வியாழன், 15 மே, 2014

வெற்றிலை (தொடர்ச்சி ) வேறு பெயர்கள்.

இது பற்றி முன் எழுதியதை இங்குக் காணலாம் "

http://sivamaalaa.blogspot.com/2014/05/vetrilai.html

வெற்றிலைக்கு வெற்றிலை என்பது தவிர வேறு பெயர்கள் உண்டா என்பதும் அறியத் தக்கது .

கொஞ்சம் சருகு போடுவதற்குக் கிடைக்குமா என்று கேட்பதுண்டாம்.  சருகு  என்பது காய்ந்த இலையைக் குறிப்பதுடன் வெற்றிலையையும் முன்காலத்தில் குறித்துள்ளது.  இது காய்ந்த இலையைக் குறித்ததால் முன் காலத்தில் காய்ந்த வெற்றிலைகள்தாம் கிடைத்தனவோ என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது. இதற்கான விடைகள் இப்போது  உடன் கிடைக்குமென்று தெரியவில்லை ,

சருகு என்ற  சொல்லுடன் sireh  என்ற வெற்றிலை குறிக்கும் மலாய்ச் சொல்  ஓரளவு  ஒலி ஒற்றுமை உடையது. சருகு என்பதில் "கு" என்பது சொல்லாக்க விகுதி.  மீதமுள்ள "சரு"  என்பது சிரே    ஆவது  எளிதாம்.

வெற்றிலைக் கொடி   குறிக்க  "சருகுக் கொடி" என்று  கேள்விப் பட்டதில்லை.   சருகு இலை,  சருகுக்  காம்பு என்ற வழக்குகள் இல்லை என்று நினைக்க வேண்டியுள்ளது.

வெற்றிலைக்  கொடி என்று "இலையை "   விட முடியாத நிலை மொழியில் இருப்பதால், மரபுக்கு மாறாய் சொல் அமைதல் காண, வெற்றிலை வெளி நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது என்று சொன்னால், அது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

வேம்பு ‍  வேப்பிலை ‍  வேப்பெண்ணெய்.

வேப்பிலை மரம் அன்று.  தவறு.

வெற்றிலை ‍  வெற்றிலைச் கொடி  வெற்றிலை காம்பு.  இலையைச் சொல்லித்தான் கொடி காம்புகளைச் சொல்லவேண்டியுள்ளது.

வெறு + இலை = வெற்றிலை.  வெறுச் கொடி, வெறுக் காம்பு என்ற வழக்குகள் இல்லை.

வெற்றி + இலை என்பது வெற்றிலை என்று மருவிற்றென்பர். திருமணப் பேச்சுகளில் வெற்றிக்கு அடையாளமாக, வெற்றிலை ‍பாக்கு மாற்றிக்கொள்ளும் காரணத்தால். இந்த வழக்கம் மலாய் மக்களிடமும் உள்ளது.

தைவான் முதலிய இடங்களிலும் தென்கிழக்காசிய பிற நாடுகளிலும் வெற்றிலைப் புழக்கம் உண்டு.  சீன அம்மனுக்கு வெற்றிலை படைப்பதுண்டு.

வெற்றிலை ‍ நல்லெண்ணெய் உருக்கி உண்டால் மரணம் ஏற்படுமென்கிறார்கள்.
 வெற்றிலை விடமாகிவிடும்.  சித்த வைத்தியர்களைக் கேட்டறியவும்.

 will edit later

    

கருத்துகள் இல்லை: