வியாழன், 1 மே, 2014

தேவையில்லாமல் பிறந்த வரிக்குதிரையின் கதி

பாவம் அந்த வரிக்குதிரை 
தேவைக்கு  மேலென்று கருதியதால் 
சுட்டுக் கொன்று துண்டு துண்டாய் 
வெட்டித் தீர்த்தனர் சிறுவர்கள்முன்!

இரக்கம்  இலாத மனிதரிடம் 
பிறக்க நேர்ந்தனை வரிக்குதிராய் !

யாரிடம் சென்று முறை யிடுவாய் 
பாரினில் வேறிடம் ஒன்றிலையோ?

ஏழா யிரத்தின் மேலென்கிறார் 
வாழற்கு வேண்டா விலங்கு மொத்தம் 

கூழும் இலைகளும் கொடுத்திருப்பேன் 
என்மனைக் கிங்கு நீ  அடுத்துவந்தால் 

உன்னாவி உறங்க உனக்கிறைவன் 
இந்நாள் அருளும் வழங்கட்டுமே 




notes:
news from:
The Sun, Thursday Feb 13 2014  p14  .Mimi Bechechi  (The Independent)
newsdesk@thesundaily.com.
www,thesundaily.my

  

கருத்துகள் இல்லை: