புதன், 14 மே, 2014

காலாடி

கைப்பொருள் உள்ள /காரணத்தினால் வாங்கித் தின்னும் கூ ட்டாளிகள்  அதிகமாகி  வீணே ஊர் சுற்றிக் காலம் கழிப்பவனைக்  "காலாடி"  என்று சொல்வர் .   நேரம் இருப்பதனால் வீண் சண்டைகளிலும் ஈடுபடுவான் .

" காலாடு போழ்தில் கழிகிளைஞர்  வானத்து
மேலாடு மீனிற் பலராவர் "

என்ற நாலடியாரில் வரும் பாட்டினால் "கைப்பொருள் உள்ளவனையே "  இச்சொல் குறித்த தென்பதை அறியலாகும்.

காலாடுதல்  =  கையில் காசு உள்ளவனாய் .இருத்தல்.

இப்பொருள் இழிந்து இப்போது "rowdy person"  என்று பொருள் தருவதாய் உள்ளது.  கைப்பொருள் பற்றிய பொருண்மை மறைந்து விட்டது ..  

கருத்துகள் இல்லை: