செவ்வாய், 13 மே, 2014

மாரீசன்

மாரீசன் மான் ரூபம் எடுக்கிறான்.  அதாவது மானுருக் கொள்கிறான். மான் மரை என்பன உங்களுக்குத் தெரியும்.

மரை + ஈசன் =  மாரீசன்.

மரைப்பெயர் கொண்டோன்.

இறைவன்  >  இ ஷ் வர்  > ஷ்வர்.  றையை எடுத்துவிட்டு, ஷ் போட்டுவிட்டால், வேறுலகத்தில் போய்விட்டதுபோன்ற‌ உணர்வு,

ஈஷ்வர் > ஈஸ்வர் >  ஈசர் > ஈசன்.

மரை+  ஈசன் =  மரையீசன் என்று வரவேண்டும் என்பார்  தமிழ்வாத்தியார்.
இந்த வாத்தியாரை வேலைக்கு வைத்தால்  புதுமொழியையும் புதுச்சொல்லையும் எப்படி அமைப்பது?

ஆக வான்மீகியாரே  சொந்தமாகப் படைத்துக்கொண்டார் வேண்டிய சொற்களை.

மகிழ்ச்சிக்குரிய செய்தி ........

கருத்துகள் இல்லை: