சனி, 31 மே, 2014

nAtham

நாதம் பலவாறு எழுகிறதென்பது இன்றைய மனிதனுக்குச் சொல்லாமலே புரிந்துகொள்ளக்கூடியதாய் உள்ளது. ஆனால் ஆதி மனிதன் இதனை இவ்வாறு அறிந்திருக்கவில்லை. அவனுக்கு முதன்முதலாய் உணரத் தக்கதாய் நின்றது ஒரு நாதம் தான்.  அது நாவிலிருந்து எழும் ஒலியாகிய நாதம்.

நா  ‍ நாவினை அடிப்படையாக ;  து : உடையது;  அம் ‍  விகுதி.
நா+  து ‍‍+ அம் =  நாதம் ஆயிற்று.

பின் அறிவும் திறனும் அடைந்த மனிதன்,  நாதமானது எங்கும் நிறைந்து உளது என்பதைனை அறிந்துகொண்டான்.

ஏபிசிடி படித்துத்தான் வித்துவானாகி இருக்கவேண்டும். குகைவாழ் முந்தியல் காலத்திலேயே அனைத்தையும் அறிந்துவிட்டதுபோன்ற பாவனையில் கூறப்படும் சொல்லமைப்புகள் வரலாற்று நடைக்கு ஒவ்வாதவை.  

ஆ ற்றின் ஒழுக்கிலும்  நாதம் உள்ளதே!  அதிலும் வேத ஒலி கேட்கிறதே!  ஆற்றொலியை ஆதி மனிதன் கேட்டிருப்பான் எனினும் இத்தகு உணர்வு  அவன் பெற்றது பின்புதான். 

கருத்துகள் இல்லை: