ஞாயிறு, 25 மே, 2014

As long as Rajapakse is there......

நடுவண்நல் அரசின்பால் தமிழர் வேண்டும்
நல்லபல கோரிக்கை அவற்றுள் ஒன்று
கெடுவண்ணன் இராசபக்சே மோடி யோடு
கேணமையுறச் சந்தித்தல் கூடா தென்பர்!
மடுவுள்ளில் வீழாமல் இது நாள் காறும்
மதியுடனே தப்பிவிட்ட இராச பக்சே
இடுமன்றில் குற்றவாளி யாக நிற்பான்
என்றெவரும் திட்டமுறக் கூறற் கில்லை.

இத்தகைய சூழலிலே மோடி பேச்சை
எடுக்காமல் ஒதுங்குவதால் என்ன நேரும்?
ஒத்திருவர் பேசியுள்ள மாறு பாட்டை
ஒடுக்கத்தில் கொண்டுவரல் பயனுண் டென்பர்.
வித்திடுதல் இலையாயின் விளைவோ இல்லை.
வேறுபட்டு நிற்பதனால் சீர்பட் டங்கே
ஒத்துழைப்பும்  ஒருதீர்வும் இல்லா தாகும்.
ஓய்ந்தாய்ந்து பார்த்திடுதல் கடமை அன்றோ?

As long as Rajapakse is president, anything you want in Sri Lanka would have to be handled by him. Sad but true. It is the fact of  politics and diplomacy between states. Is there a way for Modi to circumvent this?

கருத்துகள் இல்லை: