையாகக் குடியானவன் ஒருவன் சேமித்து வைத்திருக்கும் நெல், கம்பு, சோளம் , வரகு என இன்னபிறவுமாகும். தான்+ இயம்.  தான் முயன்று தனக்கென "இயற்றுவித் திருப்பவை" என்பது பொருள்.  " தனக்கு இயன்றவை" என்றும் வரையறுக்கலாம். கூலம் எனில் சேர்த்து வைத்தவை என்பது சொற்பொருள். நாளடைவில் இதன் பொருள் கூலங்கள் எனப் பொதுப் பொருள் பயந்தது. (அரிசி, கம்பு,  சோளம், என இன்னும் உள்ளவற்றைக் குறிக்க வழங்குதல் )

அனுகூலம் எனின், யாது?  வீட்டில் வேறு உணவுப் பொருட்கள் இல்லாவிடினும் கூலம் இருக்குமாயின் அவற்றை அணுகிப் பசியைத் தீர்த்துக் கொள்ளலாம். பசிக்கு அணுகத் தக்கது கூலம் என்பதே  சொற்  பொருளாகும். இதிலிருந்து "உதவுவது  இது " என்பது பெறுபொருளாயினவாறு கண்டுகொள்க.

பெறுபொருள்-- derived meaning.

அன் என்பதும் அண் என்பதும் சொல்லாக்கத்தில் மாற்றீடுகள். அன்பு என்பதில் அணுக்கம் இருப்பதை அறிக.

அன்பு என்ற இடுகைப் பதிவில் விரிவு அறிக.

https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_95.html

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர் 

கருத்துகள் இல்லை: