சனி, 10 மே, 2014

வாக்குகள் எண்ணினாலே

ஒரு மந்திரி சொல்கிறார்:
"வரு நாளில் அரசமைப்போம் நாங்கள்!"
ஒரு பேரெதிர்த் தலைவர் சொல்கிறார்
"நிறுவிடுவோம் அரசை நாங்கள்!"
இருக்கும் பெட்டிகள் அகத்தே.
இரு -அக -சி - அம் எனும் இரகசியம்!
வாக்குகள் எண்ணினாலே
தேக்குபோல் திண்ணிய  தலைவர் யார்?
நோக்கக் கிடைப்பார் மக்களுக்கு!
அதுவரை எதிர்பார்த்து  அமைதியாய்
நதிபோல் ஓடிக்கொண்டிருப்பர் மக்கள்.

(புதுக்கவிதை )

கருத்துகள் இல்லை: