வியாழன், 1 மே, 2014

கொலைவெறி

குண்டுகள் வைத்துக்  கொலைவெறி ஆடுவோன்
கணடிடான் தானோ  கயமையே  தன்னுருவாய்   
யாதும் அறியாச் சிறுமகார் பெண்டிரொடு
தீதில் முதியோர் பிறர்மாள ஈதெலாம்
எத்தனை  நாட்பொறுப்பீர் எம்மிறைவா இங்கினி
இச்செயல்கள் இன்மை அருள்.

கருத்துகள் இல்லை: