வெள்ளி, 2 மே, 2014

தேர்தல் களமும் மக்களாட்சியும்

தேர்தலென்றால் தேசத்தின் சேவைக்குத் தான்தன்னைத்
 தந்துவிடல் என்பதாகும்;
தேர்தலிலே வெற்றியெனின் சேவைசெய் வாவென்று 
தேசமக்கள் வேண்டலாகும்;
ஊர்களிலே தேர்தலின்முன் போடுகின்ற சண்டைகளை 
உற்றுப்பார்க் கின்றபோது,
பார்தனிலே இப்பொருளை யாருணர்ந்தார் என்றுளத்தே 
கேள்வியொன்று பற்றிநிற்கும். 


என்றாலும் எண்ணிக்கை நோக்கிற்பின் இத்தகுஓர்  
நேர்ச்சியினால் குற்றமில்லை;
வென்றாலும் தோற்றாலும் பல்லாயி ரத்தவர்கள் 
நின்றதனால் மக்களாட்சி
என்றென்றும்  நின்றிடுமே எழில்சேவைக் கித்தனைபேர்  
 உண்டென்று கூறுங்காலை
நன்றெனவே நல்லறிஞர்  நாடிடும்நேர் ஞயம்காண்பர் 
ஞாலமிதைப் போற்றிப்பாடும்.


கருத்துகள் இல்லை: