சனி, 31 மே, 2014

பூர்விகம்

ஓரிடத்தில் உள்ள ஒன்று பிறிதோரிடத்துப் போய் அடங்குமாயின் அதனைப் "புகுதல் '  என்கிறோம். பலர் இதனைப் "பூர்(தல் )  என்கிறார்கள்.

இந்த உறைக்குள் தலையணை பூரமாட்டேன் என்கிறது:" என்பர்.

ஒன்று ஓரிடத்தில் பூர்வதுதான் (புகுவதுதான்)  அதற்குத் தொடக்கம் ஆகும்.

பூர் > பூர் +வ் ​ + இகம் > பூர்விகம்.
பூர் + வ்  +அம்  =  பூர்வம். (தொடக்கம்.)

பூர் என்பது புகு என்பதன் திரிபாதலின், பூர்வம் என்பது புகவம் என்று இருக்கவேண்டும்.  அப்படி இல்லை; அதுவும் ஒன்றும் நட்டமில்லை.

இது பேச்சு வழக்குத் திரிபுச் சொல்லாகும்.  இகம் ஒரு விகுதி.
  

கருத்துகள் இல்லை: